Monday, February 26, 2018

பில்வம்
சிவமுர்தியின் இச்சா ஞான கிரியா சத்திகளாக பூமியில் ஆன்மாக்களின் பாவங்களை போக்க அவர்அருளால் கோமேயத்தில் உற்பத்தியானது. இதனை பூசிப்போர் இம் மரமுலத்தை அடைந்து(விரதசீலராய்) சங்கல்பம் செய்து எட்டு திக்குகளிலும் பசுநெய்  விளக்கிட்டு அபிசேகம் முறைப்படி செய்து வஸ்திரம் தரித்து மலரிட்டு துபம்காட்டி பின்வரும் அர்ச்சனை
1. ஒம் .வில்வ விருஷே நம்
2 ஒம் நிர்பீஜ நம:
3 ஒம் கோமயோற்பவா நம:
4 ஒம் .சங்சராந்த நம:
5 ஒம் சுத்தபதுமப்பிரிய நம:
6 ஒம் வியாத நம:
7 ஒம் புட்டாதிக நம:
8 ஒம் சேஷத்திரஞ்ஞ நம:
9 ஒம் வரதா பீஸ்ட நம:
10 ஒம் புருஷார்த்த சித்திதா நம:
11 ஓம் சிவப்பிரிய நம:முதலிய நாமங்களைக் கொன்டு பூசிக்கச் சகல சித்தியும் பெறுவர்.  ;   வுpல்வம் மும்மத்தை போக்கவல்லது. இதன் இலைகளை பறிக்கும்போது பளுதற்றதாக இருப்பதுடன் சிவசிந்தையுடன் முவிதள்கள்பிரியாதவகையில் பறித்தல் வேன்டும். மாலையில்தளம் றித்தல் உத்தமம்மல்ல. வில்வாஸ்டகத்தில் ஒர்வில்வம் சிவாற்பனம் செய்வதனல் உண்டானபலனகள் ; பற்றி சங்கரர் மிகதெளிவாக பாடியுள்ளா ஒர் வில்வதளத்தை சிவாற்பனம்செய்தால் பின்வரும் பலன்கனை பெறலாம்.
1 .முன்று ஜன்மங்களில் செய்தபாவம் அறும்
2 .
3 .
4 .ஸாளக்ராமம் வழிபட்ட பலன் பொறலாம்
5 .அச்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.
6 .கோடியக்ஞபலன் பெறலாம்
7 .காசிசேஷ்த்திர காலபைரவரை வணங்கிய பலனை பெறலாம்.
8 .உமாமகேஸ்வரருடன் சகலதேவர்களையும் வழிபட்டு சகல பாபங்களையும் போக்கியபலன்களையும் பெறலாம்.
வில்வாஸ்டகம்

பில்வாஷ்டகம்

த்ரிதளம் த்ரிகுநாகாரம்
த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

த்ரிஷாகைஹ்: பில்வ பத்ரை
ஷ்
அச்சித்ரைஹ்: கோமலைஷ் சுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

கோடி கன்யா மஹாதானம்
தில பர்வத கோடயஹ:
காஞ்சனம் சீலதாநேன
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

காஸிஷேத்த்ர நிவாசம் ச
காலபைரவ தர்ஷனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா
நிராஹாரோ மஹேஷ்வரஹ:
நக்தம் ஔஷ்யாமி தேவேஷ
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

ராமலிங்க பிரதிஷ்டா ச 
வைவாஹிக க்ருத்தும் ததா
ததாகானிச சந்தானம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

அகண்ட பில்வபத்ரம் ச
ஆயுதம் சிவ பூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேன
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

உமயாசஹ தேயேஷ
நந்தி வாகனமேவ ச
பஸ்மலேபன சர்வாங்கம் .
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

சாலக்ராமேஷு விப்ராணாம்
ததாகம் தக்ஷ கூபயோ
க்ன கோடி சஹஸ்ராஷ் ச
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

தந்திகோடி  ஸஹஸ்ரேஷு  
அஷ்வமேத  சதக்ரதௌ  
கோடி கன்யா  மஹாதானம்  
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

பில்வாநாம்  தர்ஷனம் புண்யம் 
ஸ்பர்ஷனம் பாப நாஷனம்
அகோர பாப சம்ஹாரம்  
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

ஸஹஸ்ர வேதபாடேஷு
ப்ரம்மஸ்தாபன முச்யதே
அநேக வ்ரத கோடீனாம்
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

அன்னதான ஸஹஸ்ரேஷு
ஸஹஸ்ரோப நயனம் ததா
அநேக ஜன்ம பாபாநி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

பில்வாஷ்டகம் இதம் புண்யம்
ய: படேத் சிவ சன்னிதௌ
சிவ லோக மவாப்னோதி
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

வில்வாஸ்டகம் தமிழில்


மூன்று தளம் மூன்று குணம் மூன்று விழி மூவாயுதம் மூலமென கோலம் தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
முப்பிறவி துயர் நீக்கும் முப்பிரிவாய் விளங்கிடுமே புனிதமெல்லாம் அள்ளித்தரும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
கோடி கோடி கல்யாணம் செய்து வைக்கும் இனிய பலன் குறைகளின்றி தந்திடுமே
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
காசி ஸ்சேஸ்த்ரம் வசிப்பதனால் கால பைரவ தரிசனத்தால் வரும் பலனைத் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
பூச்சிகளால் வீணாகா அதிசயமாம் வில்வதளம் மங்களமே தினமருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்.
திங்கள் எனும் இந்துவாரம் விரதமுடன் பூஜை செய்ய ஏற்ற தளம் வில்வதளம்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்
வாஜபேயம் சோமயாகம் வளர்க்கின்ற யாக பலன் அத்தனையும் தந்தருளும்
ஓர் வில்வம் சிவார்ப்பணம்
கயைப்பிரயாகை யாத்திரையை செய்வதனால் வரும் பலனை தந்திடுமே வில்வதளம் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
சாளக்கிராமம் வணங்கும் பலன் , சான்றோரை வணங்கும் பலன் தந்தருளும் எந்நாளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
கோடி ஆனை தான பலன் அஸ்வமேத யாக பலன் ஆயிரமாய்த் தந்தருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
காண்பதுவும் புண்ணியமே தொடுவதும் புண்ணியமே கனிவருளும் நெஞ்சினிலே ஓர் வில்வம் சிவார்ப்பணம்
பாடசாலை ஆலயங்கள் பல ஆயிரம் அமைப்பதனால் வருகின்ற பலன் அருளும் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
அன்னதானம் பல ஆயிரமாய் செய்கின்ற ஜென்ம பலன் அளித்திடுமே ஓர் அர்ச்சினையில் ஓர் வில்வம் சிவார்ப்பணம்
வில்வாஸ்ட்டகம் தன்னை சிவனருகில் உரைப்போர்க்கு செல்வமெல்லாம் கூடிவரும், சிவனருளும் கைகூடும்.
 பில்வம் மருத்துவகுணம் உடையது வெப்பத்தினால் உன்டாகும் நோய்களுக்கு அருமருந்து. தளமத்தினை நிரில்லிட்டு உறவைத்து அருந்தினால் உடல்உஸ்னம் குறையும். புழத்தை தேன் சேர்த்து உண்;டால் வய்றில்யுள்ள குடல்புண் குணமடையும். இது போன்று வேர் பட்டை பொன்றவற்றுக்கும் மருத்துவகுணம் உண்டு. பில்வம்          பஞ்சவபில்வங்களில் ஒன்றகக்ருதப்hடுகின்றது.பஞ்சவில்வுங்களானவை பில்வம் விளா நெச்சி முட்கிளுவை மாவிலங்காகும். இவ்பில்வங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சித்தல் ஜம்புலன்களால்உண்டானபாவங்களை நீக்கி ஜம்புலக்கட்றறும்.அத்துடன் மும்முர்த்திகளை வழிபட்ட பலனையும்பெறுவர்.ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களை நீக்கி  ஆன்மவிடுதலையானபிறப்பின்மைக்குவழிவகும்.;


ஆன்மாவில் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் ஒர் மனோ சக்தி குண்டலி சத்தி



 குண்டலி சத்தி    ஆன்மாவில் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் ஒர் மனோ சக்தியாகும். சக்தி எல்லா தந்திரங்களிலும் நடுநாயகமாக விளங்குகின்றது.உளபொருளின் சக்தியே பிரபஞ்ச படைப்பு காத்தல் அழித்தலலுக்குகாரணமாகின்றது;.சக்தியினை உடையபொருட்கள் எல்லாம் அகபுற சக்திகள் ஒன்றே பிராணமும் பிரபஞ்சமனமும் உலகின் அடிப்படை தத்துவமாகும்  தனிநபருக்கு அந்தபிரானம் அல்லது மனம் அடிப்படையானபோது அறியாமையில் சுருண்டு கிடப்பதனால் குண்டலி சத்தி எனப்படுகின்றது. இதனை விளிப்படையசெய்தல் வேண்டும். மனிதஉடலை மன சட உடல் என இரண்டாகபிரிக்கப்படுகின்றது. இதில்சடஉடலில் மேருதன்டத்தின் அடி முனையில் குண்டலி இருப்பதாக கூறுகின்றது. அறிவுமையங்கள் ஆறு இதுபற்றி இனிபார்போம்.  . ;  ஒரு மனிதனின் உடலில் ஆறுஇடங்களில் இடகலை இடம்வலமாமாகவும் பின்கலை வலம்இடமாகவும் ஒன்ரைஒன்று பின்னியதாக செல்லுகினின்றது. இவ்விடங்கனை உடலுக்குரிய ஆதாரங்களாகக்கருதப்படுகின்றப்படுகின்றது.   இவ்ஆறுஇடங்களிலும் நரம்புமண்டலங்கள்கானப்படுவதுடன் ஆறுசுரப்பிகளும் கானப்படுகி ன்றன இவைகளே உடலைஇயக்கும் சத்திவாய்ந்தமண்டலங்களாகும் இதனை ‘ஒளவையாhர்’; ‘விணயகர் அகவலில’; ஜம்புலன் றன்னை யடக்குமு பாயமும் இன.;புறு கருணையு மெனக்கருளி தலமொருமூன்றினந் தந்தெனக்கருளி மலமொரு மூன்றின்மயக்கமு மறுத்தெ ஒன்பது வாயி லொருமந் திரத்தால் ஜன்புறுகதவை யடைப்துங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையை பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கயிலை னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலங் காட்டி முன்றுமண் டலத்தின் முட்டிய தூணில் நாற்ழெற வாயி னால் லுணர்த்திக் குண்டலி தன்னை கூ;று மியல்பை விண்டெழு மந்திரம் விழைவுறச் செப்பி மூலா தார மூண்டெழு கனலைக் காலா லெழுப்பிக் என மிகதெளிவாக கூறியுள்ளார்.ஆறாதாரங்களையும் கீழ் யிருந்து மேலாக பார்கின்றபோது முதலில் மூலாதாரம்  இது புத்தி சித்தி சத்திகளின் நாயகர் விநாயகரின் இருப்பிடமாக கருதப்படுகின்றது

