Monday, March 15, 2021

 மரணத்தின் பின் மனிதர் நிலை

எப்போது நாம் அதை சிந்திப்பதில்லை. கண்டதேகோலம் கொன்டதே வாழ்ககை என்று வாழ்வதே பெரும்பாலாரின் வாழ்க்கை . மறுமை எமக்கு தெரியாத ஒன்று அது எப்படிதான் இருந்தால் என்ன என்று வாழுகின்றோம். சொர்க்கமும் நரகமும் நாம் வாழும் வாழ்க்கையில் தான்.
இறப்புக்கு பின் உள்ள வாழ்கை மிகவும் பாரதுரமானது நாம் செய்யும் செயலின் விளைவு அது ஆத்மாக்கு அழிவில்லை அது பேர்த்திக் கொன்டு இருக்கும் உடலுக்கே அழிவு அது ஆறிவுரூபமாயிருக்கும். பட்டினத்தார்' அத்தமும் வாழ்வும் அககத்துமட் டேவிழி அம்பொழு
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விமமியிரு
கைத்தலை மேல்வைத்து அழுமைந் தருஞ்குடு காடுமட்டே பற்றித் தெடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே என்றார் உடலை மெய்பொருள் என்று எண்ணி அதன் சுகத்க்காக நாம் செய்யும் செயல்கள் பிறப்புக்கே வழிசமைக்கும். ஒருவன் பணம் பழத்தை ருசி என அதிகம் உண்டால் அவன் பின்னர் பித்தத்தால் வேனை அடைவதை ஒத்தது இந்த உலகமும் உடலும் இன்பம் என்று என்னுவோர் மறுமையில் பெரும் துன்பத்தையே அடைவர். புண்ணியத்தை அறவழியில் தேடிவைத்தவர் மறுமையில் இன்பம் அடைகின்றர்.
நிலவுலகில் இயங்கும் உடலானது தடிப்பாய் கனத்த பொருட்களின் சேர்க்கையே அதனால் இதனை துலகேம் என்று ஞானநூல்கள் எடுத்து இயப்புகின்றன இதன் உள்ளே இனனும் நான்கு தேகங்கள் உள்ளன இவை வெங்காய சருகுகளை ஒத்தாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி இருப்பது போல் அமைந்து இருக்கும்ஒன்றை மற்றொன்றினை ஊடுருவி நிற்காது மற்றுக் கண்ணடியின் அப்புறத்தே தோன்றின ஒளியானது அதனை ஊடுருவிக் கொண்டு அதன் இப்புறத்தேயும் தோன்றுதல் போல இந்த தூல உடம்பினுள் மாற்ற நான்கு உடம்புகளும் ஒன்றை ஒன்று ஊடுருவிக் கொண்டு தூலசரிரத்தில் வியாபித்திருக்கின்றன இவை துண்ணியதாகவும் மெல்லியதாகவும் இருக்கின்றன. அவையாவன சூக்குமசரீரம் குணசரீரம் கஞ்சுகசரீரம் காரணசரீரம் என பெயர் பெறும். அல்லது பிராணமயகோகம் மனோமயகோசம் விஞ்ஞாணமயகோசம் ஆனந்தமயகோசம் எனவும் அழைக்கப்படும். இறப்பின் போது தூல உடம்பான அன்னமயகோசம் அழிந்து சூக்கும் உடலுடன் ஏனை மூன்றும் உடல்களும் பிறவிதோறும் சூக்குமஉடலுடன் ஒற்றுமையுடன் பயனிக்கும். தூலதேகம் மட்டுமே இறந்து போவது ஆனால் மற்றவை இறப்பதில்லை . அவ்வுடல்களை பாதுகாக்க நற்செயல்களும் நற்சிந்தனைகளும் அவசியமாகும் அல்லாது தூலஉடலுக்கு வேண்டும் அன்னமும் நீரும் குறைகளும் அல்வாதேவை ஆனால் சூக்கும சரீரங்களில் இருந்தே
அருமையான
பலகாரியங்களை செய்ய முடியும். தூலதேகத்தில் பலநாட்கள் பயணிக்கும் பயணம் சூக்கும உடலுக்கு ஒருசில சேக்கன்களே தேவை.
