Saturday, July 29, 2017

“வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”

“வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”
 தாவரவியல் பெயர்: Cynodon Dactylon   (syn. Panicum dactylonCapriola dactylon)
 ஏனைய பெயர்கள்:  also known as dūrvā grass, Bermuda Grass, Dubo, Dog's Tooth Grass, Bahama Grass, Devil's Grass, Couch Grass, Indian Doab,Arugampul, Grama, and Scutch Grass,     


                அறுகம்புல் இறந்தாலும் உயித்தொழும் தன்மை உடையது. அது விநாயகனுக்கு அர்ப்பணிக்கும் பொருளாகும். விக்கினம் தீர்ப்பவன் விநாயகன் விக்கினம் ஏற்பட காரணம் ஸ்திமான மனம் இல்லாமை இதனால் ஆய்ந்து அலசி ஆராய்யும் திறனை இழந்து தவிக்கின்றான் மனிதன் இதற்கு அடிப்படையான காரணம் உடல் சமநிலை இன்மை உடல் முக்குணங்களால் வழிநடாத்தப்படுகின்றது. அவை வாத, பித்த, கபம் என்பன இவற்றின் சமநிலை மாறுமானால் மனமும்  சமநிலையை இழக்கின்றது இதனால் விக்கினம் ஏற்படும் இதை அறுகம் புல் அவற்றுக்கிடையிலான ஏற்ற இறக்கத்தை சீர்செய்து சமநிலைக்கு கொண்டு வரும் ஆற்றல் அறுகுக்கு உண்டு. சிவன் அகோரமானவர். அகோரக் காற்று வடிவானவர். பஞ்சபூதங்களில் கற்றுக் கூறு.  இது வாதத்தன்மையானது. புளிப்பு சுவையால் அதன் அதிகரிப்பால் ஏற்படக் கூடியது. இதை சரி செய்ய வில்வம் பயன் படுத்தப்படுகின்றது. பொதுவாக உஸ்ன நோய்களுக்கு அருமருந்து வில்வம். விஸ்ணு குளிர்ச்சியானவர் அவருக்கு துளசி குளிர்சியால் உண்டாகும் நோய் கபம் இ;தைப்போக்க துளசியே அருமருந்து. இது பஞ்சபூதங்களில் நீர் கூறு. இது இனிப்புச் சுவையானது. அதன் அதிகரிப்பால் ஏற்படக் கூடியது கபம்.  சக்தி நெருப்பு வடிவானவள். நெருப்பின் வெப்பத்தை குறைக்க வேம்பு. வெப்பத்தினால் பித்தம் உடலில் அதிகரிக்கும் பித்தத்துக்கு மருந்து வேம்பு. இது பஞ்சபூதங்களில் நெருப்புக் கூறு. அது கசப்புத் தன்மையானது. பஞ்சபூதங்களில் மனிதனின் உடலில் நோய் வரக் காரணமானதாக நீர்,நெருப்பு, காற்று என்னும் கூறுகள் ஆகும். இவற்றால் உடலில் ஏற்படுத்தப்பட்டவை வாதம், பித்தம், சிலேற்பனம் என்னும் கபம். இவை முறையே புளிப்பு, கசப்பு, இனிப்பு சுவைகளினால் ஏற்பட்டவை. இவைகள் அனைத்தும் சமமாக இருக்கின்ற போதே உடலில் நோய் இல்லாது  மனஅழுத்தமோ, படபடப்போ, தடுமாற்றமோ இன்றி உடல் சமநிலையில் இருக்கும். இதில் ஏற்றத்தாழ்வு இருக்குமானால் அங்குதான் நோய்க் குறிகள் ஆரம்பமாகின்றது.  இவர்கள் அனைவருக்கும் பொதுவானவர் விநாயகர் இவர் எல்லா இடத்திலும் இருப்பார் இவருக்கு அறுகு அது துவர்ப்பு சுவையானது. இது விநாயகரின் பிரதான அர்ச்சனைப் பொருள். இவர் எல்லா இடத்திலும் பொதுவாக இருப்பது போல் அறுகாகிய ஒற்றை மூகிலிகை வாத, பித்த, கபம் என்னும் மூன்றையும் சமநிலையில் பேணும் மூகிலியாக உள்ளது. “வாதபித்த மையமோடினை சிறு வருக்கும்” என தேரையர் முதல் வரியிலேயே எவ்வளவு அழகாகக் கூறிவிட்டார்.  
அறுகம்புல்

அறுகம்புல்
             இந்து மதம் எவ்வாறு வழிபாட்டையும் வைத்தியத்தையும் இணைத்துள்ளது. இதனாலேயே அதற்கு ஆயுர் வேதம் என பெயர் வழங்கலாயிற்று. சைவம் ,வைணவம், சாத்தம் மூன்றும் மூன்று துருவங்களாக இருந்த காலமொன்று இருந்தது அப்போது காணபத்தியக் கடவுலான விநாயகனை எல்லோரும் பொதுவாக ஏற்றதுண்டு எல்லா ஆலயங்களிலும் அவருக்கு ஒரு  தனிச்சன்னதி வைத்திருப்பர்.மதம் என்ற மத வெறியை ஏற்படுத்திய வாத பித்த கபக் கூறுகனை சமப்படுத்த பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விநாயகர் அறுகு ஆகும். அறுசமயங்களை ஒன்றாக்கிய பெருமை ஆதி சங்கரக்கே அவரே சங்கரன்.
        தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில் அறுகம்புல்லின் மருத்துவ பாகம் பற்றி குறிப்பிடுகையில் 
        “வாதபித்த மையமோடி ளை சிறுக வருக்கும்
             மின்னும் செப்பி லறிவு தரும் கண்நோய்
            யொடு தலை நோய் கண் புகையில் ரத்த பித்தம்
            முன்நோய் ஒழிக்கும் முறை” என்றார். இங்கு 
1. “செப்பில் லறிவு தரும்”: நினைவாற்றலை அதிகரித்து சிந்தனா சத்தியை கூட்டி அறிலைப் பெருக்குகின்ற ஆற்றல் மிக்கது அறுகம்புல். இதனாலேயே “அருணகிரி நாதர்” விநாயகர் திருப்புகழில் “முத்தமிழ் அடைவிணை முப்படுகிரிதனில் முப்பட எழுதிய முதல்வோனே”அவ்வளவு ஆற்றல் உள்ளது அறுகம்புல். “விநாயகப் பெருமான் புத்தியின் வடிவானவன் அவன் முத்திக்கு வழிகாட்டுபவன் சித்தியில் உறைபவன்” அதனாலேயே அவனுக்கு புத்தி சித்தி என்னும் இரு மனைவியர். சிந்திக்கும் ஆற்றலுக்கு அவசியமான சத்தியவை. புத்தி விளிப்படைந்து சித்தம் தெளிந்தால் அவன் செல்ல வேண்டிய பாதை தெளிவாகத் தெரியும் அதுவே அவனின் வெற்றிப்பாதை அங்கு தோல்விக்கு இடமில்லை அதுவே விக்கினம் தீர்க்கும் பணி. அப்படிப்பட்டது தன்மைகளை தரவல்லது அறுகம் புல்.
2. கண்நோய் யொடு தலை நோய் கண் புகையில்”: கண்பார்வை மங்கலாக இருத்தல் இன்நிலையில் கண்களில் புரை வளரத் தொடங்குவதை கட்டுகின்றது இதனால் கண்பார்வை மங்கலாகிக் குறைந்து வரும் இது இரத்தழுத்தத்தால் ஏற்படலாம். தலைவலியும் ஏற்படும் இதனைப் போக்குகின்ற திறன் அறுகம் புல் எண்ணைக்கு உண்டு. 
3. “ரத்தபித்தம்” : என்பது குருதியில் பித்தம் கூடுதல் அதாவது குருதியில் அனல் கூறாக இருக்கின்ற வெப்பக் கூறு கூடுகின்ற போது குருதியில் பித்தம் அதிகரித்து குருதியின் அழுத்தம் கூடும் இதை குருதி அளல் அல்லது குருதி அழுத்தம் என்பர். அதற்கு அடிப்படைக் காரணம் பரபரப்பு, மனஅமைதியின்மை, உடல் பருமன் அதிகரித்தல், கொழுப்புச் சத்து அதிகரித்து இரத்த குழாயிகளில் படிந்து இரத்தழுத்தம் ஏற்பட்டு  இருதயநோய் வருகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் இரத்தக்குழாய்கள் தமது இயல்பான தன்மையை இழந்து விடும். இயல்பாகவே இரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை உடையது. அறுகம்புல் இரத்தக்குழாயயை இளமையாக நிலைத்திருக்க வைத்திருப்பதுடன் சுருங்கி விரியும் தன்மையை இழக்காது பாதுகாக்கின்றது.
4. “முன்நோய் ஒழிக்கும் முறை”: நோய் வருவதற்கு முன்னர் நோயை வராது முன்னால் தடுக்கும் ஆற்றல் அறுகம் புல்லுக்குண்டு.
நவீன அறிவியல் கூறும் விந்தை: 
     இரண்டாயிரத்து ஏழில் (2007 இல்) சுந்தர்சிங் என்ற ஆய்வாளர் செய்த ஆய்வில் அறுகம்புல் தண்ணீர்ச் சாறு இரத்தத்தில் சக்கரையின் அளவையும் கொழுப்பின் அளவையும் குறைத்து. இரத்தத்தை சீர் செய்யும் சக்தியும் வல்லமையும் உள்ளது. என்றும் அது குறைக்கும் அளவையும் அளவிட்டுக் குறிப்பிட்டுள்ளார். கொழுப்புப் பரிசேதனையில் மொத்தக் கொழுப்பு, ஆபத்தான மிருகக் கொழுப்பு, டைற்கிளிகரைட் இது போன்றவை உண்டு. இதனை பரிசாதனை செய்யும் முறையை “லிப்பிட் புறபையில் பரிசோதனை” என்பர். அறுகம்புல் சாற்றை அருந்திய பின் பரிசோதனை செய்த போது. மொத்த கொளஸ்லோல்(TC)- 33 வீதத்தாலும்(33% ), ஆபத்தான மிருகக் கொழுப்பு (LDL) – 77 வீதத்தாலும்(77%), டைற்கிளிகரைட் -29 வீதத்தாலும்(29%) குறைவடைந்து காணப்பட்டது என்று ஆய்வின் முடிவை வெளியிட்டிருந்தார். சித்தரின் வெண்பா எவ்வளவு உறுதியாக ஆணையிட்டுள்ளது. “கண்ணோய் யொடு தலை நோய் கண் புகையில் இரத்த பித்தம்” போன்ற நோய்க்கு அடிப்படை இரத்தபித்தமெனும் இரத்தழுத்தம் இதை போக் வல்லது அறுகம்புல்.
பயன் படுத்தும் முறைகள் : 
1. அறுகம்புல் தைலம்: அறுகம்புல்லைத் தேர்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியது ஓர் முக்கிய விடையமாகும். சரியான புல்லைத் தேர்தெடுக்கும் போது: 
1.அறுகம்புல் பூக்கும் தன்மையுடையது. 
2.கணுக்கள் விட்டு படர்ந்து கணுக்களுக்கிடையல் கிளை விட்டு           
    வலைப் பின்னல் போல விரிந்து படரும் தன்மையுடையது. இவ்வாறு               
தெரிவு செய்து கொள்ளவேண்டும். அறுகு போன்று வித்யாசப்படுத்த முடியாத புல்வகையும் உண்டு. அது பூக்காத ஒஸ்ரேலியன் கிராஸ், கொறியன் கிராஸ் போன்ற பூங்காக்களில் அழகுபடுத்தும் ஒருவகைப்புல்கள் உண்டு அவை பார்வைக்கு ஒன்று போல இருந்தாலும் அதன் தன்மை வேறு அது அறுகாகாது. இவ்வாறு தேர்ந்தெடுத்த அறுகம் புல் ஒருபிடி எடுத்து அதை நன்றாக உரலில் இட்டு இடித்தெடுத்து வைத்துக் கொண்டு. ஒரு அகன்ற கரண்டியில் நல்லெண்ணை விட்டு நெருப்பில் பிடித்து காச்சி அதனுள் இடித்தெடுத்து வைத்த அறுகம்புல்லை இட்டவும். இட்டவுடன் அது எண்ணெயினுள் சென்று மீண்டும் மேல் வரும். (எண்ணையில் அறுகை இடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் எண்ணையில் பச்சை புல்லை போடும் போது பொங்கும்) வந்தவுடன் நெருப்பை நிறுத்தி விட்டு எண்ணையை எடுத்து ஆறவிட்டு பின் அந்த எண்ணையை தலை, முகம் போன்ற வற்றில் தேய்த்து சில மணிநேரம் ஊறவிட்டு வெண்நீரில் தோய வேண்டும். வென்நீர் என்னும் போது நன்றாக சூடாகிய நீரில் குளிந்த நீரை கலத்தலை தவித்து சூடாக்கும் போது குளிப்பதற்கு தக்கதாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணையை உடலில்லிருந்து அகற்ற சவற்காரத்தைத் தவித்து சீயாக்காய்த்தூள், அரப்புத்து தூள், பாசிப்பயறுமா போன்றவற்றை பயன்படுத்தி எண்ணையை உடலில்லிருந்து அகற்ற வேண்டும். இவ்வெண்ணையைப் பயன்படுத்துவதினால் பினிசம், தலைவலி, மனவழுத்தம், பரபரப்பை ஏற்படுத்தும் தலைவலி என்பன குணமாகும்.
அறுகம்புல் பூ


2. அறுகம் புல்லை சாறாக்கி அருந்தலாம் இதனை அறுகம்புல் யூஸ் என்று அழைப்பர்.


