Sunday, January 14, 2018

வித்தியாமாயை, அவித்தியாமாயை
                   மாயை இருவகைப்படும் அவை வித்யாமாயை, அவித்தியாமாயை  எனப்படும். வித்திய மாயை என்பது  உலகியலில் ஒட்டாமல் ஒட்டி வாழ்வதே  சேற்று மீன் சேற்றில் ஒட்டாதது போலு வாழ்வதே. பரமஹம்சர்கள்  ஹம்ஸம் பாலையும் நீரையும் கலந்து கொடுத்தால் பாலை மட்டுமே  அருந்த வல்லது.  அதுபோல வாழ்பவர்கள் பரமஹம்ஸர்கள். அதுமட்டுமல்ல சக்கரையில் மணல் கலந்தால் எறுப்பு சக்கரையை மட்டும் பிரித்தேடுத்து விட்டு மணலை விட்டு விடும். இறைவனின் படைப்பே  எமக்கெல்லாம ;வழிகாட்டி அல்லவா எப்படி இயற்கையில் மறைபொருளாய் வைத்து  இருக்கின்றான் இறைவன் வாழ்க்கையின் தத்துவம். இயற்கையை நேசித்தான் சித்தன் அதன் வழிசென்று சித்தம் தெழிந்து இறைஅனுபூதி அடைந்து ஆதிகுருவின் அனுக்கிரகம் பெற்று எமக்கெல்லாம் வழிகாட்டியனான். இயற்கையை ஆராய ஞானம் தேவை. அஞ்ஞானம் நிலையில்லா உலகியலில் தற்காலியமாக தோன்றி தோன்றி மறையும் இன்பம் பெறும் வழியையே காட்டும். அப்படி வாழ பணம் தேவை அதை பெறும் வழிகள்  மானித நலன் என்ற போர்வையில் ஏமாற்றும் வழிகள்  மூலம் பணம் சம்பாதிப்பே நோக்கம். நலநோம்பா உற்பத்திகள் அதாவது தேவையை அதிகரித்து விரைவான உற்பத்தி, வைரஸ்ச உற்பத்தி செய்து மருந்து கண்டு பிடிப்பு என்ற போதாவில் எதிர்மறை எண்ணங்களால் மருந்து உற்பத்தி, மனிதனை ஏமாற்றும் விளம்பர யுத்திகள். இவைகளே அவித்தியாமiயை. தூமரை இலையில் தண்ணீர் போல ஒட்டாமல் ஒட்டி வாழ்வதே வித்தியாமாயை. அணுவை கண்டு பிடித்தன் நோக்கம் நியுத்திறன் ,புரோத்திறன்  ஆகிய மூலக்கூறுகள் இருக்கின்றது அவை ஒன்றுடன் ஒன்று மோதுவதால் இலத்திறன் உருவாகின்றது. என கண்டுபிடிக்கப்டு மனுகுலநன்மைக்கே நேர் எண்ணச் செயல்பாடுகள் இன்று ஆணவம் மேலாகி எதிராண எண்ணத்தில் அணுக்குண்டுகளாக மாறி உலகமே அழிவுக்கு இட்டுச்சென்றுள்ளது. சித்தர்களின்  அணுவின்; மெய்ஞான வடிவம் சோமஸ்கந்த முகுத்தம். பஞ்சபூத செல்பாட்டின் வடிவம் நடராஜ வடிவம். தில்லை நடனம் எமது இதயதுடிப்பு திரு சிற் அம்பலம் திரு என்பது இறைவன் சிற் அம்பலம் என்பது சிறிய வெற்றிடம் (ஆகாசம்.)  பிரணவாய்வின்  துடிப்பு  உலகின் இதயம் தில்லையமபலம். ஊலக நாதம் ஓம்காரம் பிரணவம் அதன் வடிவம் விநாயகர் இவ்வாறு அர்தமுள்ளதாக வகுத்து தாம் பெற்ற தாய் சக்தியை கொடுத்தவர்கள் சித்தர்கள்;. அப்படிப்பட்டவர்கள் ஒருபோதும் இயற்கையை அழிக்க அனுமதிக்க மாட்டார்கள். அது அவர்களின் சாபத்துக்கு இடமாகும்.