சுக்குமசரீரம் பற்றி நோக்கு வோமாக நாம் கேள்வி பட்டிருக்கின்றோம். சித்தர்கள் நினைத்தமாத்திரத்தில் பரவெளியில் உள்ளவற்றை எல்லாம் சில நமிடங்களில் சென்று அறியும் ஆற்றல் உள்ளவர்கள் என்று அவர்கள் சுக்கும தேகத்திலேயே அவர்களால் அவற்றை அறியும் ஆற்றல் பெற்றவர்கள் . தூலதேகம் இருக்கும் போதே சுக்குமதேகத்தில் சஞ்கரிக்கக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள் சித்தர்கள் தூலதேகம் பாரமான பூமியில் மட்டும் உலாவக் கூடியது ஆனல் சுக்கும தேகம் பாரமற்ற பரவெளில் சஞ்சரம் செய்யக்கூடியது. தூலகேத்தில் இருப்பவர்கள் சுக்கும தேகத்தில் செல்லும் போது அவர்கள் தூலதேக வடிவத்தை பெற்று தன்னை காட்டும் வல்லமை உண்டு. இலங்காபுரியில் வாழ்த ஆணைகுட்டி சுவாமி காரதீவில் இருக்கும் போதே கதிர்காமத்தில் காட்சி கொடுப்பது அவர் வாழ்த கால்த்தில் சர்வ சாதாரணம் அதுபோல் யோகர் சுவாமியும் அப்படிப்பட்டவர்கள் என்பதை அவர்களின் வாழ்கை வரலாற்றை வாசிக்கும் போதும் அவர்கள் வாழ்ந்தகாலத்தில் வாழ்ந்தவர்கள் சொல்ல கேள்விபட்டுள்ளோம் யோகர் சுவாமிக்கு பணிவிடை செய்யும் பெண்ணின் மகன் நீண்டகாலமாக வெளிநாடு சென்று எத்தகவலும் அறியாது தவித்த போது அதை அறிந்த சுவாமி அப்பெண்ணிடம் யான் அறைக்குள் செல்கின்றேன். அறையை பூட்டிவிடு என்னை யாரும் தொந்தரவு செய்யாது பார்த்துக்கொள் என்று சொல்லி விட்டு நிஸ்டையில் ஆழ்து விட்டார் . அதன் பின் சிஸ்டை கலைந்து சுவாமி எழுந்து வந்து வந்து அவரின் வழமையான கரியங்களில் ஈடுபட்டார். சிறிது காலத்தின் பின் அப்பெண்ணுக்கு தன் மகனிடமிருந்து கடிதம் வருகின்றது . அம்மா சுவாமி என்னிடம் வந்து நீ வருந்தியதை கூறி உடனடியாக கடிதம் போட்டு உன் நிலையை அறிவிக்கும் படி சொல்லி சென்றார் என்று. அப்போது தான் அப்பெண் சுவாமியின் ஆற்லை அறிந்து அவர்கால்களி விழ்ந்து வணங்கினாள். இந்த நிலை அவனே கதி என இறைவனிடம் சரணடைந்து அறமாய் வாழ்பவருக்கே கிட்டுகின்றது. பணம் பொருள் பண்டம் பெண் மண் ஆசைபிடித்துயாய் அலைபவனக்கு கிட்டுவது இருண்ட உலகமே அவன் பேயாய் அவனது சுக்கும் உடல் அலையும். இறைவனை தேடி உலகபற்றற்று வாழ்தவன் ஒளி உலகில் ஒளியாய் அவனது சுக்கும உடல் தூய வெண்மையான பட்டு பொன்ற கையில் அகப்படா உருவையே பெறுகின்றான். அவன் தேவதூதனாக மனுக்குல சேவைக்காக பூவுலகில் சஞ்கரிக்கின்றான். இருள் உலகத்வர் கருமை நிறங்கொண்டு அவர்களின் ஆக்குரோதத்தை தீர்க்கவும் அவர்கள் உணவுக்கு அடிமையாகி இறைச்சிக்கும் மீனுக்கும் குடிவகைக்கம் இலக்காகி அதற்காக பூவுலகில் சஞ்சரித்து மந்திரவாதிகளின் கைகளில் அகப்பட்டு ஏவல் செய்யப்படுவர்.
