Showing posts with label ஆலயமும் எனது அனுபவமும். Show all posts
Showing posts with label ஆலயமும் எனது அனுபவமும். Show all posts

Monday, April 2, 2018

ஆலயங்களில் பயன் படுத்தப்படும் அதிகமான பொருட்கள் உலோகத்திலானவை

ஆலயங்களில் பயன் படுத்தப்படும் அதிகமான பொருட்கள் உலோகத்திலானவையாக இருப்பதன் காரணம் வெங்கலம், செப்பு, தங்கம், வெள்ளி, பித்தலை போன்ற உலோகங்கள் மந்திர உச்ஷாடணத்தில் இருந்து வரும் ஒலி அலைகளை பெற்று மீண்டும் பிரதிபலிக்க வல்லவை. மந்திர ஒலிகள் பிரபஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை அதனால் ஒலிகளை வெளியிடும் போது ஆராய்ந்து அது நோராண எண்ண அலைகளை எற்படுத்தக்கூடியவற்றையே வெளியீடு செய்ய வேண்டும். எதிராண எண்ண செய்யாட்டையும் பிரபஞ்சத்தில் ஏற்படுத்தி விடும். அதனாலேயே ராகம் தாளம் என்பவை பதஞ்சல் மஹரிஷிகளினால் ஏற்படுத்தப்பட்டது. இறைவன் மந்திர, தந்திர, யந்திர வடிவினன். அதால் சேமித்து வைத்த சக்தியை பெற ஆண்கள் மேலங்கி இன்றி ஆலயத்தினுள் செல்ல வேண்டும். எப்போதும் வீடுகளிலோ ஆலயங்களிலோ எவர்சிலிவர் என்று சொல்லப்படும் கலப்பு உலோகத்தை பயன்படுத்து வதினால் எதிராண விளைவுகளை சப்பாதிக்க முடிவதுடன் 'ஒயில்' என்னும் தாவர எண்ணையையும் பயன்படுத்துவதை தவிப்பது உத்தமம்.
ஓம் ஸ்ரீ சற்குரு அகத்தீசாய நம:
ஆலயங்களுக்கு தோய்த்து உலர்ந்த வேட்டி உடுத்து சென்று ஆலய பிராகாரத்தின் உள் மேலாடை களைந்து ஆண்கள் செல்வதின் காரணம் ஆலய பிராகாரத்தில் செய்யப்படுகின்ற மந்திர 
உச்சாடனம் அக்னி காரியங்களில் இருந்து வரும் மந்திர மந்திர ஓலிகளின் அலைகள் மனித மின்காந்த அலைகளில் கலப்பதுடன் கோம புகை உடலின் தோல்மூலம் உடலில் கலந்து ஆரோக்கியம் பெறுவதுடன் நேரான எண்ணங்களை உருவாக்கும்வல்லமையும் அதற்கு உள்ளதால் தோய்த்து உலந்த கலாசார உடைகளை அணிந்து செல்வதே உத்தமம். சர்வதேச தினம் அனுடிப்பது பெருமை அல்ல அது எமது கலாசார வறுமையின் துலங்கலே 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பதே எமது பண்பாட்டு விழுமியம்

Thursday, March 2, 2017

இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோட்டமுனை புன்னையம்பதி ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வரலாறு

இலங்காபுரியின் கிழக்கு  மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோட்டமுனை புன்னையம்பதி
ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வரலாறு.

உள்ளடக்கம்
1.  ஆலய ஆரம்ப தோற்றம் வரலாறு:
2.  ஆரம்பகால வழிபாட்டு முறையும் ஆகமுறைக்கு மாறிய வரலாறும்:
3.  கோத்துப்பந்தல் மடாலயமானது
4.  அம்பிகையின் திருவுருவ பிரதிட்டை.
5.  அம்மனின் திருவுரு பற்றி குறிப்பிடுகையில்.
6.  பலிபீடத்தின் முன் நந்தி காணப்படுதல்:
7.  தலவிருட்சம் புன்னையாக இருந்தாலும் வேம்பு ஆல்அரசுடன் இருக்கின்றது.
8.  நித்திய நைமத்திய பூஜைகள்.
9.  திருவிழாக்கால நிர்ணயம் விசேட திருவிழாக்களும்:
10. புணருத்தாரண வேலைகளும் குடமுழுக்குகளும்
11. ஆலய உற்ச்சவ மூத்திகள்.
12 .உற்ச்சவ மூர்த்திகளின் வாகனங்கள்:
13. இராஜகோபுரத்திருப்பணி:
ஆக்கம்
திரு.பாக்கியமூர்த்தி குமரகுருபரன்
B.Com(sp),PGDEd,MAAT.ACBA,SLTS-1,SLPS-1


