Sunday, February 26, 2017





ஆன்மீக வாழ்கை

ஓருமனிதனுடைய வாழ்கை இருவகையில் அமைகின்றது. அவை ஓன்று ஆன்மீகம் அடுத்தது லௌவீகம் இதில் ஆன்மீகத்தை துறவு,துறைவி யோகி என பலபேரால் அழைக்கப் படுகின்றது. அடுத்த வகையை இல்லறம், போகி என்று எல்லாம் அழைக்கப்படுகின்றனர். இதில் இல்லறத்தில் நல் அறம் காத்து உறவில் துறவு வாழ்கை வாழ்தவர்கள் தான். ஸ்ரீ இராமகிருஸ்ணர், ஸ்ரீ ராகவேந்திரர், புத்தபகவான் போன்றோர். இவர்கள். சாதித்து வாழ்க்கை வென்றவர்கள். ஆன்மீகம் என்பது உறவில் துறவுகாண்பதே. இது எப்படி முடியும் என்பது தான் இங்குள்ள பிரச்சனை. ஊடலுக்கும் உயிலுக்கும் உள்ள உறவு தான் அது. பட்டம் விட்டு விளையாடும் பழக்கம் எல்லோருக்கும் தெரியும். ஆதில் பட்டத்திக்கும் விடுபவானுக்கும் உள்ள தொடர்பு நூல் பட்டத்தில் கட்டியிருக்கும் வரையில் தான். நூல் அறுந்தால் பட்டம் விட்டவனை தேடாது. அது போன்று தான் ஆத்மாவின் நிலை. ஆனால் அன்நிலை உறவில் துறவு கொன்டவர்களுக்கு மட்டுமே. ஏன் என்றால் அவர்கள் விட்டபட்டம் எi;லை கடந்த இறைவனிடத்து அன்று. பக்கத்தல் இருந்த பொருட்களில் இல்லை. நமக்கு பக்கத்தில் அதாவது ஒரு எல்லைக்குள் விட்டு விளையாடினால் அது மீண்டும் எம்மிடம் கிடைத்து விடும். இதனாலேயே இறந்த ஆத்மா மீண்டும் உடல் எடுத்து எடுத்து அழுந்துகின்றது. இந்துக்களில் வாழ்க்கைத் தத்துவம் இறவாமை என்னும் பெறும் பேறு அடைவதே. இதனாலேயே ' முத்தி நெறி அறியாத முக்கரொடு முயவேனே பத்தி நெறி அறிவித்து பழவினைகள்  பாவான்ழும் வன்னம் சித்த மனம் அறிவித்து சிவமாக்கி எனையான்ட.........' என் படியுள்ளார் இறைவன் மேல். எல்லை கடந்து ஆனால் எல்லைக்கு உட்பட்டவர். கட10 உள் ஸ்ரீ கடவுள் என்ற பெயர் பெற்றவர் இறைவன். யாருக்கு கடந்தவர் யாகுக்கு உள் உள்ளவர் என்றால்? எல்லை அற்ற கடவுளை தேடிய ஆன்மீகவாதிக்கு கடவுள் உள்ளும். ஏல்லை படுத்தி கடவுளைத் தேடிய போகிக்கு வெளியிலும் கடவுள் இருக்கின்றார். ஏல்லை படுத்தியன் உடல் புதைக்கப்படுத்ப்பட்ட இடத்தல் ஆத்மா தங்கும். பிறபெடுக்கும் வரை ஏன் என்றால் இதற்கு செல்ல இடம் இல்லை. இதனாலேயே இந்துக்கள் இறந்த வரை சுடுகாட்டில் எரித்தல் வேண்டும். புதைக்தால் மீண்டும் உடல் எடுக்கத்தான் வேண்டும். இதனையே வீடுபெறு, முத்தி நிலை,  என்று கூறுகின்றனர்.
உறவில் துறவு என்பது பற்றறற்று செயலில் ஈடுபடுத்தல். ஓட்டாமல் ஒட்டி தாமரையிலையில் தண்ணீர் போல. இல்லறத்தில் நல்றறம் காத்தல். அறவளியில் பொருள் சேர்த்து பெற்ற இன்பத்தை. தனக்கென வாழாது. பொது நல வாழ்கை வாழ்வது. இதனல் தான் அருளும் பொருளும் இனையா இரு போடுகள். உடல் முத்தியை அடைய செய்த முன்வினை பயனை அனுபவித்து விடுதைபெ தேவையான நீதி தவறான  அறவளி சொத்தை பெறவே இங்கு பெருள் என்ற செல்லுக்கு அர்த்தம். ஆறம், பொருள், இன்பம், வீடு. என்பது அறத்தால் பொருள் தேடி இன்பமான துன்பமில்லா பெருவாழ்வு வாழ்ந்து வீடு பெறு றெறுவதே முத்தி. முத்தி என்பது சூரியன், சந்திரன் தீ இவை மூன்றுமே தீ. இவை மூன்றும் உடலில் இருக்கும் இடம் புரவ மத்தி. வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் அதன் மேல் மத்தி அக்னி மூன்றுக்கும் நடுப்பகுதி புரவ மத்தி அதுவே உடலில் தந்தையிடம் இருந்து தாயின் முட்டையின் துளையிட்டு வந்த விந்துவான உயர் இருக்கும் இடம். அந்த இடம் உஸ்ணமானது. ஆதனால் நெற்றியில் சாணத்தால் ஆன குளிமையான திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவை தரிக்கப்படுவடும். திருமணமாகாத கண்ணியர் சவ்வாரியில் தயரான கறுத்தப்பொட்டு வைப்பதும். இந்துக்களின் கலாசாரமாகும். முடிவுகள் எடுக்கும் போது புருவமத்தியை சுட்சுமமாக எண்ணி எடுக்கும் போது சரியான நிதானமான முடிவுகளை எடுக்க முடியும். அங்கு தான் ஆத்மா இருக்கின்றது. பயணம் எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கு சென்றடைந்தால் தான் பயணம் முடிவடையும். ஆகவே உயிர் எங்கு உடல் பெற்றதோ அந்த இடத்திலேயே உடல் இருக்கின்ற வரையில் இருந்து விடுகின்றது. ஆனால் மனமோ அலைந்து திரிகின்றது. அதுவே உடலை உலகெல்லாம் கொண்டு திரிகின்றது. அப்போது புத்தி சித்தத்தில் உறைகின்றது. பிரச்சனைகள் வருகின்ற போது புத்தியை மட்டும் மையமாகக் கொண்டு முடிவெடுத்தால் தோல்வியை ஏற்படுத்துகின்றது. அதற்கு காரணம் அகங்காரமான ஆணவம் அதற்கு காரணம் மாயை அதற்கு காரணம் கன்மம். ஆனால் புத்தியை நாடியிருந்ததல் சித்தம் தெளிந்து பிரச்சினைக்கு தீவுகாணப்பட்டிருக்கும். ஏன்ன செய்வது 'ஆத்திரக்காரயுக்கு புத்தி மத்திமம் தானே' அதற்கும் பாக்கியம் வேண்டுமே. 'அவன் அருளால் அவன் தாள் வணங்கி' என்று மணிவாசக்பெருமான் அருளிவிட்டார் அல்லவா? புருவமத்தியை ஏண்ணத்தை குவித்து தியானத்தில் ஈடுபடுவதாலேயே உடலில் மனித காந்த சத்தியை பெருக்கி நேர் எண்ண அலைகளை பெருக்கி வஞ்சகம், சூது, பொறாமையலால் எம்மிடம் இருந்த சத்தியை அழித் எதிர் எண்ணங்களை அழித்து நேர் எண்ணங்களை பெருக்கி புத்தியில் உறைந்து சித்தம் தெளிந்து முத்திக்கு வித்திடுவோம்.
'மட்டூர் புன்னையம்பதியான்'

Saturday, February 25, 2017

ஆதிமனிதன் இயற்கையைக் கடவுளாக கண்டான். உயிர் வாழ இயற்கையின் அரவணைப்பு அவனுக்கு தேவைப்பட்டது. அதன் அடிப்படையில் தோன்றயதே இலிங்க வழிபாடு.