ஒருவர் இறக்கும் தருவாயில் நிதானம் இருக்கும் போது அவரின் உறவினர்கள் அதாவது அவர் இறப்பதற்கு முன்னர் இறந்தவர்கள் வந்திருப்பதாக கூறுவதை அறிந்து இருக்கின்றோம். அது போன்று கடவுளின் வடிவங்களை அவர்கள் கண்டதாக கூறுவதையும் அறிந்து இருக்கின்றோம். அவைகள் அவரின் மூதாதைகளின் சுக்கும உடல்களே அதை மற்றவர்கள் அறியமாட்டார்கள். எனது தந்தையின் இறப்பின் போது ஒரு சம்பவம் நடை பெற்றது தந்தை நினைவிழந்து மூன்று தினங்கள் எமது வீட்டில் இருந்த போது இரண்டாம் நாள் அதிகாலையில் தந்தை இருந்த அறையின் வாசலில் ஓர் கறுத்த தடித்த உருவம் ஒன்று இருந்தது.எனது தங்கை இதை கண்ட போது அது எனது தங்கையை தள்ளி விழுத்தி விட்டு வெளியில் ஓடிய போது பயந்து கத்திநாள் அதன் பின் எமது வீட்டு நாய் பல குட்டிகள் இன்று இருந்தது அந்த குட்டிகளில் ஒன்று துடிதுடித்து இறந்தது. அது எமதூர். ஆனால் எனது தந்தை சிவபத்தன் அனால் அங்கு சிவதூதர்கள் வருவதை கண்டு ஓடியதாக எமது உணருகின்றேன். அடுத்த நாள் எனது தந்தை சிவபதம் அடைந்தார். பருவுடல் புதைக்கும் இடத்தில் அதன் சுக்கும உடல் இருக்கும் உலாவிக் கொண்டு இருக்கும். அது பருவுடலில் கொண்ட அபிமானத்திலேயே ஆகும். அனாலேயே இந்துக்கள் தூலதேகத்தை எரித்து விட்டால் அதில் சுக்கும தேகத்துக்கு இருந்த அபிமானம் நீங்கிவிடும். எரிப்பதே சிறந்தது.
ஒருவர் இறக்கும் தருவாயில் நிதானம் இருக்கும் போது அவரின் உறவினர்கள் அதாவது அவர் இறப்பதற்கு முன்னர் இறந்தவர்கள் வந்திருப்பதாக கூறுவதை அறிந்து இருக்கின்றோம். அது போன்று கடவுளின் வடிவங்களை அவர்கள் கண்டதாக கூறுவதையும் அறிந்து இருக்கின்றோம். அவைகள் அவரின் மூதாதைகளின் சுக்கும உடல்களே அதை மற்றவர்கள் அறியமாட்டார்கள். எனது தந்தையின் இறப்பின் போது ஒரு சம்பவம் நடை பெற்றது தந்தை நினைவிழந்து மூன்று தினங்கள் எமது வீட்டில் இருந்த போது இரண்டாம் நாள் அதிகாலையில் தந்தை இருந்த அறையின் வாசலில் ஓர் கறுத்த தடித்த உருவம் ஒன்று இருந்தது.எனது தங்கை இதை கண்ட போது அது எனது தங்கையை தள்ளி விழுத்தி விட்டு வெளியில் ஓடிய போது பயந்து கத்திநாள் அதன் பின் எமது வீட்டு நாய் பல குட்டிகள் இன்று இருந்தது அந்த குட்டிகளில் ஒன்று துடிதுடித்து இறந்தது. அது எமதூர். ஆனால் எனது தந்தை சிவபத்தன் அனால் அங்கு சிவதூதர்கள் வருவதை கண்டு ஓடியதாக எமது உணருகின்றேன். அடுத்த நாள் எனது தந்தை சிவபதம் அடைந்தார். பருவுடல் புதைக்கும் இடத்தில் அதன் சுக்கும உடல் இருக்கும் உலாவிக் கொண்டு இருக்கும். அது பருவுடலில் கொண்ட அபிமானத்திலேயே ஆகும். அனாலேயே இந்துக்கள் தூலதேகத்தை எரித்து விட்டால் அதில் சுக்கும தேகத்துக்கு இருந்த அபிமானம் நீங்கிவிடும். எரிப்பதே சிறந்தது.
சூக்கும சரீரத்தின் வடிவம் தூல சீரத்தை ஒத்தாக இருந்தாலும் அது போத்தி இருக்கும் ஆடை தூய வெண்மையான கண்ணுக்கு மாத்திரம் புலப்படுகின்ற தோற்றமே அன்றி அது கைகளில் படாது இவ்வாடை யை பெற அவ்வாத்மா பெற்றுள்ள பரிசுத்தத்தை பொறுத்தே அது அமையும். தும்பை மலரை ஒத்த நிறமாக இருக்கும். அவரின் செயல்கள் தீயவையாக இருப்பின் அது கறுப்பு உடையாக மறிவிடும். அவர்கள் இருள் சூழ்ந்த உலகில் யாதும் அறியாது கஸ்டப்பட்டு வாழ்வதாக அவர்களே அவர்களது உறவினர்கள் அழைத்தபோ தெரிவித்தகாக பல செய்திகள் உண்டு. அவர்கள் தங்களின் விடுதலைக்காக