இலங்காபுரியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில்; உள்ள கோட்டமுனை புன்னையம்பதி
ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வரலாறு.
       ஈழவழ நாட்டின் இந்துமத வரலாற்றிலே மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி ஸ்ரீ மாகாமாரியம்ன் ஆலயம் சிறப்பான ஓர் இடத்தை வேண்டிய ஒன்றாகும். தேன்னையும், கன்னலும், கதலியும், புன்னையும், பாத்ரியும், மகிழும், கோங்கும் பிரதேசத்தின் இயற்கை வனப்பை எடுத்துக் கட்டியங்கூற, அன்னை மகாமாரி வழிபடும் அடியார் வல்வினை போக்கி அருளாட்சி செய்வதற்கு செய்வதற்கு உகர்ந்து அமர்தருளிய திருத்தலமே புன்னையம்பதி. அன்னை அருள்மாரி அருள்மழை பொழிகின்ற என் அன்னையின் திருப்பதி.
1. ஆலய ஆரம்ப தோற்றம் வரலாறு:
    அன்னையின் ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் இற்றைக்கு முன்நூறு வருடங்களுக்கு முற்பட்ட 19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மணங்கமழ் புன்னை தோப்பாகக் கானப்பட்டது. அத் தோப்பில் அப்பகுதியில் வாழ்து வந்த விஸ்வபிரம்ம குல மக்கள் விறகு எடுத்கச் செல்வது வழக்கம். ஒரு நாள் மாலை வேளை சிறுமி ஒருத்தி விறகு எடுகச் சென்ற போது தோப்பினுள் இளமையும் அழகும் நிறைந்த நங்கை புன்னை மரத்தின் கீழ் நிற்பதை கண்டு செய்வதறியாது நிற்கும் போது அத்திருவுரு மறைந்து விட்டது. பின்னர் பயமும் பதட்டமாகவும் ஓடோடி வந்த சிறுமி தமது தாய் தந்ரையரிடம் நடந்த சம்பவத்தை கூற ஊர்மக்களை அழைத்துக் கொண்டு தொப்புக்குள் நுளைந்த போது அவ்விடத்தில் ஒளி தென்பட்டது. அது சிறிது நேரம் நிலை கொண்டு பின்னர் மறைந்தது. இதைக்கண்ட அப்பகுதியில் மக்கள் செய்வதறியாது வீடு திரும்பினர். அன்று இரவு அதிகாலையில் அங்கு வாழ்ந்த விஸ்வபிராமணர் குலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொற்பணத்தில் அம்பிகை தோன்றி தன்னை பந்தலிட்டு அவ்விடத்தில் வழிபடுமாறு கூறி மறைந்தாள். அதன் பின் அடுத்த நாள் பொது மக்களை அழைத்து நடந்த சம்பவத்தை கூறி பந்தல் அமைத்து அக்காலத்தில் காணப்பட்ட தாந்திரிய முறைப்படி அம்மனை வழிபட்டனர்.
2. ஆரம்பகால வழிபாட்டு முறையும் ஆகமுறைக்கு மாறிய வரலாறும்:
     ஆக்காலத்தில் வருடத்தில் ஒரு முறை பத்தாசு முறைப்படி சடங்கு நடை பெற்று வந்தது. அப்போது ஆணி மாதப் பூரணையை இறுதிப் பள்ளைய நாளாக கொண்டு முதல் ஏழுநாட்கள் சடங்கு நடை பெற்று வந்தது. ஒரு முறை அப்பகுதியில் வாழ்த வேற்று மதத்தவர்கள் இவ்வாலய வழிபாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்த விளைந்து பன்றியின் முள்ளை பூசையின் போது வைக்கப்படும் பிரதான மடையினுள் மறைத்து வைத்து அங்கு தெய்வம் ஆடி குறி சொல்லும் செயற்பாட்டை நிறுத்திதன் விளைவாக ஆத்திரம் கொண்ட பூசாரிமார் பூஜையை நிறுத்தினர். ஆதன் விளைவாக தகாக செயலைச் செய்த மக்கள் கொளை நோக்குள்ளாகி உயிருக்கு போரடும் நிலை ஏற்பட்டு அம்பிகையை சரணடைந்தனர். இதன் பின் சடங்கு முறை நிறுத்ப்பட்டு ஆகம முறைக்குட்பட்ட நித்திய நயிமித்திய பூசைகளுக்கு உட்படுத்தப்பட்டது. ஒரு  முறை ஆலய திரைச்சீலை ஆலயத்தினுள் எரிந்து கொண்டு இருந்த விளக்குத்திரியினால் எரியுண்ட போது அப்போது ஆலயத்தின் குருக்களாக இருந்த விஸ்வபிம்ம ஸ்ரீ தமேதரம் ஆச்சாரியார் சொற்பணத்தில் தோன்றி திரைச்சீலை எரிவதைக்காட்டி அணைக்கும் படி கூறிய போது நனவில் அது நடப்பதை கண்டு அணைத்தாக முன்னோர் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். குருதேவர் ஸ்ரீ ராமகிருஸ்ணர் அவரது சீடர் ஒருவருக்கு தனது உடை கிழிந்திருப்பதை சொற்பணத்தில் கூறிய போது நனவில் அது இருந்ததை இது நினைவு படுத்துகின்றது. அதுவும் அம்பிகையின் திருவிளையாடலே.
3. கோத்துப்பந்தல் மடாலயமானது.
      கொத்துப் பந்தல் அமைத்து பூஜைகள் நடைபெற்று வந்து. பின்னர் மடலாயமம் அமைத்தனர். அப்போது ஆலய மணியகாரக இருந்த அமரர் தவத்திரு பிதாம்பரம் பாலானந்தச் சாமியார் அவர்களுடன் அமரர் திரு. ஆனந்தர் கணபதிப்பிள்ளை, அமரர் திரு. சின்னத்தம்பி பொண்ணையா, அமரர் தம்பர் ஆகியோரின் குடும்பத்தினரும் ஆலயம் அமைப்பதில் அரும்பாடுபட்டனர் தவத்திரு. பிதாம்பரம் பாலானந்தம் சுவாமியார் கொழும்பு, கண்டி திருகோணமலை, யாழ்ப்;பாணம் ஆகிய இடங்களில் வாழ்ந்த விஸ்வபிராமண குல மக்களிமிருந்து பண உதவிகள் பெற்று வந்தார். மற்றையவர்கள் உள்ளுரில் பண பொருள் உதவிகளைப் பெற்று  ஆலய நிர்மணப்பணிகளை நிறை வேற்றினர். இதில் தவத்திரு பீதாம்பரம் பாலானந்தம் சாமியார். பிரம்சாரியம் காத்து சன்னியாசம் பூண்ட தவசீலர். இவர் எனது தயாரின் தாயின் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு அவர் பூட்டன்.
4. அம்பிகையின் திருவுருவ பிரதிட்டை:
      இந்த நிலையில் அங்கு வாழ்தவர்கள் அம்பிகையின் திருவுருவை பிரதிட்டை செய்து வழிபட என்னினர். இதற்கான முயற்சியில் ஈடுபடலானனர். அதகும் அவள் திருவிளையாடல் புரிய எண்ணினாள். திரிபுரத்தை எரித்து ஆன்மாவை ஆட்கொண்டவள் அவள் அல்லவோ. இங்கும் அவள் விட்டுவைக்க வில்லை. தஞ்சாவூரைச் சேர்ந்த மாடன் என்னும் சிற்பாசாரியராரின் மனதில் புகுந்து சிலை வடிக்க வைத்து அது மட்டு நகர் கோட்டைமுனை புன்னையம்பதியில் அருள் மழை பொழிய எண்ணிய அவள், அக்காலத்தில் பாரததேசத்தின் தமிழ்நாட்டின் நாகபட்டினத்திலிருந்து மட்டக்களப்பு கற்குடாவை துறைமுகமாகக் கொண்டு பாரிய மச்சுவாய்க்கப்பல்கள் பொருட்களை ஏற்றி இறக்குவது வழமை இப்படி இறக்கும் துறைகளில் மட்டக்களப்பு சுமைதாங்கியும் ஒன்று அங்கு அக்காலத்தில் சுங்கமும் இறங்கு துறையும் இருந்தது அத்துடன் பெரிய பண்டகசாலையும் இருந்தது. இதை நானும் அறிவேன். தற்போது அதன் எச்சமாக பாரந்தூக்கியின் பகுதி ஒன்று உண்டு. கற்குடவுக்கு கொண்வரப்பட்ட திருவுரு மட்டக்களப்பு வாவியினுடாக லேடிமெனிங்ரைவ்வில் உள்ள 'சல்லிவளவு' என்று அழைக்கப்படும் வளவினுள் இறக்கி வைக்கப்பட்டது. அக் காலம் அம்மனின் சடங்கு முடியும் ஆணி மாத பூரணை தினமாகும். இக்காலத்தில் கும்பம் சொரிய செல்லும் 'மடத்துவளவு' என்று அழைக்கபடும் வளவும் அது தான். கும்பமும் சொரியும் சடங்கும் நிறைவேறிவிட்டது. ஆக்காலத்தில் எமது பரம்பரையைச் சேர்ந்த ஏரம்பர் என்பவர் கப்பல் எழுதுவினைராகப் பணியாற்றியவர். அவர் மூலமே திருவுரு கொண்டுவரப்பட்டது.   திரு. ஆனந்தன்  கணபதிப்பிள்ளை ஆச்சாரியாரின் பூஜை அறையில் வைத்து பூஜை செய்வதற்காக ,அங்கு பூஜை பிணகக்காரங்கள் செய்து வருகையில் அங்கு அதிசயிக்கத்தக்க நிகழ்வு பல நடை பெற்றது. தானாக விளக்கெரிந்தது, இரவில் தானாக பூஜை நடை பெறும் சத்தம், அம்பினை நடமாடும் சலங்கை ஒலி போன்று பல அதிசயம் நடை பெற்றது. திரு.ஆனந்தன் கணபதிப்பிளையின் மனையாள் சவுந்தரப்பிள்ளை அம்பாளின் திருவேறி வாக்குச் சொல்பவள். ஆவர் வாக்குச் சொன்ன போது எமது ஆலயத்தில் அம்மனை பிரதிட்டை செய்யுமாறு திருவாக்கு அருளினார். இதன் பின்னரே அம்பிகையின் திருவுரு இங்கு எழுந்தருளப்பட்டது. இவ் நிகழ்வு 1920 அளவில் நடை பெற்றதாக ஆலய பதிவுகள் தெரிவிக்கின்றது.
5. அம்மனின் திருவுரு பற்றி குறிப்பிடுகையில்:
       திருவுருவின் மாரியம்மனுக்குரிய உபாங்கள் இருக்கின்றன. அம்மனின் நான்  கைகளுக்கும் உருத்தான பாசம், உடுக்கை, கபாலம், வாள். என்பன கானப்படுகின்றது. பாசம் பற்றறுத்தல் அதாவது பாசங்களே பற்றுக்கு காரணம் இது பிறவிக்கு காரணமாகும். உடுக்கை உலக இயக்கம் அண்டத்தில் அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே உலகம் உருவானது. ஆகவே உலக இயக்கம் சக்தியிடத்தில் என்பதை குறிக்கின்றது, கபாலம் ஆன்ம விடுதலைபெற தடுத்தாட்கொண்டு அருளளையும், வாள் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தை வழங்கும் என்பதையும் வலியுறுத்தி நிக்கின்றது. சுடர்விடும் கேசம் இது மும்மலங்களை எரிக்கும் தன்மையையும் வீராசனமும் காணப்பட்டாலும் அமைதியே சொருவமான கருனையும் இளமையும் புன்முறுவலிக்கும் அகாரமும் நிறைந்த தேஜோமயமான திருவதனம் மிக எழிலோடும், கம்பீரத்தோடும் காணப்படுகின்றது.
6. பலிபீடத்தின் முன் நந்தி காணப்படுதல்:
    மாரியம்மனின் பலிபிடத்தின முன்;; சிம்மம் தான் இருக்க வேண்டும். தேவியின் வாகனம் சிம்மம் தான் ஆனால் இங்கு நந்தியே இருகின்றது. இதுவே இங்குள்ள சிறப்பம்சமாகும். இங்கு ரிஷபம் பிரதிஷ;டை செய்தற்கு காரணம் உண்டு. ஆலயத்தின் மணியகாரணான தவத்திரு பீதாம்பரம் பாலானந்தர் அவர்களின் சொற்பணத்தில் அம்பிகை தோன்றி நான் 'மகாமாரியாகவும் காமாட்சியாகவும் புண்னையம்பதியிலிருந்து அருளாட்சி செய்கின்றேன்' என்று திருவாய் மலந்தருளினாள். அவள் சிவகாமியாக அத்தனாதி;ஸ்வரியாக இருப்பதை அவள் திருவுருவில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது திருவுருவின் இடது பக்க உபாங்கங்களை விட வலதுபக்க உபாங்கங்கள் பெரிதாக கானப்படுகின்றது. இதுவும் திருவுருவில் கானப்படும் சிறப்பம்சமாகும்.
7. தலவிருட்சம் புன்னையாக இருந்தாலும் வேம்பு ஆல்அரசுடன் இருக்கின்றது.
      ஆலயம் தோன்றிய காலத்தில் புன்னைமரத்தோப்பாக இருந்த இடம் தற்போது அங்கு மருந்துக்குக் கூட புன்னை மரம் இல்லை. இங்கு வேப்பை மரத்தின் கீழ் ஆதிவைரவர் காணப்படுகின்றார். அவரது திருவுரு நீளமான கல்லிலே பொறிக்கப்பட்டு ஆழமாக தாக்கப்பட்டுள்ளது. ஆக்கல் நீர்மட்டத்தை அடைந்திருக்கும் என கருதுகின்றனர். புணராவத்தன கும்பாவிஷகங்களின்  போது பாலஸ்தானம் செய்வதில்லை அப்படியே வைத்தே குடமுழுக்கு செய்கின்றனர். இவர் அம்மன் ஆலயம் அமைப்பதற்கு முற்படட்டதாக இருந்திருக்க வேண்டும் என எமது மூதாயையர் கூற கேள்விப்பட்டு இருக்கின்றோம். இம் மரத்தையே தலவிருட்சமாக கொண்டு போற்றுகின்றனர். இம்மரம் முந்நூறு வருடங்களுக்கு முற்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதில் தற்போது அரசமரம் சேர்ந்து இருக்கின்றது. இதில் முதல் ஆலமரம் சேர்ந்து இருந்தது. இதனை சில விசமிகள் அழித்து விட்டனர். தற்போது வேம்பும் அரசும் சேந்;தநிலையில் ஆல் உருவாகிவருகின்றது. ஆல் அரசு வேம்பு சேர்திருப்பது இன்னுமோர் சிறப்பாகும். ஆல் விஷ;ணுவுக்கும் அரசு சிவனுக்கும் வேம்பு சக்திகும் உரியதால் இவை மூன்றும் முறையே  ஒரு மரத்தில் சேர்திருத்தல் சிறப்பம்சமாகும். தற்போது முன்னாள் தலைவராக இருந்த திரு. ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி அவர்களால் புன்னைமரம் ஒன்றை பெற்று ஆலயத்தின் இடப்பக்க வாயு முலையின் நாட்டப்பட்டு தற்போது விருட்சமாகக் காணப்படுகின்றது.
8. நித்திய நைமத்திய பூஜைகள்:
        ஆலயத்தில் மூன்று காலமாகிய காலை,  உச்சிக்காலை, மாலை, வேளை பூசைகள் நடைபெறுவதுடன் தைப்பொங்கள், சித்திரை வருடப்பிறப்பு, தீபாவழி போன்ற பண்டிகை தினங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடை பெறுகின்றன. அத்துடன் மாதம் தோறும் வருகின்ற பூரணை தினத்தில் விசேட திருவிழக்கள் நடைபெறுகின்றது. ஆரம்பகாலத்தில் வருடாந்த உச்ஷவமாக நவராத்திரி தினத்தை அலங்கார உற்சவமாக கொண்டாடிவந்தனர். பிற்காலத்தில் மகா உற்சவகாலமாக பங்குனி உத்திர நட்சேத்திரத்தை தீர்த்தோற்ட்சவ தினமாகக் கொண்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. அத்துடன் விஸ்வகுல வாலிபர்சங்கத்தினர் திருப்பவணிக்காக தேர்திருப்பணி செய்து தேர் கடந்த பதினொரு வருடங்களாக தேர்திருவிழா நடை பெற்று வருகின்றது. மட்டக்களப்பின் நகரக் கோயில்களில் உள்ள தேர்களின் முதவாவது தேர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஸ்ரீ சக்கரம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. அதற்கு தைபூசத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்கள் ஸ்ரீ சக்கரபூஜை நடை பெற்று வருகின்றது. அடுத்து மாசிமகத்தை அடிப்படையாகக் கொண்டு இலசாட்சனை நடை பெற்று வருகின்றது. இதை விட திருவென்பாவை, விநாயகர் சதுர்த்தி, கெதாரகௌரி விரதம், கந்தசட்டி விரதம், பொன்றனவும் அனுட்டிக்கப்படுகின்றது.
9. திருவிழாக்கால நிர்ணயம். விசேட திருவிழாக்களும்:
     ஆரம்பகாலத்தில் ஆணிமாதப்பூரணையில் சடங்காக இருந்து பின்னர் தினப்பூஜை மாறிய பின்னர் சரதா நவரத்திரி காலமான மாறிய திருவிழா 1995 இல் வசந்த நவராத்திரியில் அலங்கார உற்ச்சவமாக மாறி 2000ஆம் ஆண்டில் மகா உற்ச்சவமாக மாறியது. இதற்கு காரணம் அப்போது இருந்த திரு. விநாயகமூர்த்தி ஈஸ்வரராஜா அவர்களும் அடியேனும். பல மகாசபை கூட்டங்களிலும் இது தொடர்பான பிரேரணைகளை கொண்டு சென்றாலும் பாரம்பரிய சரதா நவராத்திரியை மாற்றி வசந்த நவராத்திரியில் திருவிழா செய்ய தயாரில்லை. அதன் பின் ஆலய விஸ்வகுல வாலிபர் சங்கம் அவர்களிம் இருந்த சுவாமி உலவரும் சகடையை தேரக மாற்றும்  திருப்பணியில் ஈடுபட்டு; தேர் திருப்பணி நிறைவேறி விட்டது. தேர் செய்ததே பின்னர் திருவிழவுக்கு வித்திட்டது. அதன் பின் மகாசபையில் தீர்மாணம் நிறைவேற்றி. வசந்த நவராத்திரியில் பங்குனி உத்திரத்தை மையமாகக் கொண்டு மகா உற்சவத்தையும் வழமையான சரதாநவராத்திரியை அலங்கார உற்சவமாக கொண்டாவது என்றும் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தேர்திருப்பணி நிறை வேறும் வரையில் அலங்கார உற்ச்சவமாகவே நடைபெற்று வந்தது. பின்னர் அம்பிகை மகா உற்;சவமாக மாற்ற திருவுளம் கொண்டு 2000 ஆம் ஆண்டு கொடித்தம்பம் தாபக்கப்பட்டது. இதனை தாபிக்க திருமதி அந்தோனிப்பிள்ளை நல்லரெத்தினம் பத்தர் குடும்ப ஞாபகாத்தமாக செய்து கொடுத்தார். இதன் பின்னர் கொடியேற்றி திருவிழா நடை பெற்றது. அது தொடர்ந்து நடை பெற்று வருகின்றது. இங்கு தைப்பூசத்தை அடிப்படையாகக் கொண்டு இலட்சாரிச்சனையும்,  மாசிமகத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீ சக்கர பூஜை பத்து நாட்கள் கொண்டுவரப்பட்டது. அத்துடன்  செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசையும் நடைபெற்று வருகின்றது. பூரணை திருவிழாக்களும், கந்நசஷ;டி விரதம், விநாயகர் சஷ;டி விரதம், கேதார கௌரி விரதம், விநாயகர் சதுர்த்தி விரதம், போன்ற விரதங்கள் அணுட்டிக்கப்படுகின்றது.