          இலிங்க வழிபாடு தொரப்பாக பலரும் பலகருத்துக்களை கூறினாலும் அவற்றுக்கெல்லாம் அடிப்படை ஒன்றுண்டு இயற்கையையே இறைவனாக கண்டவர்கள் இந்துக்கள். பிரபஞ்ச ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணமானது இயற்கை அதன் சமநிலையை பாதுகாப்பது மரம்செடி கொடிகளும் இயற்கையும் இதனாலேயே ஆதி மனிதன் சூரியனையும் காற்று மழை போன்றவற்றை வழிபட்டான். மரவழிபாடே இலிங்கவழிபாட்டுக்கு வளிவகுத்தது. அதனை கந்தழிவாழிபாடாக ஆதிமனிதன் கருதினான். மரங்கள் சூரியனில் இருந்து கதிர்களைப் பெற்று பச்சயமணிகனை வேதியல் மூலக்கூறாக மாற்றி மரத்துக்கு சக்தியை வழங்குகின்றது. மரங்கள் உணவு தயாரிப்பதற்காக  மனிதனிடமிருந்தும் இயந்திரங்களின் இயக்கத்தின் முலமாக வெளிவரும் கரியமலவாயுவை பயன்படுத்துகின்றது. இதன் விளைவால் வெளியேறும் பிராணவாயு மனிதனின் உயிர்பாக பயன்படுகின்து. அம்மரங்கள் தன்நலமற்ற சேவையை உலகுக்கு வளங்குகின்றது. அவை தனக்காக மட்டும் எப்போதும் வாழ்வதில்லை மனிதர்களில் பெரும்பாலானவார்கள் தனக்காக மட்டும் வாழ்கின்றனர். மரங்கள் அதன் பயன்கள் அனைத்தையும் மனிதனுக்கும் மிருகங்கள் பறவைகள் ஊர்வன போன்ற அனைத்து உயிரினங்களுக்கு வழங்கிவிட்டு. அவற்றின் கழிவுகளை தமக்கு உணவாக்கி பிரபஞ்சத்தை  சுத்தம் செய்கின்றது. மரங்கள் மனிதனுக்கு உணவாகவும் அவனுக்கு ஏற்படும் நோய்களுக்கு வேதியல் மூலக்கூறாகவும். உயிர்வாழ்வாற்கான பிராணவாயுவாகவும் உணவு சமைக்க எரிபொருட்களாகவும் ஆவியுர்பினால் மழைமுகில்களை ஏற்படுத்தி மழையாகவும். மனிதன் இளைப்பாறும் இடமாகவும். வளி அசைவுகளை ஏற்படுத்தி காற்றாகவும் மரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதனால் நெருப்பாகவும் பஞ்சபூதங்களின் சக்தியாகவும் அமைகின்றது. அதனாலேயே ஆதிமனிதன் மரத்தை கடவுளாகக் கண்டான்.
              மரங்களின் வழிபாடே இலிங்க வழிபாட்டுக்கு வழிவகுத்தது. மரங்களை ஆதிமனிதன் வழிபட்டு வருகையில் மரங்களின் கிளைகள் அழிந்து படிப்படியாக மரத்தின் அடியை வணங்கி அதுவும் அழிவடையும் போது அது இருந்த குழியில் நீளமான கற்தூன்களை நிறுத்தி அதை கடவுளாக வழிபட்டான் காலப்போக்கில் அது இறைவனுக்குரிய அடையாளமாக மாறி இலிங்க வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இதனை கந்தழி வழிபாட்டில் இருந்து தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நடுகல் வழிபாடும் இருந்தது அது அந்த நாட்டை ஆண்ட அரசன், நாட்டைக்காத்த போர் வீரன் ஆகியோரை அடக்கம் செய்த இடத்தில் கல்லை நட்டு அதனை வழிபட்டனர் அதுவே காவல் தெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இவ்வழிபாடே எல்லைத்தெய்வமாக சிறுதெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இலிங்க வழிபாடு கந்தழிவழிபாட்டில் இருந்தே வந்தது. இயற்கையின் படைப்புக்களான மரங்களும் மலைகளும் மேல்நோக்கி வளர்ந்து குடைபோல் காட்சியளிப்பதை எல்லோரும் அறிவர். ஒலிஒளி அலை வாங்கிகள் அனைத்தும் குளிவாக இருக்க இலிங்கம் மட்டும் அதற்கு மாறாக குவிவாக தொப்பி போன்று அமைந்துள்ளது. அதாவது இலிங்கம் சதாசிவ முகுர்த்தம். நாதம், விந்து, சிவன், சத்தி, சதாசிவம், மகேசுவரர், உருத்திரர், விஸ்ணு, பிரம்மா. இறைவனுடைய திருமேனியாக கொள்ளப்படுகின்றது. அவற்றில் முன்னுள்ள நான்கும் அருவமானவை சதாசிவம் அருஉருவமானது எனைய நான்கும் உருவமானது. அதாவது அருவமான இறைவன் அருஉருவமான சதாசிவமாகி மனிதனுக்கு அருளள் உருவமானான். இறைவன் அருவமானவன். எம் உயிர் எப்படிப்பட்டதோ அதை ஒத்ததே இறைவன். அதுபோன்று எம்மை இயக்கும் சக்தி, புத்தி, அறிவு இவை அனைத்துமே அருவமானவை. எம்முள் உள்ள உறுப்புக்கைளும் அதன் செயல்பாட்டையும் எம்மால் பார்க்கும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது. அவை அதைத்தையும் மூளையும் இருதயமும் இயக்குகின்றது. இவை அனைத்தையும் அறிய ஞானியால் முடியும். அவர்கள் சித்தி பெற்றறவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள். இந்து சமயம் இயற்கை வழிபாடாகும். லிங்க வழிபாடு தொடர்பாக குறிப்பிடுகையில் இலிங்கம் என்பது குறி, சின்னம், அடையாளம் என பொருள்படும் அதனை குறி என்ற சொல்லை வைத்து ஜனன உறுப்பாக கருதுகின்றனர் சிலர் இது பொருத்தமற்றது. இலிங்கபுராணமே இதன் அடிப்படை அங்கு படைப்பதிபதியான பிம்மாவுக்கும் காத்தல் அதிபதியான விஸ்ணுவுக்கும் ஏற்பட்ட யார் பெரியவர் என்ற ஆணவச் செதுக்கை அடகுக்க இறைவன் செய்த திருவிளையாடலின் விளைவே சோதிப்பிழப்பாகி இறுதியில் அருவுருவமான இலிங்கமானது. அருவமான இறைவனை அகத்தில் தியானிக்க ஒரு சின்னமாக உருவெடுத்தது. ஞானியருக்கு. இலிங்கம் என்பது யூபம் என்னும் சொல்லில்லிருந்து தொன்றியது என்றகருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது யூபம் என்பது தூண் போன்ற அமைப்புடையது இது நேராக அமைந்து விளங்குவதால் ஸ்தாணு என்ற பெயரையும் பெறும்  இதனால் கந்தழி வழிபாட்டில் இருந்து தொன்றியதே லிங்க வழிபாடு என்று என்னத்தோன்றுகின்றது. சுவேதாஸ்வதா உபநிடத்தில் யோனி, லிங்கம் என்ற சொற்கள் காணப்படுகின்றன . இங்கு 'லிங்கம்'; என்பது 'அடயாளம்';  அல்லது 'அம்சம்' என்பதையே கருதுகின்றது 'மிகவும் நுண்ணிய உடம்பு' என்ற பொருளிலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். சிவபுராணம் இலிங்க வழிபாடு தொர்பாக குறிப்பிடுகையில் பிரணத்தோடு தொர்பு படுத்துகின்றது. எல்லாத் தெய்வங்களும் இலிங்கமாக விளங்குவதால் இலிங்கத்தையே வழிபடும்படி விஸ்ணு தேவர்களுக்கு அறிவுறுத்தியதை காணலாம். அதுமட்டுமல் விஸ்ணு பிரம்மபகஸ்தி தோஷம் போக்க இராமேஸ்வரத்தில் மண்ணால் இலிங்கம் செய்து வழிபட்டதை யாவரும் அறிவர். இலிங்கத்தின் அமைப்பு மிகவும் நுட்பமானது. இலிங்கம் பற்றி மேலும் குறிப்பிடுகையில் காசியப சில்வ சாஸ்திரம் நாதமே இலிங்கம் பிந்துவே அதன் பீடம் என்றும் கூறுகின்றது. இலிங்கமானது சிவரூபமானது பீடமானது சக்திரூபமானது இவை இரண்டும் ஓன்றாக இருப்பது நெருப்பும் வெப்பமும் போன்று சிவசக்திரூபம் என்று கூறுகின்றது.
          இலிங்கம் அமைக்கும் முறைகள் பற்றி ஆகமங்களும் சிற்பநூல்களும் மிகவும் விரிவாக எடுத்து இயம்பியுள்ளன. சிவன் எனைய வடிவங்களுக்கு அடிப்படையாக அமைவதுடன் கருவறையில் பிரதான மூலவராக அமைவதாலும் அதன் அமைப்புப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் எடுத்து இயம்பியுள்ளது. சிற்ப்பாசாரி இலிங்கத்தை உருவாக்கும் போது மேற்கொள்ளவேண்டிய விதிமுறைகளை தெளிவாக செப்பியதுடன் சிற்பாசாரி செதுகுவதற்கான கற்களை தேந்தெடுக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளும் தெளிவாக இயம்பியுள்ளது. பூர்வ காரணாகமம், 'லிங்க லசஷண விதிப்படம்' என்ற தலைப்பிலும்  இது பற்றி தெளிவாக கூறுகின்றது. மானசாரம் 'லிங்க விதாநம்' என்ற தலைப்பிலும் காசியப சில்ப சாஸ்திரம் ' சிவலிங்க லசஷணம்' என்ற தலைப்பிலும் சில்பரத்தினம்  ' லிங்க லசணம்' என்னும் தலைப்பிலும் ஸ்ரீ ஸாரஸ்வதீய சித்ர கர்ம சாஸ்திரமும் காளாதிகாரமும் பிரதிமைகளின் அளவு முறைகளையும் குறிப்பிடுகின்றன.
             இயற்கையை நேசித்து அதன்வழியில் சென்றவர்களே சித்தர்களும் மகரிஷpகளும். இயற்கை கோரங்கொண்டால் மனிதன் தாங்க மாட்டான். அதை நேசித்து அதன் வழியில் சென்றால் உலகை காக்க முடியும். அப்படி நாம் அதை காக்காவிட்டல் நம்மையும் நம்மால் உருவாக்கப்பட்ட பொருட்களையும் அழித்து இயற்கை தம்மை காத்துக்கொள்ளும் அதனையே அனத்தம் என்கின்றோம்.