3. அறுகம்புல்லுடன் (ஒருகைப்பிடி அளவு) இதனுடன் ஆறு மிளகும் நாலில்ஒரு பங்கு தேக்கரண்டி அளவு நற்சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு நன்றாக நீர் விட்டரைத்து காச்சி வடிகட்டி வெறுவயிற்றில் காலையில் ஒரு டம்பிளர் அருந்த வேண்டும். அருந்திய பின் இரண்டு மணித்தியாலங்களின் பின் மலக்கழிவு ஏற்படலாம் பயப்படத் தேவையில்லை.
4.நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இனலில் உலர்த்தி பொடி செய்து வஸ்திரத்தில் சலித்து வஸ்திரகாயமாக வைத்துக் கொண்டு காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் இட்டு அல்லது தண்நீரில் போட்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டுவர “வாதபித்தம் ஐயமோடு இழை சிறு அறுக்கும் ---
5.சரும வியாதிக்கு அறுகம்புல் நல்ல மருந்தாகும். அறுகம்புல்லும் மஞ்சலும் சேர்த்து விழுது போல அரைத் தெடுக்கவேண்டும். (ஒருபிடி அறுகம்புல்லுக்கு ஒரு தேக்கரண்டி மஞ்சல் வீதம்; சேர்த்தல் வேண்டும்.) அரைத்தெடுத்த அறுகம்புல் குழம்பை நெற்றி, கன்னம், சைனஸ் நீர் தேங்கக்கூடிய இடத்திலெல்லாம் பூசித் தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டு இருந்து தோய வேண்டும் (நீராடுதல் வேண்டும்) பின்னர் உடலில் நீர் இன்றி நன்றாக துடைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சைனஸ்; வியாதியிலிருந்து விடுபடமுடியும். சரும வியாதியுள்ளவர்கள் வியாத்யுள்ள இடங்களில் இரவில் பூசி காலையில் நீராடமுடியும் சரும வியாதியிலிருந்து விடுபடமுடியும்.   
         ---  இன்னும் செப்பில் அறிவு தரும் கண்ணோய்
            யொடு தலை நோய் கண் புகையில் இரத்த பித்தம முன்நோய் யொழிக்கும் உரை” இங்கு சொல்லப்பட்ட தேரயர் வாக்கு பலிதமாகும்.


 


“மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”

“மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”
          மனத்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மனமுள்தால் மனத்தக்காளி என்றும் திருமனத்துக்கு தக்க உடல்லை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மனக்க தக்க யாளி மனத்தக்காளி யாக்கிவிட்டது.
          இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதாத்தகுண சிந்தாகணியில் 
“மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
  விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
  வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
   மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து
 காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
 உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
 மனத்தக் காளிக்குள்ள வாறு”   
 வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.            
 பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மெண்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும். 
     இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூன்னர் வாழ்த சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியர்ப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகம்கில் சித்தர்கள் தொண்மையும் விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.
   1.இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) மஸ்பரலஸ் என்ற ஆய்வியலாளர் மனதக்காளியின் இலைச்சாற்றை ஆய்வு செய்து குடல்புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு என்பதை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து அவைகளுக்கு ஏற்பட்டிருந்த குடல் புண் ஆறக்கண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அத்துடன் வாயுடன் கூடிய அல்சறை குணமாக்கும் ஆற்றலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு உண்டு என்று நிருபித்துள்ளார்.
  2. யதீஸ் என்ற இன்னுமோர் ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்)செய்த ஆய்விலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு வயிற்றில் எற்படும் புண்களை முற்றாக மாற்றும் வல்லமை இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.
   3. இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) ராஐ; என்ற இன்னுமோர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்றில் உள்ள “கப்பட்டோ புரட்டக்டியுல்” என்ற வேதியல் மூலக்கூறு கல்லீரலைப் பாதுகாக்கின்றது. என்ற கருத்தை அவரின் ஆய்வின் மூலம் முன்வைத்து நீருப்பித்துள்ளார்.
   4.இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) பகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான்னலி அஸ்ரப் அலி என்னும் ஓர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்று மஞ்சல் காச்சலில் ஒருவகையான “கப்பட்டைடிஸ் -சீ” என்ற காச்சலை உருவாக்கும் வைரஸ்சை அழிக்கும் வல்லமை உள்ளதுடன் கல்லிரலின் பலவீனத்தால் உண்டாக்கும் நோய்களை குணப்படுத்த வல்லதுடன் கல்லீரலை பலப்படுத்தும் வல்லமையும் இருக்கின்றது என மீண்டும் அக் கருத்துக்கு வலுவுட்டியுள்ளார்;.
   5.செல்வப்பா முத்து என்ற இன்னுமொரு ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) செய்த ஆய்வில் மனதக்காளிக் கீரை மிகவும் சக்தி வாய்தது என்றும் அது ஆண்களின் ஆண்மையை வீரியமாக்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இதன் அளவையும் விந்து சுரப்பையும் அதிகரிக்கின்றது என்று தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதனை சித்தர்“விந்து நோய் பாண்டொதிர்”என முன்னரே அறிந்து அறிவியல் உலகுக்கு தெரிவித்துன்னர் என்பதை அறியும்போது தமிழ் மருத்துவத்தின் அறிவியல் தொன்மையை அறிய முடிகின்றது. 
மனத்தக்காளி காயும் பழமும்   5. திருமதி. வடிவேல் அருள்மொழி என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தில் (2010 இல்)தாம் செய்த ஆய்வில் மனத்தக்காளிக் சற்றுக்கு இரண்டு பண்புகள் உண்டு என்றும் இவை
        1;.நோய் எதிப்பு சக்தி வீழ்சிக்கு காரணமாக இருக்கின்ற பொருட்கள்         எல்லாவற்றையும் அழிக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். உடலை முதுமையிலிருந்து இளமையாக்கி  காக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். 
       2.உடலில் கொளுப்பு சத்து அதிகரித்து கொலஸ்றோல் அதிகர்த்து அதன் விளைவால் வரக்கூடிய சைக்கிளிசைட், லோடெண்சிட்டி கொலஸ்றோல், லிப்பீட் கொலஸ்றோல்போன்றவை உடலில் கூடுவதை தடுக்கும் ஆற்றல் மனத்தக்காளிக்குண்டு. என்று தனது ஆய்வில் வெளியிட்டுள்ளார்.
6. சீனதேசத்தைக் சேர்ந்த கெஸ்சி முவான் என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) வெளியிட்ட கட்டுரையில் மனத்தக்காளிக் கீரைக்கு இன்னும் இரண்டு பண்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 
            1.அட்டோ பசிஸ்
            2.அப்போட்டசிஸ் என்ற வேதியல் மூலக்கூறுகள் இருப்பதாகவும் அது உடலில் அழிந்த கலங்களை மீண்டும் புதிப்பிக்கின்றதுடன் கலங்கள் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுடன் உற்பத்தியின் போது ஏற்படும் தவறான நகல்களை அழித்து சரியான நகல்களை நிலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்துள்ளார். இதை சித்தர் பாடலில் “முந்து வளருமத்தோச நோய் மாறும் கைப்பான  மினகுத் தக்காளியிலை மெய்” என அப்போதே அழகாகக் கூறியிக்கின்றார்.
7.லைவோசன் என்பவரும் ரீக் என்ற இருவரும் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) இல் ஆய்வு செய்து மனத்தக்காளிக் கீரைகயில் “கிக்கோரோட்டிக்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது என்றும் இது புற்றுநோயை தடுக்க வல்லது என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் கிக்கோ என்பது மாச்சத்து புரோட்டீன் என்பது புரதம் இவை இரண்டும் சேர்ந்த ஓர் புரதப்பொருள் இது புற்றுநோயை தடுக்க வல்லது. இதன் முலம் மீண்டும் ஆதாரப்படுத்தியுள்ளது.
மனத்தக்காளி               சீன நாட்டில் இருதய நோய்க்கு பல முகிலிகைகளுடன் சேர்த்துப் மனத்தக்காளியைப் பயன்படுத்து கின்றனர்.அது போன்று கிரேக்க மருத்துவத்தில் வீக்கத்துக்கு பற்றுப்போட பயன்படுத்துகின்றனர். வீக்கம் வருவதையும் காச்சல் வருவதையும் இக்கீரை தர்க்கும் ஆற்றல் உண்டு. பேஸ்சிய நாட்டிலே நீக்கோவைக்கு அருமந்தாக பயன் படுத்து கின்றனர். நீக்கோவை என்பது கால், முகம், கண்ணீத்தாரைப்பை( கண்களின் கீழ்ப்பகுதி),வயிறு போன்ற இடங்களில் நீர் சுரந்திருத்தல் உடலில் தேவையற்ற வகையில் நீர் தோல்லின் அடிப்பகுதியில் நீhதேங்கியிருத்தல்.  
பெண்களின் கற்பப்பையில் ஏற்படும் புற்று நோக்கு அருமருந்தாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
  இந்தக்கீரை உடலிலே நோய் எதிர்ப்புக் சக்தியை ஏற்படுத்தி புற்றுநோயை வராது தடுத்து புற்றுநோய் திசுக்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றது. முத்தோச நோய் என்னும் புற்றுநோய் இது ஒன்றில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவி உடலை அழித்து விடும் ஆனால் அஸ்துமா என்னும் சுவாசகாசம். இருதையநோய், நுரையிரல் நோய் போன்றவை அந்த உறுப்பை மட்டும் பாதிப்பாவை இதனாலே சித்தர்கள் இதனை முத்தோச நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
“காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” காய் குளிர்சியால் வரும் நோயை குணமாக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி குணமாக்கும் காய்க்குக் கபம் தீரும் என்றும் கீரை வெப்பத்தினால் வரும் நோயை குணமாக்கும். உடலில் குளிர்சிசியை ஏற்படுத்தி குணமாக்கும் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் என்று வெண்பாவில் கூறியுள்ளார். நோய்யுற்று உடல் தளர்தவர்களின் தளர்வு நீங்கி வலிமை பெற மனத்தக்காளி வற்றல் புளிக் குழம்பு சிறந்த பலனைத்தரும்,  “தீக்குள் உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும் மனத்தக் காளிக்குள்ள வாறு” என கூறிப்பிடுகின்றார். தளர்வு நீங்கி வலிமை பெறுகின்ற போது உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும் அப்போது மீள்திறனை ஏற்படுத்தும் ஆற்றல்லுடன் நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்தி உடலை வலுவுட்டும் சக்தி மனத்தக்காளிக் குண்டு. 
பயன்படுத்தும் முறைகள்:    
 1;.மனத்தக்காளி சூப்
தயாரிக்கும் முறை: தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  பின் இறக்கி சூப்பாக பருக முடியும். பருகினால் வாய்வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும். 
2.பச்சையாக மென்று சாப்பிடலாம்.
3. கீரையை பருப்பு போட்டு கடைந்து காப்பிடலாம். பாத்திரத்தில் கீரையைப் போட்டு சின்னவெங்காயத்தை நறுகிப்போட்டு அதனுடன் அரைத்பங்கு தக்களிப் பழத்தையும் நறுகிப் போட்டு சிறிதளவு மிளகு சீரகம் பச்சைமிளகாய் இவை போட்டு திடமாக தன்னீவிட்டு காச்ச வேண்டும். கீரையின் பசுமை நிறம் மாறாது இருக்க சக்கரையை சிறிதளவு தூவி விடவேண்டும் பசுமை நிறம் மாறாது இருக்கும் .இதை எடுத்து வைத்து விட்டு இன்னுமோர் பாத்திரத்தில் எண்ணை அல்லது நெய்யில்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் பருப்பு அல்லது துவரம் பருப்பு அவித்த நீரை விட்டு அதில் அவித்துவைத்த இலையை போட்டு அவித்து வதக்கி கடைந்து தேவையான உப்புச்சேர்த்து எடுத்து சாதத்துடன் உண்ணமுடியும்.  பொதுவாக கீரைகளுக்கு புளிசேர்ப்பதை தவிப்பதால் சத்தி இழப்பின்றி முழுமையான பலனைப் பொறமுடியும். நெய் சேர்ப்பது கீரைக்கறிக்கு நல்ல சுவையைத்தருவதுடன் ஊட்டமாகவும் இருக்கும்.    
4. காயை அல்லது வற்றலை புளிக்குழம்பாக செய்து வெந்தையக் சேர்த்து தாயாரித்து உணவுடன் தேர்த்து உண்ண முடியும். கபம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவித்துக் கொள்ளலாம். வேந்தையம் குளிர்த் தன்மையானது.






“கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;”

“கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;” 
வேம்பின் மருத்துவக்குணம் பற்றி தேரையர் குறிப்பிடுகையில் 
“கிருமி குட்டம் மந்தம் கெடும்
விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின்
புண்கள் ஒருமிக்க நிம்பத்திலை
இருக்க நீடுலகில் நீற்காது இலை காய்” என்றும் இன்னுமோர் பாடலில்
“மந்தப் பொருமலுடன் மல்லாடும்
பேதி வகை வந்த கணுச்சூலை
வண்கிரந்தி தொந்த மெல்லாம்
கூப்பிக் கரம் கொண்டாடும் இத் தரையில்                                                                                                                                                                                                                                                                                                                                                                        
வேம்பின் நற்குணத்தை வீழ்” என இருபாடல்களில் தேலையர் வேம்பின் மருத்துவக் குணங்களைக் கூறியுளார். 
1. “கிருமி  குட்டம் மந்தம் கெடும்”:  “கிருமி” என்பது வைரஸ் என்பதை இங்கு பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக புழு என்பது எம்முடலில் காணப்படும் நடாப்புழு, உருளைப்புழு, கீரிப்புழு என்பவற்றைக் குறிப்பிடுகின்றோம். புச்சி என்பது சிறிய உயிரினங்களுக்கு பயன்படுத்தும் பெயராகும். ஆனால் இங்கு கிருமி என்று பயன்படுதியதிலிருந்து நுண் கிருமியான பற்றியாக்கள் பங்கஸ்சுக்கள்; வைரஸ்கள் என்பவற்றினால் நோய் பரப்பப்படுகின்றது என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் அறிந்திருந்ததை அறியமுடிகின்றது. நுண்கிருகிகளால் பரப்பப்படும் நோய்களை தடுக்க நோய்க்கிருமிகளைத் தடுத்துக் கொல்லும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. அதனாலேயே அம்மை நோக்கு வேம்பு அருமருந்தாக கண்டு அம்மை நோய் கண்டவர்க்கு வேம்பின் இலையுடன் மஞ்சல் சேர்தரைத்து உடல் முழுவதும் பூசுவதுடன் மருந்தாக வேம்பில் அரும்பின துளிரை உட் கொடுப்பதுடன் படுக்கையில் வெள்ளை விரிப்பொன்றை விரித்து அதன் மேல் முற்றிய வேம்பின் இலைகளைப் பரப்பி நோய்யுற்றரை துயில வைப்பர். அம்மை நோக்குக் காரணம் வைரஸ் இதைதடுக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு என்பதை அன்று அறிந்திருந்தனர் சித்தர்கள். அறிவியல் இதை ஆராய விளைந்தது. ஆயிரத்து எண்ணுற்றி எழுபதில்களில் பிராஸ் தேசத்தைச் சேர்ந்த  டக்டர். லுயிபாஸ்டர் என்பவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி இவர் பிற்காலத்தில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாகி நுண்கிருமிகள் மனித உடலில் நோய்களை உருவாக்கின்றது என்ற விடயத்தை நவீன மருத்துவ உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார். இதை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதை அறிந்து அனுபவித்து மக்களுக்கு தெரித்வித்திருக்கின்றனர். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்ணுத்தெரியாத உயினங்கள் நோயை உருவாக்கு கின்றன என்பதை தமிழ் மருத்துவம் உணர்தே இங்கு “கிருமி” என்ற சொற்பதத்தை அன்று பயன்படுத்தி இதனை அளிக்கும் ஆற்றல் வேம்புக்கு உண்டு என்பதை அறிந்து ஆய்து அனுபவித்து தமிழ் மருத்துவத்துக்கு தந்தனர்.

2. “குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு. 
3. “மந்தம் கெடும்”: ஐPரணக்குறைபாடு இயற்கையாக உணவு சொரிக்கும் ஆற்றலில் தாமதம் இதனால் அஐPரணம் ஏற்படுத்தி உடல் உபாதைக்கு உட்படுகின்ற நிலையை தடுக்கின்ற தன்மை வேம்புக்குண்டு. 
4. “விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின் புண்கள்” : நீங்காத காச்சல் வைசூரியினால் உண்டாகும் புண்கள் இவற்றைப் போக்கும் இயல்பு வேம்புக்குண்டு.
  அடுத்த பாடலிலே “மந்தப் பொருமலுடன் மல்லாடும்
5. பேதி வகை”:மாந்தத்தினால் வயிறு பொருமலடைந்து ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்கும் தன்மை வேம்புக்குண்டு.
6. “வந்த கணுச்சூலை”: கணுச்சுலை என்பது மூட்டுகளில் நாற்பது வயதின் பின்னர் ஏற்படும் வழுவின்மையினால் ஏலும்புகள் உரைவதால் ஏற்படும் நோவும் வலியும் போக்கும் தன்மை வேம்புக்குண்டு.
7. “வண்கிரந்தி தொந்த மெல்லாம்”;: வண்மையான கிரந்தி அதாவது ஒவ்வாமையினால்  தோலில் ஏற்படும் பருக்கள் அவைஎல்லாம் வேம்பைக் கண்டவுடன் கைகுப்பி எங்களை ஒன்றும் செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள் பயந்து ஓடிவிடுமாம் என்று வேம்பின் வல்லமையை தேரயர் குறிப்பிடுகின்றார். 
பயன் படுத்தும் முறைகள்:
வேம்பின் துளிர்  1. வேம்பு கற்பம் இது வேம்பி தளிரை அதாவது துளிர் அரும்பை நாள் ஒன்றுக்கு ஒன்று இரண்டாக பத்தாவது நாளில் பத்து அரும்பாக தெடர்ந்து பத்துபத்தாக ஒரு மண்டலம்; (மண்தலம்) அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் உண்டுவர காயம் கற்பமாமும் என சித்தர்கள் இயம்பியிருக்கின்றனர். இதன் மூலம் உடலில் குடிகொன்டுள்ள கிருமிகள் ஒழிவதுடன் சருமத்தில் கொப்பளம் அரிப் என்பன நீங்கி விடும் அரவம் தீண்டினால் கூட உடலில் வி~ம் ஏறாது வி~த்துக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. மயிர் கறுத்து இளமை பெற “அகன்னன் நுதனாய் ஓர் அதிசயம் கேளாய் களவு காயம் கலந்த இன் நீரில் மிளகும் நெல்லியும் மஞ்சலும் வேம்பிடில் இலகு மேனி இறுகும் காயமே” தும்பை போல இருந்த தலை முடி கறுப்பாக போவதுடன் உடல் இழமையும் மடையுமாம் வெண்மிளகு,நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்கல், வெம்பின் விதை, அமியை இவை ஐந்தையும் அரைத்து நீரிலிட்டு தலை உடலெங்கும் பிரையோகித்தால் உடல் கட்டிளமை பெறுவதுடன் தலை முடியும் கறுப்பாகும்.
வேப்பம் வித்தும் 3. பஞ்சகற்பம் என்பது மிளகு, நெல்லி, மஞ்சல், வேம்பு, கடுக்காயத் தோல் என்பவற்றை சேர்த்து அரைத்து பீக்கம்தும்பினால்  தலை உடலெங்கும் தேய்த்து சிறிது நேரம் களித்து குளித்தால் கபம் நீங்கி உடல் இளமை பெறும். பொதுவாக கடுக்காய்த்தோல் ஒருபங்கு, வெண்மிளகு காற்பங்கு, நெல்லிக்காய் வற்றல் அரைப்பங்கு, கஸ்தூரி மஞ்சலும் வேப்பம் வித்தும்எட்டில் ஒரு பங்கு இவை அனைத்தும் உரியளவில் கலந்து அரைத்து எடுத்த விழுதை உடலில் தேய்த்து குளிக்கலாம்.
நடுத்தர வேம்பின் இலை 4. நடுத்தர வேம்பின் இலையை எடுத்து சமனிடை கருமிளகையும் சேர்த்து விளுதுபோல் அரைத்து அதை சுண்டங்காய் அளவும் பட்டானி அளவிலும் உருட்டி இனலில் காயவைத்துக் கொண்டால் வயிற்றில் புழுத் தொல்லை ஏற்படும் போது பெரியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு சுண்டங்காய் அளவுள்ள உருண்டையையும் சிறியவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பட்டானி அளவிலான உருண்டைகளை மூன்று வேளை பத்து நட்களுக்கு கொடுக்கவயிற்றிலுள்ள புழுக்கள் இல்லாமல் போகும்
நன்கு முற்றிய இலையில்  5. வேம்பின்நன்கு முற்றிய இலையில்ஒருகைப்பிடி எடுத்து இதனுடன் ஒருகைப்பிடி புழுங்கல் அரிசையும் சேர்த்து உரலில்லிட்டு இடித்து இரண்டும் இடிந்து வேப்பிலைக் சாறு குறுணலில் நன்றாகக் கலந்த பின் இடிந்த இலைகளை அகற்றி சாறுகலந்த குறுனல்லை ஒட்டியிட்டு(மண்சட்டியில்) கறுக வறுத்து நான்கு படி நீருற்றி ஒருபடியாய் வற்றக்காச்சி எடுத்து வயதுக்கும் உலல்வலிமைக்கும் ஏற்ப கொடுத்து வர பேதி கட்டுப்படும்.
6. வேம்பிலையின் நெட்டியில் உள்ள பச்சிலைப்பகுதியை நீக்கி ஈக்கை இடித்து நீர்விட்டு வறற்க்காச்சி அருந்த அதிசாரமெனும் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். இம் மருந்து அஐPரணக் கொளாற்றையும் நீக்க வல்லது.
7. வேம்பின் நடுத்தரமாக விளைந்திருக்கும் இலையை எடுத்து இதனுடன் இஞ்சி, மஞ்சல் இவை இரண்டும் சேர்த்து மூன்றையும் சமமிடையாக சேர்த்து விழுது போல் அரைத்து ஓட்டியிட்டு  சாதுவாக சூடாக்கி மூட்டி மூட்டுக்களில் பற்றுப்போட்டால் போல பூசி காயவிட்டு காலையில் கழுவிடலாம். பின் வீட்டில் இருப்பதானால் மீண்டும் காலையிலும் இடலாம் இதன் மூலம் மூட்டுவலி வீக்கம் என்பன சுகமாகி மூட்டுகளின் உராவை தடுக்க வழுவும் உண்டாகும்.