10. புணருத்தாரண வேலைகளும் குடமுழுக்குகளும்:
           மடாலயமாக இருந்த ஆலயம் புனராவத்தம் செய்ய எண்ணி 1968 ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி காலை 9.54க்கும் 10.45 மணிக்கும் இடைப்பட்ட சுப வேளையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அக்கால காலத்தில் ஆலய பரிபான சபையில் திரு. காத்திகேசு வேதாரணியம் ஆச்சாரியார் அவர்கள்; தலைவராகவும் திரு. முத்துலிங்கம் சங்கரதாஸ் அவர்கள் காரியதரிசியாகவும் திரு. பொன்னையா சுப்பிரமணியம் அவர்கள் தனாதிகாரியாகவும் இருதனர். அவ் ஆலயத் திருப்பணி நிறைவேறி 1979 சித்தாத்தி வருஷம் நவம்பர் மாதம் 30ம் திகதி (காத்திகை 14) தனுலக்கினமும் ரோகினி நட்சேத்திரமும் கூடிய காலை 7.30 தொடக்கம் 9.24 வரையுள்ள சுபமுகுத்தத்தில் வியாகரண சிரோமணி சிவஸ்ரீ பூரண தியாகராஜக் குருக்களை பிரதிஷ;டா குருவாகக் கொண்டு முதலாவது புதிய ஆலயம் கட்டி குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது ஆலயத்தின் கருவறை அமரர் காத்திகேசு வேதாரணியம் ஆச்சரரியாரின் பெரும் பொருள் உதவியினாலும்,  தம்பமண்டபம் திரு.சாமிப்பத்தர் வள்ளிச்சாமி அவர்களாலும் எனைய மண்டபங்கள் அங்கு வாழ்ந்த மற்றும் பல்வேறு பகுதியில் வாழ்ந்த விஸ்வபிரம்மண குல மக்களின் நிதி உதவியிலும் ஆலய பரிபாலன சபையினதும் விஸ்வப்பிராமணகுல வாலிபர் சங்கம், மகளீர் சங்கம் ஆகியவற்றின் ஆயராத உழைப்பினால் கட்டப்பட்துடன். பரிபாலன மூத்திகளான விநாயகர் கோயில் காலம் சென்றவரான  நெல்லைநாதர் தில்லைநாதன் வழக்கறிஞராலும் (இங்கு குறிப்பிடப்பட வேண்டியது விநாயகர் சிலை வேப்படிப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னை நாள் மூலவராவர். வழக்கறிஞரின் தயார் அங்கு சென்ற போது மூலவர் மாற்றப்பட்டு இச்சிலை விற்பதற்கு தயாராக இருந்தத போது அதை பணம் செலுத்தி பெற்று வந்தார். அதனால் தான் அவ்வாயம் புனரமைக்கும் போது அவரின் மகன் புணரமைத்துக் கொடுத்தார்), வல்லிதேவசேனாதி பதியான முருகனின் திருத்தலம் திரு. சாமிநாதபத்தர் முருகையா ஆச்சாரியராலும், நடேசர் சபை காலம் சென்ற திரு சின்னத்தம்பி பத்தராலும் நாகதம்பிரான் திருத்தலம் காலம் சென்ற பொண்ணர் பரம்பரையினரின் சார்பில் காலம் சென்ற சுப்பிரமணியம் அருளானந்தம் அவர்களாலும்,  ஸ்ரீ சன்டேஸ்வரி திருத்தலம் காலம் சென்ற நல்லதம்பி இரத்தினம் குடும்பத்தாரினாலும், மணிக்கூட்டுக் கோபுரம்; காலம் சென்ற காத்திகேசு சீனிவாசகம் சப்பையா நடராஜா குடும்பத்தினராலும் வைரவர் ஆலயம் வீரகுமாரர் குடும்பத்தினராலும் நவக்கிரக ஆலயம் திரு சாமிவேல் குடும்பத்தினாலும் வசந்த மண்டபம் திரு. அழகரெத்தினம் முருகையா  குடும்பத்தினராலும் வசந்த மண்டபத்தின் முன் மண்டபம் திரு தவராஜா குடும்பத்தினாலும் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன் தெற்கு வாசல் நடராஜ மண்டபம் ஆலய  விஸ்வ பிரம்ம குல மகளீர் சங்கத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்டது. முதவாவது கும்பாவிஷேகத்தின் போது ஆலய பரிபாலன சபைத் தலைவராக திரு சினத்துரை விஸ்வையா அவர்களும் காரியதரிசி திரு ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி அவர்களும் தனாதிகாரி திரு  இராசையா யோகேந்திரன் அவர்களும் இருந்தனர்;.
 இரண்டாவது புனராவர்த்தன கும்பாவிஷேகம் 1993 ஸ்ரீமுக வருஷம்  நவம்பர் மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமை பூர்வ சஷ;டி திதியும் சித்தயோகமும் உத்தராட நட்ஷேத்திரமும் கூடிய காலை 8.12 மணி தொடக்கம்  9.56 வரையான  தனுலக்கின சுபமுகுத்தத்தில் பிரதிஷ;டா சிரோமணி வேதாகம கிரியா சூடாமணி சுவானுபூதி கிரியா கிரமஜோதி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்களை பிரதிஷ;டா குருவாகக் கொண்டு  நடை பெற்ற போது ஆலயபரிபாலன சபையின் தலைவராக திரு.  சின்னத்துரை விஸ்வையா ஜெ.பி. ஓய்வுபெற்ற நீப்பாசன அத்தியட்சகர் அவர்களும் செயவாளராக திரு. ஏரம்பமூர்த்தி பாக்கியமூர்த்தி அதிபர் அவர்களும்  பொருளாளரக திரு கணபதி சந்தானம். கணக்காய்வாளர் அவர்களும் இந்தனர். இக் காலத்திலேயே விஸ்வபிரம்ம கலாசாரமண்டப திருப்பணியை இராமகிஷ்ணமிசன் சுவாமி ஸ்ரீமத் இராஜேஸ்வரானந்நதா மகராஜ் அவர்களும் ஸ்ரீமத் சுவாமி ஜீவனாநந்தஜீ மகராஐ; அவர்கனாலும் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து நிறைவேற்றப்பட்டது. அக்காலத்தில் பாராளுமன்ற அங்கவராக இருந்த திரு பிறிஸ் காசிநாதரின் பல்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்திலிருந்து 125000 ரூபாய் பெறப்பட்டு குழியல் அறையுடனாக கழிவறைகளும் கட்டப்பட்டது குறிப்பிடப்தக்கது. அத்துடன் பாரளுமன்ற உறுப்பினர்  காலம்சென்ற திரு. யோசேப் பரராஜசியசிங்கத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்திலிருந்து தொலைபோசி இணைப்பும் பெறப்பட்டது.
மூன்றாவது புனராவர்த்தன கும்பாவிஷேகம் 2007 விய வருடம் ஜனவரி மாதம் 28ம் திகதி (தை 14)மீன லக்கனமும் ரோகினி நட்ஷேத்திரமும் தசமி திதியும் சித்த யோககும் கூடிய காலை 9.35 தொடக்கம் 10.38 வரையான சுபமுகுத்தத்தில் பிரதிஷடா குரு கிரியா கிரம வித்தியா ஜோதி குமரகுருமணி பிரம்மஸ்ரீ முத்து சற்குருநாதக் குருக்களால் புனராவத்தன சம்புரோசஷன மகாகும்பாவிஷேகம் நடை பெற்றது அப்போது ஆலய பரிபாலன சபை தலைவராக திரு சுப்பிரமணியம் அருளானந்தம் அவர்களும் செயகாளராக திரு. இரத்தினராஜா கிஸ்ணமூர்த்தி அவர்களும் பொருளாளராக திரு. நல்லரத்தினம் ஜீவகுமார் அவர்களும் இருந்தனர். அப்போது அடியேன் உபதலைவராக இருந்துடன் பதில் செயளாளராக திரு பூபாலப்பிள்ளை லோகானந்ததாசன் செயல்பட்டு திரு. தம்பிராஜா கருனாகரன் திரு. தம்பிராஜா  ஈஸ்வரராஜா ஆயோரின் அயராத உழைப்பால் கும்பாவிஷேகம் நடை பெற்றது. 2008 ஆம் ஆண்டு இராஜகோபுரத்துக்கான அடிக்கல்  பங்குனி உத்திர  மகா உற்ச்சவத்தின் தீர்த்த திருவிழாவான பங்குனி உத்தரத்தரதினத்தில்   விஸ்வபிம்மகுல வாலிபர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு மட்டக்களப்பு இராமகிஸ்ணமிசன் சுவாமி ஸ்ரீமத் சுவாமி அஜராத்மானந்தா மகராஜ் அவர்களால் கல்நாட்டப்பட்டு அங்குராற்பணம் செய்யப்பட்டது.
முதலாவது மகாஉற்சவம் 2000ஆம் ஆண்டு பங்குனி உத்தரத்தை தீர்தோஷசவமாகக் கொண்டு முதல் பத்து நாட்கள் நடைபெற்றது. கொடிமரம் திருமதி. இராஜலட்சுமி அந்தோனிப்பிள்ளை அவர்களால் நல்லரத்தினம் பத்தர் குடும்பஞாபகாத்தமாக செய்து கொடுக்கப்பட்டது. இவ் மகா உற்ச்சவம் தொடந்து வருடாவருடக் நடை பெற்று வருகின்றது.
அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு அம்பாளின் திருவுவில் காணப்பட்ட உடைவினால்  அம்பிகையின் விம்பம் தென் இந்தியாவில் மாவல்லி புரத்திலிருந்து கொண்டுவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் பிரதிஷடா குருக்கள் பிரம்மஸ்ரீ ஜெகதீஸ்வரக் குருக்களால் செய்யப்பட்டது. அப்போது ஆலய பரிபாலன சபை தலைவராக திரு பாக்கியமூர்த்தி குமரகுருபரன் அவர்களும். செயளாளராக திரு தம்பிராஜா ஈஸ்வரராஜா அவர்களும் பொருளாளராக திரு. சிதம்பரநாதன் சிவலிங்கம் அவர்களும் செயல்பட்டனர்.  அச்சமயம் சிதைவு ஏற்பட்ட சிலையை சமுத்திரத்தில் ஜலவாசம் செய்வதே விதி ஆனால் அதை பொது மக்கள் விரும்பவில்லை அதனால் பொது மக்களிடம் அபிப்பிராயம் கேட்டபோது பல்வேறு அபிப்பிராய வந்தது அவை
1. சிதைவை தேன்மெழுகால் சீர்செய்து வெள்ளி அங்கியால் போத்தி வைத்தல்
2. கண்ணாடிப் பெட்டியில் வைத்து பாதுகாத்துவைத்தல்.
3. ஆலயத்தின் பின்புறத்தில் வைத்தல்.
4. ஆலயதீர்த்தக் கிணற்றில் ஜலவாசம் செய்தல் (இத் தீர்மாணம் அடியேனுடையது.)
  அவை அனைத்தையும் அம்பானின் முன் சமர்பணம் செய்து திருவிளச்சீட்டு எடுத்த போது தீர்த்த கிணற்றில் ஜலவாசம் செய்ய திருவருள் கிடைத்தது. அதன் பிரகாரம் தீர்த்தக் கிணற்றில் ஜலவாசம் செய்யப்பட்டது. அதன் பின் நிருவாககால மாறியது. அதன் பின்னர் மக்களில் சிலரின் அபிலாசை காரணமாக ஒரு நாள் இரவு ஆலயம் பூட்டப்பட்ட நிலையில் ஒரு சில விசமிகளினால் ஜலவாசம் செய்யப்பட்டதை வெளியில் எடுத்து அலய மகாமண்டபத்தில் வைத்துவிட்டு மறைந்தனர். அதன்பின் மூன்று வருடங்கள் எவ்வித அபிவிருத்தியும் இன்றி ஆலயம் இருந்து. அதன் பின்னர் (2013) அடியேனை தலைவராகக் கொண்டு திரு ஞானமுத்து இராமநாதனை அவர்களை செயளாளரரகவும் திரு. சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்களை பொருளாளராகக் கொண்டு புதிய நிர்வாகம் பாரமெடுத்து பின்னப்பட்ட பழைமையான அம்மன் சிலையை விஸ்வ பிரம்ம காலாசார மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
11. ஆலய உற்ச்சவ மூத்திகள்:
       ஆலயத்தில் ஆரம்பகாலத்தில் அம்பிகையின் உற்சவ மூர்த்தி காலம் சென்ற   பொன்னையா செல்வராஜா அவர்களாலும் சிவகாமிசமேத நடராஜர் காலம் சென்ற திரு தம்பிராஜா அவர்களாலும் முருகன் வல்லிதேவசேனாதிபதி வினாயகர் திருமதி. மகாலிங்கம் அவர்களாலும். சிவன்பார்வதி திருமதி விஜயராணி குடும்பத்தினராலும்; சன்டேசுவரி திரு இரத்தினம் குடும்பத்தினராலும் செய்து கொடுக்கப்பட்டது.