இறைவனிடம் வேண்டு மாறு தமது உறவினர்களிடம் வேண்டியதையும். வேண்டுதலின் பின் தங்களுக்கு வெளிச்சம் தெரிவதாகவும். பலசெய்தி களை அறியக் கூடியதாக இருக்கின்ற. இதை அடிப்படையாக வைத்தே இறந்த மூதாதையர்களுக்கு கிரகஸ்த ஆச்சிரமத்தில் பஞ்ச ஜஞ்சங்களில் பிதிர் ஜஞ்ஞம் என்பது கடமையாக வகுக்கப்பட்டுள்ளது. கஸ்டஙகள் நேருகின்ற போது சாஸ்த்திரம் பார்க்க சென்றால் பித்ருதோசம் இருக்கு அதற்கு பரிகாரம் செய்யும்மாறு கூறுவர் இதற்கு மாதம் தோறும் வரும் அமாவாசை அதிலும் சிறந்தது ஆடிஅமாவாசை திவச நாள் மாகாளையம் பொன்ற நாட்களில் தோய்ந்த தூய ஆடை அணிந்து உவவாசம் இருந்து எள்ளு இறைத்து தற்பணம் செய்து காக்கைக்கு எள்ளு சாதம் வைத்து பின் தாம் தேடி தனது உணவை உண்ணமுடியாத கூன், குடு, நொன்டி, சப்பானி, நோயாளி முதலியோக்கு அன்னமிட்டு இறைவனிடம் இறந்த மூதாதையருக்கு விடுதலை வேண்தல் செய்தல் வேண்டும். "மாதா பிதா செய்தது மாந்தருக்கே' என்பது. ஏன் என்றால் அவர்கள் இம்மையில் செய்ததை மறுமையில் அனுபவிக்கும் போது அதன் வேகத்தை தாங்க முடியாமல் அவதியுறும் போது அவர்களுக்காக அவர்கள் சூக்கும உடலில் எதுகும் செய்ய முடியாது. அதற்கு தூல உடல் தேவை . அவர்களின் பிள்ளைகள் உற்றாரே செய்ய முடியும் அதை செய்ய வைக்க அவர்களின் ஆவியாகி துன்பத்துக்குள்ளாக்கி அதை அடைகின்றனர்.
நிலவுலகில் உயிரோடு இருக்கையில் பரிசுத்த சிந்தையிலும் செய்கையிலும் திரிகரண சுத்தியுடன் நேர்மை நியாயம் உண்மையும் வாழ்ந்வர்கள் அறுமையில் துன்பம்மெயியார் அவர்கள் ஒளி உலகில் பரலோகத்தில் தூயவெண்ணிறமான சூக்கும் உடலை பெற்று தேவவுருபெற்று இன்புறுகின்றனர். அறிய பவருபத்தில் பூதவுடலை விட்ட குழந்தைகள் பொண்நிறம் பெற்று தேவதை வடிவைப் பெறுகின்றனர்.
பரோபகாரமான காரியம் இன்றி மற்றவர்களுக்கு வஞ்சகம் சூது பெறாமை பேராசையில் இறைசிந்தனை இன்றி நிலவுலகில் வாழ்ந்தவர்கள் தனது இறப்பின் பின் அச்செயல்களில் ஈடுபடும் மந்திரவாதிகளின் பிடியில் அகப்பட்டு இறைச்சிக்கும் இரத்தத்துக்கும் மதுவுக்கும் மீனுக்கும் ஏவல் செய்பவராக பேயாக செயல்படுவர்.ஆனால் நல்லோர் இதற்கு இணங்க மாட்டார்கள் அவர்கள் ஒளி உலகையும் தூமையான வெண்மையாக சூக்கும் உடலையும் தீயோர் கருமையான சூக்கும உடலையும் அடைவர். இது எவ்வாறு நிகளும் மெனில் தீய குணமுடையோர் இருள் உலகில் கருமையாக சூக்கும் உடலில் எதும் அறியாது திரியும் போது அவர்களுக்கு பருவுடலில் இருக்கும் போது பதிவான தீய எண்ணங்கள் தொன்றிய வண்ணம் இருக்கும். அதை மந்திர வாதிகள் அறிந்து அவர்களின் மண்டை ஓட்டை எடுத்து அவர்களை அழைக்கும் வல்லமை தீய செயலகளை செய்யும் மந்திர வாதிகளுக்கு தெரியும். ஆனால் அவர்களால் எல்லாருக்கும் தீங்கு செய்ய முடியாது . செல்லுமிடத்திலே தான் அவர்களுக்கு வலிமை செல்லுமே அல்லாது மற்ற விடயங்களில் அஃது உண்டாகாது. இறைச்சிகள் மீன்கள் உண்டு மற்றவர்களுக்கு தீங்கு நினைவும் தீயசெயல்களும் உடையவாராய் இரப்பவர்களுக்கும் அசுத்தமான இடங்களில் அசுத்தமாக வசிப்பவர்களிடத்தும் தீய பிசாசு தொடர்ந்து சென்று துன்பம் செய்யும். சுத்தமான உணவு அருந்தி தூயசிந்தையில் இருப்பவர்களிடம் வர அவை துனிவதில்லை. ஒரு வேளை மந்திர வாதியின் ஏவலால் அதாவது அவரது மந்திர பலத்தால் அவரிடம் சென்ற பேய் பலியாது மந்திரவாதியையே