. ஊடலின் முதன்மையான ஆதாரமாககருதப்படுனின்றது. ‘ ஓம்’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது.  அடுத்து ஸ்வர்திஸ்ஷ்டானம் இது ஆறிதல்கள் கொன்டதாமரை உடையதாகவும் சதுரவடிவ்மும் ‘ லம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில்நிலமாகவும் ‘பிரமாவின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு படைப்பு இடம்பெறுகின்றது. ‘ ந’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது .இங்கு விந்துபை அல்லது கருப்பை உள்ளது. அடுத்து மணிப்பூரகம்இது பத்திதழ்கள் கொன்டதாமரை உடையதாகவும். ஆரைவட்டபிறைவடிவமும் ‘ வம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் நீராகவும் காத்தல் கடவுள் ‘விஸ்ணுவின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ம’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது. இங்கு ‘கிட்னி’ சுரபி இருக்கின்றது.  அடுத்து அனா+கதம் இது பண்ணிண்டுடிதழ்கள்;; கொண்டதாமரை உடையதாகவும் முக்கோணவடிவமும் ‘ ரம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் தீயாகவும் அழித்தல் கடவுள் ‘உருத்திரனின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ சி’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது இங்கு ‘ எதைன்’ சுரபி ஜகபச்சுரப்பிஸ இருக்கின்றது  அடுத்து விசுத்தி இது பதிண+யிதழ்கள் கொன்டதாமரை உடையதாகவும். அறுகோணவடிவமும் ‘ யம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் காற்றாகவும் மறைத்தல் கடவுள் ‘பரமேஸ்வரனின்;’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘வ’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது இங்கு ‘தைறோய்ற்’ சுரப்பி இருக்கின்றது.  அடுத்து ஆஞ்ஞை இது இரண்+யிதழ்கள் கொன்டதாமரை உடையதாகவும். வுட்டவடிவமும் ‘ ஹம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் ஆகாயமாவும் அருளல்; கடவுள் ‘சதாசிவனின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ய’ என்னும் மந்திரம் பிரயேகிக்கபடுகின்றது இங்கு ‘பிற்றுறி;’ சுரப்பியும் பின்பகுதியில் ‘பினியன்’ சுரப்பியும்  இருக்கின்றது.        அடுத்து சகஸ்ராகரம் இது ஆயிரம்மிpதழ்கள் கொன்டதாமரை உடையதாகவும் ‘.சுத்தசிவத்தின்;’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு மூளைத்தண்டு உள்ளது. அதன். வட அச்சின் உட்புறம் சுழுமுனை நாடி அமைந்துள்ளது. இதன்அச்சுக்குள் அமைந்த உள்நாடிகளில் அதிபுறம்பாய் அமைந்தது இதுவே இதில் தமஸ் குணம் மேலோங்கி நிற்கும் இதற்கு சிவப்பு நிறம் இதன் உள்ளே பிரகாசமானது ராஜஸ்குணம்மேலோங்கிய வஜ்ரிணி நாடி அமைந்துள்ளது. இதன்உள்ளே சாத்துவிகக்குணம் இயற்கையாக அமைந்துள்ளது வெளியினதும் அமுதம் சுரக்கின்றதுமான சித்திரிணி நாடி உள்ளது. இதனுள்ளே இருப்பது பிரம்மநாடி இது சித்திரிணி நாடியின் பிதான துவாரம் இது கீழ்க்கோடி முனையில் இருந்து அதி உயர் சிவன்வரை சகஸ்ராகரம்வரை வியாபித்துள்ளது. இதனை ‘குலமாக்கம்’ அல்லது ‘லயயோகம் என குறிப்பிடுகின்றனர்.       குண்டலினி சத்தி தொடர்பாக உபநி~த்தில் யோககுண்டலின்யுபநி~த்தில் குண்டலி சத்திரூபம் புத்திமான் அச்சக்தியை எழுப்பிச் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும. அதுஉறையும் இடமான மூலாதாரத்திலிருந்து ஆஞ்ஞை வரை செலுத்துவது சக்திசாலனம் எனப்படுகின்றது. குண்டலினி சத்தி தாமரை நூல் போன்று மங்கள வடிவினள். தாமரைக் ;கிழங்கு போன்ற மூலாதாரத்தைப் பார்த்துக்கெண்டு வாய்னால் வாலைப்பிடித்துக் கோண்டு பாம்புபோல் சுறுண்டுடிருந்தவள் எழுந்தபின் பிரம்மரந்திரம் எனும்உச்சி வரை செல்வாள். ஸாதகன் சுகமாக பத்மாசனத்தில் இருந்து கொண்டு குண்டியைச் சுருக்கி வாயுவை மேல் நோக்கிச் செலுத்தி கும்பகத்தில் மனதை நிறுத்தி வாயுவால் ஸ்வாதி~;டானத்தில் உள்ள அக்னியை ஜ்வலிக்கச்செய்து வாயுவாலும் அக்னியாலும் எழுச்சியுற்ற ;; குண்டலி சத்தி பிரம்மக் கிரந்தியைப் பிளந்து பிறகு விஸ்ணு கிரந்தியையும் ருத்ர க்ரந்தியையும் பிளந்து ஆறு கமலங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் சிவனுடன் உறைவாள் அந்தநிலைதான் உத்தமமானதும் விருத்தியடங்கியதுமான நிலை. எனக்குறிப்பிடுகின்றது.     காமத்தால் ஒருவன் விஷயங்களையும் அதனால் மேலும் காமம் வளர்ந்து மயங்குகிறான் வ்விரண்டில்லிருந்து விலகி மாசற்றபரம்பொருளை நாடுகின்ற போது ஆத்ம நன்மைக்காக மற்ற அனைத்தையும் நீக்கவேண்டும். வாக்கானது எவ்வாறு பரஸ்தானத்தில் முலைத்து பச்யந்தியில் இரண்டிலை விட்டு மத்திமைய்ல் தளிர்து வைகரில் மலர்கின்றது. இது விலோமத்தில்அஸ்மனமாகுகின்றது. அந்த வாக்கைஎழுப்புபவன் உத்தமதேவன் அவனெ நான் இவன் எதிலும் பற்றற்றவன். ஜீவனுக்கு மூன்று நிலை உண்டு விச்வன், தைஜஸன் ,பிராக்ஞன்

இதுபோன்று பரமாத்மாவுக்கும் விராட்,ஹிண்யகர்பன், இசுவரன் என்ற மூன்று நிலைகள் உண்டு பிரம்மாண்டமும் பிண்டாண்டமுமான பூமி முதலிய உலகம் படிப்படியாக அவற்றின் உபாதியின் லயத்தால் பரமாத்மாவில் லயமடைகின்றது. ஞானாக்னியால்  எரிந்து போன அண்டம் மூல காரணத்துடன் பரமாத்மாவில் லயித்து பரமாத்மவாகிவிடுகின்றது. இந்தநிலையில் ஒளியோ இருளோ இல்லை   .

"பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை"

"பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சரம் போக்கிடும் கற்கரக்கி என்னும் தேங்காய்ப்பூக்கீரை"
         கோடைகாலம் ஆரம்பித்தவுடன் உடலில் ஏற்படுவது நீர் இழப்பு இதற்கு காரணம் அதிக வெயிலால் தோல் எனது உடலின் வெப்பதற்பத்தை சீர் செய்யும் போது தோல் அதிக வியர்வை வெளியேற்றி சீர் செய்யும். இன் நிலையில் சிறுநீரகத்தில் நீர் விழுக்காடு ஏற்பட்டு இதனால் நீர்ச்செறிவு ஏற்பட்டு நீர் அடத்தி ஏற்படும் அதனால் சிறுநீரக்கற்கள் உண்டாவதுடன் சிறுநீரகம் கிருமித்தொத்துக்கு உண்டாகி பாதிக்கப்படலாம். அதை தடுக்க கோடைக்காலத்தில் அதிகளவு நீர் அருந்தும் தேவை உண்டு.
        சிறுநீரகக் கற்கள் பொதுவாக சிறுநீரகத்துக்குள்ளும் அல்லது சிறுநீரகத்தில்“வெல்விஸ்” பகுதியிலும், சிறுநீர் வருகின்றபாதையிலும், சிறுநீர்குழாயிலும், தங்கியும் தோன்றலாம்.
     சிறுநீரகக் கற்கள் பொதுவாக ஐந்து வகையாக வகைப்படுத்தியுள்ளனர்
1. “கல்சியம் ஒட்சியேற்” வகையான கற்கள். 
2. “கல்சியம் பஸ்ரேட்”  வகையான கற்கள்.
3. “சுவைட்” வகையான கற்கள். சிறுநீரக தொற்று கிருமிகளின் தாக்குதலால் ஏற்படுகின்ற “மெக்நீசியமும் அமோனியாவும்”; சேர்ந்து ஒருவகையான கற்களை உருவாக்குகின்றன இவ்வகையான கற்கள் “சுவைட்”வகையான கற்கள் ஆகும்.
4. “யூறிக் அமிலக் கற்கள்” இது மிகக் குறைவான அளவிலே வருகின்ற யூறிக்கமிலம் அடர்த்திகூடுவதனால் உருவாகும் கற்கள்.
5. “செங்டோன் கற்கள்” “சிஸ்டின் “என்ற அமிலோ அமிலத்தால் உண்டாகும் கற்கள்.
இவ்வாறு சிறுநீரகக் கற்கள் உருவாகுகின்றன. இக் கற்களை அகற்ற நவீன மருத்துவம் பலமுறைகளைக் கையாழுகின்றன. அவைகள்.
1. “லித்தோடிஸ்சி” என்ற ஒருமுறை கதிர்களைப் பயன்படுத்தி கற்களை உடைத்து சிதைத்து சிறுநீர்ப்பாதை வழியாக வெளியேற்றுதல். இது கிரேக்க நாட்டு முறை “லித்தே” என்பது கல். “திப்சி” என்பது உடைத்தல் எனப் பொருள்படும். 
2.  “டனல் சேசறீ” முதுகுப் பகுதியில் துளையிட்டு அதன் வழியாக கற்களை அகற்றுதல்.
3. “யூரட்டோ கொப்பி” சிறுநீரகச் சிறுநீர் வரும்பாதையின் வழியாக “பிரோவல்” என்ற குழாயைச் செலுத்தி அதன் மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுதல். 
                  இவ்வாறான முறைகளை நவீன மருத்துவம் பயன்படுத்த தமிழ் மருத்துவம் கற்களை கரைத்து அது மீண்டும் உருவாகுவதைத் தடுப்பதுடன் கற்கள் உண்டாகாதவர்களுக்கு உண்டாகாமல் தடுக்கும் வல்லமை உள்ள மூலிகைகளை கண்டனர் சித்தர்கள். அம் மூலிகையை கற்பேதி அதாவது கல்லை கரைத்து அதை பேதியாக்கி விடும் சக்தி வாய்ந்தது அந்த மூலிகை அதற்கு சிறுகண்பேளை, சிறுபேளை, சின்னப்புளைச் செடி, தேங்காப்பூக் கீரை என்றெல்லாம் அழைப்பர். இக்கீரையை சிறுநீர்ப் பெருக்கியாகப் பயன்படுத்துகின்றனர்.
       தாவரவியல் பெயர் : “எர்வால் லெனட்டா”
 தேரையார் தனது பதார்த்த குண சிந்தாமணியில் 
        “ பாண்டு பெரும்பாடு பகர் மூத்திரக்கிரீச்சம்
         பூண்ட திரிதோடி மிவை போக்குல் காண் - தாண்டி
         புதிய வேலைத் துரத்தும் பார்ரவக் 
         சிறிய கிளைக்குச்ச கண்ணாய் சிதைந்து” என்று ஒரு பாடலிலும் இன்னுமோர் பாடலில்
       “ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை 
        பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
        பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
        கற்பேதி பென்றறி” என்றார்.
 இவ்வாறு இருபாடல்களில் “கற்பேதி” மூலிகையின் மருத்துவக் குணத்தை பாவில் இயம்பியுள்ளார். இங்கு முதல் பாடலில்
1. “ பாண்டு”:  பாண்டு என்பது உடலில்  நீர்க்கொர்த்திருக்கும் நோய் முழங்கால் கனுக்காலின் பின்புறம் வயிற்றின் கீழ்ப்புறம் போன்ற இடங்களில் நீர் கோருத்து வலுனில் நீரை விட்டால் இருப்பது போல தெரிவது. இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
2. “பெரும்பாடு”: பெண்களுக்கு  வருகின்ற மாதவிடாயி நீடித்து அதிநாட்கள் நீர் இறைப்புப் போல் உதிரம் போகின்ற நிலையாகும். மாதவிடாய் சாதாரணமாக மூன்று நாட்கள் நீடிக்கும் ஆனால் இந்த நிலையில் பத்து பதினைந்து நாட்கள் கூடநீடிக்கலாம். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை

3. “பகர் மூத்திரக்கிரீச்சம்” : சிறுநீர் கழிக்க சென்றால் கழிக்முடியாது சொட்டுச் சொட்டாக எரிச்சலுடன் வேதனையும் தரும். சிறுநீரகத்தில் கிருமி த்தாக்குதலால் ஏற்படுவது இதனை “யூறினல் இன்பஸ்கன்” என்பர். இன் நோயை போக்க வல்லது இந்த மூலிகை
4.  “பூண்ட திரிதோடி” : வாத பித்த கபத்தை உடலில் சீர் செய்து அதனால் ஏற்படக்கூடிய நோய்களைக் கடுப்படுத்தும் வல்லமை இம் மூலிகைக்கு உண்டு. எனக் கூறுகின்றார்.
என பாம்பைப் போல கூர்மையான கண்ணுடைய பெண்ணே எனக் கூறுகின்றார். அடுத்த பாடலிலே
 “ நீடடைப்புக் கல்லடைப்பு நீங்கா குடல் சூலை 
        பேதீ டறிர் ரத்த கணம் போக்கும் கான்- வாரிருக்கும்
        பூண்முலையாய் கேளாய் கிறு பினையாகிது
        கற்பேதி பென்றறி”
1. “ நீடடைப்புக்” :  என்பது முதல் பாடலில் செல்லப்பட்ட பாண்டு என்னும் நோய் ஆகும்.
2. “கல்லடைப்பு” : என்பது சிறுநீரகக்கற்கள் இக்கற்களை கரைத்து பேதியாகி சிறுநீருடன் அற்றும் ஆற்றல் மிக்கது இம் மூலிகை. 
3. “நீங்கா குடi; சூலை”: வேதனையுடன் கூடிய குடலில் ஏற்படும் வலி இது சூரத்தால் முத்துவது போல ஏற்படும் வலியை போக்க வல்லது இந்த மூலிகை.
4. “பேதீ டறிர் ரத்த கணம்” : பெரிய இடரைத்தரும் இரத்த கணம் என்பது இரத்தழுத்தத்தை இங்கு கருதுகின்றர். இதையே இரத்தபித்தம் என்றும் சித்தமருத்துவத்தில் பயன்படுத்துவர். அழுத்தத்ததை குறைத்து அதற்கா தடையை நீக்கி நரம்பை பலப்படுத்தி வலுவுட்டும் தன்மை இந்த மூலிகைக்குண்டு.
 பாவில் கூறப்பட்ட நோய்களுக்கெல்லாம் அருமருந்து தேங்காய்பூ கீரை என்று குறியுள்ளார். அதன் பூக்கள் தேங்காப்பூ போல இருப்பதால தேங்காப்பூக் கீரை என்றும் அழைக்கின்றனர். 
         சிறுநீரக கற்களையும் சிறுநீரகக் கிருமித்தாக்கத்தால் உண்டாகும் நோய்களுக்கும் அருமருந்தாக அமைவதுடன்“புரஸ்ரகோளம்” என்னும் ஆண்குறின் இயக்கத்துக்குரிய கிளான் ஒன்று உண்டு இது வீங்கும் போது சிறுநீர்கழிப்பது தடைப்படுவதுடன் வேதனையும் எரிச்சலும் ஏற்படும் அதை குணப்படுத்தி அக் கிளான்டை புதுப்பித்து இயக்க வல்ல மூலிகை ஒன்று உண்டு அதுதான் நெருஞ்சியின் வித்து. 
            நெருஞ்சில் அல்லது சிறுநீர் பெருக்கி என்பதின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதார்த்த குணசிந்தாமணியில் குறிப்பிடுகையில்
“ சொல்ல வொன்னா நீர்கட்டு துன்பமாமிசருக்கி 
கல்லடைப் பெனும் பிணிகள் கண்டக்கால்
கருஞ்சின கண்மாதே நல்ல
நெருஞ்சினறு கித்தே நினை” இங்கு மேல் சொன்ன கல்லடைப்பு, நீர்க்ட்டு; என்பனவற்றுடன் விசேடமாக “துன்பமாமிசருக்கி” இது “புரஸ்ரகோளம்” என்னும் கிளான் தனது நிலை மருவி வீங்கியிருக்கும் இதனால் சிறுநீர் களிப்பதும் கடினமாக இருப்பதுடன் சிறுநீர் வெளியேறும் குழாயை அழுத்தி சிறுநீர் கழிப்பதை  தடை செய்து வேதனைக்குள்ளாக்கும் இந்த நிலையிலிருந்து வீக்கத்தை வத்தவைத்து சீர்செய்து இயல்பான நிலைக்கு கொண்டு வந்து இயல்பு நிலைய தொடர்ந்து பாதுகாக்கும் வல்லமை நெருஞ்சியின் நன்கு விளைந்த நல்வித்துக்கு உண்டு.  