             இயற்கையின் அச்சுறுத்தலை அவன் அனுபவித்தும் அதற்கு அஞ்சி அதன் அனுசரனையை பெறவிரும்பி வழிபாடு செய்தான். முதலில் சூரியனையும் அதன் பின் அக்னி, வாயு, இந்திரன் வருனன் போன்றோரை வழிபடலானான். இடி முழக்கம் மின்னல் போன்ற இயற்கை தாக்களை கண்டு அஞ்சி நடுங்கினான். இடிமின்னல் பூமியை தாக்குவதன் மூலம் பூமிக்கடியில் கனியங்கள் உருவாகுகின்றன. இதை தாங்கவே ஆலயங்கள் உயரமாக அமைத்து கோபுரத்தில் இடியைத்தாங்க கலசத்தில் கேள்வரகு அரிசியை நிரப்பி வைத்தனர். அதனாலேயே 'கோயில்லா ஊரிலே குடியிருக்கலாகாது' என்ற முதுமொழி உள்ளது. 'கோயிலை விட மேலாக இல்லம் இருக்கக் கூடாது' போன்ற முதுமொழிக்கே காரணம். இயற்கையான இடிதாங்கியே. இது மட்டு மல்ல கோபுரங்களின் வடிவமும் இலிங்க வடிவத்தை ஓத்ததே அது பிரபஞ்ச சக்தியை ஈத்து இழுத்து மூலவிக்கிரகத்தில் செலுத்தக் கூடியது.
           விக்கிரகங்கள் கருங்கல்லினால் அமைவதனால் அக்கல்லுக்கு பிரபஞ்சசக்தியையும் மந்திர ஒலிகளையும் ஈக்கும் சக்தி உண்டு. சிற்பாசாரி கற்களை தெரிவு செய்யும் போது கல்லின் தன்மைகளை அறிந்து கொள்வது அவசியமாகும் அவற்றில் காணப்படும் கோடுகளைக் கொண்டு கல்லின் தரம் நிர்ணயிக்கப்படுகின்றது. கற்களில் காணப்படும் குறைபாடுகளைக் கொண்ட கற்களை நீக்கி கற்களை தேந்தெடுக்கும் விதிமுறைகளையும் ஆகமங்களும் சிற்பநூல்களும் எடுத்து இயம்புகின்றன. கற்களில் எழும் ஓசையைக்கொண்டு அவற்றின் பேதங்களை நிர்ணயிக்கின்றனர். கற்கள் பாலை, யுவதி, விருத்தை என்று புருஷ சிலை,ஸ்திரிசிலை, நபும்ஸகசிலை என்று பாகுபடுத்து கின்றனர். அகன்று எடுக்கும் வேளை சப்தமுடையதும் குட்டையான உருவம் உள்ள சிலைகள் பாலசிலை ஆகும். மணியோசையைப்போன்று ஒலியுடையதும் நீள் வட்டவடிவுடையதுமான கல் 'ஸ்திரிசிலை' எனவும், ஸ்திரி சிலை பானையைப் போன்ற ஓசையைக் கொண்டு விளங்கும்.  மணியோசையைப் போன்ற அதிக சத்தமும் நீள் வடிவமுடையதுமானதும் 'புருஷசிலை' க்குரிய இலட்சணமாகும். பளபளப்பின்றியும கரடுமுறடானதும் உறுதியில்லாமலும் ஒலியில்லாமல் இருக்கும் சிலை 'நபும்ஸக சிலை' எனப்படும். இவ்வாறு கல்லின் எழும் ஓசையைக் கொண்டு இவற்றின் வேறுபட்ட அம்சங்கள் நிர்ணயிப்கப்படுவது போன்று அவற்றின் 'ஆகிருதி' எனப்படும் உருவத்தின் அடிப்படையில் பேதங்கள் கூறப்படுகின்றன. 'ஸ்திரீ சிலை' சற்சதுரமாகவும் எண்கோணமாவும் அமையும். நீள் சதுரமாகவும், வட்டமாவும், பத்துக்கோணமாவும், பன்னிரண்டு கோணமாகவும் இருப்பது 'புருஷ சிலை' என்று கூறப்படுகின்றது. நான்கு வட்டமாக இருப்பது 'நபும்ஸக சிலை'யாகும். இலிங்கத்தையும் ஏனைய சிலைகளையும் அமைக்கும் போது கவனத்தில கொள்ள வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக ஆகங்களும் சிற்ப நூல்களும்  குறிப்பிடுகையில் இலிங்கம் புருச சிலையினாலும் ஆவுடையாரயன பீடம் ஸ்திரி சிலையினாலும் இலிக அடித்தளமான பீடம் நபும்ஸக சிலையினாலும் செய்யப்பட வேண்டும். என விதிக்கப்பட்டுள்ளது. இங்கு எல்லா வகையான கற்களும் பயன்படுத்தப்படுவதை காணக்கூடியதாகவுள்ளது. அதுமட்டும் அல்ல கற்களை தெரிவு செய்யும் இடங்கள் இயற்கை எளில் உள்ள நறுமலர்கள் நிறைந்த நதி வளம் உள்ள குற்றமற்ற இடங்களாக இருக்க வேண்டும். அவைகள் பண்டைய சாஸ்திரங்களுடன் கூடியதான கல்லில் சிலைவடிக்கும் போது 'சிலா பரீசஷணத்தையும் மரத்தில் வடிவமைக்கும் போது தாருபரீசஷணம் போன்ற வற்றையும் கருத்தில் கொண்டே சிலைகள் அமைக்கின்றனர். இதனை பூர்வகாரணாகமம் குறிப்பிடுகின்றது.
இயற்கை வழிபாடான அருவ வழிபாடு அருவுருவம் பெற்று இன்றைய உருவ வழிபாட்டுக்கு வழிவகுத்தது. இலிங்கம் பரம்பொருளின் அருஉருவமான சதாசிவம் ஆகி அடியவர்க்கு அருளினார்.
'மட்டூர் புன்னையம்பதியான்'
எண்ணங்களும் நாம்பேசும் வார்த்தைகளும் பிரபஞ்சத்தில் தாக்கம் ஏற்படுத்த வல்லவை. 
மனிதனுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தில் பின்னனியில் இருப்பது அவனது எண்ணங்களே அவை நேரானதாகவோ எதிரானதாகவோ இருக்கலாம். அவை பிரபஞ்கத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. எண்ணங்களுக்கு செயல்படுத்தும் ஆற்றல் உண்டு. நம்மையறியாமல் நம்மை செல்படுத்தும் வல்லமை அதற்கு உண்டு. எண்ணங்கள் நம்மில் இருந்து வெளிப்பட்டு விட்டால் அதை மீண்டும் பெறமுடியாது. அது செயல்படத் தொடங்கி விடும். அவை ஏற்படுத்தும் தாக்கம் எண்ணத்தின் உண்மைத் தன்மையில் தங்கி இருக்கின்றது. நம்மை சுற்றி மின்காந்த அலைகள் இருக்கின்றது. அவை எம்முள் உண்டாகும் நேரான எண்ணங்களின் அளவிலேயே எம்மைச்சுற்றி விரிந்து காணப்படும். அதனை ஓரா என்பர். அதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க  அதன் அளவும் அதிகரிக்கும். எம்மால் விடப்படும் எதிரான எண்ணங்கள் வலிமை இழந்தவனையே பாதிக்க வல்லது. அதுவே சூனியம் என்பர். எண்ணங்களை வலுவாக்க ஜெபம் தியானம் என்னவற்றுடன் நேரான எண்ணங்களை எங்களுக்குள் வளர்த்துக்கொள்வது அவசியமானதாகும். மற்றவர் எண்ணத்தை ஈத்து அதற்கேற்ப செல்படும் சக்தி எம்முள் உள்ளது. அததை நாம் எதிரான எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் இழந்து விடுகின்றோம். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டவை மனிதனும் மனிதனால் படைக்கப்பட்டவைகளும்மே அவையன்றி  விலங்குகள் அல்ல.விலங்குகள் ஊகித்தறிந்து தம்மை காப்பாற்றிக் கொண்டது. சிந்தித்துப்பாருங்கள் அது எப்படி என்று? அவை தமது மோப்ப சக்தியை இழக்க வில்லை அதிவுகளை அறியும் ஆற்றலை அவை இழக்கவில்லை. காகம் முட்டை இடமுன்னரே இதன் இருப்பிடத்தை தயார் செய்து விடுகின்றது. எறுப்புகள் மழைகாலத்தில் தேவையை உணர்ந்து உணவையும் இருப்பிடத்தையும் தயார் படுத்துகின்றது. ஏன் மனிதன் மட்டும் இதை அறியவில்லை? 
எண்ணங்களை கொண்டு பல சாதனைகளைச் சாதிக்க முடியும். சித்தர்கள் உண்மையான அன்பு வைத்து அவர்களை வேண்டும் போது அவர்கள் எம்முன் தோன்றி எமது தேவைகளை நிறைவு செய்வர்.  அப்படி தோன்ற அவசியமில்லாதவிடத்து அத்தேவையை நிறைவு செய்வர். சில வேளைகளில் நாம் ஒருபாடலை நினைக்கின்ற போது அப்பாடல் வானொலியில் ஒலிப்பதை உணர்ந்திருப்பீர்கள் அது மட்டுமல்ல ஒருவரை நினைத்து அவரை தேடி செல்லுகையில் அவர் எம்முன் தோன்றுவதை அவதானித்திப்பீகள். இப்படியான நிகழ்வுகளை ரெலிபதி என்பர். நொய்களைக் கூட அக்காலத்தில் சித்தர்கள் எண்ண அலைகளை அனுப்பி உடலினுள் சரி செய்துள்ளனர். சிலருக்கு சில வீடுகளில் அதிக நேரம் இருக்க முடியாது. அங்கு சென்றமாத்திரத்திலேயே கிளம்பும் எண்ணம்தான் வரும். ஏனெனில் அங்கு வாழ்ந்தவர்கள் எண்ணமும் சென்றவர் எண்ணமும் பொருந்த வில்லை. நமது வீட்டின் உட்சுவர்களில் நமது எண்ணங்கள் பதிவுநாடவில் பாடல்கள் பதிவது போல் பதியப்படுகின்றது. அவை அழிவதில்லை. அதற்காகவே வீடுகள் வடகைக்கு கொடுக்கும் போது சுவர்கள் வெள்ளை அடிக்கப்படுகின்றன. சில வீடுகளுக்கு ஒயில்பெயின் அடிக்க வேண்டியும் ஏற்படலாம். அந்தளவுக்கு எதிரான எண்ணங்கள் பதிந்திருக்கும். சமயல் செய்யும் போது கூட சமைத்தவர் எண்ணம் பதிந்திருக்கும். ஒரு முறை சுவாமி விவேகானந்நர் உணவருந்த சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்குச் சென்றிருந்த போது சமைத்தவரை சுவாமி பார்க்க விரும்பினார். ஏன்னென்றால் அவரின் மன பதிவு பதிவாகி இருந்தது. அவர் ஒரு கொலைக் குற்றவாளி. அதை சுவாமி உணவருந்தும் போதே அறிந்திருந்தார். விரும்பி சாப்பிடும் உணவு உடலுக்கு பொருந்தும். விருப்பமில்லாதது உபாதையைத்தரும் இது மனத்தில் தோன்றும் எண்ணத்தின் செயல்பாடாகும்.