துன்புறுத்தும். இறைசிந்தனையும் தர்மசிந்iயுடன் வாழ்பவனை அல்லது வாழ்தனை இருள் அனுகாது. இவ்வுலகை விட்டு நீங்கியும் சூக்கும உடலில் வருவது உயிர் நீக்கும் போது கொன்ட பொருள் காசு ஆசையே மீண்டும் வந்து அவை இருக்கும் இடத்தில் இருப்பதற்காகவே. சொத்தாசை கொண்டவன் நிலை அதுதான். பழைய வீடுகள் இடித்துக் கட்டம் போது அதன் ஒருபகுதியை வைத்தே கட்டுவது மரபு . சில வீடுகள் எப்படி கட்டினாலும் அதில் இருக்க முடியாது. அது பாழ்ளடைந்து கானப்படுவதை கண்கின்றோம். காணிகளை கொள்வனவு செய்து வீடுகட்ட வெளிக்கிட்டால் கட்ட முடியாது . அப்படி கட்டினாலும் வீட்டு முடிபடாது. முடித்தாலும் இருக்க முடியாது. இதற்கெல்லாம காரணம் அச்சொத்தின் ஆசையுள்ள சூக்கும இருள் உலக வாசிகளே.
மச்ச மாமிச்களை புசிப்பவர்களில் கெட்ட ஆவிகளை பிரயோகிப்பது. இலகு உடல் பிற உயிர்களின் உடல்களை ருசித்து புதைத்த சவக்காலை. இறைவன் மும்மல்களை நம் உள்ளிருந்து நாடியவனுக்க அழித்த சுடலையும் அதுவே எப்போதும் நாம் இருக்கும் வீடு அலயம் போல் சுத்தமாக நறுமணம் கமழும் மலர் சோலையாக இருக்க வேண்டும். கெட்ட வாடைகள் வீட்டின் சுற்றுப்புறங்களில் வீசக்கூடாது. இப்படி இருந்தால் துர்ஆவிக்கு நெருங்க முடியாது. சுத்தபோசணமும் இறை நம்பிக்கையுடன் தூயசிந்தனையில் இருப்பவனை நன்மை செய்யும் இறை துதரான தூய ஆவி நம்மை தூய்மைப்படுத்தி இறைவனிடம் சேர்க்கும்.
வீட்டை வாங்கி அதில் இருப்பதானால் இவ்வீட்டின் சுவரில் அங்கு வாழ்ந்தவர்களின் எண்ணங்கள் பதிவாகி இருக்கும். அவை அங்கு வாழ்தவர்களின் நெறிமுறைக்கு ஏற்ப இருக்கும். அதை அறிந்து சுவரின் மை எது என தீமானிக்க வேண்டிய நிலை உண்டு. நாம் வீடுகளுக்கு செல்லும் போது அங்கு எமது மனம் அதிக நேரம் இருந்து அளவளாவ விரும்பும். சில இடத்தில் இருக்க விருப்பம் இருக்காது. அது ஏன் என சிந்தித்தது உண்டா. அவை அங்கு வாழ்ந்த வாழ்ந்து கொன்டு இருப்பவர்களின் எண்ண அலைகளே அன்றி வேறொன்றும் இல்லை. நான்பர்களும் அப்படித்தான்.
பேராசையால் மனிதன் இறந்த பின் இருள் உலகம் அடைந்து. எதுவும் அறியதவனாக நிலவுகில் அவன் தேடிய சொத்துக்களை நாடி அவனின் சூக்கும உடல் அலைகின்றது. அது போல் மற்றவரை பழிதீர்க்க நினைத்து முடியாமல் உயிர் நீர்த்ததவர்கள் சூக்கும உடலில் பழிதீர்க்க இருள் உலகை அடைந்து மீண்டும் நிலவுலகை அடைந்து அவதியுறுகின்றனர். சொத்தில் பற்றற்று அவற்றை இல்லாதோருக்கு பகிர்ந்தளிதவர்கள் மறுமையில் ஒளி உலகை அடைந்து தூய வெண்நிற உடலை பெற்று இறைவனிடம் இருந்து இன்புறுகின்றனர். ஒருவர் கொலை செய்யப்படுகின்ற போது அவனை கொலை செய்தவனை அவனது சூக்கும உடல் நன்கு அறியும் அறிந்து அவனை துன்புறுத்தும். ஆனால் நல்லவர் ஒருவர் கொலை செய்யப்படும் போது அவர் நீதியக்காய் அவருக்காக போராடுபவருக்கு உதவியாக இருந்து தண்டனை வாங்க சூக்கும உடல் செயல்படும். சூக்கும உடல் எப்போதும் உஸ்ணமானது. அது பருவுடல் புதைக்கப்படுமிடத்து அது புதைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கும் வெயில் உஸ்ணம் அதிகரிக்கும் போது நீர்நிலைகளை நாடி செல்லும் பின்னர் மாலை நேரத்தில் புதைக்கப்பட்ட இடத்துக்குவரும். அதனால் ஆன்றோர் பருவமடையாத அல்லது முகப்பொலிவான பெண்களை மதிய நேரத்திலும் மலை நேரத்திலும் நீர் நிலைகளுக்கு அருகாமையில் செல்வதை தவிக்கச் சொல்வர்.

