Sunday, March 20, 2011

மனிதனின் செயற்பாடு மனம் வாக்கு காயங்களுக்கு கட்டுப்பட்டாலே தவிர விமோசனம் அடையமாட்டான். இயற்கையின் செயற்பாட்டுக்கு இடைஞ்சலாக இருப்பான்.














மனிதனின் செயற்பாடு மனம் வாக்கு காயங்களுக்கு கட்டுப்பட்டாலே தவிர விமோசனம் அடையமாட்டான்.  இயற்கையின் செயற்பாட்டுக்கு இடைஞ்சலாக இருப்பான்.
இராஜ்குமார் சுவாமியுடன் எனது குடும்பம் எனது வீட்டில்
மனிதனின் செயற்பாட்டுக்கு காரணம் பஞ்ச இந்திரியங்கள் அவை ஊறு  சுவை ஒளி நாற்றம் பரிசம்  அதைச் செயல்படுத்தும் கருவி பஞ்ச அவை கண், மூக்கு, செவி, வாய், தோல் இக் கருவிகள் மூலம் மனம் செயல்படுகின்றது. மனத்திலிருந்து எண்ணம் உதயமாகின்றது. எண்ணம் மனித செயற்பாட்டுக்கு காரணமாகின்றது. மனத்தின் செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் “குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தால் போல” அமையும். அதை செயல் படுத்துவது அகங்காரம் இது ஆணவம். ஆணவத்தை செயற்ப்படுத்துவது கன்மம். கன்மம் பிராத்தம் ஆகாமியம் சஞ்சிதம் எனப்படும். அதற்கு உத்வேகம் கொடுப்பது மாயை இல்லாதொன்றை இருப்பதாக காட்டுவது. இவைகளின் செயற் பாடுகளுக்கு மனமே காரணமாகின்றது.  மனத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் போது புத்தி செயல்படாது. அகங்காரமே மேலோங்கியிருக்கும் இதற்கு கூறுவார்கள் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்” என்பார்கள் அது புத்தியின் செயல்பாட்டுக்கு எதிரி அதை வெல்ல வேன்டுமாயின் சிந்தித்து செயலாற்ற வேண்டும். சிந்திப்பதற்கு அவகாசம் தேவை ஆத்திரம் அவகாசம் கொடுக்காது. அவகாசம் கொடுத்தால் விதியின் செயல்பாட்டுக்கு என்ன கெதி? “விதியை மதியால் வெல்லலாம்” என்று கூறுவர். விதி என்பது நாம் செய்தவை. எமது ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நேரானதும் எதிரானதுமான விழைவுகள் உண்டு. நேரான விளைவுகள் இயற்கையை ஒத்தவை எதிரான விளைவுகள் இயற்கையை சீர்குலைப்பவை. 
               மனம் உடல் நலத்தை அடிப்படையாகக் கொண்டது எப்போதும் உடல் சொகுசையே அடிப்படையாகக் கொண்டது. புத்தி உளநலனும் ஆத்மாவையும் அடிப்படையாகக் கொண்டது. புத்தி செயற்பட சித்தம் அவசியம்;. சித்தத் தெளிவு புத்தியின் விளிப்பு அதுவே விக்கிணம் தீர்ந்து வெற்றி பெற வழி. குளம் வற்றி சேறு நிறைந்து கலங்கி இருந்தால் உள்ளுள்ள பெருட்கள் கண்களுக்கு புலப்படாது. தெளிந்த நீரிலே அடியிலுள்ள எல்லாப் பொருட்களும் புலப்படும். அது போல விதியின் விளையாடவிருக்கும் விளையாட்டு புத்திக்கு தெட்டத்தெளிவாக தெரியும். அதனால் ஆத்திரம் அடங்கி புத்தி மேலோங்கும். “புத்தியின் விளிப்பே சித்தத் தெளிவு அதுவே ஆன்மாவின் ராகம்  கன்ம பிடியிலிருந்து தப்ப ஒரேவழி”  நாம் செய்த கன்மத்தின் செயலிருந்து தப்ப கன்மத்தை முன்னுனரும் சக்தியை பெற வேண்டும். அது தன்னை உணரந்;தவனாலே முடியும். தன்னை உணர்தல் என்பது இருட்டறையில் நுலைய ஒரு வெளிச்சம் தேவை அது போல் அஞ்ஞான இருளைப் போக்க மெய்ஞான ஒளி வேண்டும். மெய்ஞானம் குருவை அடைந்தாலே முடியும். “குருவருள் திருவருலே அதுவே அவன் அருள்”;.  “தாரமும் குருவும் தலைவிதிப்படியே” என்பர் சான்றோர். குறுடனுக்கு குறுடன் வளிகாட்ட முடியாது. அது தான் இப்போது நடைபெறுகின்றது.