ஓருமுறை தவத்திரு யோகசுவாமிகளிடம் சேவை செய்த முதாட்டியின் மகன் வெளிநாட்டுக்கு சென்று தகவல் ஒன்றும் அனுப்பாத நிலையில்; தாய் அறிய பல நடவடிக்கை எடுத்தும் அறியமுடியாத நிலையில் மனவருத்த மடைந்திருந்திருந்த வேளையிலும் சுவாமியின் மீது மனம் வருந்திய போது அதாவது 'சுவாமிக்குமா இது தெரியாது என்று' இதை அறிந்த சுவாமி மூதாட்டியை அழைத்து யார் வந்தாலும் என்னை அழைக்வேண்டாம் என்று கூறிவிட்டு அறையை கதவுகளை முடிக்கொன்டு தியானத்தில் ஆழ்ந்து  விட்டார். பின்னர் சிலவாரத்தின் பின்னர் மூதாட்டிக்கு கடிதம் வந்தது மகனிடம் இருந்து அம்மா சுவாமி என்னிடம் வந்தார் உனது விடையங்கள் எல்லாம் கூறிவிட்டு சென்றார் என்று இது போன்று இன்னுமோர் சந்தர்ப்பத்தில் சுவாமியுடன் நெருங்கிப் பழகுபவர்களில்  அமரர் ஐP.ஐP. பென்னம்பலமும் ஒருவர் அவர் யாழ்பாணம் வந்தால் சுவாமியை சந்தித்துவிட்டு பயனம் செய்வது வழக்கம். ஒருமுறை பயனத்தின் போது தோடம் பழங்களை சுவாமிக்கு கொடுத்து விட்டு பயத்தை மேற்கொண்ட போது மேசையில் இருந்த தேடம் பழங்கள் இரன்டு உருண்டு வந்து ஒன்றில் ஒன்று மோதுவது போல வந்து மோதவில்லை. அப்போது சுவாமி அங்கு இருந்தவர்களிடம் போன்னம்பலம் தப்பிவிட்டான் என்றார். சிறிது நேரத்தின் பின சுவாமிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது மயிர்இளையில் விபத்தில் இருந்து தப்பிவிட்டேன். சுவாமியின் அனுக்கிரகத்தினால் என்று. அங்கிருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்து போனார்கள். அப்படிப்பட்டது எண்ணலைகளின் செயல்பாடு.
பேராசை கொண்ட சமுதாயத்தால் உலகம் அழிகின்றது. அங்கு போட்டியும் பொறாமையும் மலிந்து கிடக்கும். பொருள் தேடி அலைபனும் பித்தலாட்டக்காரர்களுமே அதிகம். அங்கு பரோபகாரம் இல்லை தமக்குமட்டும்தான் எல்லாம் தானும் தன் பிளைகளும் வாழ்தால் போதும் .உலகம் மக்களை எப்படி ஏமாற்றி தேவைகளை உருவாக்கி பணதை தேடவைத்து தாம் பலன் பெற்று வாழ்வதே இலட்சியம். இன்று உலகம் அப்படித்தான் இருக்கின்றது. அடிப்படைத்தேவைகளைகளை பூர்த்தி செய்வதை விட ஆடம்பரங்களில் தான் உலகம் இருக்கின்றது. தகுதிக்கு மேலான வீடுகள் அதில் இருப்பதற்கு ஆள் இல்லாத நிலை குழந்தைகள் பெரும்பாலோருக்கு இல்லை. இருந்தாலும் ஒன்று இரண்டுதான். சந்தோசம் இல்லாத வாழ்க்கை இளம் குடும்பங்களில் விட்டுக்கொடுப்பும் புரிந்துனர்வும் இல்லை. சினிமா மோகம். அதுபோல் வாழநினைப்பது. வயதுக்கேற்ற நடவடிக்கைகள் இல்லை. ஆன்மீக வாழ்க்கை இல்லை.  இப்படியான நிலையில் பிறக்கும் குழந்தைகள் எல்லாமே உலகத்தில் தாக்கம் செலுத்துகின்றது. மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் சாமிமார் ஒருபுறம். நிம்மதியை தேடி அலையும் கூட்டம் ஒருபுறம். அமைதி இல்லை அமைதி இல்லை என்று அலையும் கூட்டம் ஓருபுறம். அமைதி எங்குள்ளது? அது எம்முள்தான் உள்ளது என்பதை உணர்தாது அவனை தம்வசமாக்கி பொருள்சம்பாதிக்கும் கூட்டமே அதிகம். ஆன்மீகம் என்று அதை வியாராப்பொருளாக்கி  வியாபாரம் செய்வோர் ஒரு சிலர். பணத்தைக்கொடுத்தால் கடவுளை வாங்கலாம் என நினைப்பவர் ஒருசில தனவந்தர். இப்படியாக உலகம் பல்வேறு தாக்கத்துக்குகின்றது உலகத்தை இயக்குவது இயற்கை அதை காக்க வேண்டியது மனிதன். மனிதன் காக்கத் தவறும் போது இயற்கை தன்னைக்காக்க மனிதனையும் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களையும் அழிக்கின்றது. இதுவே அனத்தம். பிரளயம் என்போம்.
மநுதர்ம சாஸ்திரம் விவாகங்கள் பற்றியும் அதன்மூலம் பிறக்கும் குழந்தைகள் பற்றியும் குறிப்பிடுகையில் விவாகம் ஜந்து வகைப்பட்டது அவை பிராஜாபத்தியம், ஆசுரம், காந்தருவம், இராட்சசம், பைசாசம் என்பவையாகும். இவற்றில் பிராஜாபத்தியம் என்பது பிரம்மசாரியை அழைத்துப் பூசித்து பெண்ணைத்தரும் போது 'நீவீர் இருவருமாய் அறங்களைப்புரிந்து வாழ்வீர்களாக' என்று வாழ்த்திப் பெண்ணைக் கொடுத்தல். ஆசுரம் என்பது பெற்றவன் குறிக்கும் பொருளைக் கொடுத்து பெண்ணைவாங்கி அணிகள் புட்டி கணத்தல். காந்தருவம் என்பது ஆண்பெண் இருவரும் தம்மில் மனம் கலந்து தங்களாகவே கூடிச் சுகித்தல். இராட்சசம் என்பது அவளது உறவினர்களை அடித்துக்கொன்று பிளந்தும் ஒருபெண்ணை அவள் வீட்டில் இருந்து தன் வலிமையினாற் கவர்ந்து சென்று மணத்தல். பைசாசம் தூக்கத்திலும், குடிவெறியிலும் பித்துக் கொண்டும் இருக்கும் பெண்ணைக்கலப்பது இது மிகவும் தாழ்ந்த விவாகமாகும். இனி இதனால் உருவாகும் பிரஜாவிருத்தி தொடர்பாக குறிப்பிடுகையில் பிராஜாபத்தியத்தால் உருவாகும் குழந்தைகள் சாதுவான பிள்ளைகளால் முன் பத்துத் தலைமுறைகள் நரகம்செல்லாது தப்புவிக்கப்படுவர். பின் சந்ததியிலும் பத்து தலைமுறை சாதுவான பிளைகளைப் பெறுவர். அதுமட்டுமல்ல கவர்ச்சியெழில், வலிமை, பண்பு, செல்வம், அறம் இவை பொருந்தியவராய் நூறாண்டு வாழ்வார். மற்றைய நான்கிலும் பிறப்பவர்கள் கொலை, பொய், வேத யாக தர்ம நிந்தை இவற்றைப் புரிவோராவர்.  எனவே பிரபஞ்சத்தை அழிக்கும் குழந்தைகளாலும் பிரபஞ்கம் அழிகின்றது. பெற்றாரின் விருப்பத்தின்பேரில் ஆசிபெற்றவன் பாழ்வு உலகத்தையே காக்கவல்லது.
மனித எண்ணங்கள் ஊடுருவுவது வளியில் கானப்படும் மின்காந்த புலணால் தான். அதை இலத்திரனியல் கருவிகளின் பயன்பாடு தடுக்கின்றது. அதனால் மனித எண்ணச் செயல்பாட்டுக்கு தடை ஏற்படுகின்றது. இயற்கை அதை அனுமதிக்காது. அதனால் இலத்திரனியல் பிரளையம் ஏற்படவாய்ப்பேற்படும். கபனீர் ஒட்சைட்டின் செறிவதிகரிப்பால் சூரியனில் வெப்ப சுவiலை வெளிவருதல் அதன் கதிர்வீச்சு அதிகரித்தல். போன்றன நடை பெறுகின்றது பிரபஞ்சத்தில் உஸ்னம் அதிகரித்து. இதனால பணியாகச் சேமிக்கப்பட்டு; நஞ்சை சேமித்து வைத்த துருவ பணி கரைந்து கடல் நீர்மட்டம் அதிகரித்து நாடுகள் நீரில் மூழ்கக்கூடிய அபாயம் இருக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனித எண்ணங்களே. அவை நேர்மாறான எதிரான எண்ணங்களே பெரிதும் தாக்கத்தை ஏற்பதுத்துகின்றன். நேரான எண்ணங்கள் உலகத்தை காக்க எதிராண எண்ணங்கள் அழிப்பாதைக்கு இட்டுச்செல்கின்றது. 
 நேர் எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் பலபிரச்சனைகளிலிருந்து விடுபடமுடியும் எது சரி எது பிழை என்பதை அறிவதுடன் அதன் விளைவுகளும் தெட்டத்தெளிவாகவே தென்படும். அதனால் பிரச்சனைகளை தவித்துக்கொள்ளலாம். நமது தேவைகளை மற்றவர் அறிந்து எமக்கு உதவக் கூடியதாக அமையும் ஒருமுறை குருதேவருக்கு தொன்டை வலி மேலிட்டது அக்காலத்தில் தர்ப்புசணிக்காய் கிடைக்காத கால் அவரின் சீடர்களில் ஒருவர் குருதேவருக்கு வேவைப்பட்டதால் எங்காவது இருக்குமென சென்ற போது ஓரு தோட்டத்து குடில்ஒன்றில் கொடியில் காய்த்து தொங்குவதைக் கண்ட சீடன் தோட்ட உரிமையாளரிடம் கேட்ட போது அதைத் தர மறுத்து விட்டார். மனம் வருந்திய நிலையில் திரும்பிச் செல்கையில் அந்த காயுடன் வானரம் ஒன்று வந்து நின்றது அதிர்ந்து போனான் சீடன். அது மட்டு மல்ல இன்னுமோர் முறை குருதேவர் சுகவீணமுற்று இருந்த வேளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோடம்பழக் கொடுப்பது வழக்கமாகி விட்டது. ஓருநாள் கொடுத்த தொடம்பழ தண்ணீர் தொண்டையில் இறங்க வில்லை காரணம் புரியாது இருந்தது. அடுத்த நாள் பழம்பறிக்கச் சென்ற போது காலாளியிடம் கேட்ட போது தான் புரிந்தது காரணம். உரிமை மாறியுள்ளது. அடுத்த நாள் உத்தரவு பெற்று தோடம்பழம் பறித்து சென்ற போது பழச்சாறு தொண்டையினுள் இறங்கியது. அப்படிப்பட்டவர் குருவேர். அவர் நேர் எண்ணங்களை நிறைந்தவர். அவர் இந்த யுகத்தில் இராமராகவும் கிருஷ;ணராகவும் அவதரித்தவர்.
எண்ணங்கள் வலிமையானவை ஒருவரின் எண்ணங்கள் அவர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ண அலைகளை அல்வா, வீற்றா, ரீற்றா, காமா என பலவகைப்படும். அதில் அல்பா நேராண எண்ணங்களையும் மற்றவைகள் விகிதாசார அடிப்படையில் உளவளத்தை பதிக்கக்கூடியவை இதனை அளவிட ஈஈஜீ பரிசோதனை மூலம் மருத்துவ தொழில்நுட்பம் அறிந்து மருத்துவம் செய்கின்றது. எப்போதும் நேரான எண்ணங்களை பிரபஞ்சத்தை காக்கின்றது. நேரான எண்ணத்தை வளர்த்து பிரபஞ்கத்தை காப்போம்.
'மடடூர் புன்னையம்பதியான்'