“சித்தன் சிந்தையில் உதித்தது 
    சித்த வைத்தியம்
மனுக் குலம் பெற்ற பெறு அது
    அவன் வாக்கு சிவ வாக்கு
சீவன் சிவன் என்று உணர்தால்
    அதுவே வாழ்கையின் தத்துவம்
தத்துவம் அறியார் முத் தீ அடையார்
 அடைய உடல் திரி தோச நிவர்தியினால்
 சம நிலை தேவை கற்பமாக
அதற்கே சித்த வைத்தியம் தந்தான் சித்தன்
சித்த வாழ் வியல் அறிந்து
 ஒழுகினால் வெற்றி நிச்சயம்” 
                 மட்டூர் புன்னையம்பதியான்  


“வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”

“வாதபித்த மையமோடி னை சிறு வருக்கும் மின்னும் செப்பி லறிவு தரும் அறுகம்புல்”
 தாவரவியல் பெயர்: Cynodon Dactylon   (syn. Panicum dactylonCapriola dactylon)
 ஏனைய பெயர்கள்:  also known as dūrvā grass, Bermuda Grass, Dubo, Dog's Tooth Grass, Bahama Grass, Devil's Grass, Couch Grass, Indian Doab,Arugampul, Grama, and Scutch Grass,     


                அறுகம்புல் இறந்தாலும் உயித்தொழும் தன்மை உடையது. அது விநாயகனுக்கு அர்ப்பணிக்கும் பொருளாகும். விக்கினம் தீர்ப்பவன் விநாயகன் விக்கினம் ஏற்பட காரணம் ஸ்திமான மனம் இல்லாமை இதனால் ஆய்ந்து அலசி ஆராய்யும் திறனை இழந்து தவிக்கின்றான் மனிதன் இதற்கு அடிப்படையான காரணம் உடல் சமநிலை இன்மை உடல் முக்குணங்களால் வழிநடாத்தப்படுகின்றது. அவை வாத, பித்த, கபம் என்பன இவற்றின் சமநிலை மாறுமானால் மனமும்  சமநிலையை இழக்கின்றது இதனால் விக்கினம் ஏற்படும் இதை அறுகம் புல் அவற்றுக்கிடையிலான ஏற்ற இறக்கத்தை சீர்செய்து சமநிலைக்கு கொண்டு வரும் ஆற்றல் அறுகுக்கு உண்டு. சிவன் அகோரமானவர். அகோரக் காற்று வடிவானவர். பஞ்சபூதங்களில் கற்றுக் கூறு.  இது வாதத்தன்மையானது. புளிப்பு சுவையால் அதன் அதிகரிப்பால் ஏற்படக் கூடியது. இதை சரி செய்ய வில்வம் பயன் படுத்தப்படுகின்றது. பொதுவாக உஸ்ன நோய்களுக்கு அருமருந்து வில்வம். விஸ்ணு குளிர்ச்சியானவர் அவருக்கு துளசி குளிர்சியால் உண்டாகும் நோய் கபம் இ;தைப்போக்க துளசியே அருமருந்து. இது பஞ்சபூதங்களில் நீர் கூறு. இது இனிப்புச் சுவையானது. அதன் அதிகரிப்பால் ஏற்படக் கூடியது கபம்.  சக்தி நெருப்பு வடிவானவள். நெருப்பின் வெப்பத்தை குறைக்க வேம்பு. வெப்பத்தினால் பித்தம் உடலில் அதிகரிக்கும் பித்தத்துக்கு மருந்து வேம்பு. இது பஞ்சபூதங்களில் நெருப்புக் கூறு. அது கசப்புத் தன்மையானது. பஞ்சபூதங்களில் மனிதனின் உடலில் நோய் வரக் காரணமானதாக நீர்,நெருப்பு, காற்று என்னும் கூறுகள் ஆகும். இவற்றால் உடலில் ஏற்படுத்தப்பட்டவை வாதம், பித்தம், சிலேற்பனம் என்னும் கபம். இவை முறையே புளிப்பு, கசப்பு, இனிப்பு சுவைகளினால் ஏற்பட்டவை. இவைகள் அனைத்தும் சமமாக இருக்கின்ற போதே உடலில் நோய் இல்லாது  மனஅழுத்தமோ, படபடப்போ, தடுமாற்றமோ இன்றி உடல் சமநிலையில் இருக்கும். இதில் ஏற்றத்தாழ்வு இருக்குமானால் அங்குதான் நோய்க் குறிகள் ஆரம்பமாகின்றது.  இவர்கள் அனைவருக்கும் பொதுவானவர் விநாயகர் இவர் எல்லா இடத்திலும் இருப்பார் இவருக்கு அறுகு அது துவர்ப்பு சுவையானது. இது விநாயகரின் பிரதான அர்ச்சனைப் பொருள். இவர் எல்லா இடத்திலும் பொதுவாக இருப்பது போல் அறுகாகிய ஒற்றை மூகிலிகை வாத, பித்த, கபம் என்னும் மூன்றையும் சமநிலையில் பேணும் மூகிலியாக உள்ளது. “வாதபித்த மையமோடினை சிறு வருக்கும்” என தேரையர் முதல் வரியிலேயே எவ்வளவு அழகாகக் கூறிவிட்டார்.  
அறுகம்புல்

அறுகம்புல்
             இந்து மதம் எவ்வாறு வழிபாட்டையும் வைத்தியத்தையும் இணைத்துள்ளது. இதனாலேயே அதற்கு ஆயுர் வேதம் என பெயர் வழங்கலாயிற்று. சைவம் ,வைணவம், சாத்தம் மூன்றும் மூன்று துருவங்களாக இருந்த காலமொன்று இருந்தது அப்போது காணபத்தியக் கடவுலான விநாயகனை எல்லோரும் பொதுவாக ஏற்றதுண்டு எல்லா ஆலயங்களிலும் அவருக்கு ஒரு  தனிச்சன்னதி வைத்திருப்பர்.மதம் என்ற மத வெறியை ஏற்படுத்திய வாத பித்த கபக் கூறுகனை சமப்படுத்த பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விநாயகர் அறுகு ஆகும். அறுசமயங்களை ஒன்றாக்கிய பெருமை ஆதி சங்கரக்கே அவரே சங்கரன்.
        தேரையர் தனது பதாத்தகுண சிந்தாமணியில் அறுகம்புல்லின் மருத்துவ பாகம் பற்றி குறிப்பிடுகையில் 
        “வாதபித்த மையமோடி ளை சிறுக வருக்கும்
             மின்னும் செப்பி லறிவு தரும் கண்நோய்
            யொடு தலை நோய் கண் புகையில் ரத்த பித்தம்
            முன்நோய் ஒழிக்கும் முறை” என்றார். இங்கு 
1. “செப்பில் லறிவு தரும்”: நினைவாற்றலை அதிகரித்து சிந்தனா சத்தியை கூட்டி அறிலைப் பெருக்குகின்ற ஆற்றல் மிக்கது அறுகம்புல். இதனாலேயே “அருணகிரி நாதர்” விநாயகர் திருப்புகழில் “முத்தமிழ் அடைவிணை முப்படுகிரிதனில் முப்பட எழுதிய முதல்வோனே”அவ்வளவு ஆற்றல் உள்ளது அறுகம்புல். “விநாயகப் பெருமான் புத்தியின் வடிவானவன் அவன் முத்திக்கு வழிகாட்டுபவன் சித்தியில் உறைபவன்” அதனாலேயே அவனுக்கு புத்தி சித்தி என்னும் இரு மனைவியர். சிந்திக்கும் ஆற்றலுக்கு அவசியமான சத்தியவை. புத்தி விளிப்படைந்து சித்தம் தெளிந்தால் அவன் செல்ல வேண்டிய பாதை தெளிவாகத் தெரியும் அதுவே அவனின் வெற்றிப்பாதை அங்கு தோல்விக்கு இடமில்லை அதுவே விக்கினம் தீர்க்கும் பணி. அப்படிப்பட்டது தன்மைகளை தரவல்லது அறுகம் புல்.
2. கண்நோய் யொடு தலை நோய் கண் புகையில்”: கண்பார்வை மங்கலாக இருத்தல் இன்நிலையில் கண்களில் புரை வளரத் தொடங்குவதை கட்டுகின்றது இதனால் கண்பார்வை மங்கலாகிக் குறைந்து வரும் இது இரத்தழுத்தத்தால் ஏற்படலாம். தலைவலியும் ஏற்படும் இதனைப் போக்குகின்ற திறன் அறுகம் புல் எண்ணைக்கு உண்டு. 
3. “ரத்தபித்தம்” : என்பது குருதியில் பித்தம் கூடுதல் அதாவது குருதியில் அனல் கூறாக இருக்கின்ற வெப்பக் கூறு கூடுகின்ற போது குருதியில் பித்தம் அதிகரித்து குருதியின் அழுத்தம் கூடும் இதை குருதி அளல் அல்லது குருதி அழுத்தம் என்பர். அதற்கு அடிப்படைக் காரணம் பரபரப்பு, மனஅமைதியின்மை, உடல் பருமன் அதிகரித்தல், கொழுப்புச் சத்து அதிகரித்து இரத்த குழாயிகளில் படிந்து இரத்தழுத்தம் ஏற்பட்டு  இருதயநோய் வருகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் இரத்தக்குழாய்கள் தமது இயல்பான தன்மையை இழந்து விடும். இயல்பாகவே இரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை உடையது. அறுகம்புல் இரத்தக்குழாயயை இளமையாக நிலைத்திருக்க வைத்திருப்பதுடன் சுருங்கி விரியும் தன்மையை இழக்காது பாதுகாக்கின்றது.
4. “முன்நோய் ஒழிக்கும் முறை”: நோய் வருவதற்கு முன்னர் நோயை வராது முன்னால் தடுக்கும் ஆற்றல் அறுகம் புல்லுக்குண்டு.
நவீன அறிவியல் கூறும் விந்தை: 
     இரண்டாயிரத்து ஏழில் (2007 இல்) சுந்தர்சிங் என்ற ஆய்வாளர் செய்த ஆய்வில் அறுகம்புல் தண்ணீர்ச் சாறு இரத்தத்தில் சக்கரையின் அளவையும் கொழுப்பின் அளவையும் குறைத்து. இரத்தத்தை சீர் செய்யும் சக்தியும் வல்லமையும் உள்ளது. என்றும் அது குறைக்கும் அளவையும் அளவிட்டுக் குறிப்பிட்டுள்ளார். கொழுப்புப் பரிசேதனையில் மொத்தக் கொழுப்பு, ஆபத்தான மிருகக் கொழுப்பு, டைற்கிளிகரைட் இது போன்றவை உண்டு. இதனை பரிசாதனை செய்யும் முறையை “லிப்பிட் புறபையில் பரிசோதனை” என்பர். அறுகம்புல் சாற்றை அருந்திய பின் பரிசோதனை செய்த போது. மொத்த கொளஸ்லோல்(TC)- 33 வீதத்தாலும்(33% ), ஆபத்தான மிருகக் கொழுப்பு (LDL) – 77 வீதத்தாலும்(77%), டைற்கிளிகரைட் -29 வீதத்தாலும்(29%) குறைவடைந்து காணப்பட்டது என்று ஆய்வின் முடிவை வெளியிட்டிருந்தார். சித்தரின் வெண்பா எவ்வளவு உறுதியாக ஆணையிட்டுள்ளது. “கண்ணோய் யொடு தலை நோய் கண் புகையில் இரத்த பித்தம்” போன்ற நோய்க்கு அடிப்படை இரத்தபித்தமெனும் இரத்தழுத்தம் இதை போக் வல்லது அறுகம்புல்.
பயன் படுத்தும் முறைகள் : 
1. அறுகம்புல் தைலம்: அறுகம்புல்லைத் தேர்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியது ஓர் முக்கிய விடையமாகும். சரியான புல்லைத் தேர்தெடுக்கும் போது: 
1.அறுகம்புல் பூக்கும் தன்மையுடையது. 
2.கணுக்கள் விட்டு படர்ந்து கணுக்களுக்கிடையல் கிளை விட்டு           
    வலைப் பின்னல் போல விரிந்து படரும் தன்மையுடையது. இவ்வாறு               
தெரிவு செய்து கொள்ளவேண்டும். அறுகு போன்று வித்யாசப்படுத்த முடியாத புல்வகையும் உண்டு. அது பூக்காத ஒஸ்ரேலியன் கிராஸ், கொறியன் கிராஸ் போன்ற பூங்காக்களில் அழகுபடுத்தும் ஒருவகைப்புல்கள் உண்டு அவை பார்வைக்கு ஒன்று போல இருந்தாலும் அதன் தன்மை வேறு அது அறுகாகாது. இவ்வாறு தேர்ந்தெடுத்த அறுகம் புல் ஒருபிடி எடுத்து அதை நன்றாக உரலில் இட்டு இடித்தெடுத்து வைத்துக் கொண்டு. ஒரு அகன்ற கரண்டியில் நல்லெண்ணை விட்டு நெருப்பில் பிடித்து காச்சி அதனுள் இடித்தெடுத்து வைத்த அறுகம்புல்லை இட்டவும். இட்டவுடன் அது எண்ணெயினுள் சென்று மீண்டும் மேல் வரும். (எண்ணையில் அறுகை இடும் போது அவதானத்துடன் இருக்க வேண்டும் எண்ணையில் பச்சை புல்லை போடும் போது பொங்கும்) வந்தவுடன் நெருப்பை நிறுத்தி விட்டு எண்ணையை எடுத்து ஆறவிட்டு பின் அந்த எண்ணையை தலை, முகம் போன்ற வற்றில் தேய்த்து சில மணிநேரம் ஊறவிட்டு வெண்நீரில் தோய வேண்டும். வென்நீர் என்னும் போது நன்றாக சூடாகிய நீரில் குளிந்த நீரை கலத்தலை தவித்து சூடாக்கும் போது குளிப்பதற்கு தக்கதாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணையை உடலில்லிருந்து அகற்ற சவற்காரத்தைத் தவித்து சீயாக்காய்த்தூள், அரப்புத்து தூள், பாசிப்பயறுமா போன்றவற்றை பயன்படுத்தி எண்ணையை உடலில்லிருந்து அகற்ற வேண்டும். இவ்வெண்ணையைப் பயன்படுத்துவதினால் பினிசம், தலைவலி, மனவழுத்தம், பரபரப்பை ஏற்படுத்தும் தலைவலி என்பன குணமாகும்.
அறுகம்புல் பூ