                   நமது எண்ணங்கள் வலுபடையும் போது அது எம்மையறியாது  ஓரு சூட்சும வடிவம் பொறுகின்றது. அது செயற்படும் போது சித்தி கிடைக்கின்றது. அச் சித்திக்குக் காரணம் புத்தி விளிப்பின் சித்தத் தெளிவே. நமது எண்ணம் செயலுருப்பெற்று வெற்றி பெறுவது. சித்திக்கு காரணம் சக்தி. அச்சக்தியில் தேவசக்தியும் அசுரசக்தியும் உண்டு. இதில் தேவசக்தி பிரபஞ்சத்துக்குப் பாதிப்பில்லாத உண்மைக்கு சான்று பகிர்கின்ற நல்லெண்ணங்களுக்கே உதவி புரிந்து அதை செயலாக மாற்றி வெற்றி பெறச்செய்யும். இது அதேமாதிரி உண்மை நேர்மை சத்தியம் உடைய சாத்வீக குணத்தையுடையவருக்கே. இது தீய எண்ணங்களுக்கு உதவி செய்யாது. தீய எண்ணங்கனை வலுப்படுத்துவதும் செயல்படுத்துவதும் தீய சத்தியே இவை காமக்குரோத வஞ்சக எண்ணம் உள்ள தாமத குணத்தவர்களை வலுவாகப் பற்றுவது அதற்கு இலகு. 


                     இவ்விரு சத்திகளும் உருவாக்கியது நம்மிடம்மிருந்து வெளிப்பட்ட எண்ண்ங்களின் கூட்டுச்சேர்கையே. அவைகளுக்கும் வடிவம் கொடுத்ததும் நாம் தான் ஆரம்பத்தில் சித்தர்கள் உருவங்களை தத்துவரீதியில் உருவாக்கி அற்றுக்கு தான் பெற்ற பிரபஞ்ச சக்தியை பாச்சி உயிர் கொடுத்தார்கள் அதை மக்கள் எண்ணத்தில் வளர்த்தார்கள். அதை புரோகிதர்கள் சித்தர்கள் மகரி~pகளால் உபதேசிக்கப்பட்ட மறையின் அடிப்படையை குருவி உபதேசத்துடன் ஜந்திர விம்ப பிதிஸ்டை செய்து. மக்களால் எண்ணைக்காப்பு என்ற கிரியை மூலம்  இறை எண்ணத்தை விம்பத்தின் கீழ் உள்ள ஜந்திரத்தில் பதிப்பதன் மூலம் விம்பம் சத்தி பெறுகின்றது. அது மின்கலம் ஒன்று மின்pனேற்றப் படுவதை ஒத்தது.  கருங்கல் எள்ளெண்ணை  மனிதனின் மின்காந்த அலைகளினால் ஏற்படும் மனித காந்தத்தை ஈத்து விம்பத்தின் மூலம் ஜந்திரத்தில் பாச்சுகின்றது. அங்கு  இக்கிரிகையை மேற்கொள்ளும் அணைவரது சத்தியும் ஒன்று திரண்டு மகா சத்தியாக பருநாமிக்கின்றது. இன் நிகழ்வு சீவாத்துமாக்கள் புனிதமடைந்து பரமாத்மாவாகும் நிலையை ஒத்தது. இந்த சக்தி பன்னிரு வருடங்கள் இருக்கும். அதன் பின் சக்தி குறையத்துவங்கும் அதனால் மீண்டும் ஆலயங்களில் குடமுழுக்கு செய்ய வேண்டும். புரோகிதர்கள் அச் சக்திகளை குறைய விடாது அதைக்காப்பதே அவர்கள் கடமை.
                            இது போன்று அசுர சக்தியையும் உருவாக்கின்றனர். அவர்கள் தாமத குணத்தின் சக்தி இவை பொதுவாக மனிதர்களுக்கு தீங்கு செய்வதற்காக பில்லி சூனியம் செய்விணை முலம்   காமக் குரோத வஞ்சக பழிவாங்கல் செய்ய துனை போகின்ற சக்தி. அவை பொதுவாக அசுத்த இராச்ஜதம் தாமத குணங்களுள்ளவர்கள் மூலம் வெளி வரும் எண்ணங்களின் சேற்கையின் திரண்ட சக்தி. இது தான் அசுரசக்தியாகும். இச்சக்தி தாமதகுணத்தவர்களின் வெற்றிக்கு காரணமான சக்தி. ஆத்திரம் கொண்ட மனிதனை இது இலகுவாக உள்வாங்கி  ஆதிரத்துக்கு காரணமானவனை பழிவாங்கி வெற்றி பெறச் செய்து தன்வசமாக்கும் சக்தி கொண்டது. கேட்ட சக்தியை வசமாக்கும் தாந்திரியசக்தி படைத்த பிமராட்சகர் சீடர்கள் இருக்கின்றனர். இவர்கள் தேவருக்கு எதிரானவர்கள்.புராண இதிகாச கதைகளில் ஒரு தெவருக்கு எதிராக ஒன்றோ அல்லது பல அசுரர்கள் போரிடுவர். உதாரணமாக கந்தப்புராணத்தில் முருகனுக்கு எதிர் சூரபன்மன்.  