12. உற்ச்சவ மூர்த்திகளின் வாகனங்கள்:
       சிம்ம வாகனம் திரு. திருமதி. சண்முகராசா குடும்பத்தினராலும், எலி வாகனம் திரு. மதனகுமார் குடும்பத்தினராலும் எருது வாகனம் திரு.திருமதி நடராஜா குடும்பத்தினரும்; மயில் வாகனம்  சுரன் திரு.இ கஜேந்திரகுமார் அவர்களாலும் செய்து கொடுக்கப்பட்டது.
13. இராஜகோபுரத்திருப்பணி:
     2009 யில் இராஜகோபுரத்திருப்பணி சபை ஒன்றை ஏற்படுத்தி அதன் தலைவராக திரு. சிதம்பரநாதன் சண்முகநாதன் அவர்களும் காரியதரிசாக திரு. தம்பிராஜா ஈஸ்வரராஜா அவர்களும் பொருளாளராக திரு. நல்லரெத்தினம் ஜீவகுமார் அவர்களும் நியமிக்கப்பட்டு திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு  அப்போது  ஆலய பரிபாலன சபை தலைவரக திரு. பா க்கியமூர்த்தி குமரகுருபரன் அவர்களும் காரியதரிசியாக திரு. தம்பிராஜா ஈஸ்வராஜா  அவர்களும் பொருளாளராக திரு. சிதம்பரநாதன் சிவலிங்கம் அவர்களும் இருந்தனர். அப்போது மகாசபையின் தீமானத்துக்கு ஏற்ப திருப்பணிச்சபை அமைப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  ஐந்து தளமும் கட்டப்பட்டு இரண்டு தளங்கள் பூசப்பட்டுள்ளது. அதன் பின்னர் மூன்று வருடங்கள் சென்றிருந்தும் திருப்பணி நடைபெறவில்லை. (ஆலயத்தின் அறங்கவலர்கள் மாற்றப்பட்டு புதிய சபை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் திருப்பணிசபையில் மாற்றம் இல்லை இருந்தும்திருப்பணிவேலைகள் இடம்பெறவில்லை) அதன் பின் புதிய நிருவாகம் திரு. பாக்கியமூர்த்தி குமரகுருபரன் அவர்கள் தலைமையாகக் கொண்டு திரு.சிதம்பரநாதன் சிவலிங்கம் அவர்கள் செயளாளராகவும் திரு. சின்னத்தம்பி சிவலிங்கம் அவர்கள் பொருளானராகவும் கொண்ட நிருவாக சபை 2013 இல் பொறுப்பெடுக்கும் போது மகாசபை ஆலய நிர்வாக சபையினரே பொறு பெற்று நடாத்த வேண்டும் என தீமானம் நிறைவேற்றியதற்கிணங்க பொறு பொற்றுள்ளார். இத் தீர்மானத்துக்கிணங்க 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருப்பணி இரண்டு மணித்தூனுடன் நிறை வேற்றப்பட்டதுடன் பரிபாலன மூர்த்திகளாக ஸ்ரீ நத்தன வினாயகர், ஸ்ரீ விஸ்ணுதுர்க்கை, ஸ்ரீ மகாலச்சுமி, ஸ்ரீ தச்சனாமூர்த்தி, ஸ்ரீ விராட் விஸ்வப்பிம்மா, ஸ்ரீ காயத்திரி, ஆதி வைரவருக்கு புதிய ஆலயம் அமைக்கப்பட்டடு   2016.மாசி மாதம் குடமுழுக்குச் செய்யப்பட்டது.
தொடரும்...........



Tuesday, September 13, 2011

சிவபூமி இலங்காபுரியில் கிழக்குமாகாணத்தில் காரைதீவில் சமாதியடைந்து வைரவிழாக்கானும் சித்தானைக்குட்டி

சிவபூமி இலங்காபுரியில் கிழக்குமாகாணத்தில் காரைதீவில் சமாதியடைந்து வைரவிழாக்கானும் சித்தானைக்குட்டி
     பாதக்கண்டத்தின் தென் பகுதியைச் சேர்ந்த இராமேஸ்வரத்தை அண்டிய இராமநாதபுரத்தின் “பெருநாளி” என்னும் இராசதானியின் சிற்றரசரின் மகன் தான்  சித்தானைக்குட்டி சுவாமி தந்தையின் ஆட்சிக்காலத்தில் அவ்வூரில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் பாதிப்பிட்டு வீட்டுக்கு வீடு மறனஓலம் கேட்டுக் கொண்டுடிருந்த வேளை இரு மகான்கள்  வந்து உணவு கேட்டுண்ட வீடுகளில் கௌ;ளை நோயி ஏற்படாததை அறிந்து அவரிடம் கவரப்பட்டு சென்றவரே சித்தானைக்குட்டி சாமியார். அந்த மகானே பிற்காலத்தில் பெரியானைக் குட்டிச் சாமியரும் நவநாத சித்தரும் அவர். இராமநாதபுரம் பலசிறப்புக்கள் கொண்ட பிரதேசம் மாணிக்கவாசகர் இறை அனுபூதி பெற்ற திருப்பெருந்துறை அமைந்துள்ளதுடன் சங்கப்புலவர்களான நல்லந்தையார், நன்முல்லையார், ஒக்கூர்மாசாத்தியார் பொன்றோர் அவதரித்ததுடன் தாயுமானவர் சமாதியடைந்த முகவை என்னுமிடமும் மணவாள மாமுனிவர் வளர்ந்த சிற்கற்கடாரமும் இராமநாதபுரத்தில்  உள்ளது. அங்கு கோவிந்சாமியாகப் பிறந்து பூவாச்சிரமத்தை பூர்த்தி செய்துள்ளார்;.
        சித்தானைக் குட்டியான சுவாமிகளும் அரச இராஜபோக வழ்க்கையைத் திறந்து இருவருடன் தானுமொருவராக மூவரும் இணைந்தனர். மூவரு இலங்காபுரியை அடைய எண்ணி செட்டியார் ஒருவரிடம் கப்பலுக்கு பயண அனுமதிச் சீட்டுக்கள் வாங்கி வரச் சொல்ல இரண்டு  பயண அனுமதிச் சீட்டுக்கள் தான் கிடைத்தது. அதில் முத்தவர்களான பெரியானைக்குட்டியும், நவநாதசித்தரும் ஆகிய இருவரும் பயணம் செய்து வர அவர்களை வரவேற்க அதிமானவர்கள் நின்றனர். அவர்களில் ஒருவராக சித்தானைக்குட்டியும் நிற்கக்கண்டு மூவரும் மீண்;டும் இணைந்து கொண்டனர்.
  பெரியானைக்குட்டி சுவாமியும், சித்தானைக்குட்டி சுவாமியும் விட்டு நவநாதசித்தர் புறப்பட்டு விட்டார். குருவும் சீடருமாக பெரியானைக்குட்டியும், சித்தானைக்குட்டியும் கெழும்பில் இருந்தனர். அவர்களின் வாழ்க்கை திருவோட்டுடன் களிந்து கொண்டு இருக்கையில் நாதரின் கட்டளை வந்தது பேராதனைக்கு வருமாறு இருவரும் புகையிரத மூலம் பேராதனையை அடைந்ததும் அங்கு காத்து நின்றார். நவநாதசித்தர். இருவரையும் கண்டதுடன் தன் கைத்தடியால் முதலில் தன்தலையிலும் பின் பெரியானைக்குட்டி சுவாமியின் தலையிலும் அதன் பின் சித்தானைக்குட்டி சுவாமியின் தலையிலும் தட்டி சமாதி அடையும் முறையை கூறி அவர் நாவலப்பிட்டிக்கு செல்ல. மீண்டும் இருவரும் கொழுப்பை அடைந்தனர். அதன் பின் கொழும்பில் முகத்துவார பிள்ளையார் கோயிலை அடைந்து சாதனை செய்யும் போது சித்தானைக்குட்டி சுவாமியை பெரியானைக்குட்டி சுவாமி சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் சென்று சாதனை செய்யப்பணிக்க குருவின் பணிப்பினை சிரம்மேல் ஏற்று அங்கு சென்று சாதனை செய்கையில் குருவின் சமாதி கைகூட N;ஜாதிபிழம்பாய் கண்டு மீண்டும் கொழும்பில் முகத்துவாரம் அடைந்து சமாதிக் கோயிலில் தன் கடமைகள் செய்து இருக்கையில் குருவின் கட்டளை கனவில் வந்தது நவநாதர் சமாதியை அடைந்து சாதனை செய்யுமாறு. குருவின் பணிப்பினை சிரம்மேல் ஏற்று குயீன்ஸ்பரி சென்று போது சுவாமியின் வருகைக்காக காத்து நின்றாள் கங்காணி அம்மா கண்டதும் ஆனந்ந கண்ணீர் சொரிந்து சமாதியின் பொறுப்பை ஒப்படைத்தாள். பின்னர் அங்கிருந்து சாதனை செய்யும் போது அது முருகன் கோயிலாக இருந்ததால் அங்கிருந்து கதிர்காம யாத்திரை செல்வதில் சுவாமிகள் ஆர்வமாக இருந்தார். திருவிழா ஆரம்பமானதும் யாத்திரை செல்வது வழக்கம். 
   சுவாமி கதிர்காம யாத்திரையின் போது திசமகரகம வழியாகச் செல்வது வழக்கம் அங்கு முத்துக்கந்தையா என்பவர் பொது வேலை அபிவிருத்தி திணைக்களத்தில் முகாந்தரராக வேலை செய்தவர். அவருடைய மனையாள் கற்பு நிறைந்த இறையடியாள் சேதம்மாள். சிவனடியாரைக் கண்டால் கால் அலம்பி விருந்தோம்பும் பண்புடையவள். கணவனுக்கு பிடிக்காது இவர் தினமும் மதுமாமிசம் புசிப்பவர்.  சிவனடியாரைக் கண்டால் முற்றத்திலேயே வைத்து  ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுவார். முத்துக்கந்தையர்  வீட்டில் இல்லாத போது  இறையடியார்கனைக் கண்டால் உபசரித்தே அனுப்புவாள். ஒரு சமயம் யாத்திரை செய்து வந்த சுவாமிகளை கண்ட சேதம்மாள் அவரின் மீது ஆன்மீகத்தாகம் எடுத்து அவரையும் உபசரிக்கலானால் அதை அறிந்த முத்துக்கந்தையா அவர்கள் ஒரு நாள் சேதம்மாள்ளை தாக்கி சித்திரவதை செய்தார். அடுத்த நாள் காலையில் சுவாமி வர வீட்டு வேலைக்காரன் ஓடி வந்து நடந்ததை கூற சுவாமி  இரவு முழுவதும் எனது உடம் பெல்லாம் வலி மிளகும் வேர்க்கொம்பும்  தா நான் போய்விடுகின்றேன். என்று கூறி விட்டு. கதிர்காமம் சென்று பின் அம்பாந்தோட்டையை அடைந்து கப்பலில் ஏறி மட்டக்களப்பையடைந்து கார்த்திகேசு அத்தியட்சகர் வீட்டில் தங்கினார்.
      அடுத்து முத்துக்கந்தையா வேலைக்குச் சென்ற போது அவரது எந்திரி காரணமில்லாமல்  கோபப்பட்டு வார்த்தையால் தாக்கப்பட்டு  வேலையை இழந்து பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து பின்னர் தான் உணர்ந்தார் சுவாமியின் அருமையை மனையாளை அழைத்து விடையம் விளம்பி சுவாமியை அழைத்து வர கட்டளை இட்டார். எப்போது சுவாமியை காண்போம் என இருந்த உள்ளம் அழைத்து வர கப்பலில் ஏறி மட்டில்லா மட்டக்களப்பை அடைந்து  சுவாமியை தரிசித்து அவரிடம் வேண்ட சுவாமி தான் ஒன்றும் செய்ய வில்லை. கதிர்காமம் சென்று கந்தனை வேண்டுமாறு கூறி கப்பல் ஏற்றி அனுப்பிவிட்டார். வீட்டுக்கு வந்த சேதம்மா நடந்தவற்றை கனவனுடன் பகிந்து கொண்டாள். அதன் பின் கஸ்டங்கள் மேலும் அதிகரிக்க தாங்கமுடியாத சேதம்மா தன் கனவரை விட்டு பிரிந்து சுவாமியே தஞ்ச மென சரண்புகுந்தாள். அதன் பின் காரைதீவில் உள்ள தனது காணியை சுவாமியின் பேரில் எழுதி வைத்தாள். அக்காணிக்குள் ஒரு சிறிய வீடும் புளிய மரமொன்றும் இருந்தது. அதில் சுவாமியை வசிக்க விட்டு சுவாமிக்கு தானிருந்து தொண்டு செய்தாள். இதை ஊர்ராரும் தன் கனவரும்  பலவாறு கூறினாலும் “பணிசெய்து கிடப்பதே தன் பணி” என்ற அடிப்படையில் கற்புநிறைந்தவளாக கருமமே கண்ணாக இருதாள். சுவாமிக்கு தனது குருவான பெரியானைகுட்டி சுவாமியின் குருவாக்கு 