 "எதை எண்ணுகின்றானோ அதுவாகின்றான்"


என்பதற்கமைய வாழ்க்கையில் இலட்சியங் இருக்கின்றன அவைகளில் உலகியல் சாந்தவை மிக வரைவாக நிறைவேறுக் கூடியவை ஆனல் நேர் எண்ண செயல்பாடுகள் நிறைவேற பலதடைகளை தாண்டவேண்டி இருக்கும் அவை பல போராட்டங்கள் சாவால்களை எதிர் கொன்று பொறுமை விடாமுயற்சி தியாகம் வைராக்கியம் எனபவற்றால் அவை நிறைவேறும். அவர்கள் பூவுலகில் பலபோரட்டங்களில் வெற்றி பெறமுடியும். ஆனல் உலகியல் என்பது சார்தானின் கையில் உள்ளது .இகஇன்பம். ஜெசு நாதரிடம் இறுதி வரை சாத்தான் கேட்டது போல. பரஇன்பம் பெற பூவுலகின் பற்றற்ற நிலையை அடைந்து பூவுலகை வெறுக்க வேண்டும். பூவுலகில் ஆசை கொண்டால் பிறப்பு உண்டு. சுக்கும சரீரத்தில் மனவெண்ணங்கள் பதிந்து இருக்கும் ஐந்து உடலில் பருவுடல் மட்டுமே அழியும் நம் கிழிந்த சேட்டை எறிந்து விட்டு புதிய சேட் மாற்றுவதை ஒத்தது இறப்பு பிறப்பு அதில் பிராணமய கோசத்தில் மனோமய விஞ்ஞானமய ஆனந்தமயகோசங்கள் ஆடையப்பெற்ற அளவுகளில் சேர்ந்து அடுத்த பிறவியில் தொட இருக்கும். அதை நிறைவு செய்யவே பிறவி எடுததை மயை மாயமாக மறைத்து மீண்டும் பிறப்புக்கு வழிவகுக்கும் சேர்த ஞானம் விஞ்ஞான மய ஆனந்த மயத்தில் இருக்கும் அற்றின் அளவே அவன் அருளை தீர்மானிது அவன் நம்முள் வெளிப்படுவான். அல்லது மறைந்திருப்பன். அதனாலேயே வேதம் மறை ஆகி விட்டது. அவனை நாடியவனுக்கு வெளிப்படுவான் நாடாருக்கு மறைந்திருப்பான் . எல்லோரிடமும் அவன் இருக்கின்றன்.

ஸ்ரீமத் பாகவதத்தில் இரண்டு கதைகள் கூறப்பட்டுள்ளது ஒன்று பரதரின் கதையில் மானதாக பிறந்ததும் அடுத்தது இறப்பின் பொது கடசியாக கடசி மகனின் பெயரான நாராயணனை அழைத்து எமகண்டம் நீங்கி வைகுண்டம் அடைந்தமை இவை இரண்டும் உடலை விட்டு பிரியும் போது எதை நினைக்கின்றார்கலோ அதை அடைவர்
ஓம் ஸ்ரீ அகத் ஈசாய நமஹ

 "அறிவியல் நோக்கி காயத்ரீ மந்திரம்"

காயத்ரீ மந்திரம் சாவித்திரி என்றும் வேதமாதா என்றும் அழைக்கப்படும். காயத்ரீ ஸர்வ வேதா நாம் மாதா என்று கூறப்பட்டுள்ளது. இது வேதசாரம் என்று குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகின்றார்.
"ஓம் பூர் புவஸ் ஸீவ:
தத் ஸவிதுர் வரேணியம் பக்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: பிரசோதயாத்"
அறிவியல் ரீதியாக அனுகும் போது பூமியை தன்னுள் அடக்கிய ஆகாய கங்கைத் தெகுதியில்(GALAXIES) 100 000 நட்சத்திரங்கள் உள்ளாக அறிவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். அதில் உள்ள ஒவ்வோர் நட்சத்திரங்களும் சூரியனைப் போன்ற கிரகங்கள் அவை எல்லாமே தன்னைத் தானே சுற்றி வருகின்றது. சூரியனும் அதன் குடும்பமும் விண்வெளில் உள்ள நட்சத்திர கூட்டங்களும் சற்றிவர 22.5 கோடி ஆண்டுகளாகும். இவையாவும் வினாடிக்கு 20.000 மையில்கள் வேகத்தில் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லுகின்றது.