இராமயனத்தில் இராமனுக்கு எதிர் இராவணன். மகாபரத்தில் அர்சுணன் எதிர் கர்ணண்(கூனியின் சூழ்ச்சி). வினாயகர் புராணத்தில் வினாயகர் எதிர் கஜமுகாசுரன். தேவிமான்மீயத்தில் ஆதிசக்தி எதிர் மகிசாசூரன். இன்னும் பூராணம் தான் படிக்கின்றோம். ஆனால் மக்கள் மத்தியில் அவற்றை உணர்ந்து தமது செயற் பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? ஏன்றால் அது இல்லை. அந்த அசுர சக்திகளின் செயல்பாட்டின் உச்சக்கட்டத்துக்கு சென்றதை இயற்கை எமக்கு உணர்த்தி நிற்கின்றது. உலக அழிவு என்பது மனித மனவழிவே. புராண இதிகாசங்களின்; நடை பெறும்; யுத்தம் எமக்குள் நாமே நடார்த்தும் யுத்தமாக எப்போது மாறுகின்றதோ அப்போது தான் அக உலகமான மனம் அழிவதைத் தடுத்து புற உலகான பிரபஞ்வத்தை காக்கமுடியும். எமக்குள் யுத்தமென்பது நம்முள் ஏற்படும் நேர் எதிர் எண்ணங்களுக்கு போர் நடார்த்தி நேர் எண்ணத்தின் பலத்தை அதிகரித்து எதிர் எண்ணத்தின் செயற்பாட்டை கட்டுப்படுத்தவேண்டும். எண்ணங்கள் தோன்ற காரணங்கள் பல எமக்கு வெளியிலிருந்தும் வரும் அதுவும் எம்மைத் தாக்கும் எம்மை காக்க எம்மைச் சுற்றியுள்ள மின்காந்த அலையான மனித காந்தத்தை வலுப்படுத்தி அதன் சக்தியை அதிகரித்தால் எம்மைத்தாக்க வரும் அலைகளை தடுத்து அது எமக்குள் வந்து செயல்படுவதின் மூலம் ஏற்படப் போகும் விழைவைத் தடுக்க முடியும். “விதியை மதியால் வெல்ல முடியும்” அதுவும் விதிதான். “தவமும் தவமுடையாருக்கே ” என்பார்கள். ஒருவர் ஆத்திரத்தில்
 கொலை செய்ய எத்தனிக்கும் போது கொலையின் பின் தனக்கு ஏற்படும் விழைவை எண்ணினானால் கொலை வெறி நீங்கிவிடும். இச்சந்தர்ப்பம் தான் விதியை மதியால் வெல்லுதலுக்கான விதி. எந்த ஒருவொரு நிகழ்வுக்கும் பின்னனியில் ஒவ்வொரு காரணம் இருக்கும்.  அது போல ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு தாக்கம் உண்டு. அவை நேர் எதிர் விளைவுகள் உண்டாக்கும். இவற்றை நல் விணைப்பயன் தீ விணைப்பயன் எனப்படும். இவையே நாம் செய்த வினை இதுவே பிறவிக்கு காரணமாகின்றது. பிறவித்துயரை களைய வேண்டுமாயின் அதை அனுபவிக்க வேண்டும். எனவே நமக்கு  ஒருவர் வினை செய்கின்றார் என்றால் அது பூர்வஜென்ம வினையின் பயனே அதை முடிக்க அவன் காரணமாக அமைந்தால் அவன் எதிரியல்ல நண்பன். எமக்கு வரும் துன்பங்கள் எல்லாம் பரலோக சுவர்க்க இன்பத்துக்காகவே அதை தாங்கி பூர்வஜென்ம வினையை முடிக்கக் கூடிய சத்தியும் வல்லமையும் பொறுமையும் இருக்குமானால் அது கூட பூர்வஜென்ம வினைதான். “தவமும் தவமுடையார்க்கே ” அது போன்றது தான். ஆனால் நடைமுறையில் எமக்கு தீங்கிளைத்தவனுக்கு நாம் துர்சக்திகளைக் கொண்டு மீண்டும் தீங்கிழைத்து மீண்டும் மீண்டும் பிறவித்தளையில் மூழ்கின்றோம். இதை ஆணவம் தலைமைதாங்கி நடார்த்துகின்றது. மாயை உண்மையை மறைக்கின்றது. கண்மம் செயல்படுகின்றது. இடையில் பிரவித்தளையிலிருந்து விடுதலை அடைய வேண்டிய ஆத்துமா விடுதலை இன்றி அவதியுறுகின்றது. இதையே பிரம்மகஸ்திதோசம். அதாவது பிரம்மனின் படைப்பின் நோக்கம் உணராமையே.
ஆத்துமா புனிதமானது.  இரத்தின கல்லின் மீது சணம் விழுந்தால். இரத்தினக்கல் தன் தன்மையை இழப்பதில்லை. ஆனால் அதன் வெளிச்த்தின் நன்மையை உலகம் அடையாதே தவிர கல் அதன தன்மையையும் ஒளியையும் இழக்கவில்லை. எப்போது சாணியின் உள் இரத்தினக்கல் உண்டு. என்பதை யார் அறிகின்றானோ. அவன் கல்லின் பெறுமதி அதன் தன்மை அறிந்தவன் தான் அதைத் தேடமுடியும்.  அகற்றும் வளியும் தெரியவேண்டும். அவனுக்குகே  கல் கிடைக்கும்.  அது போன்றதே இறவாமை. இறவாமையை எவனெருவன் உணரும் பட்தத்தில் செயலில்லிருந்து விடுதலையும் பிரபஞ்சதில் பரவியுள்ள விசத்தை கட்டுப்படுத்தி காற்பாற்றவும் முடியும்.