LikeShow more reactions
Comment
சண்பகப்பூ என்றால் எல்வோருக்கும் ஞாபகத்தில் வருவது தோச நிவத்திக்கு பரிகாரமாக இம் மலரை இறைவனுக்கு அர்பணம் செய்வார்கள். ஆனால் அதில் உள்ள மருத்துக்குணம் பற்றி யாவருக்கும் தெரியாது சித்தர்கள் மகரிஷிகள் எப்போதும் வழிபாட்டுக்கு பயன்படுத்திய அனைத்துமே மனுக்குல மீட்சியை அடிப்படையாகக் கொண்டே என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சண்பக மரங்கள் நீண்டு வளரக்கூடியவையே இவை பொதுவாக இமையமலைச் சாரலிலேயே அதிகளவில் காணப்படுகின்றது. பொதுவாக நவக்கிரகங்களில் வியாழ பகவானுக்கு அரிச்சினைக்குப் பயன் படுத்துகின்றனர். வியாழ பகவான் தேவகுரு அவரே சிவன் ஞானகாரகன். ஞானத்தை கல்லாலையின் கீழ் சனகர் சனாதனர் போன்ற மகஷிகளுக்கு வேதத்தை உபதேசித்தார். அவருக் சமர்பிக்கப்படும் மலர்களில் பிரதானமாது சண்பகமலர் இனி அதன் மருத்துவகுணங்களைப் பார்ப்போம்;. சம்பக மலரின் மருத்துவக்குணத்தை நோக்குகையில் சித்தர்கள்
'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ்
சுத்தசுரந் தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள்
திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்' என்றனர்.
பாடலின் பொழிப்பு:
1. 'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ் சுத்தசுரந்......': இம் மலர் வாதநோய் பித்தம் அத்திசுரம் என்னும் எழும்பு மச்சையின் பாதிப்பால் ஏற்படும் சுரம். மேகம் எனும் நிரிலிவு நோய் காச்சல் போன்ற நோய்களைப் போக்க வல்லது.
2. 'தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள.....': தாது என்னும் இந்திரிய குறைபாட்டை போக்குவதுடன் கண்ணில் ஏற்படும் அழற்சியையும் போக்க வல்லது பெண்ணே கேள் என்கின்றார் சித்தர்.
DSC007483. 'திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்.....': மனக்களிப்பை போக்குவதுடன் நல்ல மணத்தையும் தருவதுடன் உட்டிணமும் உண்டாகும். என்றார்கள் சித்தர்கள்.
அறிவைப் பெற மணச்சந்தோசம் தேவை அத்துடன் உடல் வலிமையும் நோயற்ற நிலையும் தேவை. அடுத்து சண்பகமரவேரின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிடுகையில்.
'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்
நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால்
பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும்
வாசமுள்ள சண்பக மரத்தின்வேர் தான்' என்றனர் சித்தர்கள்.
பாடலின் பொழிப்பு:
1. 'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்.....': தீராத உஸ்னத்தை போக்க வல்லதுடன் சுரத்தையும் போக்கும் சண்பக மரவேர்.
2. 'நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால் ......': உடலில் ஏற்படும் உஸ்ணத்தை குறைத்து பசியை உண்டாக்க வல்லது. 3. 'பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும் வாசமுள்ள......': கண்ணில் ஏற்படும் நோய்யினை போக்குவதுடன் இம்மலர் வாசமுள்ளது இதனால் மணம் அமைகொள்ள வைப்பது.
4. 'சண்பக மரத்தின்வேர் தான்': இவை அனைத்தையும் தரவல்லது சண்பகமர வேரை பயன்படுத்துவதனால் என சித்தர்கள் கூறி இருக்கின்றனர்.
DSC00757
எனது வழிபாட்டறையில் சம்பகமலரில் பூஜை செய்த காட்சி
பயன்படுத்தும் முறை: சண்பகமலரையும் வேரயும் நினலில் உவத்திவைத்துக் கொண்டு கசாயம் வைத்து காலை மாலை உணவருந்த முன் அரைமணித்தியாலத்துக்கு முன் அருந்திவர மேல்கண்ட நோகளுக்கு பரிகாரம் காணமுடியும். இரண்டையும் தனித்தனியே பயன் படுத்தவும்.
பரமஹம்சர் என்பவர் யார் அவர் எப்படி இருப்பர் என்பது இன்று பலருக்கு தொரியாது. எம்மைப் பொறுத்தவரை குருதேவர் ஸ்ரீராமகிருணஷ்ரை ராமகிஷ்ண பரமஹமசர் என கேள்விப்பட்டுள்ளோம். அவர் தன்னை யாரிடமும் கடவுளாக வெளிப்படுத்தவில்லை. அவரது சீடக்களும் பக்தர்களும் கடவுளாக கண்டனர். கற்பக தரு தரிசனத்திலே அவரது பிதமசீடரன சுவாமி விவேகாநந்தரிடம் ராமனும் நானே கிருஸ்ணனும் நானே என்றார். அவர் அன்பே சோருபமானவர். எளிமையான வாழ்க்கை வாழ்தவர். பிற்காலத்தல் அவர் பூணுல் சிகை போன்றவற்றை வெறுத்தார். சாக்கடை நீரையும் தன்னையும் ஒன்றாக மதித்தார். உடலை உயிரற்ற உடலுக்கு சமாக மதித்தார். கழிவறை தொழிலாளியின் மலவாசலை தன் தலையால் சுத்தம் செய்தார். எச்சில் இலையில் தானும் நாய்யும் ஒன்றாக போஜணம் புசித்தார். பணத்தை தன் கையால் ஒருபோதும் தொடவில்லை. இவ்வாறு நான் என்பதை தன்னிலிருந்து கொன்றார். இவரே பரமஹம்சர்.
உபநிஷத்தில் இருபதில் பரமஹம்ஸோபநிஷத்தில் பரமஹம்சர் மார்க்கம் தொட்பாக குறிப்பிடுகையில் 'மார்க்கஸதோஷாம் கா ஸ்திதிரிதி நாரதோ பகவந்தமுபேத்யோவாச.............' என்று தொடங்கும் சுலோகத்தில் நாரதர் பகாவானிடம் சுக்லயஜூர் வேத்தில் வினாவினார். பரமஹம்கர்களாகிய யோகிகள் மார்க்க மென்ன? அவர்கள் கதி என்ன? இவ்வினாவுக்கு பகவான் கூறியதாவது. பரம்மஹம்சஸ மாக்கம் உலகில் அடைதற்கரியது. அவர் பரவலாக இல்லாது எங்கோ ஒருவ் இருப்பார். அவர் என்றும் புனிதமானவர்.அவரே வேத புருஷர் என்று அறிவாளிகள் கருதுவர். அவரே மகாபுருசர். அவருடைய மணம் எப்போதும் என்னில் லயித்திருக்கும். நானும் அவரிடம் நிலைத்திருப்பேன். அவர் தனது புத்திரர், மித்திரர், மனைவி, உறவினர்கள் ஆகியோரைத் துறந்தவர். சிகை, பூணூல் ஆகியவற்றைக் களைந்து, எல்லாக்கருமங்களையும் வேதம் ஓதுதலையும் கூட விட்டுவிட்டு இந்தப் பிரமண்டமாகிய உலகத்தையே துறந்து சரீரத்தின் உபையோகத்துக்காகவும் உலகத்தின் உபையோகத்துக்காகவும் கோவணமும், துணியும், ஒரு தடி மட்டும் வைத்திருப்பார். அதுவும் கூட முக்கியமன்று.
இரண்டாவது சுலோபத்தில் ' ந தண்டம் ந சிகா ந யஜ்ஞோபவீதபவீதம் ந.........' என்று தொடங்கும் சுலோபத்தில் தடியுமன்று, சிகையுமன்று, பூணூலுமன்று துணியும் கூட இல்லாமல் பரமஹம்சர் சஞ்சரிப்பார். அவருக்குக் குளிரும் வெப்பமும் இல்லை. இன்பமும் துன்பமும் இல்லை. மானமும் அவமானமும் இல்லை. தோன்றுதல், வளர்தல், மாறுதல் போன்ற ஆறு வாழ்க்கைக்கலைகள் இல்லை. நிந்தை, கர்வம், மாச்சரியம், இடம்பம், ஈர்ஷை, அஸூயை, அஹங்காரம் முதலியவை இல்லாமல் அவர் தனது உடலையும் பிணமெனக் கருதுவர். சந்தேகம், மெய்அறிவு ஆதலியவற்றுக்கு எந்த உடல் காரணமாக இருந்ததோ அந்த உடல் பற்றிலிருந்து முற்றும் நீங'கி விட்டமையினால் அந்த அழியாத மெய்யறிவுடன் ஆத்மாவாகிய தன்னிடமே நிலைத்தது. ' அசையாது அமைதியாய் இரண்டற்ற ஆனந்தமாய், அறிவே உருவாய் நான் இருக்கின்றேன். அதுவே என்னுடைய பரமபதம் அதுவே சிகை, அதுவே பூணூல்' என்று காண்கின்றார். பரமாத்மாவும் ஆத்மாவும் ஒன்றே என்ற ஞானத்தால் அவற்றினிடை வேற்றுமை அழிந்து விட்டது. அந்த ஸந்தியே அவருடைய ஸந்தியோபாஸனை.
மூன்றாவது சுலோபத்தில் 'ஸ்ர்வான் காமான் பரித்யஜ்ய.........' எல்லா ஆசைகளையும் அறவே ஒழித்து உத்தமமான அத்வைத்தில் நிலைபெற்று ஞான தண்டத்தைத் தரித்தவர் எவரோ அவரே ஏகதண்டீ எனக் கூறப்படுவர்.
நான்காவது சுலோகத்தில் 'ஸர்வேஷாமிந்த்ரியாணாம் கதி...........' எல்லா அந்திரியங்களின் போக்கையும் அடக்கி எவர் ஆத்மாவிலே நிலை பெற்று, பூர்ணானந்தமாகிய ஒரே உணர்வுடையவராய் இருப்பவராய் 'ப்ரஹ்மைவாஹமஸ்மி' என்ற அபரோசஷானுபூதியுடையவராய் இருப்பவரோ அவர் க்ருதக்ருத்யர், வாழ்க்கைப் பயனை எய்தியவர் என்று உபநிஷத்துக் கூறுகின்றது.
எனவே பரமஹம்சர் என்பவர் இதிலிருந்து தன்னை யாரும்அறியாதவராக அறிந்தவக்கே அறியத்தக்கவராக இருப்பவரே என்பது புலணகின்றது. அவர் உடலை துச்சமாக மதிப்பவர். அதை ஒரு நடைப்பிணமாகவே கருதுவர்கள். ரமணமகரிஷி அப்படியான வாழ்க்கை வாழ்ந்தவர். தற்போது சிலர் தம்மை பரமஹம்சராக தமே கருதிகொள்கின்றனர். பரமஹம்சர் எப்படிப்பட்டவர் அவருடைய இலக்கணம் என்ன என்பதை உலகம் அறிய வேண்டும். உலகத்தை ஏமாற்றுவர்கள் ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் ஏமாற்றிக் கொண்டே இருப்பர். இதனால் உண்மையை உலகம் அறிய வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரையை எனது இணையதளத்தின் நேயர்களுக்காகவே சமர்ப்பிக்கின்றேன். சரியானதை சரியாக அறிவதே அறிவு. அது ஆஞ்ஞானத்தால் போக்கி மெய்ஞானத்துக்கு வித்தடுவதே நோக்கம்.

Friday, July 28, 2017



"ஸ்ரீ துர்க்கா- ஸப்தச்லோகீ - மாலா'
நவராத்ரி காலத்தில் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரம்

தேவி மஹாமியத்தில் மாங்கண்டேய புராணத்தில் உள்ள தொள்ளாயிரம் மந்திரங்களில் சிறந்த மந்திரங்களாக சித்தர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஏழுமந்திரங்களாகும். இவை மிகவும் சக்தி வாய்தவை கேட்டவருக்கு கேட்ட வரம் தரவல்லவை. இதனாலேயே இந்த மந்திரங்களை "ஸ்ரீ துர்க்கா- ஸப்தச்லோகீ - மாலா' என அழைக்கப்படுகின்றது. இம்மந்திரம் புரட்டாதி மாதத்தில் வரும் சாரதாநவராத்திரி காலத்தில் பாராயணம் செய்வது சிறந்தது. எனைய காலங்களில் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் இராகு காலங்களில் பாராயணம் செய்தால் அதன் பலனை அடைய முடியும். இறைவனிடம் சரணாகதியடைந்தால் எல்லாமே சரியாக நடைபெறும். எதையும் கேட்கவேண்டியது இல்லை. எல்லாம் நாம் செய்யும் செயலின் பலன் தான். ஆனால் வழிபாடு என்பது நம்மை சரியான வழியில் வழிப்படுத்த துணை செய்யும். இதனை சான்றோர் 'தலையால் போவதை தலைபாகையுடன் போவதாக' பழமொழி கூறியுள்ளனர்.