ஓம் ஸ்ரீ சற்குரு அகத்தீஷாய நம:

Saturday, January 13, 2018

பூக்கள் அழகானவை பூக்களைத்தேடி பல பூச்சிகள் செல்லுகின்றது. அதில் சில மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றது இன்னும் சில தாங்கள் தேனைக்குடித்து மகிழுகின்றது. இன்னும் சில தனது எதிர்கால தேவைகருதி சேகரிக்கின்றன். . சில பறவைகள் தானது உறைவிடமாக்கிக் கொள்கின்றது அம் மரங்கள் எதையும் இன்னும் அனுபவிக்க வில்லை. அது தனது உணவு உற்பத்திக்கு சூரிய ஒளியினையும் மனித கழிவான கானீர் ஓட்சைட்டை உட்கொன்டு மனித வாழிவுக்கு அசியமான உயிப்பு வாயு ஒட்சிசனை வெளியிட்டு  உலகை காக்கின்றது. அதனாலேயே அதை ஆதிமனிதன் கடவுளாகக் கண்டான். இவ்வாறு தனக்கென வாழாது மற்றவர்காக வாழ்ந்த மனிதனை மாந்தர் கடவுளாகக் கண்டனர். அந்தவகையில் தோன்றியவர்களே குருதேவர் ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்சர், ஸ்ரீ ரமணமஹரிஷி, புத்தர், ஜெசு, முகமது நபி போன்றோர். தன்னலம் கருதாது பிறர்நலம் கருதும் மனிதகளை காண்பது அரிது. ஒரே எண்ணம் கொன்டவர்கள்தான் ஒருகூட்டமாக இருப்பர்கள் அவர்கள் செல்பாடுகளும் ஒன்றாகவே அமையும். துறவிகளுடன் கூடும் கூட்டம் துறவை அடைய திறவுகோல் தேடும் நபர்களாகவே இருப்பர். அவர்களின் தகுதி அறிந்தே குரு படிப்படியாக துறவின் திறவுகோலைக் கொடுப்பார். அந்த வகையில் குருதேவர் இல்லறத்தாருக்கு ஒருவிதமாகவும் பிரகச்சாரிகளுக்கு ஒருவிதமாவும் உபதேசம் செய்து தகுதிக்கேற்ப துறவின் திறவுகோலை கொடுத்த பெருமைக் உடைவர். அதனாலேயே  வாழ்க்கைத்தத்துவம் அறிய குருவின் துனை தேவை.