சிவன் இராத்திரியும் அதில் அடங்கி இருக்கும் தத்துவமும்
     சிவன் இராத்திரி என்றவுடன் ஞாபகத்துக்கு வருவது நித்திரை இன்றி இரவு முழுவதும் விழித்து இருப்பதே. சிவனுக்கு ஓரு இராத்திரி அம்பிகைக்கு ஒன்பது இராத்திரி அதிலிருந்து விங்கிக் கொள்ள வேண்டியது அதன் முக்கியத்துவம் விளித்திருத்தல் என்பது நித்திரை விளித்திருப்பதாகவே எல்லோரும் கருதுகின்றனர்.  நித்திரை என்பது உலகவிவகாரத்தில் லயித்து அதில் மூழ்கி ஆன்மீகத்திலிருந்து விலகி ஆன்ம விடுதலையை எண்ணாது உலக மாயையில் மயங்கி இருப்பதையே கருதுகின்றனர். இதில் பீடிக்கப்பட்ட மாயையை விளிப்பாகவிருந்து இதன் செயல்பாடுகளை அவதானித்து அதில் ஆத்ம விடுதலைக்கு தடையானவற்றை தவிர்த்து ஆத்ம விடுதலைக்கு ஏதுவானதை பயன்படுத்தி அதில் இருந்து தனித்திருந்து ஞானப்பசியில் இருந்து ஞானத்தை அடைவதையே சிவன்ராத்திரி விரதத்தின் பயனாக அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது.
   சிவன்ராத்திரி விரதம் விரத தத்துவங்களை ஓருங்கே பெற்றவை அவை விளித்திருத்தல், பசித்திருத்தல், தனித்திருத்தல் என்பதாகும். அதாவது தனித்திருத்தல் என்பது மலங்களில் இருந்து தனித்திருத்தல் இவை பீடிக்காதவாறு விளிப்பகாக இருத்தல். ஞானத்தினை பெற பசித்திருத்தல். இதுவே விரததத்துவம். இங்கு பார்த்தால் கண்விளித்து உணவருந்தாது ஓர் இடத்தில் தனிமையில் இருப்பதே விரதம் என்று எண்ணுகின்றனர். 'பசித்தால் பத்தும் பறந்திடும்' என்பது முது மொழி இங்கு சிந்திக்க வேண்டிய விடையம் ஒன்று உண்டு. அதாவது பசி என்பது ஞானப்பசி அது இருந்தால் பற்று என்பது பறந்து விடும் அதனால் ஞானம் உண்டாகும் என்பதே இதன் கருத்து. இது சித்தர்கள் வாக்கு இவர்கள் கருத்துக்கள் இரு கருத்துக்களை கொன்ட்டதாகவே அமையும். ஞானிகள் உண்மைக்கருத்துக்களை அறிவர். இன்னுமோர் வகையில் பார்த்தால் பசியிருந்தால் எதையும் கிரகித்துக்கொள்ள முடியாது. அதை பூர்த்தி செய்தால் தான் எல்லாமேபுரியும். இதுபோன்று 'அரசனை நம்பி புருசனை கைவிடாதே' என்று இன்னுமோர் முதுமொழி உண்டு.  அதில் அரசன் என்பது அரசமரம் குழந்தை பாக்கியம் கிடைக்க சிலருக்கு அரசமரத்தை சுற்றி அங்கிருக்கும் கடவுளை வழிபடுமாறு கூறுவர். அதற்கு காரணம் கருப்பையில் இருக்கம் கிருமிகளை கொல்லும் வல்லமை அரசமரத்தின் இலைகளினால் உணவுதாயாரிக்கும் போது உண்டாகும் உயிர் காற்றில் உள்ளது. இதை பெறவே அரசமரத்தை வணங்கும் படி கூறுகின்றனர். அதற்காக கணவன் இன்றி குழந்தை கிடையாது. அதை மையமாக வைத்தே இம் முதுமொழி உருவாகியது.
  சிவராத்திரி தொடர்பாக புராணக் கதையில் காட்டில் வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்ற போது இரவில் புலி அவனை துரத்த அவன் மரமொன்றில் ஏறி இரவு முழுவதும் விளித்திருப்பதற்காக இலைகளை பறித்து கீழே போட்டுக்கொண்டு இருந்த போது அதிகாலையில் இறைவன் காட்சிகொடுத்து முத்தி அளித்ததாக கூறப்படுகின்றது. அங்கு அவன் ஏறி இருந்த மரம் வில்லமரமாகவும் அதன் கீழ் இலிங்கத்திருமேனியான சதாசிவமூர்த்தியாகிய அருளோன் இருந்தாகவும் அதிலே அவன் பறித்தெறிந்து கொண்டு இருந்த வில்லதளங்கள் விழ்ந்ததால் மகிழ்ச்சியுற்று இறைவன் காட்சிகொடுத்து ஆட்கொண்டார். என்று கூறப்படுகின்றது. இதன் உட்கருத்துக்களை அறிய வேண்டியது அவசியமாகும். இராத்திரி என்பது இருள்நிறைந்த நேரம் அந்த நேரத்தில் பொருட்கள் தெரியாது அது உண்மையை மறைக்கும் தன்மை இந்நிலை கண்கள் இருந்தும் குருடனாக இருப்பதை ஒத்த தன்மை அதாவது இருள் மலம் ஆணவமலம். புலியாக துரத்தியது என்பது மாயை ஆணவமலமும் மயையும் பீடிக்காத வகையில் விளிப்பாக தனிமையில் இருந்ததால் ஞாமாகிய முத்திப்பேறு கிடைத்தது. இறைவன் ஆன்மாக்களை ஆட் கொள்ளும் போது அவனிடம் இருக்கும் நன்மை தீமைகளை எல்லாம் அறுத்தே ஆட்கொள்வார். இங்கு பிறப்புக்கு காரணமான எதுவும் இருக்காது. ஆன்மாக்களும் பரம்பொருளான இறைவனும் மட்டுமே இருப்பர். இதற்காகவே பிரதோச காலத்தில் நந்திதேவர் மத்தளம் அடிக்க சிவபெருமான் ஆனந்தக்கூத்தாடுவர். இன்நிலையின் இருவர் மட்டுமே இருப்பர். நந்திதேவர் ஆன்மா அது சீவாத்துமா சிவபெருமான் பரமாத்துமா. இருவருமே அக்காலத்தில் இருப்பர். சிவராத்திரி மாசிமாத அமரபட்ச(கிஸ்ணபட்ச) சதுர்த்ததி தினத்திலேயே வரும். அதனை வருடபிரளயமாகவும் மாதாந்த பிரளயமாக பிரதோசதினத்தையும் கருதுவர்.
       மாசிமாதத்தில் மரங்கள் எல்லாம் இலைகளை உதிர்த்து பங்குனியில் புதிய தளிகள் தோன்றும் அக்காலமே வசந்த காலமாக கருதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்களியாணம் நடை பெறுகின்றது. மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரமமுகூர்த்தம் அக்காலத்தில் வியாழன் பூமியை அண்மித்து வரும் காலம். வியாழன் உயிர்க்கிரகம் அங்கிருந்துதான் உயிர்கள் பூமிக்கு வந்தது அதனால் சந்திரக்கவர்ச்சி ஏற்பட்டு கடல் ஈக்கப்படுவதால் வெற்றிடம் ஏற்பட வங்காளவிரிகுடாவில் வெப்பக்காற்று புகுந்து இயற்கை அனர்தத்தத்துக்கு ஏதுவாகின்றது. அதனாலேயே காத்திகை மார்கழி மாதங்களில் அனர்த்தங்கள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. வியாழனின் ஈர்ப்பால் சூரியசக்தி அதிகரித்து கதிர்வீச்சு இடம்பெறுகின்றது.  இந்நிகழ்வு பொதுவாக பிற்பகலில் ஏற்படுவதால் அவை நீர்நிலைகளின் மேற்பரப்பில் உறைகின்றன அடுத்தநாள் பகலில் சூரிய வெப்பத்தால் ஆவியாகி முகிலாக ஆகாசத்தில் சேகரிக்கப்பட்டு மேகம் குளிர்வடைந்து பூமிக்கு மழையாக பொழிந்து  ஊறி மரங்களில் சக்தியாக சேருகின்றது. அதேவேளை இலைகளில் உள்ள பச்சையத்தை கொண்டு சூரிய வெப்பத்தினால் உணவு தயாரித்து வேதியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றது. இதனாலேயே மார்கழிமாதத்தில் அதிகாலையில் தலைக்கு தோய்வதனால் அச்சத்து தலையினால் உறிஞ்சப்படுகின்றது. இதற்காகவே சிவபத்தர்கள் மார்கழி திருவாதிரை நாளை அடிப்படையாக கொண்ட பத்துநாட்கள் திருவெப்பாவையும் விஸ்ணு பத்தர்கள் மார்கழிமாதம் முழுவதையும் திருப்பாவை மாதமாகவும் கொண்டு வழிபாடுகள் மேற்கொள்ளுகின்றனர். இக்காலத்தில் பொதுவாக திருமணவைபவங்கள் நடைபெறுவதில்லை.  கீதையில் கிருஸ்ணபரமாத்மா  'மாதங்களில் நான் மார்கழி' என்றார். வழிபாட்டுக்குரிய மாதமாகவே கொள்ளப்படுகின்றது. நாற்பது வயது வரையில் கிறிஸ்டல் வைற் எணர்ஜீ உடலாலும் பின்னர்  தலையாலும் ஈக்கப்படுகின்றது. இதனாலேயே நாற்பது வயதுக்கு மேல் தலைமயிர் வெண்மை நிறம்  அடைகின்றது.
இந்துமதம் எதை செய்தாலும் அது அர்த்தமுள்ளதாவே அமையும். அதனாலே இந்து மதத்தை அர்த்தமுள்ள இந்துமதம் என்றார்கள்;. சித்தர்களும் மகரிஷிகளும் அர்த்தமுள்ளவற்றையே ஏற்படுத்தியவர்கள் அவர்கள் மெய்ஞானிகள். எல்லவற்றிலும் உட்கருத்துக்கள் இருக்கின்றன அவற்றை ஞானிகளே அறிவர். இன்னும் அவை கதைகளாகவே இருந்ததால் வருடாவருடம் பாராயணம்செய்யப்படும். அது ஏற்படுத்தப்பட்ட உட்கருறாதுக்களை அறியாத நிலையிலேயே அவர்களின் காலம் முடிந்து விடும். இதனால் எந்தப் பயனும் இல்லை. அவை கதைகளாகவும் காவியங்களாகவும் இருக்கும் வரை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அவை மூடநம்பிக்கையையும் கேலிக்கிடமாவும் தான் அமையும். என்னிடம் ஒரு நண்பர் கேட்டார் முருகனுக்கு மயில் எப்போது வந்தது. மம்பழக் கதையிலா? அல்லது சூரசம்ஹரத்திலா? இது ஒரு வேடிக்கையாது தான். தந்தையை கோபித்த முருகன் மயிலில் பழனிக்கு பறந்து சென்றார். என்றும். சூரசம்ஹாரத்தில் சூரனை இருகூறாக்கிய போது சேவலும் மயிலுமானான்சூரன். அதாவது மனிதனிடம் இருக்கும் அசுரசக்தியே சூரன் அவனிடம் இருந்த நல்ல குணம் சேவல் என்றும் அது அதிகாலையில் சூரிய உதயத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி சந்தோச மடைகின்றது. சூரிய சக்தி பிரபஞ்சத்தின் ஆக்கசக்தியாகும். அவனது கெட்டகுணம் மயில் அது அசுரசக்தி அது ஆக்கத்துக்கு எதிரான ஆணவம். அதை அடக்கி அதன் மேல் அறிவான இறைவன் வீற்றிருந்து ஆட்சி செய்தார். சுரனை வேலாகிய ஞானசக்தியால் பிளந்தார்.  வேலின் கூர் அறிவு கூர்மையானதாகவும் அதன் அகலம் அகலமான அறிவையும் அதன் தண்டு ஆழமாதான அறிவையும் குறிக்கும். இது இப்படி இருக்க பாலமுருகன் எப்படி மயிலில் தந்தையை கோபித்து பறந்து சென்றார். மயில் ஆணவத்தின் அடையாளம் ஆணவம் உற்றால் மனிதன் இறைவனை விட்டு அகன்று வெகுதூரம் செல்வான். ஆணவம் அறிவுக்கு விரோதி. அதனாலேயே மயில் பாம்பை தன் கீழ் வைத்துள்ளது. பாம்பு குண்டலினி சக்தி .இன்னோர்  விதத்தில் கூறுவதனால் ஒன்றுக்கொன்று விரோதி இவை இரண்டும் இறைவனிடத்து ஒற்றுமையுடன் இருக்கின்றது. கதைகள் கதைகளாகவே இருக்கும் வரை அது இப்படியான பிரச்சனைகளைத்தான் ஏற்படுத்தும் இவைகளின் தத்துவங்களை விளங்கிக்கொள்ளும் போதே அவை அர்த்தமுள்ளவையாகும். இன்றைய சமுதாயம் ஆராய்ந்தறியக்கூடியவர்கள் அவர்கள் சந்தேகங்களை மதிநுட்பமாகவே கையாளவேண்டும். வேற்று மதங்கள் இலகுவாக உட்புக இவை காரணமாகிவிடக்கூடாது. அவரவர் மதங்களில் தெளிவும் உறுதியும் அவசியம். தன் தாயை மாற்ற முடியுமானல் மதத்தையும் மாற்றலாம்.
சிவராத்திரியில் கேட்டது அப்பனிடம் இருந்து கிடைக்கும். ஏன் என்றால் அவனுக்கு இருப்பதே ஒரு இராத்திரி அவனை பிரபஞ்சமே நினைத்து வழிபடும் நாள் அது. அன்று அவன் நினைவுதான் எல்லோரிடமும் எண்ணங்கள் ஒன்று பட்டால் அதன் சக்தியை சொல்லவேண்டுமா? '{ஒன்று பட்டால் உண்டு வாழமுடியும்' அல்லவா? 'அவன் அருளால் அவன் தாள் வணங்கி' என்ற மாணிக்கவாசகப் பெருமானின் கூற்றுக்கு இணங்க அவன் அருள் பெறுவோம்.
இந்து மதத்தின் உட்கருத்துக்களை அறிந்து அதன்படி நடந்து உய்வடைவோம். அர்தமுள்ளது இந்து மதம்.