Tuesday, March 15, 2011

சித்தர்கள் ஒன்பதின்பர்



சித்தர்கள் ஒன்பதின்பர் 
1. சத்தியநாதர்.
2. சதோகநாதர்.
3. ஆதிநாதர்.
4. அநாதிநாதர்.
5. வெகுளிநாதர்.
6. மதங்கநாதர்.
7. மச்சேந்திரநாதர்.
8. கடேந்திரநாதர்.
9. கோரக்கநாதர்.


சித்தர்கள் பதினெண்மர்;
1. அகத்தியர்.
2. போகர்.
3. கோரக்கர்.
4. கைலாசநாதர்.
5. சட்டமுனி.
6. திருமூலர்.
7. நந்தி.
8. கூன்கண்ணர்.
9. கொங்கணர்.
10. மச்சமுனி.
11. வாசமுனி.
12. கூர்மமுனி.
13. கமலமுனி.
14. இடைக்காட்டார்.
15. புண்ணாக்கீசர்.
16. சுந்தரானந்தர்.
17. ரோமரு~p.
18. பிரமமுனி. இவர்களுடன் தன்வந்திரி புலஸ்தியர் புசுண்டர் கருவூரார் இராதமதேவர். தேரையர் கபிலர் முதலியசரும் கூறுவர்.


Tuesday, March 8, 2011

போத்தலூரி ஸ்ரீ வீரப்பிம்மம் அவர்கள் இவ் உலகத்துக்கு அன்று எடுத்துரைத்த காலஞானம் இன்று நடந்து கெண்டு இருக்கின்றது. சித்தன் வாக்கு என்றும அளிவதில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு அவன் வாக்கு சிவன் வாக்கு.

 காஞ்சிபுர ஸ்ரீ மாமேரு சமேத ஸ்ரீ மதுரை மீனாச்சி
 விக்கினம் தீர்க்கும் வினாயகர்
விஸ்ணு சாளக்கிராமம்


;














ரிசிகேச படிக லிங்கம்


























= tPug;gpk;kk;
 போத்தலூரி ஸ்ரீ வீரப்பிம்மம் அவர்கள் இவ் உலகத்துக்கு அன்று எடுத்துரைத்த காலஞானம் இன்று நடந்து கெண்டு இருக்கின்றது. சித்தன் வாக்கு என்றும் அளிவதில்லை. சித்தன் போக்கு சிவன் போக்கு அவன் வாக்கு சிவன் வாக்கு.
விஸ்வபிரம்மணர் குலத்தில்  பொற்கொல்லர் இனத்தைச் சேர்ந்த பரிபூரண ஆச்சாரியாருக்கும் ப்ரக்நதாம்பாஅம்மையார் தம்பதியினருக்கு புத்திரப்பேறு கிடைக்கும் பொருட்டு  ஆந்திராவில்லிருந்து தீர்த்த யாத்திரை புறப்பட்டனர் தம்பதியினர். புறப்பட்டு சில நாட்களின் பின் காசியை  அடைந்தனர். தம்பதியினர். அங்கு புனித கங்கையில் நீராடி காசிவிஸ்வநாதரை வேண்டினர் தமக்கு புத்திரப்பாக்கியம் அருளுமாறு வேண்டியதுடன் புத்திரப்பாக்கியம் கிடைக்காமல் அங்கிருந்து அகலோம் என்று விரதமிருந்தனர் தம்பதியினர் அதற்கு மனமிரங்கிய விஸ்வநாதர் ப்ரக்நதாம்பா அம்மையார் கனவில் தோன்றி மகளே உங்கள் விரதத்தில் நாம் மகிழ்ந்தோம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றோம்  ஆனால் புத்திரன் பிறந்த அன்றே உன் கணவன் மரித்து விடுவான் என்று கூறி மறைந்தார். திடீரென எழுந்து கண்ட கனவை கணவனிடம் கூறி அழுதபோது கணவன் மிக மகிழ்ச்சியுடன்  பிறந்தவர்கள் எல்லோரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும்.  நான் இறப்பதையிட்டு கவலைப்படாதே புத்திரப்பேறு பெற்ற பின் தானே இவ் பூவுலகை விட்டுச் செல்வேன் கவலையை விடு என்று கூறி இறைவனின் பணிபை ஏற்றுகொள்வோம். என்று கூறி காசி விஸ்வநாதருக்கு பணிசெய்வதே எம்பணி என்று அங்கு தங்கி சூலுற்று பின் காசியிலிருந்து உருக்குப் புறப்பட்டனர்.வரும் வழியில் அத்திமா முனிவரின் ஆச்சிரமத்துக்கருகில் வந்த போது ப்ரக்நதாம்பாஅம்மையார் ஓர் அழகிய ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அவ் வேளை வானில் பிரகாசமான ஓர் நட்சத்திர ஒளி தோன்றியது. அதன் பின் பரிபூரண ஆச்சாரியர் பூதவுடலை விட்டுப்பிரிந்தார்;. பிரிவின் துயரத்தில் ப்ரக்நதாம்பாஅம்மையார் அழுதசத்தம்  ஆச்சிரமத்தில் அமந்திருந்த அத்திமா முனிவரின் காதுகளுக்கு கேட்டு வந்து நடந்த சம்பவத்தை கேட்டறிந்த பின் ப்ரக்நதாம்பாஅம்மையாரும் பூதவுடலை விட்டுப்பிரிந்தார்;. அதன் பின் அக் குழந்தை அத்திமா முனிவரின் ஆச்சிரமத்தில் வளந்து வந்தது.