Monday, January 8, 2018

இறைவனிடம் பக்தி கொன்டவன் பத்தன்  அவன் மூன்று வகையில் அமைவான்  விரதத்தை அனுட்டிக்கும் போது  தீவிர பக்தன் நீரையும் மிளகையும் மட்டும் அல்வது நீரையும் துளசியையும்  ஒருதடவை உட்கொன்டு  இறைவன் மீது தீவிர பத்தி  வைராக்கியத்தில்  மலங்களிலிருந்து தனித்து விளிப்புடன்  ஞானப் பசியில் இருப்பான். இவன் முதல் வகையானவன். அடுத்தவன் பால்பழங்களை உண்டு  முதல் வகையை ஓத்த செயல்பாட்டில் இருப்பான்.  இவன் இரண்டாவது வகையைச் சேர்ந்தவன். அடுத்தவன் பலகாரங்களை உட்கொன்டு விட்டு மீதியை விரதம் முடிந்த பின் உண்ண பாதுகாத்து வைத்திருப்பான் இவர் எப்போதும் இறைவனை அடையாத போகியாவான். இவன் மூன்றாவது வகையாகும். ஒரு வேளை உண்பவன் யோகி , இரு வேளை உண்பவன் போகி, மூன்று வேளை உண்பவன் ரோகி என்று சித்தர்கள் கருதுகின்றனர். நாம் எந்த வகையை செந்தவர் என்பதைப் பொறுத்தே பலன்.
வுpரதம்  என்பது  தனித்திரு, விளித்திரு, பசித்திரு  தனித்திரு என்பது மும் மலங்களில்  இருந்து விடுபட்டு தனித்திரு அவை எம்மை அனூகாது இருக்க விளித்திரு  அஞ்ஞான இருளை போக்கும் ஞாமாகிய ஒளியை பெறும் பசியில் இருபதே  என்பதே  பொருள்.  பெரும்பாலானேர் எப்போது விரதம் முடியும் என்று காத்திருப்பதை என்ன சொல்கின்றீர்கள்? அதுமட்டு மல்ல விரம் முடிந்ததும் கசாப்புக்கடைக்கு சென்று வந்து இடும்பன் பூசை செய்பவர்களை பற்றி என்ன நினைகிறீர்கள்? தேவை நிறை வேறும் வகையில்  புலால் விரதம்  தேவை நிறை வேறியதும் விரதம் கைவிடல். இது போன்ற செயல்களால்  எதிரான விளைவுகலே அதிகரிக்குமே தவிர வேறுரொன்றும் இல்லை. இறைவழிபாட்டுக்கு முதலில் வைராக்கியம் தேவை  வைரக்கியமே தியாகத்தை ஏற்படுத்தும் தியாகமே இறைபத்திக்கு வழிவகுக்கும்.எவன் ஒருவன் உலக இன்பத்திலிருந்து விடுபடுகின்றானோ அவன் பிறப்பிலிருந்து விடுபட்டு பிறப்பிறப்பின்மையை அடைகின்றான். துன்பங்களே  நமக்கு நல்ல வழிகாட்டி அதை அனுபவிப்பதே விடுதலை. துன்பங்கள் நாம் செய்தவை அதனாலேயே அதை செய்வினை என்கின்றோம். அதை அனுபவிக்க வைப்பவர் 'சனீஸ்வரா'; அவர் எமது சாதக நிலையில் பலதடவைகள் வருவர் அட்டம, கண்ட, ஜென்ம, ஏளரை என  பல தடவைகள் வருவர். ஓவ்வொரு தடவை முடிவிலும் அனுபவித்ததற்காக நன்மையே செய்வார்.  ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று தடவைகள் ஏளரைச்சனி நம்மை  புடம் போடுகின்றது.