வினைகளை மாற்றும்
இறை துகள்கள்.
ராக்கெட் வேகத்தில் பூமியை நோக்கி வரும் லூமினிபெரஸ் ஈத்தர்! மாசி மாத மகா சிவராத்திரி மகிமை.
லூமினிபெரஸ் ஈத்தர்”
( Luminiferous Eather ) எனப்படும்
ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்குகிறது. இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது. எனவே தான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடி யும் வந்துகொண்டே இருக்கிறது. பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை. மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதிக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம்.
மேலும் ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவ ராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும்.
இதற்கு நிகர் வேறு எந்த சக்தியும் இருப்பதில்லை. எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவ ராத்திரி என்று அழைக்கிறார்கள். ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING ) , இரண்டு ஃபால் ( FALL ). இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு.
மாசி மாசம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர் ஸ்பிரிங் தன்மை கொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு. ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சுற்றிக் கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழு சக்தியை இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும். அதேசமயம் 180 கேண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும். ஆனால் அது ஃபால் ( FALL )என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின் தோடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.
புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஈத்தர் 24 மணி நேரமும் பூமியை நோக்கி சைக்கிள் வேகத்தில் வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் புல்லட் வேகத்தில் வரும். ஆவணி, ஆடி மாதத்தில் கார் வேகத்தில் வரும். மாசி மாசம் மட்டும் ராக்கெட்டில் வேகத்தில் வரும்.
மகா சிவராத்திரி அன்று பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடு இரவு 12 :15 AM முதல் 12: 45 AM வரை உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த நேரம் சிறப்பான நேரம். இந்த நேரம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.
இந்த லூமினிபெரஸ் ஈத்தர்” ( Luminiferous Eather ) பல மதங்களில், பல மார்க்கங்களில் இறைவன்,கடவுள், பிரமாண்டம், இறைத்துகள் ஆற்றல், பேரறிவு, பிரபஞ்சம், பரமாத்மா மற்றும் அண்டம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக கிமு நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் பல கண்டு பிடிப்புகளை கொடுத்துள்ளார்.
மேலும் 17 ம் நூற்றாண்டு முதல் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் மற்றும் அகஸ்டின் போன்ற பல்வேறு விஞ்ஞானிகளும் இதைப்பற்றி வேறு வேறு பெயர்களில் கூறியிருக்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல், முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது மிக மிக மிக மிக மிக சிறப்பு. ஈதர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட் என்ற ஆனந்த சுரப்பி என்ற ஆனந்த மூளையை அடைந்து பலவிதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும். இந்த நேரத்தில் நமக்கு நாமே நம்மை ஆசிர்வாதம் ( Self Blessing ) செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ ( DNA ) ல் கெட்ட பதிவுகளை ( கர்மா ) அழிக்கும் வல்லமை உள்ளது.
மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா?
பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர் சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும். இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின் ( Melatonin ) என்ற ஒரு திரவம் நமது உடலில் சுரக்கும். மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம். எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் , எனவேதான் இரவில் கண் விழிக்கிறார்கள். அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர். ( Circadian Rhythm )
இந்த ஈத்தரைத்தான் “ஈசன்” என்று சிலர் அழைக்கிறார்கள். ஈசனை தான் சிவன் என்று அழைக்கிறார்கள். “ஈத்தர் ராத்திரி” என்பது தான் சிவராத்திரி என்று கூறப்படுகிறது. எனவே மகா சிவராத்திரி தூக்கம் முழிப்பது அனைத்து மக்களுக்கும் நல்லது.
திருமந்திரம்.
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.
- திருமூலர்
எங்கும் நிறைந்துள்ளது சிவன் வடிவம்;
எங்கு நிறைந்துள்ளனர் சிவசக்தியர்;
எல்லா இடங்களும் சிதம்பரம்; எங்கு நோக்கினும் திரு நடனம்;
எங்கும் உள்ளான் சிவன்,
எல்லாம் அவன் அருள்;
நிகழ்பவை எல்லாம் அவன் அருள் விளையாட்டு!!
*ஓம்நமசிவாய*
All reactions:
Saraswathy Vetharaniyam Pushpa and Sinnathamby Ratnasingham