    உலகை அறிந்தவன் அறிவாளி தன்னை அறிந்தவன் ஞானி .ஞானி எங்கும் செல்வதில்லை தன் ஆத்துமாவைத்தவிர எதையும் அறியான். அதுவே அவனை வழிநடத்தும் இறைவன் இறைவனை நாம் எப்படி வழிநடத்தமுடியும் அது தான் எம்மை வழிநடத்தும்.
             பின்னர் பபாக்னி மடத்தினைச்சேர்ந்த வீரபோஜா வீரபாப்பமாம்பா தம்மதியினர் தலயாத்திரை மேற்கொண்டிருக்கையில் ஒரு நாள் அத்திமா முனிவரின் ஆச்சிரமத்தை கண்டனர். அங்கு தங்க எண்ணினர். ஆச்சிரமத்துள்னுளைந்த  போது அத்திமா முனிவர் யோகநி~;டையில் ஆழ்ந்திருந்தார். யோகநி~;டை கலைந்ததும் தம்பதியினர் இருப்பதை கண்டார். அவர்களிடம் வந்த நோக்கத்தை வினாவிய போது அவர்கள்  தலயாத்திரை செய்யும் பாதையில் இங்கு தங்கிச் செல்ல உத்தேசித்தாகக் கூற தலயாத்திரையின் நோக்கத்தை அறிந்த மகரிசி ஆச்சிரமத்தில் வளர்ந்து வரும் குழந்தையை கொடுக்கத் தீர்மானித்தார். அதை அவர்களுக்கு கூற அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அப்போது முனிவர் இக் குழந்தை வரும் காலத்தில் சிறந்த ஞானபோதகனாகவும் மஹபுரு~னாகவும் இருப்பான் என்று ஆசி கூறி குழந்தையை வீரபோஜா வீரபாப்பமாம்பா தம்பதியினருடன் அனுப்பி வைத்தார் அங்கு முனிவரால் சூட்டப்பட்ட வீரபொட்லைய்யா என்னும் திருப்பெயரால் அழைக்கப்பட்டு வளர்ந்து வந்தார். வளர்ப்புத் தந்தை வீர பொட்லைய்யாவை நல்தோர் நாளில் தேர்ச்சியான  ஆசானிடம் விட்டு கல்வியைத் தொடர்ந்தார். பதினான்காம் வயதில் வளர்ப்புத் தந்தை வீரபோஜா ஆச்சாரியார் காலமானார். வளர்ப்புத் தாய் வீரபாப்பமாம்பா கதறியழுகையில்  மகன் வீரபொட்லையா தாயிடம் உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறந்தேதீர வேண்டும். பிறப்புக்கு காரணம் தாம் செய்த முற்பிறப்பு வினையே அதனால் அம்மா அப்பா அண்ணன் தம்பி உறவுகள் தோன்றுகின்றது. அது மாயையின் செயலே கவலை வேண்டாம் ? என்று தாயைத் தேற்றினர் வீரபொட்லைய்யா.
 தந்தையின் இறப்பி சில காலத்தின் பின் தாயிடம் அனுமதி கேட்டார் எனது பிறவியின் பலனையடைய நான் பல சேஸ்த்திரங்களுக்கு தீர்தயாத்திரை மேற்கொள்ள வேண்டும் மென்றார். அதற்கு தாய் மறுக்க தாயின் மனதை மாற்ற தாரகா மந்திரத்தை உபதேசித்து விஸ்வரூப தசிசனம் கொடுத்தார். அதன்பின் அனுமதி வழங்கினார் தாயார். அதன் பின் காவி, கமண்டலம் உடன் தன் மேனி முழுவதும் விபூதி பூசியவராய் கழுத்தில் உருத்திராசையும் அணிந்து மடத்தை விட்டு தீர்த்தயத்திரை மேற்கொன்டார். ஸ்ரீ வைலம், பிராயாகை, காசி பிம்மகபாலம், காஞ்சி, காளஸ்திரி, திருப்பதி, இராமேஸ்வரம் என்று சென்று இறுதியில் அரிஹரபுரம் என்னும் ஊரில்  தங்கிஅங்கு ஒரு தடாகத்தின் அருகில் ஒரு மரத்தின் கீழ் யோக நிஸ்டையில் ஆழ்ந்தார்.