Saturday, January 6, 2018

ஆலயங்களில் பயன் படுத்தப்படும் அதிகமான பொருட்கள் உலோகத்திலானவையாக இருப்பதன் காரணம் வெங்கலம், செப்பு, தங்கம், வெள்ளி, பித்தலை போன்ற உலோகங்கள் மந்திர உச்சாடனத்தில் இருந்து வரும் ஒலி அலைகளை பெற்று மீண்டும் பிரதிபலிக்க வல்லவை. மந்திர ஒலிகள் பிரபஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை அதனால் ஒலிகளை வெளியிடும் போது ஆராய்ந்து அது நோராண எண்ண அலைகளை எற்படுத்தக்கூடியவற்றையே வெளியீடு செய்ய வேண்டும். எதிராண எண்ண செய்யாட்டையும் பிரபஞ்சத்தில் ஏற்படுத்தி விடும். அதனாலேயே ராகம் தாளம் என்பவை பதஞ்சல் மஹரிஷிகளினால் ஏற்படுத்தப்பட்டது. இறைவன் மந்திர, தந்திர, யந்திர வடிவினன். அதால் சேமித்து வைத்த சக்தியை பெற ஆண்கள் மேலங்கி இன்றி ஆலயத்தினுள் செல்ல வேண்டும். எப்போதும் வீடுகளிலோ ஆலயங்களிலோ எவர்சிலிவர் என்று சொல்லப்படும் கலப்பு உலோகத்தை பயன்படுத்து வதினால் எதிராண விளைவுகளை சப்பாதிக்க முடிவதுடன் 'ஒயில்' என்னும் தாவர எண்ணையையும் பயன்படுத்துவதை தவிப்பது உத்தமம்.
ஓம் ஸ்ரீ சற்குரு அகத்தீசாய நம:
ஆலயங்களுக்கு தோய்த்து உலர்ந்த வேட்டி உடுத்து சென்று ஆலய பிராகாரத்தின் உள் மேலாடை களைந்து ஆண்கள் செல்வதின் காரணம் ஆலய பிராகாரத்தில் செய்யப்படுகின்ற மந்திர உச்சாடனம் அக்னி காரியங்களில் இருந்து வரும் மந்திர மந்திர ஓலிகளின் அலைகள் மனித மின்காந்த அலைகளில் கலப்பதுடன் கோம புகை உடலின் தோல்மூலம் உடலில் கலந்து ஆரோக்கியம் பெறுவதுடன் நேரான எண்ணங்களை உருவாக்கும்வல்லமையும் அதற்கு உள்ளதால் தோய்த்து உலந்த கலாசார உடைகளை அணிந்து செல்வதே உத்தமம். சர்வதேச தினம் அனுடிப்பது பெருமை அல்ல அது எமது கலாசார வறுமையின் துலங்கலே 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பதே எமது பண்பாட்டு விழுமியம்