ஆசமனம்:
சுக்லாம்பரதரம் .......... சாந்தையே ||
ப்ராணாயாம: ஓம் பூ : பூர்ப்புவஸ் ஸீவரோம் ||
மமோபாத்த............
தியானம்
மாதர்மே மதுகைடபக்க்னி மஷிஷப்ராணாபஹா -
ரோத்யமே
ஹேலா - நிர்மித – தூம்ரலோசனவதே ஹேசண்ட –
முண்டார்த்தினி |
நி: சோஷீக்ருத – ரக்தபீஜ தனுஜே நித்யே நிசும்ப்பாபஹே
சும்ப்பத்த்வம்ஸினி ஸம்ஹராசு துரிதம் துர்க்கே
நமஸ்தேளும்பிகே ||
(தாயே! மதுகைடபர்களை வதம் செய்பவளே மஹிஷாஸீரனுடைய பிராணனைப் போகியவளே! வினையாட்டாக தூம்ரலோசனனை வதைத்தவளே! சண்டமுண்டர்களையழித்தவளே! ரக்தபீஜாசுரனை நிர்மூலமாக்கியவளே! சும்பனையும் நிசும்பனையும் ஒழித்தவளே! நித்தியமானவளே! துர்க்காம்பிகையே! உன்னை நமஸ்கரிக்கின்றேன். விரைவில் எனது பாவத்தைப் போக்கியருள்வாய்)
ஸ்ரீ துர்க்கா- ஸப்தச்லோகீ - மாலா
ஓம் ஜ்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா |
பலா – தாக்ருஷ்ய மோ ஹாய மஹா மாயா
ப்ரயச்சதி || 1 ||
(மஹாமாயா தேவியான பகவதி வலுவில் கவர்ந்து மோஹத்தில் செலுத்துகிறாள். அவளேதான் அசைவதும் அசையாததும்மான இவ்வுலகெல்லாம் சிஷ்டிக்கப்படுகின்றது.)
துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி – மசேஷஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சுபாம் ததாஸி |
தாரித்ர்ய – து: க்க – பய - ஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார – கரணாய ஸதார்த்ர – சித்தா || 2 ||
(கடத்தற்கரிய கஷ்டத்தில் நினைக்கப்பட்டால் நீ எல்லா ஜீவர்கயுளுடைய பயத்தையும் போக்குகின்றாய். இன்பத்தில் நினைக்கப்பட்டால் நலன் மிக்க மதியை அளிக்கின்றாய் ஏழ்மையும்;இதுன்பத்தையும் பயத்தையும் போக்குபவளே! ஏல்லோருக்கும் உபகாரம் செய்ய எப்போதும் உருகும் நெஞ்சுடையவள் உன்னைத் தவிர யார்உளர்?)
ஸர்வமங்கல – மாங்கல்யே சிவே ஸர்வார்த்த - ஸாதிகே |
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோளுஸ்துதே || 3 ||
(எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய்! விளங்குபவளே! ஏல்லா நன்மைகளையும் அளிப்பவளே! ஏல்லா ஆசைகளையும் பூத்தி செய்பவளே! சரணடைதற்குரியவளே முன்று கண்களை யுடையவளே! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்)
சரணாகத தீனார்த்த – பரித்ராண – பராயணே |
ஸர்வஸ்யார்த்திஹரே தேவி நாராயணி நமோளுஸ்துதே || 4 ||
(தன்னை சரணடைந்த தீனர்களையும் துன்புற்றோரையும் காப்பாற்றுவதையே தொழிலாய்க் கொண்டவளே! ஏல்லோருடைய துன்பங்களையும் துடைப்பவளே! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்)
ஸர்வஸ்வரூபே ஸர்வேசே ஸர்வ - சக்தி - ஸமன்விதே |
பயேப்ப்யஸ் - த்ராஹி நோ தேவி துர்க்கே தேவி நமோளுஸ்துதே || 5 ||
(அனைத்தின் வடிவமாகவும் அனைத்தையும் ஆள்பவளாகவும் சக்தியனைத்தும் விளங்கும் தேவியே பயங்பரமானவற்றினின்று எங்களைக் காப்பாய் துக்காதேவியே! உனக்கு நமஸ்காரம்)
ரோகானசேஷா- னபஹம்ஸி துஷ்டா
ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான் |
த்வாமாச்ரிதானாம் ந விபந்நராணாம்
த்வாமாச்ரிதா ஹ்யாச்ரயதாம் ப்ரயாந்தி || 6 ||
(நீ ஸந்தோஷ மடைந்தால் எல்லா நோய்களும் அறவே போக்குகின்றாய். கோபத்தாலோ வேண்டப்படும் காமங்களை எல்லாம் அறவே அழிக்கின்றாய் உன்னை அண்டிய மனிதருக்கு விபத்து கிடையாது. உன்னை அண்டியவர் பிறர் அண்டுதற்குரியவராகின்றனரன்றோ? )
ஸர்வா – பாதா – ப்hசனம் த்ரைலோக்யஸ்யாகிலேச்வரி |
ஏவ மேவ த்வயா கார்ய – மஸ்மத்வைரி – விநாசனம் || 7 ||
(அகில நாயகியே இவ்வாறே முவுலகின் துன்பங்கள் முழுவதும் நாசம் செய்யப்பட வேண்டும். உன்னால் எங்கள் சத்துருக்கள் அழிக்கப்படவேண்டும்)
மந்த்ரம் :
'ஓம் ஐம் ஹ்ரீம் க்லிம் சாமுண்டாயை விச்சே'
(ஜம் - சித்தஸ்வரூபிணியான மஹாஸரஸ்வதி
ஹ்ரீம் - சிதமாத்மஸ்வரூபிணியான மஹாலஷ்மி
க்லிம் - ஆநந்தரூபிணியான மஹாகாளி ஆகிய எல்லாத்தீமைகளையும் சமனம் செய்யும் நிர்விகல்பரூபிணியான உன்னை இதய கமலத்தில் தியானிக்கின்றேன்.)
புராணங்களில் காணப்பட்ட திரிமூர்த்தகள் ஏற்ற இறக்கங்கள் பேதங்கதொடர்பாக பஞ்சாங்கம் குண்டையன் கேட்ட கேள்விகளுக்கு சித்தூர் ஜில்லா அதாலத்துகோட்டு தீர்ப்பின் போது நடைபெற்ற விவாதத்தில் மார்க்கசகாய ஆச்சாரியாரல் கொடுத்த பதில்கள்.
மார்க்கசகாய ஆச்சாரி எமது வியாசபகவான் திரிமூர்திகளையும் எந்தப்புராணத்தில் இகழ்திருக்கின்றார்? என கேட்கப்பட்ட கேள்விக்கு.
சிவபுராணத்தில் 'ஆதிசக்தி மயம் பீஜசக்தி மயம்சிவ சிவசக்தி மயம்விஷ்ணு சர்வம்விஷ்ணு மயம்ஜகத்' இதன் கருத்து ஆதிசக்தியினிடத்திலிருந்து ஓருபீஜம் பிறந்தது. அதனுடைய வல்லமையினாலே சிவன் பிறந்தார். சிவனிடத்தில் விஷ்ணு பிறந்தார். இவ்விஷ்ணுமயம் சர்வலோகம் முழுவதும என்பதினால் சிவன் விஷ்ணுவுக்கு தந்தை அல்லவோ?
'மயோனிர்ஹர்ஹத்ப்ரம்ஹஸ்பின்கற்பேகதாம்ஹம்'
இதன் கருத்து: என் யோனியில் மஹாப்ரம்மம். அதிலிருந்து நான் உலுவாகி விடுகின்றேன் என்பதாம்.
'குணேப்யசேஷாப்ய மாணேப்யத்iயேப்தேவா பிஜக்ஞீறே ஏகமூர்திதரயோபாகா ப்ரம்மாவிஷ்ணுமஹேஸ்வர'
என்பதின் கருத்து: ராஜச தாமத சாத்வீக குணங்களினால் ஆதிமூர்த்தியும், அந்த ஏகமூர்த்தியினால் திரிமூர்த்திகளும் தோன்றியது என்பது. இங்கு இவ்விரண்டு சாஸ்திரங்களில் ஒன்றில் ஏகமூர்தியானவர் ஆதியிலே யாதொரு குணமும் இல்லாமல் ஏகமாயிருந்தார் என்றும், மற்றுமோர் சாஸ்திரத்தில் முற்குணங்கள் உள்ளவரானார் என்றும் சொல்லி இருப்பத்னாலே அநேக ஆசேஷபனைகளுக்கு இடமாயிருக்கின்றதல்லவா? அது எப்படி என்பீரோ? அந்த மூர்த்தி குணமில்லாதவர் என்றால் அவருடைய பரத்துவ மகத்துவத்துற்குக் குறைவும், அவரது பூரணத்தன்மைக்குப் பின்னமும் ஆகின்றதல்லவோ! ஏனென்றால் ஓரு சாஸ்திரம் நிhக்குணமென்றும், மற்றொரு காஸ்திரம் முக்குணம்ரென்றும் சொன்னால் அது மகாபேதமல்லவோ? அதை யோசித்தால் தெரிகின்றதல்லவோ?
மச்சபுராணம் இந்த ஆதிமூலத்துக்குரிய திரிகுணாத்துமாவின் உற்பத்தி காரணங்களைக் குறித்துச் குறித்து இருக்கின்ற சுலோகங்களை உமக்கு விரிக்க வேண்டுமாகில், அவை அனேகமாக இருப்பதால் மற்றைய புராணங்களில் இருக்கின்ற வழுக்களில் சிலவற்றை மாத்திரம் இங்கே சுருக்கமாக காட்டுவேன். அவைகளில் ஒரு புராணத்திலே ஆதிசக்தியில் நின்று இந்ததிரிமூர்த்திகள் தோன்றினார்கள் என்றும். அந்த ஆதிசக்தி இவர்களை மோகித்துத் தனக்கே இவர்களைப் புருசர்களாக்கிப் பாவித்துக்கொண்டார்கள் என்றும். பகவதத்திலும் இன்னும் சிலபுராணங்களிலும் விஷ்ணுவுடைய நாபியிலே ஒருதாமரை தோன்றி அதிலிருந்து ப்ரம்மா உற்பவித்தார் என்றும். சொல்லப்பட்டிருக்கின்றது. அது அப்படி என்றால் ஆதியிலே ப்ரம்மா முந்தி தண்ணீரை சிருட்டித்துத் தன்னுடைய இந்திரியத்தை அந்ந தண்ணீரில்விட்டார். அது முட்டையாகி மிதந்து, அந்த முட்டையை முற்கண்ணனாகிய சிவபொருமான் தோன்றி உடைத்தார். அந்த ஷிணமே குற்றமில்லாத பஞ்சபூதங்களும் உண்டாகினவாம்.
மற்றொரு புராணத்திலோ ஆதிசக்தியிலிருந்து ஒரு விந்து தோன்றி அதிலிருந்து சிவன் தோன்றினார் என்றும், மச்ச புராணத்திலே ப்ரம்மாவிலிருந்து சிவன் தொன்றினார்ரென்றும். இன்னம் இப்படிப் பலவிதஞ் சொல்லி இருப்பதால் எது மெய் எது பொய் என்பதை யார் கிரகிக்கக்கூடும்? இதனால் சகலமும் பொய் என்றே தெளிவாய் விளங்குகின்றது.
'ததோசிருஜத்வாமதேவம் திரிபுண்ரவாதாரிணம்'
இதன் கருத்து: ப்ரம்மம் திரிபுண்டதாரியென்கிற வாமதேவனை உண்டாக்கிகினானென்பதே.
நரதபுராணத்தில் நாராயணனுடைய வலது பக்கத்திலிருந்து ப்ரம்மா தோன்றினாரென்றும் இடது பக்கத்திலிருந்து விஷ்ணு தொன்றினார் என்றும், மத்தியில் சிவன் தோன்றினார் என்றும் சொல்லிருக்கின்றது.
இலிங்கபுராணத்தில் இவ்வுலக அண்டத்திலிருந்த சிவனானவர் ரூபீகரித்துப் பிறகு தனது இடது பக்கத்திலிருந்து விஷ்ணு இலக்குமி என்பவர்களையும் தனது வலது பக்கத்திலிருந்து ப்ரம்மா சரஸ்வதி என்பவர்களையும் உண்டாக்கினர் என்றும் சொல்லிருக்கின்றது. இப் புராணத்திலேயே மற்மோர் பக்கத்தில் ப்ரம்மா சவிருஷ்டிக்கிரியை முடிக்கச் சக்தியில்லாமல் கண்ணீர் விட்டெழுந்தானென்றும், அந்த கண்ணீர்களில் ருத்திரன் தோன்றி அந்த திருஷ்டிக்கிரியைத் தானும் முடிக்கக்கூடாமல் வருந்துவதை அவன் தகப்பனாகிய ப்ரம்மா கண்டு அவனுக்குத் துணை செய்ததாகவுஞ் சொல்லியிருக்கின்றது.
மார்க்கண்டபுராணத்தில் லட்சுமியிலிருந்து விஸ்ணுவும், காளியிலிருந்து சிவனும், சரஸ்வதியிலிருந்து ப்ராமாவும் தோன்றினார்களென்றுஞ் சொல்லிருக்கின்றது.
வராகபுராணத்தில் திரிமூர்த்திகளிலிருந்து சக்தி தோன்றி அந்த சக்தியிலிருந்து லட்சுமி, காளி, சரஸ்வதி மூன்றாயினார்கள் என்றும் இப்படிபலவிதமாகச் செல்லிய பலபுராணங்களில் எதை மெய் என்று சொல்லக்கூடும்? இவ்வித மாறுபாடுகள் அனேகம் வியாசர் முதலிய ரிஷிகள் தங்கள் புராணங்களிற் கற்பனை செய்திருக்கின்றபடியால் இதை மெய்யென்று நம்புகிறவர்களைப் பேதைகளெனறே சொல்லப்படும்.
'சர்வவ்யாபீ'பகவான் தஸ்மாத்ஸர்வ கதஸ்சிவ'