2. அறுகம் புல்லை சாறாக்கி அருந்தலாம் இதனை அறுகம்புல் யூஸ் என்று அழைப்பர்.


3. அறுகம்புல்லுடன் (ஒருகைப்பிடி அளவு) இதனுடன் ஆறு மிளகும் நாலில்ஒரு பங்கு தேக்கரண்டி அளவு நற்சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு நன்றாக நீர் விட்டரைத்து காச்சி வடிகட்டி வெறுவயிற்றில் காலையில் ஒரு டம்பிளர் அருந்த வேண்டும். அருந்திய பின் இரண்டு மணித்தியாலங்களின் பின் மலக்கழிவு ஏற்படலாம் பயப்படத் தேவையில்லை.
4.நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட அறுகம்புல்லை இனலில் உலர்த்தி பொடி செய்து வஸ்திரத்தில் சலித்து வஸ்திரகாயமாக வைத்துக் கொண்டு காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் இட்டு அல்லது தண்நீரில் போட்டு அல்லது தேன் கலந்து சாப்பிட்டுவர “வாதபித்தம் ஐயமோடு இழை சிறு அறுக்கும் ---
5.சரும வியாதிக்கு அறுகம்புல் நல்ல மருந்தாகும். அறுகம்புல்லும் மஞ்சலும் சேர்த்து விழுது போல அரைத் தெடுக்கவேண்டும். (ஒருபிடி அறுகம்புல்லுக்கு ஒரு தேக்கரண்டி மஞ்சல் வீதம்; சேர்த்தல் வேண்டும்.) அரைத்தெடுத்த அறுகம்புல் குழம்பை நெற்றி, கன்னம், சைனஸ் நீர் தேங்கக்கூடிய இடத்திலெல்லாம் பூசித் தேய்த்து சிறிது நேரம் ஊற விட்டு இருந்து தோய வேண்டும் (நீராடுதல் வேண்டும்) பின்னர் உடலில் நீர் இன்றி நன்றாக துடைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சைனஸ்; வியாதியிலிருந்து விடுபடமுடியும். சரும வியாதியுள்ளவர்கள் வியாத்யுள்ள இடங்களில் இரவில் பூசி காலையில் நீராடமுடியும் சரும வியாதியிலிருந்து விடுபடமுடியும்.   
         ---  இன்னும் செப்பில் அறிவு தரும் கண்ணோய்
            யொடு தலை நோய் கண் புகையில் இரத்த பித்தம முன்நோய் யொழிக்கும் உரை” இங்கு சொல்லப்பட்ட தேரயர் வாக்கு பலிதமாகும்.


 

“கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;”

“கிருமி குட்டம் மந்தம் கெடும் வேம்பு அல்லது நிம்பம்;” 
வேம்பின் மருத்துவக்குணம் பற்றி தேரையர் குறிப்பிடுகையில் 
“கிருமி குட்டம் மந்தம் கெடும்
விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின்
புண்கள் ஒருமிக்க நிம்பத்திலை
இருக்க நீடுலகில் நீற்காது இலை காய்” என்றும் இன்னுமோர் பாடலில்
“மந்தப் பொருமலுடன் மல்லாடும்
பேதி வகை வந்த கணுச்சூலை
வண்கிரந்தி தொந்த மெல்லாம்
கூப்பிக் கரம் கொண்டாடும் இத் தரையில்                                                                                                                                                                                                                                                                                                                                                                        
வேம்பின் நற்குணத்தை வீழ்” என இருபாடல்களில் தேலையர் வேம்பின் மருத்துவக் குணங்களைக் கூறியுளார். 
1. “கிருமி  குட்டம் மந்தம் கெடும்”:  “கிருமி” என்பது வைரஸ் என்பதை இங்கு பொருள் கொள்ள வேண்டும். பொதுவாக புழு என்பது எம்முடலில் காணப்படும் நடாப்புழு, உருளைப்புழு, கீரிப்புழு என்பவற்றைக் குறிப்பிடுகின்றோம். புச்சி என்பது சிறிய உயிரினங்களுக்கு பயன்படுத்தும் பெயராகும். ஆனால் இங்கு கிருமி என்று பயன்படுதியதிலிருந்து நுண் கிருமியான பற்றியாக்கள் பங்கஸ்சுக்கள்; வைரஸ்கள் என்பவற்றினால் நோய் பரப்பப்படுகின்றது என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் அறிந்திருந்ததை அறியமுடிகின்றது. நுண்கிருகிகளால் பரப்பப்படும் நோய்களை தடுக்க நோய்க்கிருமிகளைத் தடுத்துக் கொல்லும் ஆற்றல் வேம்புக்கு உண்டு. அதனாலேயே அம்மை நோக்கு வேம்பு அருமருந்தாக கண்டு அம்மை நோய் கண்டவர்க்கு வேம்பின் இலையுடன் மஞ்சல் சேர்தரைத்து உடல் முழுவதும் பூசுவதுடன் மருந்தாக வேம்பில் அரும்பின துளிரை உட் கொடுப்பதுடன் படுக்கையில் வெள்ளை விரிப்பொன்றை விரித்து அதன் மேல் முற்றிய வேம்பின் இலைகளைப் பரப்பி நோய்யுற்றரை துயில வைப்பர். அம்மை நோக்குக் காரணம் வைரஸ் இதைதடுக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு என்பதை அன்று அறிந்திருந்தனர் சித்தர்கள். அறிவியல் இதை ஆராய விளைந்தது. ஆயிரத்து எண்ணுற்றி எழுபதில்களில் பிராஸ் தேசத்தைச் சேர்ந்த  டக்டர். லுயிபாஸ்டர் என்பவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி இவர் பிற்காலத்தில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாகி நுண்கிருமிகள் மனித உடலில் நோய்களை உருவாக்கின்றது என்ற விடயத்தை நவீன மருத்துவ உலகுக்கு முதலில் அறிமுகம் செய்தார். இதை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதை அறிந்து அனுபவித்து மக்களுக்கு தெரித்வித்திருக்கின்றனர். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கண்ணுத்தெரியாத உயினங்கள் நோயை உருவாக்கு கின்றன என்பதை தமிழ் மருத்துவம் உணர்தே இங்கு “கிருமி” என்ற சொற்பதத்தை அன்று பயன்படுத்தி இதனை அளிக்கும் ஆற்றல் வேம்புக்கு உண்டு என்பதை அறிந்து ஆய்து அனுபவித்து தமிழ் மருத்துவத்துக்கு தந்தனர்.