Thursday, January 4, 2018

மட்டக்களப்பு அரசடித்சந்திப்பிள்ளையார் ஆலய வரலாறு

இவ் வாலயம் 1945 ஆம் ஆண்டு தாமரைக்கேணியைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி என்பவரும் வீரபத்திரரும் சேர்ந்து அரச மரத்தின் அடியில் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்ததின் விளைவாகவே ஆரம்பிக்கப்பட்டது. இக்காலத்தில் அரசமரத்தின் கீழ் புத்தரை வைத்து விடுவார்கள் என்று அஞ்சி அக்காலத்தில் சந்திக்கு முன் இருந்த அமரர் திருஞாவுக்கரசு என்பவரின் ஆலோசனையின் பேரில் மரத்தடியில் பலகையால் ஆன பந்தல் அமைத்து மரத்தில் இருந்த பொந்தில் பிள்ளையாசிலையை வைத்து தினமும் வீரபத்திரர் காலையில் வந்து நீரினால் அபிசேஷிகம் செய்து திருநீறு பூசி சந்தனத்தில் திலகமிட்டு செல்வது யாவரும் அறிந்ததே அப்பகுதியில் வாழ்தவர்கள் வெள்ளிக்கிழமையில் பொங்கி படைத்து வழிபடுவது வழமையாகும்.பிள்ளையாரை சந்திவழியாக செல்லும் அனைவரும் எந்தநேரத்திலும் தரிசணம் செய்து வழிபடும் தெருப்பிள்ளையாரக இருந்தார். அவரை வழிபடும் அடியார்கள் எண்ணில் அடங்கா விக்னம் தீக்கும் விக்னவிநாயகர் அல்வா அவர்
ஆரசடி சந்தி மூன்று வீதிகள் உள்ளடக்கிய முற்சந்தியாக முக்கோண பகுதியில் பெருத்து வளர்ந்த பெரிய அரசுமரம் நாலாப்பாகத்திலும் கிளைவிட்டு வளர்ந்த சந்தியே பரவிய மரமாகக் கானப்பட்டது .வீதி அபிவிருத்தி செய்வதற்காக பாரளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அரசியல் அதிகாரியுமான அமரர் ராஜன் செல்வநாயகம் மரத்தை வெட்டி சந்தியில் சுற்று வளைவு ('ரவுன்ட வோட்' )ஒன்றை உருவாக்கி நாற்சந்தியை ஒன்றை ஏற்படுத்தி பிள்ளையாரை வெயிலி வீதியில் அமைந்திருந்த 'ராயூ கொட்டேலுக்கு' முன் இருந்த மாமரத்தின் அடியில் வைத்து விட்டனர் 'பொது வேலைத்தினைக்களத்தினா';அப்போது தெருநாய்கள் சலம் கழிக்கும் கல்லாக மாறவே. ஓருநாள் பாதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பொது போக்குவரத்து பேரூந்து அதாவது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சந்தியில் சறுக்கியதன் பயணாக பயமடைந்த பிரதேசத்தை சேர்த அமரர் ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி அவர்கள், அமரர் கற்பகம் தம்பிராஜாஅவர்கள், அமரர் தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு( பொதுவேலை தினைக்களத்தில் லிகிதராக பணிபுரிந்தவர்) ஆகியோர் பொது வேலைத் தினைக்களத்துக்கு சென்று பிரதான பொறியியளாளரை சந்தித்து சந்தியில் கோயில் அமைத்துத் தருமாறு கேட்டதன் பயனாக சூறாவளின் பின்னர் ஆலயம் அமைத்து ஆவணி ஓணத்தில் முதலாவது கும்பாவிஷேகம் அமரர் பிம்மஸ்ரீ வியாகரண சிலோன்மணி பூரண தியாகராஜ குருக்களால் செய்யப்பட்டது.
அதன்பின்னர் அமரர் சுப்பிரமணியம் அருளானந்தம் அவர்கள் பிளையாருக்கு வருகின்ற உண்டியல் காணிக்கைகளை சேர்த்து ஆலய பூஜைக்கு நிரந்தர பூசகர் ஒருவரை நியமணம் செய்து காலை மட்டும் பூஜை செய்வதுடன் செவ்வாய் வெள்ளிகளில் பிற்பகலில் பூஜை செய்து வந்துடன் ஆலய திருப்பணி வேலைகளும் செய்து இரண்டாவது மஹா கும்பாவிஷேகம் பிம்மஸ்ரீ க. மகேஸ்வரக் குருக்களை கொண்டு கும்பாவிஷேகம் செய்வித்தார்.
தற்போது பல அன்பர்களின் அயராத முயற்சியால் புணராவத்தணம் செயப்பட்டு மூன்றாவது முறையாக மஹா கும்பாவிஷேகம் செய்பபட்டுள்ளது.சந்தியில் இருந்து கொண்டு தம்மை நாடிவரும் அடியாருக்கு வேண்டும் வரம் அருளி வருகின்றார். 'மூர்த்தி சிறிதானாலும் கீத்தி பெரிது' இவ் ஆலயத்தில் ஆரம்பகாலத்தில் அமரர் வீரபத்திரரின் பக்தியும் வைராக்கியமும் அயராத சேவையும் என்று மறக்கப்படவோ மறைக்கப்படவோ கூடாது. ஆவரை அடியேன் நன்கு அறிவேன். ஏனெனில் பிளையார் எனது வீட்டு கதவு திறந்தால் முதலில் தரிசிப்பது அவரையே எனது நன்பன் திரு தம்பிராஜா ஈஸ்வரராஜா அமரர் வீரபத்திரர் வரமுடியாத சந்தர்ப்பத்தில் அவரும் பூஜை செய்ததை நானும் அறிவேன்.
இவ்வாலயம் இன்னும் ஆகமமுறைக்கு உட்டாத கட்டட அமைப்பை கொண்டாலும் பூசை முறைகள் ஆகமுறைக்குட்பட்டே நடைபெறுகின்றது. இப்போது எப்போதும் தரிசணமாக ..இருந்த நிலை மாறி பூசை நேரம் மட்டும் தரிசணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பூட்டப்பட்டால் இறைவனை வழிபடக்கூடாது என்பது விதி