இதன் கருத்து: அந்த பகவானென்னப்பட்ட சிவன் சர்வவியாபியபகி எவ்விடத்திலும் நிறைந்திருக்கின்றான் என்பது பகவதத்தில் இதற்கு முழு விரோதமாயிருக்கின்ற சுலோகத்தைக்கேளும்
'பவவ்ரததாயேசா ஏசதாசசமநோவரத:
பாஷாண்டின: தேபவந்த சஸ்சாஸதி;ந்பரிபந்தன:
முழுசஷீவோகோரரூபந த்வாபூதபதிர்நதா:
நாராயண பளாசாந்தா பஜந்திஹ நசூயவ:
இதன் கருத்து: சிவனைப் பூசித்துத் தியானித்தவர்களைப் பாஷாண்ட் பதிதர்களென்றும், மோசஷம் அடையார்களென்றும் நாராயணனைத் தியானிப்பவர்கள் மோசஷத்தை அடைவார்கள் என்றும் சிவனை இகழ்ந்தும் ஹரியைப் புகழ்ந்து பேசியிருக்கின்றது பதுமபுராணத்தில் சிவனை இகழ்ந்திருக்கின்றது.
'விஷ்ணுதர்ஸனமாத்னே சிவத்ரோஹப்ரஜாயதே
சிவத்ரோஹசநீதேஹோ நரகம்யாந்த்தி தாருணம்
தஸ்மாத்தப்விஷ்ணுநாமாபி நவக்தவ்யகதாச' இதன் கருத்து: சிவத்துரோகஞ் செய்து விஷ்ணுவைத் தரிசித்தால் சிவன் உக்கிரங்கொண்டு நரகத்துக்காhக்கு வான். ஆதலால் விஷ்ணுவினுடைய பெயரை உச்சரிக்கலாகா என்பதாம். இதிலே சிவனைப் புகழ்ந்தும் விஷ்ணுவை இகழ்ந்தும் இருக்கின்றதல்லவா? மேற்படி புராணத்தில் நிந்தையாகிய தந்திரவிந்தை சுலோகத்தைக்கேளும்.
இதிலே சிவனைப் புகழ்ந்தும் விஷ்ணுவை இகழ்ந்தும் இருக்கின்றார்கள் அல்லவா? மேற்படி புராணத்தில் நிந்தையாகிய தந்திரவிந்தை சுலோகத்தைக்கேளும்.
'யஸ்து நாராயணம்தேவம் ப்ரம்ஹருத்ராதி தேவதா:
சமமந்வைர்நிரொசேஷதா ஸபாஷாண்டிபவேத்பதா:
திரிமந்த்ரபகுமோக்தேநா ப்ரம்ஹணய்யேப்யவைஷ்ணவ:
நஸ்பஷ்டவ்யாநவக்தவ்யா நத்ருஷ்டவயா கதாசந:'
இதன் கருத்து: எவனொருவன் ப்ரம்மா உருத்திரனுக்கு நாராயணனைச் சமமென்று சொல்லுகிறானோ. அவன் என்றென்றைக்கும் பதிதபாஷாண்டனாவானென்றும் லட்சுமி மந்திரஞ் செபிக்கின்ற விஷ்ணு பக்தாளாகிய வேதியர்களைத் தூஷிக்காமல் ப்ரம்மக்கியானமுள்ளவரென்று போற்றிவாழ்த்திப் பணியவேண்டியது. கேட்டீரோ பஞசாங்கம் குண்டையரே சிவனை நீக்கி விஷ்ணுவைப் போற்றிப் புகழவேண்டுமமென்றும். விஷ்ணுவை நீக்கிச் சிவனைத் துதிக்கவேண்டும்மென்றும், விஷ்ணு பக்தாளைக் கண்ணாலே பார்க்கவும், தொடவும்படா தென்றும், பேசக்கூடாதென்றும், அவர்அவர்களுக்கேற்றபடி புராணங்களைக் தற்பித்த உங்கள் முன்னோர்களின் புத்தீயினத்தை என்னென்று புகழ்வேன்.
'அந்யதேவம்பரத்வேநா வாந்த்யக்ஞான மோஹிதா:
நாராயணஜகந்நாதா தேவபாஷாண்டி நஸ்மிருதா:'
இதன் கருத்து: ஜகநாதனாயிருக்கின்ற நாராயணனைப் பாக்கிலும்ட முக்கியமாயிருக்கின்ற அந்நியதெய்வமும் உண்டெண்றும் சொல்லுவார்கள் அறிவீனரும், வஞ்சகரும், பதிதபாஷாண்டரும், பாவிகளுமாவார்கள்.
'ரமதேவோமஹாதேவோ விஜ்ஞேயஸ்துமஹேஸ்வர:
நதஸ்மதித்பரங்கஸ்சித்பதம்சமதிகம்யதே'
இதன் கருத்து: மஹேஸ்வரனுக்கு மேலானவஸ்து ஓன்றுமில்லை யென்பதாம். இதில் சிவனைப் புகழ்ந்திருக்கின்றது.
'வாசுதேவம்பரித்யஜ்ஞ யேன்யதே வமுபாசதே
த்ருஷிதோஜாந்நதிதீரே கூபம்நகதிதுர்மதி:'
இதன் கருத்து: வாகுதேவனென்னப்பட்ட விஸ்ணுவை விட்டு விட்டு அந்நிய தேவனை வணங்குகின்றவன் தாகமடைந்த மதியீனனாவான். அவன் கங்கை நதியின் கரையில் உட்கார்ந்து கிணற்றை வெட்டுகின்றவனுக்கு சமமாக எண்ணப்படுவானென்பதாம். இதிலே விஷ்ணுவைப் புகழ்திருக்கின்றது.
இவ்விதமாகவே உங்கள் புராணங்கள் எல்லாம் சிவனை இகழ்ந்தும் விஷ்ணுவை புகழ்ந்துமிருப்பதால் ஒன்றுகொன்று ஒவ்வாமல் மாறுபாடாயிருப்பதென்பதற்கு மெற்சொல்லிய சில திருஷ்டாந்தமே போதுமென்றேண்ணுகின்றேன்.
இப்படி மார்க்கசகாய ஆச்சாரி வாதிட்டார். இவ்வாறன குலறுபடிகளால் மக்களிடத்தில் ஏற்பபட்ட விரோதச்செயல்பாட்டை சீர்செய்யவே கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டம் சிருங்கேரி கிராமத்தில் விஸ்வப்ராமண குலத்தில் அபுபணஸரிஷி கோத்திரத்தில் ஸ்ரீ ஞானபோக விஸ்வரூபாச்சாரி தம்பதியருக்கு கி.பி.1725-ம் ஆண்டு மகனாகப் பிறந்தர் 'ஆதிசங்கரர்'. அவரே 'சஷண்மதஸ்தாபகர்' என்று போற்றப்பட்வர்.
புராணங்கள் இதிகாசங்கள் வேதத்தில் சொல்ப்பட்ட விடையங்களை இலகுவாக மக்களுக்கு விளங்கக்கூடியதாக அமையும். சிறிய உண்மைகளை விரித்துக்காட்டுக் பூதக்கண்ணாடியே புராணஇதிகாசங்கள் ஆகும். அதுவே குழப்பத்துக்கு காரணமாக அமைந்தால் எப்படி வேத உண்மைகளை மக்களுக்கு கொடுப்பது. வேதங்களை விளங்கும் ஆற்றல் மகரிஷிகளுக்கும் சித்தம் தெளிந்த சித்தர்களுக்குமே முடியும். அதை ஆகமங்களாகவும் வகுத்து இன்னும் இலகுபடுத்த உபநிடதங்களாக வகுத்து இன்னும் எழிமையாக்கியதே புராணஇதிகாசங்கள். இவற்றை இப்படி குழப்பினால் எப்படி பாமரமக்கள் இதைப்புரிந்து கொள்வது. ஒரு ப்ரமம்த்தில் இருந்து வந்தால் எப்படி வேறுபடுவது. பரப்ரம்மம் எங்கள் எல்லோரிடத்தும் ஆத்மாவாக இருக்கின்றது அதற்கு எல்லாமே தெரியும். 'பம்பின் கால் பாம்பறியும்' என்போர் சான்றோர்.
சிவாக்கியர் ஒரு புரட்சிகர சிந்தனையாளர் அவர் உருவ வழிபாடு, தலயாத்திரை, மதவாதம், வேதம் ஓதல் சாதியாசாரம் என்பவற்றுக்கு அப்பால்பட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன். உள்ளமே கோயில் என்று வாழ்ந்து காட்டியவர். அவருடைய பாடல்கள் அணைத்தும் அதைச்சாந்தவையே
காப்பு
அரியதோர் நமசிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன்
சிவவாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஒடவே
கரிதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைமகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்து திக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.
நமசிவய மந்திரம் ஆதியந்தமானது பன்னிரு கோடி தேவர்கள் அன்றுரைத்த மந்திரம் இந்த அரியதோர் எழுத்தை உன்னிடம் சொல்வேன் . அது சிவவாக்கியம் தோசங்களையும் மாயையையும் அகற்றக்கூடிய மந்திரம் என்று இயம்புகின்றார்.
அசஷர நிலை
ஆன அஞ் செழுத்துளே
அண்டமும் அகண்டமும்
ஆன அஞ் செழுத்துளே
ஆதியான மூவரும்
ஆன அஞ் செழுத்துளே
அகாரமும் மகாரமும்
ஆன அஞ் செழுத்துளே
அடங்கலாவ லுற்றவே
சரியை விலகல்
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
என்றார் எங்கு ஓடியும் காணாத நாதனை தன்னுள் நாடிடில் தானாக கண்டிடலாம் என்று இயம்புகின்றார் சிவாக்கியர்
யோநிலை
உருத்தரித்த நாடியில் ஓடுகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலாவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே.
என்றார். சுழுணா நாடியில் வாயுவால் இந்திரியத்தை கபாலத்தில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில் ஏற்ற வல்லவருக்கு மேனி பாலனாதுடன் மேனி சிவந்து இறை அருள் கிட்டும் . இது உண்மை என்று இயம்புகின்றார். தாம்பத்தியம் தவித்து பிரமச்சாரியம் கடைப்பிடித்து எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஆக்ஞாவில் செலுத்திட ஞானத்தை பெறலாம் என்பதை சிவாக்கியர் இங்கு குறிப்பிடுகின்றார்.
தேக நிலை
வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன்
நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும்
என்பனே
நடுவன் வந்து அழைத்தபோது நாறும் இந்த நல்வுடல்
சுடலை மட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக்
கொடுப்பரே.
என்றார் அழகான தன்மனைவியை மற்றோருவன் விரும்பினால் அவனை தண்டிக்க துணிவான். காலன் வந்து கவர்ந்திட்டால் நாறும் இந்த உடலை சுடுகாட்டில் இட்டுச்செல்வான். இதுதான் தேகநிலை. இதை உணரார் தேகத்துக்கு முக்கியத்தும் கொடுப்பேர் நிலை. தேகத்தினுள் உள்ள இறைவனுக்கு முக்கியத்தும் கொடுத்தால் காயம் கற்பமாகும். அழியா அழகு பெறும். தேகசுகம் தற்காலியமானது. விரைவில் அழித்துவிடும்.
ஞான நிலை
என்னில் இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னில் இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னில் இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னில் இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே.
என்றார் என்னுள்ளே உள்ளதை யான் அறியேன். அறியும் அறிவு தந்தபின் அறிந்தேன் என்னை. யார் அதை அறியவல்லாரோ அவரை அவர் அறிவார். இவ் அறிவே ஞானம். தன்னை தாமே அறியும் அறிவு ஞானம். உலகை அறியும் ஞானம் படைப்பை அறிவதே தவிர அது ஞாமாகாது. அது அஞ்ஞானத்துக்கு வழிவகுக்கும். சிவாக்கியர் எவ்வளவு அழகாக நாலு வரியில் இயம்பியுள்ளார்.
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்குமாறு தெங்ஙனே.
எனது நினைப்பு உன்னை அன்றி வேறு இல்லை நினைப்பும் மறப்பு மாயை அனைத்துமாய் அகண்டமாய் அனாதிகளுக்குகெல்லாம் அனாதியாய் என்னுள் நீ உன்னுள் நான் என்று இயம்புகின்றார் சிவாக்கியர் இறைவன் வேறு எங்கும் இல்லை எம்முள் என்று உறுதியாக கூறுகின்றார்.
மண்ணும் நீ விண்ணும் நீ
மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ
இசைந்தபண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள்
ஆடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்றபாதம்