2. “குட்டம்”: தொழுநோய்யாகிய விரல்கள் அழுகி விழுவதுடன் அங்கங்கள் சுருங்கி ஒலிந்து அபலட்சணத்தை உருவாக்கின்ற கிருமிகளை அகற்றி ஒழிக்கும் ஆற்றல் வேம்புக்குண்டு. 
3. “மந்தம் கெடும்”: ஐPரணக்குறைபாடு இயற்கையாக உணவு சொரிக்கும் ஆற்றலில் தாமதம் இதனால் அஐPரணம் ஏற்படுத்தி உடல் உபாதைக்கு உட்படுகின்ற நிலையை தடுக்கின்ற தன்மை வேம்புக்குண்டு. 
4. “விடம் சுரங்கள் பெருமிய வைசூபிகையின் புண்கள்” : நீங்காத காச்சல் வைசூரியினால் உண்டாகும் புண்கள் இவற்றைப் போக்கும் இயல்பு வேம்புக்குண்டு.
  அடுத்த பாடலிலே “மந்தப் பொருமலுடன் மல்லாடும்
5. பேதி வகை”:மாந்தத்தினால் வயிறு பொருமலடைந்து ஏற்படும் வயிற்றுப்போக்கை தடுக்கும் தன்மை வேம்புக்குண்டு.
6. “வந்த கணுச்சூலை”: கணுச்சுலை என்பது மூட்டுகளில் நாற்பது வயதின் பின்னர் ஏற்படும் வழுவின்மையினால் ஏலும்புகள் உரைவதால் ஏற்படும் நோவும் வலியும் போக்கும் தன்மை வேம்புக்குண்டு.
7. “வண்கிரந்தி தொந்த மெல்லாம்”;: வண்மையான கிரந்தி அதாவது ஒவ்வாமையினால்  தோலில் ஏற்படும் பருக்கள் அவைஎல்லாம் வேம்பைக் கண்டவுடன் கைகுப்பி எங்களை ஒன்றும் செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள் பயந்து ஓடிவிடுமாம் என்று வேம்பின் வல்லமையை தேரயர் குறிப்பிடுகின்றார். 
பயன் படுத்தும் முறைகள்:
வேம்பின் துளிர்  1. வேம்பு கற்பம் இது வேம்பி தளிரை அதாவது துளிர் அரும்பை நாள் ஒன்றுக்கு ஒன்று இரண்டாக பத்தாவது நாளில் பத்து அரும்பாக தெடர்ந்து பத்துபத்தாக ஒரு மண்டலம்; (மண்தலம்) அதாவது நாற்பத்தெட்டு நாட்கள் உண்டுவர காயம் கற்பமாமும் என சித்தர்கள் இயம்பியிருக்கின்றனர். இதன் மூலம் உடலில் குடிகொன்டுள்ள கிருமிகள் ஒழிவதுடன் சருமத்தில் கொப்பளம் அரிப் என்பன நீங்கி விடும் அரவம் தீண்டினால் கூட உடலில் வி~ம் ஏறாது வி~த்துக்கு எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. மயிர் கறுத்து இளமை பெற “அகன்னன் நுதனாய் ஓர் அதிசயம் கேளாய் களவு காயம் கலந்த இன் நீரில் மிளகும் நெல்லியும் மஞ்சலும் வேம்பிடில் இலகு மேனி இறுகும் காயமே” தும்பை போல இருந்த தலை முடி கறுப்பாக போவதுடன் உடல் இழமையும் மடையுமாம் வெண்மிளகு,நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்கல், வெம்பின் விதை, அமியை இவை ஐந்தையும் அரைத்து நீரிலிட்டு தலை உடலெங்கும் பிரையோகித்தால் உடல் கட்டிளமை பெறுவதுடன் தலை முடியும் கறுப்பாகும்.
வேப்பம் வித்தும் 3. பஞ்சகற்பம் என்பது மிளகு, நெல்லி, மஞ்சல், வேம்பு, கடுக்காயத் தோல் என்பவற்றை சேர்த்து அரைத்து பீக்கம்தும்பினால்  தலை உடலெங்கும் தேய்த்து சிறிது நேரம் களித்து குளித்தால் கபம் நீங்கி உடல் இளமை பெறும். பொதுவாக கடுக்காய்த்தோல் ஒருபங்கு, வெண்மிளகு காற்பங்கு, நெல்லிக்காய் வற்றல் அரைப்பங்கு, கஸ்தூரி மஞ்சலும் வேப்பம் வித்தும்எட்டில் ஒரு பங்கு இவை அனைத்தும் உரியளவில் கலந்து அரைத்து எடுத்த விழுதை உடலில் தேய்த்து குளிக்கலாம்.
நடுத்தர வேம்பின் இலை 4. நடுத்தர வேம்பின் இலையை எடுத்து சமனிடை கருமிளகையும் சேர்த்து விளுதுபோல் அரைத்து அதை சுண்டங்காய் அளவும் பட்டானி அளவிலும் உருட்டி இனலில் காயவைத்துக் கொண்டால் வயிற்றில் புழுத் தொல்லை ஏற்படும் போது பெரியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு சுண்டங்காய் அளவுள்ள உருண்டையையும் சிறியவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பட்டானி அளவிலான உருண்டைகளை மூன்று வேளை பத்து நட்களுக்கு கொடுக்கவயிற்றிலுள்ள புழுக்கள் இல்லாமல் போகும்
நன்கு முற்றிய இலையில்  5. வேம்பின்நன்கு முற்றிய இலையில்ஒருகைப்பிடி எடுத்து இதனுடன் ஒருகைப்பிடி புழுங்கல் அரிசையும் சேர்த்து உரலில்லிட்டு இடித்து இரண்டும் இடிந்து வேப்பிலைக் சாறு குறுணலில் நன்றாகக் கலந்த பின் இடிந்த இலைகளை அகற்றி சாறுகலந்த குறுனல்லை ஒட்டியிட்டு(மண்சட்டியில்) கறுக வறுத்து நான்கு படி நீருற்றி ஒருபடியாய் வற்றக்காச்சி எடுத்து வயதுக்கும் உலல்வலிமைக்கும் ஏற்ப கொடுத்து வர பேதி கட்டுப்படும்.
6. வேம்பிலையின் நெட்டியில் உள்ள பச்சிலைப்பகுதியை நீக்கி ஈக்கை இடித்து நீர்விட்டு வறற்க்காச்சி அருந்த அதிசாரமெனும் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். இம் மருந்து அஐPரணக் கொளாற்றையும் நீக்க வல்லது.
7. வேம்பின் நடுத்தரமாக விளைந்திருக்கும் இலையை எடுத்து இதனுடன் இஞ்சி, மஞ்சல் இவை இரண்டும் சேர்த்து மூன்றையும் சமமிடையாக சேர்த்து விழுது போல் அரைத்து ஓட்டியிட்டு  சாதுவாக சூடாக்கி மூட்டி மூட்டுக்களில் பற்றுப்போட்டால் போல பூசி காயவிட்டு காலையில் கழுவிடலாம். பின் வீட்டில் இருப்பதானால் மீண்டும் காலையிலும் இடலாம் இதன் மூலம் மூட்டுவலி வீக்கம் என்பன சுகமாகி மூட்டுகளின் உராவை தடுக்க வழுவும் உண்டாகும்.



“மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”

“மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”
          மனத்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மனமுள்தால் மனத்தக்காளி என்றும் திருமனத்துக்கு தக்க உடல்லை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மனக்க தக்க யாளி மனத்தக்காளி யாக்கிவிட்டது.
          இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதாத்தகுண சிந்தாகணியில் 
“மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
  விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
  வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
   மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து
 காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
 உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
 மனத்தக் காளிக்குள்ள வாறு”   
 வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.            
 பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மெண்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும். 
     இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூன்னர் வாழ்த சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியர்ப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகம்கில் சித்தர்கள் தொண்மையும் விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.
   1.இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) மஸ்பரலஸ் என்ற ஆய்வியலாளர் மனதக்காளியின் இலைச்சாற்றை ஆய்வு செய்து குடல்புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு என்பதை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து அவைகளுக்கு ஏற்பட்டிருந்த குடல் புண் ஆறக்கண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அத்துடன் வாயுடன் கூடிய அல்சறை குணமாக்கும் ஆற்றலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு உண்டு என்று நிருபித்துள்ளார்.
  2. யதீஸ் என்ற இன்னுமோர் ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்)செய்த ஆய்விலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு வயிற்றில் எற்படும் புண்களை முற்றாக மாற்றும் வல்லமை இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.
   3. இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) ராஐ; என்ற இன்னுமோர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்றில் உள்ள “கப்பட்டோ புரட்டக்டியுல்” என்ற வேதியல் மூலக்கூறு கல்லீரலைப் பாதுகாக்கின்றது. என்ற கருத்தை அவரின் ஆய்வின் மூலம் முன்வைத்து நீருப்பித்துள்ளார்.
   4.இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) பகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான்னலி அஸ்ரப் அலி என்னும் ஓர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்று மஞ்சல் காச்சலில் ஒருவகையான “கப்பட்டைடிஸ் -சீ” என்ற காச்சலை உருவாக்கும் வைரஸ்சை அழிக்கும் வல்லமை உள்ளதுடன் கல்லிரலின் பலவீனத்தால் உண்டாக்கும் நோய்களை குணப்படுத்த வல்லதுடன் கல்லீரலை பலப்படுத்தும் வல்லமையும் இருக்கின்றது என மீண்டும் அக் கருத்துக்கு வலுவுட்டியுள்ளார்;.
   5.செல்வப்பா முத்து என்ற இன்னுமொரு ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) செய்த ஆய்வில் மனதக்காளிக் கீரை மிகவும் சக்தி வாய்தது என்றும் அது ஆண்களின் ஆண்மையை வீரியமாக்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இதன் அளவையும் விந்து சுரப்பையும் அதிகரிக்கின்றது என்று தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதனை சித்தர்“விந்து நோய் பாண்டொதிர்”என முன்னரே அறிந்து அறிவியல் உலகுக்கு தெரிவித்துன்னர் என்பதை அறியும்போது தமிழ் மருத்துவத்தின் அறிவியல் தொன்மையை அறிய முடிகின்றது. 
மனத்தக்காளி காயும் பழமும்   5. திருமதி. வடிவேல் அருள்மொழி என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தில் (2010 இல்)தாம் செய்த ஆய்வில் மனத்தக்காளிக் சற்றுக்கு இரண்டு பண்புகள் உண்டு என்றும் இவை
        1;.நோய் எதிப்பு சக்தி வீழ்சிக்கு காரணமாக இருக்கின்ற பொருட்கள்         எல்லாவற்றையும் அழிக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். உடலை முதுமையிலிருந்து இளமையாக்கி  காக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். 
       2.உடலில் கொளுப்பு சத்து அதிகரித்து கொலஸ்றோல் அதிகர்த்து அதன் விளைவால் வரக்கூடிய சைக்கிளிசைட், லோடெண்சிட்டி கொலஸ்றோல், லிப்பீட் கொலஸ்றோல்போன்றவை உடலில் கூடுவதை தடுக்கும் ஆற்றல் மனத்தக்காளிக்குண்டு. என்று தனது ஆய்வில் வெளியிட்டுள்ளார்.
6. சீனதேசத்தைக் சேர்ந்த கெஸ்சி முவான் என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) வெளியிட்ட கட்டுரையில் மனத்தக்காளிக் கீரைக்கு இன்னும் இரண்டு பண்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 
            1.அட்டோ பசிஸ்
            2.அப்போட்டசிஸ் என்ற வேதியல் மூலக்கூறுகள் இருப்பதாகவும் அது உடலில் அழிந்த கலங்களை மீண்டும் புதிப்பிக்கின்றதுடன் கலங்கள் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுடன் உற்பத்தியின் போது ஏற்படும் தவறான நகல்களை அழித்து சரியான நகல்களை நிலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்துள்ளார். இதை சித்தர் பாடலில் “முந்து வளருமத்தோச நோய் மாறும் கைப்பான  மினகுத் தக்காளியிலை மெய்” என அப்போதே அழகாகக் கூறியிக்கின்றார்.
7.லைவோசன் என்பவரும் ரீக் என்ற இருவரும் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) இல் ஆய்வு செய்து மனத்தக்காளிக் கீரைகயில் “கிக்கோரோட்டிக்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது என்றும் இது புற்றுநோயை தடுக்க வல்லது என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் கிக்கோ என்பது மாச்சத்து புரோட்டீன் என்பது புரதம் இவை இரண்டும் சேர்ந்த ஓர் புரதப்பொருள் இது புற்றுநோயை தடுக்க வல்லது. இதன் முலம் மீண்டும் ஆதாரப்படுத்தியுள்ளது.
மனத்தக்காளி               சீன நாட்டில் இருதய நோய்க்கு பல முகிலிகைகளுடன் சேர்த்துப் மனத்தக்காளியைப் பயன்படுத்து கின்றனர்.அது போன்று கிரேக்க மருத்துவத்தில் வீக்கத்துக்கு பற்றுப்போட பயன்படுத்துகின்றனர். வீக்கம் வருவதையும் காச்சல் வருவதையும் இக்கீரை தர்க்கும் ஆற்றல் உண்டு. பேஸ்சிய நாட்டிலே நீக்கோவைக்கு அருமந்தாக பயன் படுத்து கின்றனர். நீக்கோவை என்பது கால், முகம், கண்ணீத்தாரைப்பை( கண்களின் கீழ்ப்பகுதி),வயிறு போன்ற இடங்களில் நீர் சுரந்திருத்தல் உடலில் தேவையற்ற வகையில் நீர் தோல்லின் அடிப்பகுதியில் நீhதேங்கியிருத்தல்.  
பெண்களின் கற்பப்பையில் ஏற்படும் புற்று நோக்கு அருமருந்தாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
  இந்தக்கீரை உடலிலே நோய் எதிர்ப்புக் சக்தியை ஏற்படுத்தி புற்றுநோயை வராது தடுத்து புற்றுநோய் திசுக்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றது. முத்தோச நோய் என்னும் புற்றுநோய் இது ஒன்றில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவி உடலை அழித்து விடும் ஆனால் அஸ்துமா என்னும் சுவாசகாசம். இருதையநோய், நுரையிரல் நோய் போன்றவை அந்த உறுப்பை மட்டும் பாதிப்பாவை இதனாலே சித்தர்கள் இதனை முத்தோச நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
“காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
 வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” காய் குளிர்சியால் வரும் நோயை குணமாக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி குணமாக்கும் காய்க்குக் கபம் தீரும் என்றும் கீரை வெப்பத்தினால் வரும் நோயை குணமாக்கும். உடலில் குளிர்சிசியை ஏற்படுத்தி குணமாக்கும் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் என்று வெண்பாவில் கூறியுள்ளார். நோய்யுற்று உடல் தளர்தவர்களின் தளர்வு நீங்கி வலிமை பெற மனத்தக்காளி வற்றல் புளிக் குழம்பு சிறந்த பலனைத்தரும்,  “தீக்குள் உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும் மனத்தக் காளிக்குள்ள வாறு” என கூறிப்பிடுகின்றார். தளர்வு நீங்கி வலிமை பெறுகின்ற போது உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும் அப்போது மீள்திறனை ஏற்படுத்தும் ஆற்றல்லுடன் நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்தி உடலை வலுவுட்டும் சக்தி மனத்தக்காளிக் குண்டு. 
பயன்படுத்தும் முறைகள்:    
 1;.மனத்தக்காளி சூப்
தயாரிக்கும் முறை: தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து  பின் இறக்கி சூப்பாக பருக முடியும். பருகினால் வாய்வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும். 
2.பச்சையாக மென்று சாப்பிடலாம்.
3. கீரையை பருப்பு போட்டு கடைந்து காப்பிடலாம். பாத்திரத்தில் கீரையைப் போட்டு சின்னவெங்காயத்தை நறுகிப்போட்டு அதனுடன் அரைத்பங்கு தக்களிப் பழத்தையும் நறுகிப் போட்டு சிறிதளவு மிளகு சீரகம் பச்சைமிளகாய் இவை போட்டு திடமாக தன்னீவிட்டு காச்ச வேண்டும். கீரையின் பசுமை நிறம் மாறாது இருக்க சக்கரையை சிறிதளவு தூவி விடவேண்டும் பசுமை நிறம் மாறாது இருக்கும் .இதை எடுத்து வைத்து விட்டு இன்னுமோர் பாத்திரத்தில் எண்ணை அல்லது நெய்யில்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் பருப்பு அல்லது துவரம் பருப்பு அவித்த நீரை விட்டு அதில் அவித்துவைத்த இலையை போட்டு அவித்து வதக்கி கடைந்து தேவையான உப்புச்சேர்த்து எடுத்து சாதத்துடன் உண்ணமுடியும்.  பொதுவாக கீரைகளுக்கு புளிசேர்ப்பதை தவிப்பதால் சத்தி இழப்பின்றி முழுமையான பலனைப் பொறமுடியும். நெய் சேர்ப்பது கீரைக்கறிக்கு நல்ல சுவையைத்தருவதுடன் ஊட்டமாகவும் இருக்கும்.    
4. காயை அல்லது வற்றலை புளிக்குழம்பாக செய்து வெந்தையக் சேர்த்து தாயாரித்து உணவுடன் தேர்த்து உண்ண முடியும். கபம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவித்துக் கொள்ளலாம். வேந்தையம் குளிர்த் தன்மையானது.






முத்திக்கு வித்தாகும் சக்தி வழிபாடு
முத்திக்கு ஞானம் அவசியமானது. அதை சக்தியின்றி பெறமுடியாது. இதுவே வேதம் கூறும் உண்மை. அதனாலேயே சித்தர்களும் மகரிஷிகளும் ஆதிசக்தியை வேண்டி தவம் இருந்து அடைதற்கரிதான தவசக்தியும் வலிமையையும் பெற்றனர். சக்கியே முத்திகு மூலகாரணம். சுத்தசிவம் பரம்பொருள். அது இயக்கமற்றது அதை இயக்குவதே ஆதிசக்தி அதை சிவோஹம் என்று அழைப்பர் அதிலிருந்து பராசக்தி இதனை ஜகந்தியாமக சக்தி + ஜகத் என்று அழைப்பர். இதிலிருந்து இச்சா, ஞான, கிரியா, சக்திகள் தோன்றின இவை முறையே பிம்மா, விஸ்ணு, ருத்திரன்னும், முறையே விராட், ஸ்வாட், ஸம்ராட் தோன்றியது. இதன் முறையே ஸ்ருஷ்டி என்னும் படைத்தலும் ஸ்திதி என்னும் கார்த்தலும் ஸம்ஹாரம் என்னும் அழித்தலும் மும்மூத்திகளுக்கு தொழிலாக அமைந்தது. 
இதனை

'பராசக்தி: பராநிஷ்டா, ப்ரஜ்ஞான – கனரூபிணி
இச்சாசக்தி - ஜ்ஞானசக்தி – க்ரியாசக்தி - ஸ்வரூபிணி
சிச்சக்தி: சேதனாரூபா, ஜடசக்தி: ஜடாத்மிகா என்று 'அம்ருதானந்தயோகி' 
என்று குறிப்பிடுகின்றது.