இவ்வாறு 20.000 மைல் வேகத்தில் நகரம் பூமி கிரகங்கள் நட்சத்திரத் தொகுதி என்பன எழுப்பும் ஒலி ஆதாரம் ஓம் என்னும் பிரணவம் ஆகும்
ஒம் என்னும் ஒலி ரிஷிகளின் தியானத்தில் ஈக்கப்பட்டு இறைவனின் நாமமாகக் கொள்ளப்பட்டது.
'ஒமிதி ஏகாசஷரம் பிரம்ம" ஓம் பரம்பொருளின் பெயரே ஓம் என்று கீதை இயம்புகின்றது.ஒம் என்பது "நாதப் ப்ரம்மம்" மகத்தான ஒலி 'உத்தீதம்" வானுலகம் எழுப்பும் இனிய நாதம் "அநாஹதம்" தியானத்தில் ஆழ்நிலையில் கேட்கப்படும் ஒலிவேகமாக இயங்கும் நட்சத்திர தொகுதிகள் 1/2 MV 2 என்ற அறிவியல் அளவிற்குச் சமமான இயக்கு விசையைத் (KINETIC ENERGY) தோற்று விக்கின்றன என்றும் அதுவே இந்தப் பிரபஞ்சம் பயன்படுத்தும் சக்தியைச் சமப்படுத்கின்றது என்றும் கண்டனர். எனவே அச்சக்தியை அவர்கள் பிரணவம் அதாவது சத்தியின் கருவூலம் என்று அழைத்தனர் .
உருவகம் அற்ற இறைவனை பெயரும் உருவமும் உதவும் என்று மஹரிஷி விசுவாமித்திரர் கூறினார். மேலும் கண்ணுக்கு புலப்படாத இறைவனை ஓம் என்ற ஒலி மூலமும் கண்ணுக்கு புலப்படும் நட்சத்திரக் காட்சி மூலமும் அறிய முடியும் என்றார்.
'தத் ஸவிதுர் வரேண்யம்"
தத்- அந்தக் கடவுளான ஸவிது- சூரியன் வரேண்யம்- வணங்கத்தக்கவர்
"ஓம் பூர் புவஸ் ஸீவ 'என்பன சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்கள் ஸீவ என்பது நட்சத்திர தொகுதி பிரணவத்தின் மூன்று எழுத்துக்களுமான அ - உ - ம ஆகியவற்றில் இருந்துதான் "பூர் புவஸ் ஸீவ" என்ற வியாஹ்ருதிகள் தோன்றின. அதிலிருந்து காயத்ரியின் பிரிவுகளும் வேதங்களும் தோன்றின.
'பர்க்கோ தேவஸ்ய தீமஹீ"
பர்க்கோ- ஒளியை தேவஸ்ய -தேவதையுடைய தீமஹீ - நாம் தியானம் செய்வோம். இதனால் கண்களுக்கு புலனாகும்ஒளியின் மூலம் கண்களுக்கு புலனாகாத இறைவனை வணங்குமாறு மஹரிஷி கற்பிக்கின்றா.