  “புளிய மரத்து வீட்டுக்காரி ,கள்ளன் பெண்பிள்ளையை எடுப்பாய்,
   வம்பு வரும், வழக்குவரும், கெட்டுகீரை விற்று, பறங்கித்துரை    கோணாமலை,
   “எ” னாவைப் பார்க்கிடலும் “பெ” னாவாய் இருப்பாய்” என்றருளினார். “எ” என்னைப்பாக்கிலும் “பெ” பெரியாளாய் இருப்பாய் என்பதாகும். சுவாமியின் வாழ்கையில் குருவின் வாக்கு தீர்க்க தரிசனமாக அமைந்தது என்பது. அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராயும் போது தின்ணமாகின்றது. 
   சுவாமியின் சில உபதேசங்கள்: 
“உன்னிடத்திலுள்ளதை இலையென்னாமல் மற்றவர்களுக்குக் கொடு”
“எங்கும் அலையாதே இருந்தபடி இரு”
“கோபத்தை விடு முருகன் அருள் தானே வரும்”
“அதிகாலை நித்திரை விட்டெழு
எப்போதும் ஆண்டவனை நினை
காலை மாலைக் கடன்களைக் குறைவாகச்செய்
தேனீர் காப்பியைத் தூரத்தள்ளு,
மரக்கறி உணவு மனதிற்கு மகிழ்ச்சி,
பசி வந்தோர் முகம் பார்,
உண்ணு முன்பு ஒருகணம் இறைவனை நினை, 
கடமையில் தவறினால் கடவுளைக் கானமாட்டாய்
“நெற்றிக் கழகு விபூதி  தரித்தல்”
“உறங்க முன் இறைவனை நினை”
“நக்கிக் கண்ட நாயும் கொத்திக் கொண்ட கோழியும் விட்டு நீங்கா”
“உன்னையும் அறியாய் என்னையும் நம்பாய்”
“தூஷீத்தவன் துன்பத்தைக் கொண்டு போவான் பூசித்தவன் புண்ணியத்தை கொண்டு போவான்”
சித்தானைக்குட்டி சுவாமியின் சமாதி
      சுவாமிகள் வந்தடைந்த பூமி முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தா ஆகியோரை ஈன்ரெடுத்து இவ் உலக்கு தந்த ஊர். அங்கு சுவாமி ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தொராம் ஆண்டு, ஆவணி மாதம், பத்தாம் திகதி, வெள்ளிக் கிழகை மகா சமாதியானார். இதனை ஆண்டு தோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திர திதியில் குரு பூஜை செய்கின்றனர்.
சுவாமியின் சித்து விழையாட்டுக்கள்:
தாம்பர விக்கிரகம் பிரதிட்டை செய்தல்
 சுவாமிக்கு சித்தானக்குட்டி எனப் பெயர் வந்தது அவர் செய்த சித்துக்களாலும் அவரின் தோற்றம் கட்டையான சதைப்பிடிப்பான உருன்டை உருவமாக சிறிய யானையை ஒத்தாக இருந்தமையினால் தான் மக்களால் அன்பாக சித்தானைக் குட்டி என அழைக்கபட்டார். சுவாமியின் சித்து விளையாட்டுகள் எண்ணிலடங்காதவை சொல்லியும் விளங்காதவை. அவரையும் விளங்கியவர்கள் ஒரு சிலரே. செத்தவள் மீண்டாள், அசைவம் உணவு சைவமாகியது, மதிமயங்கும் மது சர்பத்தாகியது. காறீய துப்பல் கண்ணுக்கு மருந்தானது, மலம் சந்தனமானது, கதிர்காமத்திரை தீப்பற்றியதை கல்முனையில் அனைக்க கதிர்காமத்திலும் அனைக்கும் காட்சி இது போன்று பல சித்துக்கள் செய்தவர் சுவாமி. அவர் சமாதியடைந்த போது அதிசயம். தன் சமாதி பெற்றக் குறிபிட்ட போது தனது வயிற்றிலிருந்து உதிரம் வெளி வரும் போது தான் சமாதி கைகூடும் மென்று குறிப்பிட்டிருந்தார். சுவாமி பத்மாசனத்தில் அமந்து மூன்று நாட்கள் சென்று விட்டது இருந்தும் அங்க அசைவின்றி மூச்சிப்பேச்சி இன்றி இருக்க வைத்தியர்கள் பரிசோதித்து உயிரற்ற உடல் என்று தீமானித்தும். உடலில் எவ்வித மாற்றமும் இன்றி இருந்தது உடல். மூன்றாம் நாள் உந்தியில் உதிரம் பெருகியது. வைத்தியமே திகைத்தது. இப்படியானவர் சுவாமி. இந்த நிகழ்வை எனது தந்தையின் தந்தை அமரர். நொ.க.ஏரம்பமூர்த்தி அவர்கள் தானும் அன்றை தினம் அங்கு நின்ற போது நிகழ்ததாக கூற கேள்விப்பட்டுள்ளேன்.