          அதன் பின் காசி அரசனுக்கு பிறந்த ஆனந்த பைரவ யோகி வேட்டைக்கு சென்ற போது காட்டில் புலியொன்று பசுவை கொல்ல முயன்ற போது பசுவைக் காக்க புலி மீது விட்ட அம்பு தவறி பசுவையே குறி வைத்து விட்டது. இதனால் மனம் குழம்பிய நிலையில் காட்டு வழியாக வரும் போது நிஸ்டையில் ஆழ்ந்த வீரபொட்லைய்யாவை கண்டு. இவரிடம் கேட்டால் விமோசனம் கிடைக்குமென எண்ணி அவ்விடம் நிற்கையில் அவரும் நிஸ்டை கலையையில் முன் இருப்பவரை கண்டு இருப்பதன் நோக்கத்தை கேட்டார். நடந்தவற்றை குறி விமோசனம் கேட்க அவர் நீர் மானிட ஜென்மம் எடுத்த சிவன். இப் பயனால் உன் நிலையை மறந்தீர் இப் பாவத்துக்குப் பரிகாரம் அடுத்த பிறவி முஸ்லிமாகப் பிறந்து எனது சீடராய் விளங்கி விமோசனம் அடைவீர். என்று கூறி காசிக்கு திரும்பும்படி பணித்தார். அவரே பிற்காலத்தில் அவரின் சீடரக திகழ்ந்த சித்தையா.
         பின்னர் அரிஹரபுரம் என்னும் ஊரிலிருந்து தீர்த்தயாத்திரை தொடர்ந்தார் பனகானபள்ளி என்ற ஊரையடைந்ததும் இருட்டாகி விட்டது. அக்கிரமத்தில் இருந்த ஒரு வீட்டுத்தினையில் படுத்துறங்கினார். மறுநாள் அதிகாலை அவ்வீட்டுப் வயோதீப பெண்மணி அச்சம்மா தினையில் படுத்துறங்கிய வீரப்பிரம்மத்தைப் பார்த்து விசாரித்த போது அவர் தான் ஒரு அனாதை எல்லா ஊரும் என்னூர் எல்லோரும் என்னுடையவர்கள் எல்லோருக்கும் நான் பணி செய்வேன் என்றார் அதற்கு அச்சம்மா ஐயா என்னிடம் பசுக்களை இருக்கின்றன அவற்றை மேய்த்து வந்தால் முன்று வேளை உங்களுக்கு உணவு படைப்பேன் என்றாள். அதற் கிணங்கினார்.
ஓவ்வெரு நாளும் காலை மந்தைகளை ஊரின் கொலலைப்புறம் உள்ள காட்டுக்கு அழைத்துச்சென்று மேய்ச்சலுக்குரிய பகுதியில் கோல்லொன்றினால் கொடுகள் கீறி விட்டு ஒரு மரநிழலில் கல்லொன்றிலேறிருந்து பணை  ஓலையில் முட்களின் துணையுடன் மாலை வரை எழுதிவருவார்.  மாடுகள் சிறிய கோட்டை தண்;டாததுடன் வேறு விலங்குகள் அந்த எல்லையை நெருங்க முடியாததையும் அவதானித்த மக்கள் அச்சம்மாவிடம் கூற அவளும் சென்று பார்த்து விட்டு அவரிடம் ஒன்றும் பேசாது வீடு திரும்பி அவர் வருகைக்காக காத்திருந்து. அவர் வந்ததும் அவர் காலில் பயபக்தியுடன் வீழ்ந்து ஐயா நீங்கள் மகா புருசர்  உங்களை புரிந்து கொள்ளாது நான் உங்களுக்கு மாடு மேற்கும் பணியை வழங்கி விட்டேன். இத்தவறை மன்னித்தருளுமாறு வேண்டினாள். அதற்கு அவர் நான் சிறுவன் எனக்கொன்றும் தெரியாது அதற்கு அவள் நீங்கள் மகா புருசர். என்னை மன்னித்து உங்கள் சிடராக எற்றுக்கொள்ளுமாறு வேண்ட அவர் நீவீர் முற்பிறப்பில் பதிவிரதை இப்பிறப்பில் உனக்கு சேவை செயும் பெறுபெற்றேன். என்னு கூறி முத்திப்பேற்றை அடைய பஞ்சாட்சரி மந்திரத்தையும் துவாதசட்சர மந்திரத்தையும் உபதேசித்தார். அப்போது அச்சம்மா பயபக்தியுடன ஐயா! நீங்கள் மடுகளை மேய்க்கச் செல்கின்ற போது ஏதோ எழுதிக்கொண்டிருக்கின்றிர்கள் அதை அறிவாமா? என்று கேட்க அதற்கு அவர் கலியுக்தில் நடக்கயிருப்பதை எழுதுகின்றேன். இது “காலக்ஞானம்” என்று கூறி அதிலுள்ளவற்றை அச்சம்மாவுக்கு கூறி அருளினார். அதில் கூறியவை இன்றும் நடக்கின்றது.
          பூலோகத்தில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் புண்ணிய தலங்களிலே தரும தேவதையிருப்பாள். கலிமுற்றும் போது சத்தியம் அழிந்து விடும். அசத்தியம் தான் இருக்கும். மக்களிடையே பரபட்சம் அதிகரித்து அதன் படி நடப்பர். துரோகிகள் பிறப்பர் பஞ்சமாபாதகங்கள் விருத்தியடையும். ஆச்சாரமுள்ளவர்கள் அனாச்சாரியாவார்கள். மக்களிடையே கலகம் தோன்றி ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர். இறைவணை நிந்திப்பர். பெண்கள் மறுமணம் செய்து கொள்வர்.