சுத்தசிவத்தினிடம் முதலில் உருவாகுவது 'அஹம்' என்னும் உணர்வே அதுவே அன்னையின் வடிவம் அதற்கு ஆதிசக்தி என்று பெயர். வேதம் 'தத்துவம் அஸீ அஹம் பிப்மாஸ்மீ' என்று இயம்புகின்றது. ஆதிசக்தியின் ஆவிர்ப்பாவத்தினால் பணிமலை போலான சுத்தசிவத்துக்குத் தன் ஸ்வரூப ஆனந்தம் உண்டாகின்றது. அதனால் சிவமே தன்னை அறிய வியாகியான ரூபியியானாள். இதனாவேயே அன்னைக்கு 'விமர்சரூபிணி' என்றொரு பெயர்ருண்டு. அவள் சித்சக்தியை ஆச்ரயித்து அத்யஸ்த மாயா சக்தியை உருவாக்கினாள் இதனையே பராசக்தி என்று அழைக்கின்றனர். இதுவே உலகுக்கு வித்துப்போல் காரணமானாள். அவளை கரசரணாதி அவயவங்களுடைய திவ்ய மங்கள விக்ரஹ தாரணியாய்க் கருதுவோமானால் அத்தகைய அவளுடைய மூhத்தியின் திருபாதத்துளிகளே இச்சா,ஞானா, கிரியா சக்திகளான ப்ரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற திவிலைகள் கோடி கோடியாக எண்ணிலடங்காத அளவுக்கு தோன்றி மறைந்த வண்ணம் இருக்கின்றனர். அதைப் போன்றே விராட், ஸ்வராட், ஸம்ராட் என்ற பிரம்ம விஷ்ணு உத்திரர்களைக் கொண்ட பிரஹ்மாண்டங்களும் அத்தகையதே. அதனால்
ஆதிசக்தி: அமேயாத்மா, பரமா, பாவனாக்ருதி: அநேக கோடி ப்ரஹ்மாண்ட ஜனனீ' என்று சக்தி துதிக்கப்படுகின்றாள்.
அவளே பஞ்சப்ரம்ம ரூபிணி அதனாலேயே அவளை 'பஞ்சப்ரேதாஸநாஸீநா பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணி' என்று துதிக்கப்படுகின்றாள். நிஷ்கலமான பரம்பொருள் ஸகல- நிஷ்கல வடிவில் மூன்றாகவும் பின் ஐந்து எழு என விரிந்து செல்கின்றாள். அதனை 'யத்ர யத்ர மனோ யாதி தத்ர தத்ர ஸமாதய:' என்கின்றது. 'பஞச- யஜ்ஞ- ப்ரியா, பஞச –ப்ரேத- மஞ்சாதிசாயினீ, பஞ்சமீ,பஞ்ச- பூதேசீ, பஞ்சஸய்க்யோபசாரிணீ, பஞ்சக்ருத்ய –பராயணா' என பரதேவதையை ஐந்து ஐந்தாகவே அவளை வழிபாடு செய்கின்றோம். தைத்திரீய உபநிஸத் கூறுகின்றது ' பாங்க்தம் வா இதம் ஸர்வம் பாங்க்தேனைவ பாங்க்தம் ஸ்ப்ருணோதீதி' பஞ்சகிருத்தியம், பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரைகள், பஞ்கப்பிராணர்கள் பஞ்சக மேந்திரங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்சகோசங்கள், பஞ்சமூர்திகள் என பிரபஞ்சம் ஐந்தின் வடிவமாக இருக்கினறது. ஆனால் வேதங்கள் மட்டும் நான்கு. ஐந்தாவது வேதம் ப்ரம்மவேதமாகும். ஐந்தின் வடிவமான பரதேவதை பஞ்சோபசாரங்களான கந்தம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்தியம் என பூஜிக்கப்படுகின்றாள்.
பரதேவதை 'பஞ்சப்ரஹ்மஸ்வரூபிணி' அவள் ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசானன், ஸதாசிவன் ஐந்து வடிவில் நின்று ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்கிரஹம் என்னும் பஞ்சகிருதியங்களையும் அவளே செய்கிறாள். அவன் இன்றி எதுவும் இயங்காது. அதனாலேயே 'சக்தி இன்றி சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தி இல்லை' என்போர். பராசக்தியின் இயக்கம் இல்லாதபோது ப்ரம்மா முதலிய ஐவரும் பிரேதங்களே இதுவே தத்துவ இரகசியம் 'ப்ரஹ்மா விஷ்ணுச்ச ருத்ரச்ச ஈச்வரச்ச ஸதாசிவ: பஞ்சப்பிரேதா வராரோஹே நிச்சலா ஏவ தே ஸதா' என்று வேதம் கூறுகின்றது. பஞ்சப்பரம்மங்கள் அனைத்துமே சக்தி வடிவம் சக்தியின் அனுக்கிரகம் இல்லாமல் முத்தி இல்லை. முத்திக்கு ஞானம் அவசியம். இதனால் அம்பிகையை
' சேஷத்ரஸ்வருபா சேஷத்ரேசீ சேஷத்ரஜ்ஞ – பாலினீ
சஷயவ்ருத்தி – விநிர்முக்தா சேஷத்ரபால - ஸமர்ச்சிதா' என்று குறிப்பிடுகின்றது ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமம். அம்பிகையே சேஷத்திரமாகவும் சேஷத்திரஞானமாகவும் இருப்பவள் அவளே. சேஷத்திரமாக கருதப்படுபவை ஐம்பூதமான பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பவையும் அகங்காரம், புத்தி, மூலப்பிரகிருதி என்னும் இவை மூன்றும் ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், மனத்துடன் கரணங்கள் பதினொன்றும் சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்ற இந்திரிய விஷயங்கள் ஐந்தும் சேர்ந்து இருபத்து நான்கு தத்துவங்களும் கூடிவரிதல் சேஷத்ரம் எனப்படும். ஞானமில்லாமல் சோசஷ தருமத்தைப் பற்றி பலவாறு கேட்டாலும் பல கருமனுட்டானங்களைச் செய்தாலும் மோசஷம் அடையமுடியாது. அம்பிகையின் அனுக்கிரகம் இருந்தாலே அதை அடைமுடியும். ஜீவனுடைய தளைகளைளாகிய ஆறியாமையை போக்கி பரமானந்த அனுபவத்தை அருளுகின்றாள். இதனால் அம்பிகையை 'பசுபாசவிமோசினி' என்று வழிபடப்படுகின்றால். இதனை
'பக்திமத் - கல்பலதிகா பசுபாச- விமோசினீ
ஸம்ஹ்ருதாசேஷ- பாஷண்டா ஸதாசார- ப்ரவர்த்திகா' என்று துதிக்கப்படுகின்றது ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்தில். ஒருமுறை குருதேவர் ஸ்ரீ ராமகிஷ்ணபரமஹம்சர் காசிவாரநாசிக்கு யாத்திரை சென்ற போது அரிச்சந்திர காட்டில் தவத்தில் திளைத்த போது அங்கு இறந்த ஆத்மா ஒன்றுக்கு அம்பிகை மோட்ச வாசலை திறக்க சிவபெருமான் அனுப்பும் திவ்விய காட்சியை ஞான கட்சியாக கண்டார். இதனாலேயே சித்தர்களும் மகரிஷிகளும் ஆதிசக்தியின் அருள் சக்தியை பெற்றே அவர்கள் அடைதற்கரிய சக்திகளை பெற்றுனர். அதனாலேயே நாம் அவர்களை வழிபடும் போது அவர்களிடம் நீங்கள் பெற்ற அருட்சக்தியை எங்களுக்கு வழங்குமாறு வேண்டுதல் செய்கின்றோம். அவள் நிர்க்குணமாகவும் ஸகுணமாகவும் உபாசனை செய்யப்படுகின்றாள். அதனாலேயே அவளை நீராகா ராகமதனீ நிர்மதா மதநாசினீ
நிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ
நிஷ்க்ரோதா க்ரோதசமனீ நிர்லோபா லோபநாசினீ
நி:ஸம்சபா ஸம்சயக்னீ நிர்ப்பவா பவநாசினீ ................ என்று சுலோகங்கள் நீண்டுகொன்டே செல்லுகின்றது. பரதேவதையான அம்பிகையை ' நிராதாரா, நிரஞ்சனா, நிர்லேபா, நிர்மலா, நித்யா, நிராகாரா, நிராகுலா, நிர்க்குலா, நிர்க்குணா, நிஷ்களா, சாந்தா' என்று பாடி பரவி வழிபட்டால் நம்மிடம் உள்ள ' காமக் குரோத லோப மோஹ மத மாச்சரியம்' என்ற கறைகள் நீங்கி உள்ளம் அம்பிகையின் நித்திய வாஸ திருக்கோயிலாக விளங்கும். அவள் வாஸம் செய்யும் வீடு எமது உடல். குருதேவர் ஸ்ரீ ராமகிஸ்ணர் குறிப்பிடுகின்றார் 'மணியும் அதன் ஒளியும் போல நிர்க்குணமான பரம்பொருளே சகுணமாயும் உள்ளது. பிம்மமாயிருக்கும் பொருளே சக்தியுமாய் உள்ளது. கிரியையற்றதாகக் கருதும் போது அது பிரம்மம் எனப்படும். படைத்து காத்து அழிக்கும் போது அது சக்தி எனப்படுகின்றது. எனவே எல்லாமே சக்தியின் வடிவவே அவள் இன்றி மோட்சம் இல்லை. முத்திக்கு வித்தே ஆதிசக்தியே