நண்ணுமாறு அருளிடாய்
அரியும் அல்ல அயனும் அல்ல
அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக்
கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல
பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூரதூர
தூரமே
என்றார் அரியும் அயனும் அறியா இறைவன் அவன் நிலம், நெருப்பு, ஆகாயம் கடந்த நின்றதன் காரணம் ஆணவத்தால் இயம்புகின்றார்.யார் பெரிது எற்ற போட்டிக்கு முடிவு கட்ட துரிதம் கடந்து நின்றார். இதன்மூலம் இறைவனை ஆணவத்தால் அடையமுடியாது. அவனை அவனால் அறியும் அறிவால்தான் அறியமுடியும் என்று இயம்புகின்றார். இது அடிமுடிக் கதையை கூறுகின்றார்.
யோகநிலை பற்றி சிவாக்கியர் பாடல்
நெருப்பை மூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமோடு நீர்க்குளியல் வேதவாக்கியம் கேளுமின்
அநருப்பும் நீரும் உம்முள்ளே நினைத்துக்கூற வல்லிரேல்
சுருக்க அற்ற சோதியை தொடந்து கூடல் ஆகுமே
என்றார்.
வெளியில் ஞானத்தை தேடி என்ன பலன் உன்உள்ளே இருக்கின்றதடா எல்லாம் தெரியாது திரிகிறான் அறியாமையிலே என்பதை உணர்து கின்றார் சித்தர்பாடலிலே
பாட்டிலாத பரமனைப் பரமலோக நாதனை
நாட்டில்லாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமள்ள வாய்புதைந்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முள்ளே மறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது? சக்திமுத்தி சித்தியே
நாலுவேதம் ஓதுவீர் ஞானபாதம்
அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள்
அறிகிலீர்
ஆலம்உண்ட கண்டனார்
அகத்துள்ளேஇருக்கவே
காலன் என்று சொல்லுவீர்
கனாவிலும் அதில்லையே
சாமநாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துள்ளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே
என்றார் சிவாக்கியர் வேதங்களை கற்பதாலும் சாத்திரங்கள் கற்பதாலும் ஆசாரங்களை கடைப்பிடிப்தாலும் ஆணவமிகுதியே. அவை பேதங்களையே உருவாக்கும். அவை ஆன்மாவுக்கு உரமாகாது ஆன்மா புனிதமானது பேதமறியாதது அது எல்லாம் அறிந்தது அது அறிய எதுவும் இல்லை. அதுவே எல்லாம் தந்தது. அதனாலேயே இறைவன் 'வேதமாகி வெண்நூல்பூண்டு வெள்ளை எருதேறி' என்று ஞானசம்பந்தர் பாடி அருளினார். பிராமணர் என்போர் மற்றவரை தன்னிலும் குறைவாக மதித்து மற்றவரை வேதனைக்குள் ஆக்கின்றனர். இவர்கள் அறிந்த வேதம் அது தான் அதற்காகவே சிவாக்கியர் இதை எல்லாம் ஞானவிரேதமாக கருதினார். இவை ஞானத்தை அழித்து அஞ்ஞாத்தை ஏற்படுத்தும் அவித்தைகளாகவே கருதினார். வேதத்தையும் சாத்திரங்களையும் அறிந்தவன் அதுவாகி இறைவனை போல எல்லோரையும் சமமாக மதித்து அன்பு செலுத்தி அதரவாய் இருந்து எல்லோரையும் வழிநடத்துவதையே சிவாக்கியர் இயம்பியுள்ளார்.
ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம:
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'ஸ்ரீ போகாமாமஹரிஷி'
கி.பி 8-ம் நூற்றாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் விஸ்வப்ரம்மண குலத்தில் சுபணஸரிஷி கோத்திரத்தில் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் போகர் பிறந்தார். பன்மொழியும் கற்று குலத்தொழிலான பொற்பணியைச் செய்து மருத்துவம், சோதிடம், யோகம், வானசாஸ்திரம், தொழில் வரலாறு, மாயாயாலம், ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய பலநூட்கள் எழுதியுள்ளார் அவற்றில் போகர் ஏழாயிரம், போகர் பன்னிரண்டாயிரம் என்பன சிறப்புப் பெற்றது. மேலும் கவுரி பாஷாணம், வீரம், பூரம், லிங்கம், மனேசிலை, பாதரசம், அரிதார, துத்தம், காபி என்னும் நவ பாசாணத்தில் பழனி முருகன் சிலை செய்து செய்துள்ளனர். அம் முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிருதம் காயகற்பமாக இன்றும் கருதப்படுகின்றது. மேலும் அவர் சீனநாட்டுக்கு சென்று பல அற்புதங்கள் செய்தார். இவர் இன்றும் சீனமக்களின் மனதைக்கவர்;தவர். அவரின் வழிமுறைகளை நன்கு பயன்படுத்தியும் அவருக்காக போகர் தினம் என விடுமுறையும் அனுசரிக்கின்றனர். அவர் சாதிமதபேதம் இன்றி அனைவருக்கும் வழிகாட்டியவர். அவரின் சீடராக வேட குலத்தைச்சேர்ந்த ஸ்ரீ புலிப்பாணி முக்கிய சீரடாவார். போகர் சமாதி பழனியில் உண்டு அவர் சித்தர்களில் பிரதானமானவராவார்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'பொன்மணித் தட்டார்"
கி.பி 10-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் கம்மாளர் தெருவில் (தற்போதைய தெற்குவீதியில்) விஸ்வப்ரம்மண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்த பொன்மணித்தட்டார் என்ற வயோதிப சிவஜோகி வாழ்ந்து வந்தார். அவர் சிறிது மாற்றுக் குறைந்த பொன்னை வாங்கி புடமிட்டு அதில் இரண்டுமணிகளை மட்டும் ஒருதினத்துக்கு தேவையான வருமாணமாக விற்றுப் பெறுவார். இம்மணிகளைப்பெற தினமும் மாலையில் அதிக பெண்கள் கூடுவர் அவர்களில் இருவருக்கே மணி கிடைக்கும். இதனல் அவரின் இயற்பெயர் மறைந்து பென்மணிதட்டார் என்ற பெயர் நிலைத்தது. இச்சமயம் தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழ மகாராஜாவின் விருப்பப்படி இராஜராஜ பெரும் தச்சன் என்ற சிப்பிகட்டிவந்த ராஜகோபுரத்தின்மேல் வைக்கும் பிரம்மேந்திர பெரியகல் கிடைக்காது கலங்கி இருந்த வேளை தன்னை அறிமுகப்படுத்தா வகையில் தினமும் வேலைகளை கண்டு வருபவர்; பொன்மணி தட்டார். அன்று சிப்பின் மனக்கவலையை அறிந்து இடைச்சியின் வீட்டிற்கு அருகில் கல் இருப்பதை பொன்மணிதட்டார் காட்ட அதை வாங்கி கோபுhரத்தில் வைத்தார்கள்;. பின்னர் லிங்கத்துக்கு அஷ்டபந்தனம் கூடாத போகவும் கருவூரார் வாய் தாம்பூலம் பட்டு அஷ்டபந்தனம் இறுகி அமைக்கப்பட்டது. கும்பாவிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில் ' உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்' என்ற இறைவனின் அசரீதியாக உணர்ந்திட்ட மன்னன். மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க உன் மறைவில் என்பது உன்னால் கட்டப்பட்ட கோயில் என்பதமாகும். இடைச்சியின் நிழல் என்பது இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல். கோபுரத்தின் மேல் இருப்பதாகும். பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது புரியவில்லை என்று கூறினார்.இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை அனுப்பிவைக்க அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியை கூற அவர் நானோ சாதாரண வயோதிபன் அரசரிடம் எனக்க ஆகவேண்டியது எதுவும் இல்லை மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் ஆற்றலும் இல்லை. என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை என்று கூறிவிட அதை அறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்து அவரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதான கேட் அசரீதி விடயத்தை எடுத்துக் கூறி சந்தேகம் போக்குமாறு கேட்டார். அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்தின் ஸ்தூபிக்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று நிர்மாணித்து அங்கிருந்து பார்த்தல் கோபுரம் தெரிய வேண்டுமாறு அமைக்கச் சொன்னார். மேலும் அதனை அமைத்து எட்டாவது நாளில் இறைக்காட்சி கிடைக்குமென்றர். அவர் கூறியதற்கமைய சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து பொன்மணித்தட்டார் மொழி;தவாறு கட்டி முடித்து. எட்டாம் நாள் மன்னர் அவட்வீட்க்குச்சென்று அழைத்து வந்தனர். திருக்குளத்தினுள் செல்ல அரசன் தெப்பம் உள்ளதென அவர் தண்ணீரின் மேல் நடந்தே சென்று பத்மாசனத்தில் கோயிலின்னுள் அமர்ந்து அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சி ஒளியாக மாறி கோபுரத்தில் கலந்தார். அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இருக்கின்றது. இதனைக்கண்ட அரசனும் மற்றோருர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தை பெற்றதை எண்ணி வியந்தனர். இப்படிப்பட்ட பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அவிஷேகம் செய்த பின்னே தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. சமாதிக்குச் செல்ல அமைப்பட்ட தொங்கு பாலம் தற்போது பழுதடை;துள்ளது.
தஞ்சை விஸ்வப்ராமண மகாஜன சபையின் மூலமாகவும் பூமாலை சாமிநாத ஆச்சாரியார் குடும்பத்தினபலும் மகா சிவராத்திரியன்று குருபூஜை நடாத்தப்பட்டுவருகின்றது. இதன் சிறப்பினை 'விஸ்வகர்ம பக்தோபாக்கியானம்' என்ற பழைய நூலிலும். 'பொன்மணித்தட்டார் சரித்திரம்' என்னும் நூலிலும், 'படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்' என்ற நூலிலும் காணலாம்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'வீர கவிராயர் (வீரசாமி ஆச்சாரி)