       தெய்வசக்தி குறைந்து மந்திர சக்தியும் குறையும். பிராமண குலத்தில் பிறந்தவர்கள் சமுத்திர பிரயாணம் மேற்கொள்வர். மாமிசம் புசிப்பர். கலப்பு ஜாதிகள் தோன்றும்.  மக்கள் தர்மகாரியங்களில் நம்பிக்கை இழப்பார்கள். உலகில் பயங்கரமான வரட்சி தோன்றும். ரத்தக்கண்ணீர் வடிப்பர். முறை தவறிய விசாகம் நடைபெறும். நடு இரவில் சூரியன் பகவான் தோன்றுவார். துஸ்ட தேவதை ஆட்சி கிராமம் தோறும் நிகழ்ந்து கிராமங்கள் அழிந்து போகும். இது போன்ற நிகழ்வுகள் சர்வசாதாரனமாக நிகளும். இவை குறித்து யாரும்  பயமோ கவலையோபடமாட்டார்கள். அவர்களுக்கு அது நிதியாகத் தெரியும். அப்படி உலகமே மாறிவிடும். அறிவற்ற மூடர்கையில் இது பட்டால் இதைப்படித்து கேலிசெய்வர். இதன் இரகசியம் புரிந்தவரிகளுக்கே இது புரியும்.
          இதை கேட்ட அச்சம்மா இல்லற வழ்க்கையைத் துறந்து துறவறம் பூண்டு ஸ்ரீ வீரப்பிரம்மம் அவர்களின் சீடராகி தன் உடமைகளை அர்ப்பணித்து “ஏகாந்த மடம்” எனனும் பேயரில் மடம் அமைத்து குருவுக்கு “தபஸ்” போன்ற காரியங்களை செய்ய வழிவகையும் ஏற்பாடுகளையும் செய்து அவருக்கு “பணிசெய்து கிடைப்பதே பணி” என வாழ்க்கையை அர்ப்பணித்தார்.


        அடுத்து நவாப் மன்னருக்கு அவரின் வேண்டு கோளின் படி சுவாமி எழுதிய காலக்ஞானம் என்ற நூலின் சில பகுதியை செல்லத்துவங்கினார் அவை காசியில் உள்ள நடன சிற்பங்கள் உயிர்பெற்று நடனமாடுவதுடன் மக்களுடன் பேசும் இவ்வாறு நிகளும் போது வீரபோக வசந்தராயன் என்னும் பேரில் மான்நிட ஜென்மம் எடுப்போன். உலகில் நியாயச் செயல்கள் குறைந்து அநியாயம் தலைவிரித்தாடும். உண்மை பொய்யாகவும் பொய் உண்மையாகவும் மாறும். நல்லவர்களுக்கு நாட்டில் பெருகை இருக்காது. உலகில் தீமை பிரகாசமாகும் அதையே உலகமக்கள் நாடுவர். வேதம் வேதசாரம் இல்லாது போகும். பிராமணர்கள் தமது சுயநலத்தின் பொருட்டு சாஸ்திரங்களையும் வேங்களையும் பயன் படுத்துவர். வேதசாஸ்திரங்கள் பொய் என்ற பாதங்கள் உலகில் பல பாகங்களிலும் நடைபெறும். உலக வாழ்கையில் தந்தை மகனையும் மகன் தந்தையையும் மோசம் செய்வான். பருவகால மழைகள் உரியகாலத்தில் பொழியாது. விளைச்சல் வீரியம் குறைந்தாக இருப்பதுடன் விளைச்சலும் குறைவாகும்.
       பிராமணர்கள் வேதசாஸ்திரங்களிலிருந்து விலகி சூத்திரர்கள் போல் மாமிசம் புசிப்பர். தாய்தந்தையர்கள் ஆண்மக்களை நம்பாது பெண்பிள்ளைகளை நம்புவர். அரசர்கள் ஆட்சிக்குப்பதில் மக்களே அராஜக ஆட்சி நடத்துவர். கோயில்களில் பிராமணருக்குப் பதிலாக சுத்திரர்கள் பூசை புணக்காரங்களில் ஈடுபடுவர். குதிரை மாடு போன்ற நான்கு கால் விலங்குகளுக்குப் பதில் நான்கு சக்கர இயந்திரம் தோன்றும். நாட்டில் உணவு விளைச்சல் குறைந்து பஞ்சம் தோன்றும். ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்ல முயல்வர். மக்களிடையே சாந்தம் குறைந்து கோபம் அதிகரிக்கும். தெய்வ வழிபாடும் விரதமும் மேற்கொள்வோர் கஸ்டமும் தரித்திரமும் அனுபவிப்பர். வேம்பின் இலை இனிபாமும். காஞ்சிகாமாட்சி கிறுகிறு என்று சுற்றுவாள். ஒருவர் மனைவி மற்றொருவருக்கு மனைவியாக இருப்பாள். பகலில் நட்சேத்திரம் தோன்றும். இதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.