 இராஜ்குமார்சுவாமியுடன் அடியேன்



யாகத்தில் அடியேன்
     சுவாமியின் அறுபதாவது ஆண்டு குரு பூஜையில் அவருக்கு தாம்பரவிக்கிரக பிரதிட்டையும் மகாசித்தர்களின் யாகமும் நடைபெற்றது. இதற்கு பரததேச தமிழ் நாடு பிரம்ம ரிஷி மலை தவத்திரு அன்னச்சித்தர் இராஜ்குமார் குருஐp அவர்கள் வந்திருந்தார்;. அவர்களுடன் நானும் சென்று அக்கைங்கரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. ஒன்று குருஐpக்கும் எனக்கும் இருக்கும் ஆத்மீகக் தொடர்பு. அடுத்தது நான் சித்தர்களின் வழியை பின்பற்றி வாழ்க்கைப் பயணத்தை தெடங்கியுள்ளவன். இத்தனைக்கும் மேல் எனது மூதாதையருக்கும் சுவாமிக்கும் இருந்த பரம்பரைக் கடத்தல். மட்டக்களப்பிலே சுவாமி நடமாடும் பகுதிகளில் ஒன்று கோட்டை முனைப் பகுதி . அங்கு தவத்திரு. பாலானந்த சுவாமி, விநாயகமூர்த்தி சுவாமி போன் றோர் வாழ்தனர். அவர்களில் தவத்திரு. பாலானந்த சுவாமியும் (எனது அம்மாவின் அம்மாவிற்க்கு தாய் மாமன்.) மைத்துனர் அமரர் .ஏரம்பர். கனகசபை அவர்களும் சேர்ந்து தமது தாயதி வளவில் வருடாவருடம்  வேள்வி செய்வது வழக்கம். இதில் தவத்திரு. பாலானந்த சுவாமி, தவத்திரு. ஆனைக்குட்டிக் சுவாமி,  பெருமதிப்புக்குரிய விநாயகமூர்த்தி சுவாமி, யாழ்பாணத்திலிருந்து தவத்திரு.  அருளம்பலச் சுவாமி, தவத்திரு. குழந்தைவேல் சுவாமி, போன்றோர் அக்; கையிங்கரியத்தில் ஈடுபட்தாக எனது மூதாதையர் கூறியதை நான் கேள்வி ப்பட்டுள்ளேன். அந்த வளவில் தற்போது புதிய பயனியர் தனியார் மருத்துவ மனை அமைந்துள்ளது. அம்மனை  அமரர் வேதாரணியம் அவர்களின் மருமகன் திரு டாக்டர். அமரசிங்கத்துக்கு சொந்தமானது. அதில் திரு. கனகசபை என்பவர் எனது தந்தையின் தந்தையின் தந்தையாவார். இவருக்கு பாலானந்த சுவாமி; மைத்துனர் ஆவார்.
 இராஜ்குமார்சுவாமியுடன் அடியேன்
     தவத்திரு. பாலானந்த சுவாமி தனது வாழ்க்கையை இறை பணிக்கே அர்ப்பணித்து பிம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்த சுவாமி. அவர் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்தவர். எப்போது கையில் வெள்னைப் பிரம்புடன் தான் இருப்பவர். அப் பிரம்பால் தட்டினால் போதும் விபரீதம் வந்து விடும் அப்படி சக்தி வாய்ந்தது அப்பிரம்பு தந்திரீய வழிபாட்டில் தலை சிறந்தவர். மாரியம்மான் தான் அவரின் வாலை மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மணியகாராக இருந்தவர். அவர் பிம்மச்சாரியாகவிருந்து சன்னியாசம் பூண்டவர். சித்த வைத்தியத்திலும் சிறந்தவர். ஏந்த நேரமும் இறை சிந்தனையும் இறைபணியும் தான் அவர் சிந்தை. ஒருமுறை அவரை வாதுக்கு இழுத்தனர் சிலராம் அப்போது  மாரியம்மன் கோயிலில் இருந்த வேம்பு மரத்தை நிலத்தில் தலை குனிந்து நிமிர வைத்துச் சாதனை படைக்க வந்தவர்கள் அவர் திறமையை வியர்ந்து மன்னிப்பு கோரி வணங்கிச் சென்றதாக எனது தாயார் சொல்லக் கேள்விப் பட்டிருக்கினறேன். இம்மரம் இப்போதும் இருக்கின்றது. அவர் வீட்டில் வைத்து வழிபட்ட வைரவர் எனது தாயதிவளவில் இப்போதும் இருக்கின்றது. அவர் வைத்து வழிபட்ட வாள் என்னிடம் தான் இருந்தது காலத்தின் விளைவால் தவறிவிட்டது. வாள் ஞானத்தின் அடையாளம். அதில் ஒரு துளியாகிலும் கிடைத்ததால் தானோ அது தவறியது என்று என்னி திருப்தி அடைகின்றேன். எல்லாம் அவன் செயல். அவரின் சமாதி ஸ்ரீ மாமங்கப் பிள்ளையார் ஆலயத்துக்கு பக்கத்தில் வைத்ததாக எனது மூதாதையார் கூறக் கேள்விப்பட்டிருக் கின்றேன். தற்போது அதற்கான தடையங்கள் எதுவும் தென்பட வில்லை. 
            ஆனைக்குட்டிக் சுவாமியார் மட்டக்களப்பு கேட்டைமுனைப் பகுதியில் நடமாடும் போது பல சித்துகள் செய்ததாக எனது மூதாதையினர் சொல்லக். கேள்விப்பட்டிருக்கிறேன். வேதாரணியம் ஆச்சாரியார் இடம் சென்று அடிக்கடி தங்கத்தை அள்ளி எடுத்துக் கொண்டு செல்வாரம். அப்போதெல்லாம் ஆச்சாரியார் எதுவும் பேசமாடாட்டாரம் சிறிது நேரத்தின் பின் “உன்னுடைய தங்கம் எனக்கெதற்கு” என்று கூறி மீண்டும் எறிந்து விட்டுக் செல்வாரம் பின்னர் செல்வம் கொழிக்குமாம். பிற்காலத்தில் மட்டக்களப்பில் பிரபல தனவானாக வாழ்ந்தவர் அவர். அவர் எனது தந்தையின் மாமா. இது போன்று சராயக்கடைக் சென்று சாராயம் கேட்பாரம் கொடுக்காவிட்டால் சாராயம் பீப்பாவில் ஒன்றும் இருக்காதாம். பின்னர் சுவாமியை தேடிப் போய் மன்னிப்பு கேட்டால் வந்து பீப்பாவில் ஏறி இருந்து விட்டுச் சென்றதும் பீப்பா நிறைந்து இருக்குமாம். பெண்களை கண்டால்  தனது உடையை கழற்றி வைத்து விட்டு துரத்திக் செல்லாராம். பின்னர் சிரித்து பைத்தியம் போல் இருப்பாராம். பெண்கள் இவரைக் கண்டால் ஓடி மறைந்து விடுவார்களாம். அடியேன் அறிய பொன்னம்பலம் என்னும் ஒருவர் நடக்க முடியாது நிலத்தில் அரைத்து சென்ற ஒருவரைக் கண்டுள்ளேன்.; அவர் தங்கத்தை எடுக்க சுவாமிக்கு காலால் அடித்தவராம் அதற்கு சுவாமி “உனக்கு நீலக்குண்டு போட்டிருக்கின்றேன்” என்று கூறிச் சென்றதன் பின் நிகழ்ந்ததாக கேள்வி ப்பாட்டுள்ளேன். எனது வீட்டில் அன்னமலையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்றோருவர் இருந்தார் அவருப் முகத்தில் நிறைய வடுக்கள் இருந்தது இதை இல்லாமல் செய்ய பலமுறை அலைந்து அவர்பின்னாலேயே திரிவது வழக்கம் ஒருநாள் அவரது சிறுநீரை கழித்து கையில் கொடுத்து முகத்தில் பூசச்சொன்னாராம். அவர் அருவருப்பு பாராது முகத்தில் பூச சந்தனமணத்துடன் கூடிய நறுமணமாக இருந்ததுடன் முதத்தில் இருந்த வடு மாறியதாக அடியேன் சிறுவயதாக இருந்த போது அவர் கூறக் கேள்விப் பட்டுள்ளேன்.  எனது தந்தையின் பெரியப்பா அமரர் நொ. க. இரத்தினசபாபதி அவர்களுக்கு குழந்தை நீண்டகாலம் இல்லாமல் இருக்க உனக்கு ஒன்று என கைசைகை மூலம் காட்டினாராம் அதன் பின் அவருக்கு ஆண் குழந்தையாக சித்தப்பா கிடைத்ததராம். இவ்வாறு சுவாமிக்கும் எனது மூதாதையருக்கும் இடையில்  ஆன்மீகத் தொடர்பு இருந்திருக்கின்றது.  
     அருளம்பலச் சுவாமி பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் கவனரின் செயளாலராக கடமையாற்றி காலத்தில் நொத்தாரிசியராக இருந்த கனகசபை உடன் நெருங்கிய நண்பராக இருந்திருக்கின்றார். பின்னர் “பாரததேசத்தில் நீதிபதியாக கடமையாற்றி சித்தம் தெளிந்து பற்றறுத்து ஈழம் அடைந்து வடக்கில் கடைத்தெருவில் சுவாமியான கடையில் சுவாமியின் சீடராக சித்தம் தெளிந்து பற்றறுத்து சுவாமியானவர்” இவருக்கும்  அமரர்.  ஏரம்பர். கனகசபைக்கும் தொடர்ந்து ஆன்மீகத் தொடர்பு இருந்திருக்கின்றது. அடியேன் அறிய எனது தந்தையின் தந்தை அமரர். நொ.கனகசபை ஏரம்பமூhத்;தி  ஒய்வு பெற்ற அதிபர் அவர்கள் காலம் வரை யாழ்பாண துறவிகளின் தொடர்புகள் இருந்ததை நான் அறிவேன். அவர்கள் மூலம் வீட்டில் அவர் கொண்டு வரும் இலிங்கத்துக்கு அபிக்ஷேக பூஜை செய்ததை அறிவேன். நல்லையா நெத்தாசியார் இவர் ஒரு ஆன்மீகக் கவிஞர் இவர் நொ.க. ஏரம்பமூர்தியின் தமக்கையின் கனவன் இவர் அருளம்பலசுவாமிகள் பாமாலை, ஏர்ரூர் வடபத்திரகாளி பாமாலை போன்று பல பாடியுள்ளார். 
         இவருக்கு தீராத வீயாதி ஒன்று ஏற்பட வடபத்திரகாளி பாமாலையை இயற்றிப் பாடிய போது அங்கு அசரீதி கேட்டது “இரவு பன்னிரண்டு மணிக்கு பாடுமாறு” பாடிய போது ஆலயக்கதவுகள் திறந்து அம்பிகை ஆடியதாகக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். இன்னு மோர் முறை நோப்பு சோறு கட்டி அம்பிகையின் பரிபலங்களுக்கு வருடாந்த உற்ச்வத்தின் இறுதியில் அதை எறிந்து திருக்கதவு மூடுவது வழக்கமாகும். மூடினால் அங்கு யாரும செல்வது வழக்கமில்லை. . ஒரு முறை பத்மாவதி என்னும் எனது உறவினப் பெண் சிறு பிள்ளையாக இருந்த போது திருக்கதவு மூடிய பின் அங்கு சென்றதாகவும் அத்தருனம் தூர்தேவதைகள் அவளை அழைத்செல்கையில் கதறி அழுகையில் அம்பிபை தோன்றி பூவரசுமரத்தடிகை கையில் கொடுத்து கத்ததாக கொள்விப்பட்டிருக்கின்றேன். இத்தடி மருந்தாக உபையோக்க்கப்பட்டதை அடியேனும் அறிவேண். ஏரூர் கண்மணி தாசன் என்று அழைக்கப்படும் வி~;வப்பிரம்ம ஸ்ரீ சீ.வை. காந்தன் குருக்களுக்கு  நாவிலே திரிசூலத்தால் காளிகாம்பிகை கீறியதால் தான் அன்று சாஸ்திரஞானம் அவருக்கு உதித்ததாக அடியேனும் அறிவேண். இன்றும் இவ்வாலயம் பிரதித்தி பொற்ற விளங்குகின்றது . தாந்திரீக முறையைப் பின்பற்றி பட்டறையில் அடையல் வைத்தே அம்பிகைக்கு வருடம் ஒருமுறை சடங்கு நடை பெறுகின்றது. வேள்ளிக் கிழமைகளில் மட்டும் பூஜை நடை பெறுகின்றது. சித்தானக் குட்டி சுவாமியும் காளிகாம்பாவை உபாசித்தாக அற்கின்றோம். சித்தார்களின் வாழிபாடுகளில் ஆதிசத்தி வழிபாடு மிகமுக்கியமானது. ஆட்டமாசித்தை பெற்று உலகையாள மாமேரு ஸ்ரீயந்திர வழிபாடு செய்கின்றனர். சத்தி வழிபாட்டின் மூலம் மும்மலக் கட்டை அறுத்து மனத்தை வென்று புத்தி விழித்து சித்தம் தெளிவித்து சிவனை கான முடியும்.
      நானும் அறிவு தெரிந்த வயதிலிருந்து வீதி ஓரங்களில் கிடக்கும் கல்லை கடவுளாக வழிபட ஆரம்பித்தவன். இன்று கல்லை வடிமாக்கி வழிபட்டு எம்மைக் கடந்தும் எம்முள்ளுறைந் திருக்கும் கடவுளை காண விளைகின்றேன். இதனால் தானோ எனக்கும் மகா சித்தர்கள் யாகத்தில் தமிழ் நாடு பிரம்ம ரிஷி மலை தவத்திரு அன்னச்சித்தர் இராஜ்குமார் குருஜீ   அவர்களுடன் இருந்து யாகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ என எண்ணத் தோன்று கின்றது. 
“அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி” “தவமுடையாக்கே தவம்”
































Friday, April 8, 2011

சித்தர்கள் பூமி கதிர்காமம்” கட்டுரையின் பகுதி-2 “கதிர்காமம் ஆகமமுறைக்குட்பட்ட பூசை நடைபெற்ற இடம். துட்டகைமுனுவின் கைப்பற்றலின் பின் திரையிட்டு மறை பொருளானான் கந்தன். அடியார் உள்ளத்தில் நிறை பொருளானான்”;.

                                          திருவிழாவின் போது பேழையை யானையில் வைத்து    ஊர்வலம் செல்லும் காட்சி
'சித்தர்கள் பூமி கதிர்காமம்' கட்டுரையின் பகுதி-2


'கதிர்காமம் ஆகமமுறைக்குட்பட்ட பூசை நடைபெற்ற இடம். துட்டகைமுனுவின் கைப்பற்றலின் பின் திரையிட்டு மறை பொருளானான் கந்தன். அடியார் உள்ளத்தில் நிறை பொருளானான்'