பாண்டியநாடு நல்லூர்க் கிராமத்தில் விஸ்வப்ரமண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் கி.பி.1524-ம் ஆண்டு பிறந்து பொற்பணியைச் செய்யும் பன்மொழி புலவராகத் திகழ்ந்தவர். படிக்காசு புலவரை எதிர்த்துப்படி வெற்றி கொண்டு தேசத்தந்தை மகாத்மா காந்தி சத்திய வாழ்க்கை முறை அமைய வழிகோலிய 'அரிச்சந்திர புராணம்' என்ற நூலை இயற்றியும் சமகாலப் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றும் சிறப்புடன் வாழ்தவர்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'இராமலிங்க ஆச்சாரியார்'
கி.பி 1815- ம் ஆண்டு சேலம் ஜில்லா நமக்கல் தாலுக்கா எருமைப்பட்டி என்ற கிராமத்தில் விஸ்வப்ரமண குலத்தில் சுபர்ணஸரி கோத்திரத்தில் பிறந்து பொற்பணியைச் செய்து வந்தார். 1843 – ம் ஆண்டு சுப்பராய ரெட்டி, நாணய செட்டி, நாராயண ரெட்டி, மாறாடி ரெட்டி, பள்ளி தாண்டவப்படையாசட்சி, இராமலிங்கப் படையாச்சி ஆகியோர் ஒன்று சேர்;து தோட்டி மொட்டையன் என்ற தாழ்த்தப்பட்டோரை வைத்து இராமலிங்க ஆச்சாரியரை அடித்து பூணூலை அறுக்கச்செய்தனர். அதனால் பாதிக்கப்பட்ட அவர் மானநஷ்ட வழக்கு தொடுத்து தன்குலப்பெருமைகளை விளக்கி தான் மீண்டும் பூணூலை அணிவதற்கு உண்டான செலவுகளை அபராதமாக பெற்று குலப்பெருமையை நிலை நாட்டியவர்கள். இதனை விரிவாக நோக்க 'சேலம் ஜில்லா நீதிமன்றத் தீப்பு' என்ற நூலில விரிவாகக்; காணலாம்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'கருவூரர்'
கி.பி. 10 –ம் நூற்றாண்டில் கருவூரில் விஜ்வ பிராமண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்து பொற்பணியைக் கற்று சிதம்பரக்கோயிலில் பூபாலப் பாண்டியன் வருப்படி தில்லை நடராஜர் சிலையினை கருவூர் தேவர் என்னும் ஆச்சாரியிடம் பொன்னால் செய்துவரச் சொன்னார். கருவூரர் தேவர் அரசனின் விருப்பப்படி சாஜ்திர முறைப்படியும் மனுவிதியின் படியும் காலத்தில் மக்களின் மனநிலை அனுசரித்துப் பத்தி ஏற்படுமாறும் திருட்டு விடாதபடியும் கோடிமாற்று என்ற கணக்கில் நிறமாற்றுப் பொன்னினால் ஆனசிலையை செய்து மன்னனிடம் கொடுத்தார்.
மன்னன் சிலையைக்கண்டபோது செம்பு நிறத்தில் இருப்பதைக்கண்ட அரசன் கருவூராரிடம் விளக்கம் கேட்க அதற்கான காரணகாரியத்தை கூற மன்னனும் மந்திரியும் ஏற்காது சிறையில் இட்டனர் கருவூத் தேவரை.
அதன் பின்னர் சருவு_ர் தேவர் சிலையின் ஒருபகுதியை வெட்டி உருக்க முழுவதும் தங்கமாக இருக்கண்டு இரசன் மகிழ்து சிப்பியின் பெது நலநன பாராட்டி போற்றி விழா எடுத்தான். இதனை போகர் ஏழாயிரம என்ன நூலில் மூன்றாவது சந்தக்கண்ட பாடலில் நடராஜ விக்ரகம் என்பதில் காண்க. போகரின் சீடகளில் முதன்மையானவர் கருவூர் தேவர்.
மேலும் தஞ்சைப் பெரும் கோயிலில் லிங்கத்தின் அஷ்ட பந்தனம் என்னும் மருந்து கூடாது போனதால் தன்வாய் தம்பூலத்தையும் சேர்த்துக் கூட்டி விரதிஷ்டை செய்யப்பட்டது. இறைவனின் மேல் திருவிசைப்பா படியருளியவர்களில் இவரும் ஒருவர் இதனால் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் அவரும் ஒருவர்.
தஞ்சை பெரும் கோயிலில் மேல் பிரகாரத்தில் ஆலயம் அமைத்தது 1926 –ம் ஆண்டில் மீண்டும் பெரிது படுத்தியும் கருவூத் தேவருக்கு பஞ்சலோக சிலை செய்து குப்பாவிசேகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விபரம் 'தஞ்சைப்பெரிய கோயில் வரலாறு' என்னும் நூலில் காண்க.
ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம:
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் ' ஆதிசங்கரர்'
கர்நாடகா மாநிலத்தில் மைசூர் மாவட்டம் சிருங்கேரி கிராமத்தில் விஸ்வப்ராமண குலத்தில் அபுபணஸரிஷி கோத்திரத்தில் ஸ்ரீ ஞானபோக விஸ்வரூபாச்சாரி தம்பதியருக்கு கி.பி.1725-ம் ஆண்டு மகனாகப் பிறந்தர். படிப்பை முடித்து குலத்தொழிலான பாத்திரம், மற்றும் பொற்பணியும் கற்று வேத தத்துவங்களை உணர்ந்து இந்தியாவின இந்து மதத்தின் எழுபத்தி நான்கு உட்பிரிவுகளாக இருந்தை ஒன்று சேர்க்க எண்ணி இந்தியாவின் எல்லா மாhநிலங்களிலும் உள்ள கோவில்களுக்குச் சென்று பாடியும் பல மடங்களை சீர் செய்தும் சில மடங்களை அமைத்தும் மரகத லிங்கங்களை செய்து சில கோவில்களில் பிரதிஷ்டை செய்தும். ஸ்ரீ சக்ரம் செய்து பல கோவில்களில் பிரதிஷ்டை செய்தும் போலிப் பிரிவினை வாத மதவாதிகளை வாதிட்டு தன்னுடன் சேர்த்து கொன்டும் ஆறுமதங்களாக மட்மே சுருக்கி அமைக்க முடிந்தது. அதனால் அவரை '|ண்மதஸ்தாபகர்'; என்று போற்றப்படுகின்றார். அவர் பாடிய பாடல்கள் தொகுப்புக்கு 'ஸெளந்தரியா லஹரி' என போற்றப்படுகின்றது. அவர் சில அற்புத சித்துக்களும் செய்துள்ளார். சிவமதத்தின் அறுபத்தி நான்கு நாயன்மார்களிலும் சேர்க்கபடாமலும் ஆழ்வார்களிலும் சேர்க்கப்படாமலும் பதினென் சித்தர்களிலும் சேர்க்கப்படாமலும் நடுநாயகமாக உள்ள பிரம்ம மதத்தின் கருத்துக்களை உணர்ந்தவர்களால் போற்றப்படுகின்றார். ஆதிசங்கரரின் முழு விபரமும் 'சங்கரர் விஜயம்' என்னும் பழைய நூலிலும். 'விஸ்வகர்மப் பிராமண வம்சப் பிரகாசிகை' என்னும் நூலிலும் விரிவாகக் காணலாம். இவரே காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரிய பீடத்தின் ஸ்தாபகருமாவார்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'இராம சுனார் ஆச்சாரியார்'
கி.பி 1580-ம் ஆண்டில் விஸ்வப்ராமண குலத்தில் சுபணஸரிஷி கோத்திரத்தில் சந்திரசேகர சர்மா மரகதாம்பிகை தம்பதிகளுக்கு இராம சுனார் ஆச்சாரி மகனாகப் பிறந்தார். இவர் பொற்பணி செய்து அம்பிகையை வழிபட்டு வந்தார். இவர் பேரரசர் அக்பரின் அரன்மனைக்கு தேவையான ஆபரணங்களை செய்து கொடுப்பது வழக்கம். அதில் சிறிதளவு தங்கத்தை பெற்று அதை விற்று அம்பிகைக்கு ஆலயம் அமைக்கத் தொடங்கினார். ஒருமுறை அக்கபர் ஆபரணங்களை நிறுக்க எண்ணி தன் மகளையும் அங்கு அழைத்து வந்தார். நிறுவையில் தங்கத்தை வைத்த போது அம்பிகையை எண்ணி வேண்டுதல் செய்த போது. நிறுவையில் ஒரு தங்க பொம்மை இருக்கக் கண்ட குழந்தை எனக்கு அந்த பொம்மை வேண்டாம் என்று அழுத போது அக்கருக்கு அது தெரிய வில்லை நிறை சரியாக இருந்தது. பின்னர் விடையத்தை அறிந்த அக்பர் அம்பிகையின் ஆலயம் கட்டி நிறைவை பெற ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்தார். இந்த சிறப்பை போற்றும் வகையில் அவரின் படத்தை வைத்து வழிபட்டு வருகின்றனர். இதன் விபரம் அறிய 'இராம சுணார் சரிதம்' என்ற நூலைப்படித்து விபரம் அறிக
ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம:
'நக்கீரர்'.
கி.பி 175ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மதுரையில் விஸ்வப்ரம்ம குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் எண், எழுத்து, பஞ்சாங்கம், ஐந்திலக்கணம், நீதி, போன்றவைகளை இயல்பாகவே உணர்ந்து சொல்லி கணக்காயராக இருந்த விஸ்வப்ரம்ம தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தார். அவர் படிப்பை முடித்து குலத்தொழில் பொற்பணியும், தச்சுத்தொழில் செய்துமம் பெரும் புலவராகவும் திகழ்ந்தார்.
செம்பமாறன் என்னும் சூடாமணிப் பண்டிதன் அரசின் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவிருந்து தமிழ் திறமைமிக்க புலவர்களை ஊக்கப்படுத்தியும் திறமையற்றவர்களை சீர்ப்படுத்தியும் தமிழை வளர்த்தார். பாண்டிய மன்னனுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பெண்களின் கூர்தலுக்கு மணம் உண்டு எனப் பாட்டிசைக்க அதில் உள்ள குறையைச் சுட்டிக்காட்டிய போது தொழில் திறமை இல்லாமல் சிவனார் வேடத்தில் வரும் நக்கீரரைப்பார்த்து புலவர்கருத்தை விட்டு விலகி
'அங்கங் குலுங்க அரிவாளில் நெய் தடவி
பங்கப்பட இரண்டு கால் பரப்பி – சங்கதனைக்
கீர்கீர் என அறுக்கும் சீரனோ என் கவியைப்
பாரீல் பழதென்பவன்'
சாதியைப்பற்றி இழிவாகச் சொன்ன போது
'சங்கறுப்பது என் குலமே தம்பிரானுக்கேது குலம்
பங்கமறச் சொன்னாற் பழதாமே – சங்கை
அரித்துண்டு வாழ்வோர் அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வது இல்லை' என விளக்கம் கூறி றேர்மையை நிலை நாட்டினார். நக்கீரர்.
நக்கீரர் நேர்மைக்கு உவமை காட்டிப் பேசும் போது இவர் நக்கீரர் என்றும் இவர் நக்கீரர் பரம்பரை என்றும் சொல்வதை காணலாம். இவர் இயற்றிய திருமுருகாற்றுப்படை, நெடுநல்வாடை, பத்துப்பாட்டு போன்ற நூல்களில் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன எட்டுத்தொகை நூல்களிலும் தனிப்பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
இவருடைய பாடல்களில் உலகியல், நாட்டுநடப்பு, மன்னனின்சிறப்பு, நாடகக்கலை, கட்டடக்கலை, போன்ற மனிதனுக்கு தேவையான பல சிறப்புக்களைக் கொண்டதாக உள்ளது. இவர் நாயன்மார்கள் ஆறுபத்தி முவரில் ஒருவராவார்.
இவ்வாறு சிறப்பு மிக்க நக்கீரரை பலர் ஆய்வு செய்துள்ளனர். அவர்களுள் 1983 ம் ஆண்டில் சேலம் டாக்டர் மு.பெ.ரி.மு இராமசாமி அவர்கள் நக்கீரர் ஓர் ஆய்வு என்ற நூலைத் திறம்பட எழுதியுள்ளார். இன்நூலை பாரி நிலையம் வெளியீடு செய்துள்ளது.