( மட்டூர் புன்னையம் பதியான்)

பாடல்:1                    
            நாத விந்து ஆதி

நாத விந்து ஆதி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி        
   சம மெனில் அண்டத்தின் வித்து
   விந்தினில் நாதம் உயந்திடில் மந்திர வித்து
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
   ஆறாதாரத்தில் உதிர்த்திடும் சக்கர மந்திர வித்து
   மூலாதாரதில் விதைத்திட
      சுவாதிஸ்தானதில் விளைந்த மந்திர வித்து
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
   மணிப்பூரகத்தில் வளந்து அனாகதத்தில் பரிசுத்தமாகி
   விசுத்தியில் எழுந்து ஆக்ஞாயில் ஒளிந்து சகஸ்ராதாரத்தில் கலந்த மந்திர வித்து
 நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
    அது அண்டத்திலுள்ள அண்டத்து வித்து.
    உலக இயக்கமே உன்னுள்ளே இருந்து
   அதை அறியாமல் அலைந்து மாழுகின்றான்     மானிட ஜென்மம்
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி
   மானிட ஜென்மம் எடுத்ததின் நோக்கம் புரியாத மாந்தர்
   அறிந்தவன் உலகத்தை ஆளுகின்றான்
   ஓங்கார ஒலியினிலே உலக இயக்கம்
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
   ஆங்காரம் வந்திட்டால் அழித்திடும் உலகத்தையே
   மாயையில் பட்டால் மயமாய் மறையும் உண்ணுள்ளே சக்தி
  அதை உணர்ந்திட்டால் பெற்றிடுவாய் சித்தி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி
         கன்மத்தை அனுபவித்திட்டால்
         முத்தியின் திரவுகோல் உன்கையில்
         முத்தி பெற்றால் வாழ்கையில் சித்தி
நாத விந்து ஆதி நாத விந்து ஆதி      
         சுவர்கமும் நரகமும் பிறவிப்பிணி   அத்தனையும் முத்தியின் விரோதி
         செயலில் பற்றின்மை அத்தனைக்கும் மருந்து உறவினில் துறவு விடுதலைக்கு திறவுகோல்.


பாடல்: 2
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
  இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
  உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
      இல்லரவியலே அவர்கள் தத்துவ இயல்
      உடலை காயமாக்கி நோய்யற்ற
      வாழ்வை மனுக்குலத்துக்கு தந்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
             சித்தர்கள் வாழ்வியல் விஞ்ஞான ஆய்வில்
             ஆக்கி வைத்தவர்கள் சித்தர்கள்
             வானியல் நீரியல் மண்ணியல் விண்யியல் கட்டவர் சித்தர்கள்.

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
              அத்தனையும் விஞ்ஞானமாக்கி மெய்ஞானம கண்டவர்கள் சித்தர்கள்
              சித்தர்கள் அறிவியல் படைத்தவன்
              படைப்பின் தத்துவ இயல்.
              இருந்த இடத்தில் உலக இயக்கம்
              கண்டவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
    வருவதை அறிந்து வரு முன் காப்பவர் சித்தர்கள்
    சித்தர்கள் சிந்தையில் உதித்ததை
    அத்தனின் வார்தையாய் கண்டவர்
    சித்தமரபினர் உண்மையை இயம்பி
    உண்மைக்காய் வாழ்ந்து உண்மையை
    அடைந்தவர் சித்தர்கள்
 
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
    சித்தர்கள் வாழ்வியல் உண்மை
    அறிவியல் மனுக்குலம் உய்ய
    இறைவன் தந்த தத்துவ இயல்
    எழிமையில் இனிமையாய் வாழ்வியல்
    கண்டு வாழ்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
      ஆடம்பரங்கள் அலங்காரங்கள் வெறுத்து
      கோமளம் கட்டி ஆண்டியாய்
      பிச்சை எடுத்து பரதேசியாய் வாழ்தவர் சித்தர்கள்
      மரங்களின் நினலில் மலைகளின்
      குகைகளில் போதனை செய்தவர் சித்தர்கள்
      நாடியவனை சித்தம் தெளியவைத்து
      ஞானம் அடையவைத்தவர்கள் சித்தர்கள்.

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
     சித்தர்கள் பதினென்மர் அவர்களே
     காலமறிந்து காலத்துக்கு காலம்
     நாமம் மாறி புத்துயிர் பெற்று
     மனுக்குல  மீட்சிக்காய் அவதாரம் எடுத்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
    சித்தனை அறிய சித்தத்தெளிவே அவசியம்
    அவன் அருள் இருந்தால் குருவே தன்னை
    உணர்த்தி ஆட்கொள்வான்.
    ஊனுடலில் உள்ளொளி பெருக்க
    மூலதாரத்தில் அக்கினி மூண்டு
    ஆறாததரத்தில் தான் ஒளி பெருக்கி
    மும் மண்டலம் கடந்து
    முறையாய் உயந்து ஆக்ஞயில்
    முத்தீயாய் ஒளிந்து தன் ஒளிகாட்டும்
    இலக்கணம் தந்தவர் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
       ஆன்ம சித்தி பெற
       வழி செய்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
     தன் காயத்தை திரியாக்கி
     காயத்திரி தந்தவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
     தன் நலம் கருதா ஆத்ம நலம் கருதி
    வழி காட்டியவர்கள் சித்தர்கள்

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
    தாம் அடைந்ததை மற்றவர்களுக்கு
    காட்டி அருளியவர்கள் சித்தர்கள்
 
இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
  அகத்தியன் தன் சக்தியால் படைத்தார் புத்தியை
  போகன் தன் சத்தியால் படைத்தார் சிவஞானத்தை
  கோலமாமஹரி தன் சக்தியால் படைத்தார் சக்தியை
  வால்மீகி தன் சக்தியால் படைத்தார் இராமனை
  வியாசர் தன் சத்தியால் படைத்தார் கிருஸ்ணரை
  வேதமே அதனுள் அடக்கிட்டார் வியாசர்
  இத்தனையும் சித்தர்கள் படைப்பு

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
     அத்தனையும் நமக்குள் இருக்கு
     இராமரும் நானே இராவணனும் நானே
     பாண்டவரும் நானே கௌரவரும் நானே

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
 உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
       நமக்குள் நடக்குதடா இராமாயண யுத்தமும் பாரதப் போரும்
       அறியமால் திரிகின்றோம் மாயையின் பிடியில்
       நடப்பதும் நம்முள்ளே நடத்துபவனும் நம்முள்ளே
       அறியாமல் அலைந்து திரிகின்றோம் நாங்கள்
       இத்தனையும் சித்தர்கள் படைப்பு

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ
        படைத்தவனை விட்டு   படைக்கப்பட்டதை நாடி பெற்றது என்ன?
        கண்ணீரும் கம்பலையும் கிடைத்தா சித்தி ?
        நம்முள் உள்ள புத்தி
        அதை அடைந்திட்டால் சித்தி