கதிர்காமத்தில் இன்று நடைபெறுகின்ற பூசை முறை பரம்பரையான முறை என பலரும் கருதலாம். ஆனால் அது வல்ல உண்மை. தமிழ் மன்னன் எல்லாளன் ஆட்சி துட்டகைமுனுவுக்கு மாறிய பின்னரே இந்துக்களின் பூசை முறைக்கு கதிர்காமத்தில் ஆபத்துவந்தது.
துட்டகைமுனு ஆட்சிக்கு வந்த பின் கதிர்காமத்திலிருந்த அதிகாரிக்கு எழுதிய ஓலையில் பன்டாரச் சாதியினர் வந்து இந்து சமய முறைப்படி ஆலய பூசை செய்யும் வரை உங்களுக்கு தெரிந்தவரை பூசை செய்யுங்கள் என எழுதியிருந்ததாகவும் அதை தான் பார்வையிட்டதாகவும் கதிர்காம நாயகா பிக்குவான தம்ம தின்ன பியரத்ன தேரோ கூறியதாக அறிகின்றோம்.
செஞ்சந்தன கட்டையிலான தங்கத்தட்டால் அங்கி அணிவித்த ஆறுமுகமும் பன்னிருகையும் உள்ள ஆறுமுகசுவாமி சிலை திரைமறைவில் உள்ளது. 1922 ஆம் ஆண்டின் முன் பஸ்நாயக்காவாக இருந்த திரு. ஸ்ரீ உள்விட்ட என்பவரும் கோயிலின் திருப்பணிகள் செய்து  கொன்டு 1934 ஆம் ஆண்டுவரை கதிர்காமத்திலிருந்த திரு. புஞ்சி சிங்கோ என்பவரும் கதிர்காம பௌத்த விகாரையின் பிரதம குருவும் சிலை இருந்ததை கூறியிருக்கின்றனர். இவர்களின் கூற்றை 1819 ஆம் ஆண்டு அங்கு சென்ற இலங்கையின் தேசாதிபதி பிரவுண்டிரிக் அவர்களுடன் சென்ற டாக்டர்.டேவி என்பவர் எழுதிய வெளியீட்டில் 421 ம் பக்கத்தில் “விக்கிரகம் கோயிலிலிருந்து அகற்றப்பட்டு காட்டில் மறைக்ப்பட்டு வைக்கப்பட்ள்ளது” என்று குறிப்பிட்டனர். இதிலிருந்து விக்கிரக வழிபாடு இருந்ததற்கான ஆதாரமாக அமைகின்றது.
 திருவிழாக்காலங்களில் முருகப் பெருமானது விக்கிரத்திலுள்ள குடை கொடி வெண்சாமரை வேல் வில் அம்பு என்னும் ஆறுசின்னங்களும் வெள்ளிப் பேளையில் வைத்து பட்டுத்துணியில் சுற்றி யானையின் மீது ஏற்றி வலம் வருகின்றனர். இத்துடன் முருகப் பெருமானது சோடன சோபலங்கார பூசைக்கான அடுக்குத்தீபம் பஞ்சதீபம் முக்குதிதீபம் என்பன காட்டபடுகின்றன. அத்துடன்  சக்கரைப் பெங்கல் நைவேத்தியமாக நிவேதனம் செய்யப்படுகின்றது. இதிலிருந்து இந்துமத முறைப்படி பூசைகள் நடந்திருப்பதற்கு ஆதாரம் உண்டு.
அத்துடன் மகாவம்சத்தில் கதிர்காமத்தில் கந்தனுக்கு கோயில் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அங்கு தேவநம்பிய தீசன் காலத்தில் கி.பி. 250இல் அசோக சக்கரவத்தியின் புதல்வியான சங்கமித்திரை பிக்குனியால் புத்தகாயவிலிருந்து கெண்டுவரப்பட்ட அரமரக்கிளை ஒன்றினை நாட்டியதாகவும் 1 ம் நூற்றான்டில் கிரிவிகாரையை தகாநாக என்ற அரசன் கட்டுவித்தான் என்றும் கூறிப்பிப்பட்டுள்ளது. இது மகாவம்சம் அத்தியாயம் 57இல, குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெடர்பாக மகாவம்சத்தில்XIII யில் பக்கம் 76-77யில் XLV .45 LVK.2 67,68 ,70,74, உடன்LVIII .5 ம் பிரதிகளிலும் காணலாம். இங்கு கதிர்காமக்கந்தனின் வரலாறும் இல்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இவ்வாலயம் அக்காலதிலே இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இவ்வாலயம் இந்துக்கள் கையில் இருந்திருக்கலாம் என தோன்றுகின்றது. பொளத்தர்களின் கையில் இருந்திருந்தால் மகாவம்சம் அதைக்கூறி இருக்கும் போலும்.
 1635ஆம் ஆண்டு கண்டியை ஆட்சி செய்த கண்ணுச்சாமி என்னும் இரண்டாம் இராஜசிங்கன் என்னும் தமிழ் அரசன் கதிர்காமத்தின் நிர்வாகப் பொறுப்பை பௌத்த குருமாரிடமிருந்து இந்துக்களிடம் ஒப்படைக்க கட்டளையிட அதை அவர்கள் விரும்பாமையினால் அதை கைப்பற்றி இந்துக்களிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது. இதிலிருந்து பார்க்கும் போது காலத்துக்காலம் ஆட்சிப் பொறுப்புக் கேற்ப நிர்வாகப் பொறுப்பும் மாறியுள்ளது என்பது புலனாகின்றது. 1642ஆம் ஆண்டு போத்துக்கேயர் கதிர்காமத்தைக் கைப்பற்ற சென்று ஆலயத்தை அடையாளம் கானாமல் தோல்வியடைந்து  வரும் போது இடையில் கண்ட இந்து கோயில்களை இடித்து தள்ளியும் வழிபட்டு வந்தவர்களை கொன்று குவித்தனர்;. திரும்பியதாக அப் படையின் தளபGasper Figura de Cerpe)   டச் மொழியில்ல்எழுதிய ரிபீரோஸ் சீலாவோ சிலோன்(Ribeiro’s Ceilao Ceylon)   என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த டாக்டர் போல் பீரிஸ். சி.சி.எஸ்(Dr.P aule  Peris C.C.S.)  அவர்கள் அததியாக இருந்த கஸ்பர் பிக்கூரா டி செர்பே (னை பாகம்-1 பக்கம் 324 இல் குறிப்பிட்டுள்ளார். (1597-ல் ‘போத்துக்கீசர் காலம்’)
1635 ஆம் ஆண்டிலிருந்து 1817 ஆம் ஆண்டுவரை கதிர்காமம்  ஜோதி காமமாக விளங்கியது. 1815ஆம் ஆண்டு கண்டி இராட்சியம் பிரித்தானிய ஏகாதிபத்திய வசக்கப்பட்டு இதனால் “ஊவாகலகம் ஏற்பட்டது” இதன் விழைவாக 1818ஆம் ஆண்டு கலகம் வலுவடைந்து 1819 ஆம் ஆண்டு கட்டுபடபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு 1819 ஆம் ஆண்டு யில் கதிர்காமம் இந்துக்கள் வசமானது. பாதுகாப்புப் பொறுப்பு பிருத்தானிய படை வசம்மிருந்தது. அப்போது தெய்வானை அம்மன் ஆலயப் பொறுப்பு ஸ்ரீ கல்யாண கிரிபாவா விடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் காட்டியில் மறைத்து வைக்கப்படடிருந்த ஆறுமுகசாமி எடுக்ப்பட்டு கதிகாம கந்தனின் கருவறையில் வைக்கப்பட்தாக  தேசாதிபதி பிரவுண்டிரிக் உடன் சென்ற டக்டர் டேவி 1821ஆம் ஆண்டில் பிரசுரிக்ப்பட்ட அரசாங்க பத்திரிகையில் எழுதி வெளியிட்டார். 1865ஆம் ஆண்டுவரை கதிர்காம நிர்வாகம் இந்துக்கள வசமாயி;ருந்தது என்பதற்கு பதுளை நீதி மன்றத்தில் பதிவான1865ஆம் ஆண்டு 182ஆம் இலக்க வழக்கு உறுதி  செய்கின்றது.
    1834ஆம் ஆண்டு வெளியான அரச வர்தமான பத்திரிகையில் சைமன் காசிச் செட்டி என்பவர் கதிர்காமத்துக்கு இந்தியாவிலிருந்து வரும் யாத்திரியர்கள் கங்கா ஜலத்தை மூங்கில் குழாய்களில் அடைத்து வந்து சுவாமிக்கு அபிN~கம் செய்து ஆராதனை செய்ததாகவும் முஸ்லிம் பக்கீர்கள் சுவாமியின் முன் தீவர்த்தி கைப்பந்தம் பிடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேல் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஓப்பு நோக்கும் போது இந்து தர்மத்தில் உள்ள அபிN~கம் அர்ச்சனை ஆராதனைகள் அனைத்தையும் நடாத்தப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. இருந்தும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரணமிருக்கும் அவை வெளிப்படையாக தெரிவதும் உண்டு. உள்ளுனர்வால் உணர்வதும் உண்டு. எவை எப்படி இருப்பினும் கதிர்காமம் சித்தர் கோயில். சித்தம் தெளிதால் அவன் ஒளி தெரியும். அதற்கு அகஇருள் நீங்க வேண்டும். உள்ளம் இருண்டால் அகக் கதவு மூடிவிடும்;. இதை திருமூலர் திருமந்திரத்தில் “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்” குறிப்பிடுகின்றார். சித்தர்கள் மகரி~pகள் மரபு புறக்கண்னால் கண்பதற்கு பதில் அகக்கண்னால் காண்பது. அதாவது தியானத்தின் மூலம் எம்முள்ளுள்ள இறைவனை காண்பது. இதனால் சாதி மத இன நிற வேறுபாடுகள் அதிகரிதிருந்ததால் ஆணவம் மேலோங்கி கந்தன் மறைந்தான். உண்மை அடியார்களான எழியோர்க்கு அகஒளிலில் தன்ஒளிபரப்பவே கந்தன் மறைந்து உண்மை அடியார்யுள்ளத்தில் குடிகொண்டுள்ளான். என்பதே உண்மை. கதிர்காமத்தில் கந்தன் அடியார்ரோடு அடியாராய் எழியோனாய் நடமாடுபவன். அங்கு தன்னைநோக்கி உருகுபவருக்கு காட்சி கொடுப்பவன். அருநகிரிநாதர் “திருப்புகழில்” கதிர்காமகந்தன் திருவளையாடலை “மருவும்மடியாரிகள் மனதில் விளையாடும் மரகத மயுர பெருமாளே” என குறிப்பிடுகின்றார்.
கதிகாமத்தில் சித்தானைக்குட்டி சுவாமிகளுக்கு கந்தனின் அமுததுளிகிடைத்தது. இவர் தென் இந்தியாவின்  தென் பகுதியான இராமநாதர்புரம் “பெருநாளி” என்னும் இராசதானி சிற்றலசரின் ஒரே மகன் கோவிந்தசாமி என்பவராகும். இவர் ஒருமுறை கதிர்காமக்கந்தனின் அருள்வேண்டி மாணிக்ககங்கையில் நீடாடி மாணிக்கப்பிள்ளையாரிடம் உண்ணநோம்பிருந்தார். அது தவமாகமாறி பல வாரம் கழிந்தது கந்தன் கைவிடவில்லை. ஒருநாள் பெரிய கப்புறாளை வந்து சுவாமியிடம் “உன் தந்தை  உள்ளே வருமாறு அழைக்கின்றார்.” என்று கோயிலினுள் அழைத்துக் சென்றார். சுவாமி உட் புகுந்ததும்  சுரங்வழியாக ஏழுமலையை அடைந்து அதிலுள்ள சுனையிலிருந்து  கையினால் நீர் எடுத்து மூன்று செட்டு நீ நாவிலிட்டார். இதன் பின் உண்ணா நோம்பின் களை “சூரியனில் பட்ட பனிபோல் மறைந்தது”  அந்த சந்தாப்பத்தை சுவாமி உணவின்றி பலநாட்கள் இருந்தாலும்  உடலில் எவ்வித மாற்றமும் இருக்காது அதன் இரகசியத்தை கேட்கும் போது ஒருமுறை குறிப்பிட்டாராம். நீர் அருந்தியபின் கண்களை மூட்ப் பணித்தாரம் பின் கண் திறக்கையில்  சுவாமி கதிர்காம வீதியில் நடமாடுவதை உணர்தாராம். இப்படிப்பட்டவன் கந்தன்.
  அவன் திருவிளையாடல்களை “சித்தாகள்; பூமி கதிர்காமம்” என்னும் கட்டுரையில் குறித்துரைத்துள்ளேன். கதிர்காமம் சித்தர்கள் பூமி ஆகையால் சித்தர்கள் கந்தனை தன்னுள் கண்டவர்கள். அஞ்ஞானத்தாலும் ஊனக்கண்ணுக்கும் தெரியாதவன் கந்தன். ஞானத்துக்கும் அககண்ணுக்கும் புலப்படுவான் அவன். அதனாலோ கந்தன் மறைபொருள்ளானான். என எண்ணத் தோன்றுகின்றது



Thursday, February 24, 2011

எனது ஆன்மீக சாதனைக்கு தளமமைத்த மட்டக்களப்பில் உள்ள திமிலதீவு மகாவிஸ்னு கோயில் அது சித்தர் கோயில்

ஆலயமும் கிணறு அமைந்த பிரதேசமும்
 எனது ஆன்மீக சாதனைக்கு தளமமைத்த மட்டக்களப்பில் உள்ள திமிலதீவு மகாவிஸ்னு கோயில் அது சித்தர் கோயில்