"தியோ யோந: ப்ரசோதயாத்"
தியோ- புத்தியை யோ- எவன் ந நம்மை ப்ரசோதையாத்- நல்வழிப்படுத்தட்டும்
பிரணவம் பிரணவமானது பிம்மத்தோடு ஒன்றாகவும் மனினையும் இறைவனையும் இணைக்கும் வழியாகவும் அடையாளமாகவும் போற்றப்படுகின்றது. பிரணவத்தின் முக்கியத்துவத்தைஉயந்த ரிஷிகள் ஸ்போட வாதம் என்ற தத்துவத்தையும் தோற்றுவித்தனர் பிரணவமே பிரபஞ்ச்தின் பின் நிற்பதாக அறியப்பட்டது. அதன் மூலமே உலகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன அதுவே அனைத்து நாமங்களுக்கும் உருவங்களுக்கும் அடிப்படை தொக்கத்தில் பிம்மனாகின்ற பிரஜாபதி இருந்தார் . அவருடைய வார்த்தை இருந்தது. அந்த வார்த்தையே பரப்பிரம்ம மாகும். என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
வார்த்தைகள் இல்லாத பிரமம் ஒன்று உண்டு. இரண்டாவதாக வார்த்தைகள் உள்ள பிரமம் ஒன்றுன்டு என்று மைத்ராணீய உபநிடதம் கூறுகின்றது. மேலும் அந்த வார்தையே ஓம் என்னும் ஒலியாகும்.அந்த வார்த்தையே பிரணவம் பிரணவத்தின் மூன்று எழுத்க்களான அ உ ம ஆகியவற்றில் இருந்தூன் " பூர் புவஸ் ஸிவ' என்ற வியாஹ்ருதிகள் தோன்றின. அதிலிருந்து காயத்ரீயின் பிரிவுகளும் அதிலிருந்து வேதங்களும் தோன்றின. அதாவது
"தத் ஸவிதுர் வரேண்யம்" என்பதில் இருந்து ரிக் வேதமும்
"பக்கோ தேவஸ்ய தீமஹி" என்பதில் இருந்து யஜீர் வேதமும்
"த்யோ யோ ந: ப்ரசோதயாத்" என்பதில் இருந்து சாம வேதமும் தோன்றின "காயந்தம் த்ராயதே இதி" காயத்ரி யார் தன்னைப் பாடுகின்றாரோ அவரை காப்பாற்றுபவள் ய - என்பது வாயுதத்துவம் இது சூக்கும தேகத்தை குறிக்கும். இதன் அதிகாரி விஸ்ணு ஆ- என்பது அக்கினி தத்துவம் அது காரண சரீரத்தை குறிககும் இதன் அதிகாரி ருத்திரன்

மந்திர சக்தி
மந்திரங்கள் உச்சரிக்கப்படுவதால் ஆகாயத்தில் சலனத்தை ஏற்படுத்து கின்றன பின்னர் அவை வானத்தில் உயர்வான நிலைக்கு செலுத்தப்படுகின்றன சில ஒலி குறிப்புக்கள் சில சலங்களை ஏற்படுத்தும். மந்திரங்கள் வெறும் சொற்கள் அல்ல மிகவும் சக்திவாய்ந்தவை . அவை சாதகனின் மீது அளவில்லா ஆன்மீக செல்வத்தை பொழிகின்றது. சாதகனின் மனதை இறைவனை நோக்கி அழைத்து செல்லுகின்றது. மந்திரத்தை உட்சாடனம் செய்யும சாதகனிடம் அசாத்தியமான சக்தி பிறக்கின்றது. மந்திர ஒலி எண்ண அலைகளையும் சப்த அலைகளையும் மின் அலைகளையும் தோற்று விக்கின்றது. அதனால் உடலில் மனித காந்தம் உருவாகி எமது உடலை சுற்றி ஒளி வட்டம் உருவாகி எதிராண எண்ணங்கள் எம்மை நெருங்கி மன அலைகளை உருவாகி மனகிலேசம் அடைவதை தடுத்து மனதை ஒரு நிலைப்படுத்தி இறைவன்பால் செலுத்த உதவுகின்றது. அதனாலே மந்திரம் என்பது மனதை ஸ்திரப்படுத்துவது என்று பொருள். கருமூலத்தில் மந்திரங்கள்hனவை பிரபஞ்சத்தில் பரவிநிற்கும் ஒலி அலைகளே அதுவே ஓம் என்னும் பிரணவம். அதில் இருந்தே எல்லாம் தேன்றன. அது அ, உ, ம என்ற அச்சரங்களில் அடங்கும். அ - என்பது அக்னி மண்டலம் உ - என்பது ஆதீத்திய மண்டலம் ம - என்பது சோம மண்டலம் . அச்சரங்களை உச்சரிக்கும் போது அ என்று உச்சரிக்கும் போது விரிந்து உ என்னும் போது சுருங்கி ம என்னும் போது அடங்குகின்றது.
மந்திரத்தின் சக்தி அதன் ஒலியிலேயே தங்கியுள்ளது. மந்திரத்தை சரியான முறையில் உச்சாடனம் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். பீஜா சஷரங்கள் என்பவை அவைகளுக்கு உண்டான தேவதைகளுடன் நேரடி தொடர்பு கொன்டுள்ளன. காயத்ரீ ஜீவ மாதா எனப்படும். இம்மந்திரத்தின் முக்கிய பலன்கள்
முதல் அடி - சாதகன் முலில் தன்னை இறைவனின் விருப்பத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும்
இரண்டாம் அடி- சாதகன் தனது இதய கமலத்தில் இறைவனை எழுந்தருளச் செய்தல் வேண்டும் என்றும்
மூன்றாவது அடி- சாதகன் தனது புத்தியை முற்றாக இறைவனிடம் ஒப்படைத்து அவரது வழிகாட்டலுக்காக காத்திருக்க வேண்டும். என்றும் எடுத்து இயம்புகின்றது.