இல்லறம் ஏற்று நல்லறம் காத்து
உறவில் துறவை கொண்டனர் சித்தர்கள் ஐஐ

பாடல்:3
                                           நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
     'தேனாக நீ இருந்தால் நாடிடும் தேனீக்கள்
      தேனீயாக நீ இருந்தால் தேடி அலைதிடனும் தேனுக்கு
      தேனீயா? தேன் என்பது அவர் அவர் விதிப்பயன் தானே
      யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலமே சிந்திக்கும்
         'உன்னுள்ளே ஊறி பெருக்கெடுத்து ஓடுதடா தேதாறு
     அதை நீ அருந்திட்டால் பெற்றதடா பெறு
     அதை வேறொருவர் அருந்திட்டால் இழந்திட்டாய் பெற்ற பேற்றை
     அத்தனையும் அவர்அவர் விதிப்பயன் தானே
     யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
   'உத்தமனை உருவாக்க இறைவன் தந்த வரத்தை
   காமத்தின் விழைவால் நிலைகெட்ட மனிததை உருவாக்கி
   அழியுதடா உலகம் அதற்காரணம் நாமென அறிந்து
   பிராயசித்தம் தேடடா இவ் உலகினிலே அத்தனையும் விதி
   யாரை விட்டதடா விதி'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'
   'உன்னுள்ளே இருக்குதடா எல்லாம்
    அதை அறிந்தவன் வாழ்கையில் உலகமே அடிமை
    ஐந்து உன்கையில் அடங்கிட
    ஏழையும் யாண்டு மூன்றினில் உயர்ந்து
    ஆறாறும் அடங்கிடும் உன் உயிரினில்
    பெற்றிடுவாய் திருவடிப்பேறு'

'நிலைகெட்ட மாந்தரே கொஞ்சம் சிந்தி
சிந்தித்தால் உலகமே சிந்திக்கும்'

 பாடல்:04
       உலகத்தை ஆளும் ஆத்மசக்தி

 உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
 எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            புத்தி விளிப்பே சித்தத் தெளிவு
            மனஒருமைப்பாட்டின் விளிப்பே தியானத்தின் அடிப்படை.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            தியானமே அதன் விளிப்பு.
            அதுவே ஆறாதாரத்தின் உச்ச நிலை.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
            மூலாதாமே அதன் முளை சகஸ்ரதாரமே அதன் விருட்ச்சம்
            சுழு முனையே அதன் வளி ஆறாதாரம் அதன் சத்தி விளிப்பிடம்.
 உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
 எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
             சகஸ்ரதாரமே அமுதசுரபி.
             அதுவே நாம்மருந்தும் பிறவாமையின்அரு மருந்து.
             அதை அறியார் படைப்பின் தத்துவம் உனரார்.
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி.
             அதை அறிய குருவருள் தேவை.
             குருவருள் திருவருள் -அதுவே அவனருள்
உலகத்தை ஆளும் ஆத்மசக்தி
எம்முள் உறங்கிக்கிடக்கும் குண்டலினி சத்தி

பாடல்: 5
  பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு...........  

 'பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு
                மங்களம் கொடுக்கும் நன்னாள்
மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு
              மாங்கலியதாரணம் செய்த பொன்னாள்
காஞ்சி மாவடியில் நிஸ்டையில் ஆழ்ந்த பார் வதிக்கு
              இழந்த பழமையை மீழப்பெற்றுத் தந்த நன்னாள்
ஈசனின் ஆக்ஞ்யில் எரிந்த மன்மதனை இரதிக்கு
              காட்டியருளிச் செய்த பொன்னாள்
கிருதயுகத்தில் கோன் இரகுவால் மனுக்குல் உய்வதற்கு
              அரக்கரனை அழித்த நன்னாள்.
நார் அயன் உள்ளம்  திருமகளுக்கு
               உருத்தான பொன்னாள்
படைபதிபதி நா வாக்தேவிக்கு
              உருத்தான நன்னாள்
இந்திராணி இந்திரதிபதிக்கு
             கிடைத்த பொன்னாள்
மயிலையில் ஞான சம்பந்தன் பூம்பாவைக்கு
            உயிர் கொடுத்த நன்னாள்.
அன்னாள் எனக்கு பொன்னாள்
           என் அம்பிகை புன்னையம் பதி மாரிக்கு தீர்த்த திருநாள்
அன்னாள் என் மகாயாக தீட்ரசைப் திருப்பெருநாள்.
            அன்னாள் மங்கையருக் மாங்கல்லிய விதமேற்கும் பொன்னாள்'

                                                                    'மட்டூர் புன்னையம்பதியான்'
பாடல்: 06
நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்..............................!

'நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்
அன்நாள் ஜேசு பிறந்த பொன்நாள்
மனுக்குலம் மீட்சிபெற வித்திட்டதிரு நாள்
அன்நாள் உலகுக்கு ஒளி பிறந்த பொன்நாள்.
ஆஜாரகத்துக்கு அச்சுறுத வித்திட்ட திரு நாள்
மாதாவின் விசுவாசத்தின் சாட்சிய திருநாள்
சூசையப்பரின் மாட்சிமை  திருநாள்
கடவுனின் மாட்சிமை நிலை நிறுத்திய திருநாள்
அதர்மம் ஓங்கும் போது தர்மத்தை காக்க
அவதாரம் எடுப்பேன் என்ன கீதையில் கண்ணனின்வார்த்தை பலித்த நன்நாள் அன்நாள் எல்வோருக்கும் பெரும் திருநாள்'.

'வார்தை மாமிசமாகி உன்னுடனே வாசமாக இருந்தார் இறைவன்.
         அன்பின் சொருவம் அவர்
ஆடுகளை மேய்ற்கும் ஆயனவர்
         உண்மையின் இலக்கணம் அவர்
 சித்தர் குழாமில் ஒருவர் அவர்
         அவர் பாதை விடுதலை அளிக்கும்' .
'ஏழ்மையில் பிறந்து எழிமையில் வாழ்து
தனக்கென வாழாது உலக்கு வாழ்ந்த
மனித உருவில் பிறந்த இறைவன்
அவன் வாழ்ந்த வாழ்கையும்
அவன் போதித்த போததையும்
மனுக்குல விடுதலை
அதை அறிந்து உணர்ந்தால்
அதுவே அவனுக்கு செய்யும் காணிக்கை'

பாடல்: 7
நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம்....................

'நோய்யற்று வாழ்வது குறைவற்ற செல்வம்
வாழ்கையின் பயனை அனுபவிக்கத் திட்டம்
வகுத்தனர் சித்தர்கள் தந்தனர் வாழ்வியல்
பற்றியே வாழ்ந் திட அற்றிடும் நோய்கள்  உற்றது வீடு.
கூட்டினில் உள்ள குருவியை விட்ட பின்
பட்ட கவலையின் பயன் என்னவோ !
கூட்டி னில் இருக்கையில் பெறு பெற்றவன்
பாக்கி சாலிகள் அல்லவோ!
    காலையும் மாலையும் வருவது இயற்கை
இன்பமும் துன்பமும் வருவதும் இயற்கை
துன்பத்தில் கவலை இன்பத்தில் மகிழ்ச்சி
இரண்டும் நிலைத் திருப்ப துன்டோ !
அவர் அவர் செய்யும் வினையின் பயனென
அறியாமல் இருக்க மாயையின் சதி அது வல்லவோ
பிரபஞ்ச படைப்பின் தத்துவம் அதுவல்லவோ!
இவையெல்லாம் மாயையின் விளைவென
  அறிந்தால் விடுபட வழி தேடிட விளைய
குருவருள் கிட்டிட திருவருள்  கிடைத்திடும்
அதுவும் அவன் தலை விதி அல்லவோ!'
'தாரமும் குருவும் தலைவிதி என விதித்திட்டனர் முன்னோர்'.

'மட்டூர் புன்னையம்பதியான்'
பாடல்:8
     மனத்திதுள் மறைந்தது புத்தி.............

' மனத்திதுள் மறைந்தது புத்தி
 ஆதற்கு காரணம் அஞ்ஞானம்
ஞானத்தை மறைத்தது நாம் செய்த வினை
வினையின் பயனே நல்லது தீயது
புத்தி விளிப்பே சித்தத் தெளிவு
    சித்தத் தெளிவே ஆத்மாவின் விளிப்பு
ஆத்மாவின் ஒளி யில் ஒளிதல்
அதுவே பிறப்பின் அர்த்தம்
   இத்தனைக்கும் காரணம் அறியாமையின் சதி
அத்தனையும் நாம் செய்த கறுமாவின் விளைவு
   அதற்கு காரணம் மனத்திரம்மில்லாமை
மனத்திரமடைய வைராக்கியம் தேவை
  வைராக்கியமடைய குருவருள் தேவை
குருவருளே திருவருன் அதுவே அவன் அருள்'

'புன்னையம் பதியான்'
பாடல்: 9  
சித்தம் தெளிந்தவன் சித்தன்

சித்தம் தெளிந்தவன் சித்தன்
அவன் போக்கு சிவன் போக்கு
 அவனே சிவசித்தன்.
 அவன் சிந்தையில் உதித்தது சித்தவைத்தியம்
 இதுவே எமது உடலுக்குஆதார மூலம்.
 மனிதனைப்படைத்த இறைவன்
  அவன் உடலினின் விளையும் ஊறினை அறிந்து
  அதை தடுக்கும் மூலிகை படைத்தான்.
 படைத்தவன் படைப்பின் தத்துவம் அறிய
  சித்தம் தெளிய வைத்தான்.
 அவனே அவனை அறியவைக்கும்
  பரம இரகசியம் இதுவென அறிந்தால்
  அவனே இறைவன்'
                                               'மட்டூர் புன்னையம் பதியான்'