                   இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் திமிலதீவில் அமைந்துள்ளது மகாவிஸ்னு கோயில் அது சித்தர் கோயில். அது இற்றைக்கு முன்நூறு வருடங்களுக்கு முன் அக்கோயிலுக்கு முன்னுள்ள அரச மரத்தின் கீழ்; ஓருவர் விநாயகர் வழிபாடு செய்து வந்தார். அவருக்கு உதவியாக அந்த கிராமத்தைச்சேந்தவர் ஒருவரும் இருந்தார். திடீரென அவர் இறந்து போனார். அவ்வேளை மரத்தின்கீழ்; பூசை செய்தவரையும் காணவில்லை. இறந்தவரை அடக்க ஏற்பாடுகள் செய்து கொன்டிருந்த வேளை இறந்தவர் எழுந்துவிட்டார் பின் உடனடியாக அவர் மரத்தின் கீழ்;  மகாவிஸ்னுவுக்கு இங்கு ஆலயம் அமைக்க பணிகக்ப்படடு;ள்ளதாக கூறி அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறி இறுதிகிரியைக்காக ஏற்பாடு செய்ய வைத்திருந்த கம்பு தடிகளைக் கொண்டு ஆலயத்தை அமைத்தார். அந்த இன்றுள்ள திமிலதீவு மகாவிஸ்னு கோயில். பிற்காலத்தில் அவருடைய பரம்பரையைச் சேர்ந்த அமரர் சின்னையா விதானையார் குடும்பத்தைச் சேர்ந்த அமரர்  வடிவேல் அவர்களின் மகன் திரு.வ.மகேந்திரன் தந்போது பூசகரகவுள்ளார். மறைந்தவர்  சுவாமி சங்குபாலயோகீஸ்வரர்.
அரச மரம்
          அங்கு மகாவிஸ்னு என்னையும் அழைத்தார். நான் 2002ம் ஆண்டு இந்திய தலயாத்திரை மேற்கொண்ட போது. ஸ்ரீரங்கநாதரை தசிசனம் செய்ய சென்ற போது தரிசனத்தில் பூரணத்துவத்துக்கு அங்குள்ள ஐயங்கார்கள் தடையாக அமையவே மனம் வருந்தியவனாக வேண்டுதல் செய்துவிட்டு வந்தேன். தலயத்திரையை முடித்து விட்டு இலங்கை திரும்பியதும். ஒரு நாள் அதிகாலையில் கனவில் தோன்றிய மாயன் ஆலயம் ஒன்றினைக்காட்டி அங்கு வருமாறு அழைப்பு விட்டார். விளித்தெழுந்ததும் யோசித்துப்பார்த்தேன். எனக்கு அவ்விடம் புரியாதபுதிராக இருந்தது பின்னர் காட்டப்பட்ட அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இடத்தை அறிந்து அங்கு சென்றேன். அங்கு பூசகரை கண்டு கதைத்து விட்டு பூசையில் கலந்து கொண்டேன். அப்போது அங்கு இருந்தவர் திரு. சின்னையா வடிவேல் ஐயா அவர்கள். அவர் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்தார். 
நான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சென்று தியானத்தில் இருப்பது வழமை. பூசை முடிந்து சில நிமிடநேரத்தின் பின் தான் நான் தியானத்தை விட்டு எழுவேன் அது வரை ஐயா காத்திருப்பார். பின்னர் ஞான அனுபவங்களை பகிர்வது வழமையாகிற்று. ஒரு நாள் தியானத்தை விட்டு எழுந்த போது ஐயா கேட்டார் இவ்வாலயத்தில் நான் இருக்கும் போது மூன்று விடயங்கள் நிறைவேறவேண்டும். அப்போது நான் திகைத்துப் போனேன். ஐயா நீங்கள் கண்ணனுடன் உரையாடுபவராச்சே என்றேன். அதற்கு அவர் ஒன்றும் பேசாது மீண்டும் என்னிடம் அதே கேள்வியை கேட்டார் அப்போது நான் என்ன வென்று கேட்ட போது என்னுடைய காலத்தில் முதலில் இவ் ஆலயத்தில் பழமையாக இருக்கின்ற கருடமண்;டபம் புதுப் பொலிவு பெறுமா? அடுத்து முன்னூ று வருடங்களாக எனது மூதாதையர் தேடியும் கண்டுபிடிக்காத அபிசேஷகத்துக்கு தேவையான சுத்த நீர்க்கிணறு கண்டுபிடிக்கப்படுமா? அடுத்தது புனராவர்த்தன மகா கும்பாவிசேஷகம் ஒன்று நடைபெறுமா? என்று கேட்டார். அதற்கு என்னுள்ளி ருந்து உள்ளுணவு உணர்தியது அது நடக்குமென அதைக்கூறினேன். ஐயா சந்தோசமடைந்தார். அவை அனைத்தும் ஐயாவின் காலத்தில் ஐயனை கருவியாகப் பயன்படுத்தி நிறைவேறியது. அது அவனின் திருவிளையாடல். 
               அவ் ஆலயத்துக்கு செல்லத் தொடங்கிய பின் மூன்று வாரத்தின் பின் சுவாமி ஸ்ரீ சத்திய சாய் பாபா வின் அபூர்வமான காட்சி கிடைத்தது. அதன் பின்னர் பின் மூன்று வாரத்தின் பின் குருதேவர் ஸ்ரீ இராமகிஷ்ணரின் அபூர்வமான காட்சி கிடைத்தது. இது போன்று பல சித்தர்களின் காட்சிகள் கிடைத்தது. இக் காட்சிக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று சிந்தித்தேன். அப்போது தான் எனக்குப் புரிந்தது இருவரும் மகா விஸ்ணுவின் அவதாரம் என்பது. என்னை ஆன்மீக நாட்டத்தில் ஈடுபடகாரணமாக அமைந்தது குருதேவர் ஸ்ரீ இராமகிஷ்ணரின் வாழ்கை வரலாறு அடங்கிய அமுதமொழி இது அண்ணாவால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. எனக்கொரு காலத்தில் மனக்குழப்பமும் அமைதியின்மையும் காணப்பட்டது.(1990இல்) இதை உணர்ந்த எனது தந்தை அமைதிக்கு ஒரேவழி குருதேவரின் அமுதமொழி தான் என்று என்னிடம் கையளித்தார். எனது தந்தை குருதேவரின் வழிநிற்பவர். உண்மையில் அது தான் மன அமைதியையும் உண்மையான ஆன்மீகப்பாதைக்கு அடிகோலியது எனலாம். அதனால் தானோ குருதேவரின் திவ்யதரிசனம் கிட்டியதோ என்று எண்ணினேன்.
          இவ்வாலயத்தின் நடைபெற்ற அதிசயங்களை ஐயா என்னுடன் பகிர்ந்து கொள்வார். அவற்றில் சில கொக்கட்டிச்சேலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்துக்கு பூசைக்காக திமிலதீவிலிருந்து தனது மூதாதையினர் முதலையை மந்திரசத்தியை கொண்டு அழைத்து அதில் ஏறி சென்று திரும்பி விடுவதாக கூறினார். அதிலிருந்து தெரிகின்றது கண்ணனுக்கு பூசை செய்த பரம்பரையினர் மந்திரசத்தி உள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். இவ்வாலயம் அக்காலத்திலிருந்து அரவம் தீண்டியவர்களை காப்பதிலும் சித்தசுவாதீனமுற்றோரை சுயநிலைக்கு கொண்டு வருவதற்கும் பில்லிசூன்யத்தினால் ஏற்படும் தீயவிளைவுகளிலிருந்து காப்பது போன்ற விடயங்களுக்கு இவ்வாலயம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கானப்பட்டது.
கண்ணின் கருவறை
                    1978இல் இலங்கையின் கிழக்குப்பகுதி சூறாவளியினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் திமிலதீவும் ஒன்று. அப்போது  சூறாவளி வீசி சிறிய இடைவெளியின் பின் மறுமுறை வீசியது இரண்டம் முறை வீசிய போது ஐயா வீட்டில் இருக்கமுடியாமையினால் கோயிலின் உள்செல்ல விளைந்த போது முடியாமல் தவித்த போது ஒருவர் வந்து புயலால் சரிந்து கிடந்த அரசமரக் கிளையை ஒருகையால் தூக்கிவிட்டு ஐயாவை உட்புகுமாறு பணிக்க ஐயா உட்புகுந்தபின் திரும்பிப்பார்த்த போது அவரைக்கான வில்லை. வெளியில்  பார்த்த போதும் அரசமரத்தில் உச்சிப்பகுதியில் ஓர் பிரகாசமிருப்பதை அவதானித்தனர். அப்பிரகாசம் அதிகாலை வரை நீடித்தது காலையில் மறைந்து விட்டதாக கூறினார். இன்றும் அவ்ஒளி இருந்த பகுதி அரசு பங்குனி மாதத்தில் புதிய தளிர் வருகின்ற போது அவதானிக்க முடியும். ஓளி இருந்த உச்சிப்பகுதி வெண்ணிறமான தளிரும் ஏனைய பகுதியில் சென்நிற தளிரும் கானப்படும். நான் அவ் ஆலயத்துக்கு  சென்ற ஆரம்பத்தில் அவதானித்து கேட்டபோது ஐயா இந்த விடையத்தை எனக்கு கூறினார்.
                     இது மட்டும் அல்ல இவ் ஆலயத்துக்குள் அதிகாலைகளிலும் விசேடகாலங்களிலும் பிரபஞ்சத்தின் ஒளி வந்து இறங்குவது வழமை இதை பலரும் அவதானித்துள்ளனர் எமது பகுதி போர்சூழல் கானப்பட்ட போது அவ்வாலயம் பாதுபாப்பு படை வசம் இருந்தது. அக்காலத்தில் பூசைக்காக ஐயா மட்டும் அனுமதிக்கப்படுவாராம். ஒரு நாள் மட்டக்களப்பிலுள் டச்சுக் கோட்டையில் அதி காலையில் பாதுகாப்பில் ஈடுபட்ட படையினர் இதை அவதானித்து படைமுகாம் தாக்கப்படுவதாக எண்ணி அபாய ஒலி விளிப்பூட்டி தொடர்பு கொண்ட போது எதுவும் நடைபெறவில்லை பின்னர் உண்மையை அறிந்து ஆலயப்பகுதியை வழிபாட்டுக்கு அனுமதித்து படையினர் ஒதுங்கிக்கொண்டனராம். இவ்வாறான நிகழ்வுகள் இப்போதும் நிகளுகின்றது. 
திரு. சின்னையா வடிவேல் ஐயா அவர்கள்.
ஐயாவின் இறுதிக்காலத்தில் ஓரு நாள் வழமை போன்று தியானத்தில்லிருந்து எழும்போது கேட்டர் எனது காலத்தின் பின் என்ன நிங்களும் என்று கேட்டார் அதந்கு என் உள்ளுணர்வு கூறியது ஐயாவின் மகன் திரு.வ.மகேந்திரன் சக்தி பெறும் வரையில் கண்ணன் அடியவர்களின் வேண்டு தல்களை அவரே நிறைவேற்றுவார் தெடர்பாளர் தேவையில்லை இதுதான் நடக்கும் மென்றேன் அதற்கு அவர் அதுதான் நடக்கப் போகின்றது என்றார். ஐயா அதைக் குறிப்பிட்டு ஒருசில வாரங்களின் பின் சிவபதமடைந்தார்.
வாரத்தில் வெள்ளி சனி ஆகிய தினங்களில் மட்டுமே பூசை நடைபெறுகின்றது. அதில் வெள்ளிக்கிழமை  ஸ்ரீ  மகாவிஸ்ணுவுக்கும் சனிக் கிழமை சனிஸ்வரருக்கும் பூசை நடைபெறுகின்றது. இங்கு சனிஸ்வரருக்கு தனியான சன்நிதியுள்ளது மட்டக்களப்பில் இங்கு தான் இது தனிச்சிறப்பாகும். 
 கண்டுபிடித்த கிணறு
           இவ்வாலயத்தில் கருவறையில்  ஸ்ரீ மகா விஸ்ணு வின் விக்கிரகம் மகா விஸ்ணு மட்டும் தான் இருக்கின்றது. அதைக் கேட்ட போது வருடாந்த உற்சவத்தின் போது இறுதி நாள் நிகழ்வாக திருக்கல்யாணம் நிகளுகின்றது. அன்றையத்தினம் ஒரு அமாவாசை தினமாக அமைந்திருக்கும். இதற்காக கல்யாணக் கால் வெட்டும் நிகழ்வு உண்டு. வெட்டப்பட்ட கல்யாணக் காலை இராதையாக உருவகிக்கபட்டு பூசகர் கண்ணனனாக பாவனை செயப்பட்டு இத் திருகல்யாணம் அதிகாலையில் நடை பெறுகின்றது. திருமணகூறதாலிப் பெட்டி அமரர் வடிவேல் ஐயாவின் சகோதரிதிரு.திருமதி. கணகநாயகம் பாக்கியலட்சுமி குடும்பத்தினரே  கொண்டு வருகின்றனர். அவர்களே பொண் வீட்டார். அன்று வினாயகர் பணையும் எழுந்தருளச்செய்கின்றனர். அன்று உச்சிக்காலை பூசையின் பின் திருமணசாப்பாடு கொடுக்கப்படுகின்றது.  இதனால் தான் லட்சுமி சதேராக ஸ்ரீ மகா விஸ்ணு இங்கு இல்லை. அன் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். முன்னர் உள்ள ஒன்பது நாட்களும் கண்ணபிரானின் லிலைகள் திருவிழாவில் சுவாமி வலம் வருகின்ற போது நடித்துக்காட்டப்படும். திருவிழாவில் இரண்டு சுவாமிகள் வலம் வருகின்றது. அதில் ஒன்று ராதை யதோசை சமேத கண்ணன் மற்றையது நாற்புறமும் மறைக்கப்பாட்ட தேர். ஸ்ரீ மகா விஸ்ணு இருக்க திருவிழாவின் நிகழ்வுகள் அனைத்தும் கண்ணபிரானுக்கே நிகழ்வது இங்குள்ள சிறப்பம்சமாகும்.அடுத்து வரும் வெள்ளிக்கிழமை சனிஸ்வரர் அமுது கொடுக்கப்படுகின்றது. அவ் அமுதில் முருங்கை இலைச்சுண்டல் விசேமான அமைகின்றது.  அத்துடன் கண்ணன் கோவில் என்று தான் பத்தர்களும் அழைக்கின்றனர். 
 கண்டுபிடித்த கிணறு







அரமரமும் ஆலயமும்
     எனவே இவ் வகை சிறப்பு மிக்க ஸ்ரீ மகா விஸ்ணு என்னையும் ஆட்கொண்டார்.  அது முன்வினைப் பயனே என்றால் அது மிகையாகாது. அவன் வழி நின்று பயன் பெறுவோம். வாழ்கைப் பயணம் என்பது கரடுமுறடான கல்முள் உள்ள செப்பனிடாத பாதையே அதற்கு காரணம் நாம் செய்த வினைப் பயனே அப் பாதை சிலருக்கு ஓர் அளவு செப்பனிடப்பட்டதாகவும் அமைகின்றது. அதுவும் செய்த வினைப் பயனே ஆனால் கண்ணனின் பாதையில் வெற்றி கொள்வது “முயல் கொம்பை” ஒத்தது. எனது அனுபவம் மட்டுமல்ல அங்கு வரும் பலரின் அனுபவம். சோதனை என்று ஒன்று இருந்தால் வெற்றியும் தோல்வியும் உண்டு. பெரும்பாலும் அலுத்து போவவர்கள் தான் அதிகம். அதில் வெற்றி பெற்றவர்கள் விடாப்பிடியும் வைராக்கியம் உடைய ஒரு சிலர் தான். கண்ணன் மாயன். மாயையில் மூழ்க செய்து மறைந்து விடுவான். அதனால் வந்த விணையின் விளைவால் வருந்தி அழைக்க காட்சி கொடுத்து விடுவிப்பான். இதுவே அவன் திருவிளையாடல்.