        குருவாயுரில் உள்ள கிருஸ்ணன் மக்களுடன் பேசுவார். காசியிலுள்ள கங்காநதி கானாமல் போகும். திருப்பதிக்குச் செல்லும் வழியிவ் தடங்கள் ஏற்படும். வெங்கடவன் சொத்து மற்றவர்களால் களவாடப்படும். முஸ்லிம்களின் அரசம் அதிகாரமும். அடியோடு அழிந்து போகும். ஒன்றும் தெரியாத அப்பாவி மக்கள் பிறரால் வஞ்சிக்கப்படுவர். வேதங்களும் புராணங்களும் சரியான முறையிலான விளக்கங்கள் கொடுக்கப்படது. தவறான கேலியன முறையில் விளக்கங்கள் கொடுக்கப்படும். உண்மைகள் மறைக்கப்பட்டு பெய்கள் அதிகரித்து கபடமானமுறையில் ஏமாற்றப்படுவர். தாய் தந்தையர் அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற ஆசாபாசம் இல்லாது போகும்.
சமாதிக் கோவில்
         போதைப் பொருட்களின் தயாரிப்பு அதிகரித்து மக்கள் அதிகமானவர்கள்; போதையில் மூழ்கி அடிமையாகுவர். விக்கமேநாம வருடம் உலகின் பல பகுதிகளில் பயங்கரமான நிலைமைகள் ஏற்பட்டு தனவந்தர்கள பெரும்;பலானவர்கள் தரித்திரநிலையையடைவர். தணிணீரில் மிதற்கும் பொருட்கள் தாண்டும் தாளும் பொருட்கள் மிதந்கும் தன்மை பெறும்.இந்த மாறுதலின் விழைவால் 17 சதவீதமான மக்கள் இந்த நிலையினால் மாண்டு போவர். இராத்தாட்வரிநாம வருடம் மாரக்க சிரசுத்த சத்தமி அன்று சென்னைப்பட்டினத்தில் ஏழுவயது சிறுமியான பெண் ஒருத்திக்கு நான்கு கைகளும் மூன்று கண்களும் மூன்நு கால்களும் தலையில் கொம்பும் ஓரு குழந்தை பிறக்கும் அச்சிசுவானது இருபத்திநானகு நாட்கள் வாழ்ந்து இருபத்திமூன்றாம் நாள் ஸ்ரீPவீரபோகசசந்தராயன் அழிவிலிருந்து காக்க வருவார் எனக்கூறி பிராணத்தை விடும். அரசாங்கமே கருச்சிதைவுக்கு அனுமதி வழங்கி அறிவிக்கும்.மூன்நு வயது சிறுவன் பெரியவர்களுடன் வாதம் வெய்வான்.
          தான் பெற்று எடுத்த மகனை வஞ்சித்து நிந்திக்கும் தந்தை. ணவனை மோசம் செய்து அவனுடன் சன்டையிட்டு அவமாயப்படுத்தும் மனைவி. பெற்று வளர்து ஆளாக்கிய தந்தையரை ரச்சிக்காத மகன்கள். தான் மந்த பதிவிரதையை அம்சிக்கும் கனவர்மார். இப்படியான தூர்குணங்கள் கொன்டவர்கள் அதிகளவில் காப்படுவர். பசுவின் கருவில் னிதன் பிறப்பான் அவன் மக்களிடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான். மூன்று தலைகளைக் கொண்ட பசுக்கன்று ஜனிக்கும்அற்கு இரண்டு யோனி இருக்கும். ஆதில் ஒன்று மனிதத்தன்மையுடையதாக விருக்கும்.
           செம்பு பித்தலை போன்ற உலோகங்கள் தங்கத்தில் கலந்து கலப்புலோகம் செய்து மக்களை ஏமாத்துவர். பிராமணர்கள் ஆச்சாரம் தவறி சுயநலத்துக்காகவும் பணத்தாசையாகவும் வேதங்களுக்கும் பிராமணர்களுக்கும் இரிகாசங்களுக்கும் புரோகிதங்களுக்கும் பிதுர்கருமங்களுக்கும் தெய்வ பூஜா விதானங்களுக்கும். தவறானதும் தனக்கு சாதகமானதுமான தவறான வியாக்கியானங்களைக் கூறுவார்கள். மேலும் ஆசாரம் தவறி அனாச்சாரங்கள் செய்வதில் விருப்பப்படுவதினால் மக்கள் மத்தியில் இவர்களுக்கிருக்கும் பத்தியும் மரியாதையும்; விசுவாசமூம் குறையும். சூத்திரர்கள் இவ்வாதிக்கத்தை பிடித்து பிராமணர்கள் சூத்திரர்களின் கீழ்ப்படிந்து பணியாற்றுவார்கள்.
        ய் தந்தையர்கள் உலக நீதியைத்துறந்து தன்பிள்ளையை பணத்துக்கு விற்பர்.வறுமையின் காரமாக பெண்கள் மற்றவர்களுக்கு விற்பனைப்பொருளாக மறும் நிலை ஏற்படும். வியாபாரிகள் உணவுப் பொருட்களை குறைவான அளவு அதிகவிலைக்கு விற்கப்படும். பணத்துக்காக  ஒருவரை ஒருவர் நிந்தித்து சன்டை செய்து மாண்டு போவர். உலகில் பலபாகங்களிலும் பூகம்ம் ஏற்பட்டு பல உடலும் உடமையும் சேதமுறும். நான் எழுதிய காலக்ஞானத்தை புதைத்து வைத்துள்ள இடத்தில் புளிய மரம் வளர்ந்து வாசனை மிகுதியான பூக்கள் பூக்கும்.
         ஒரு சமயம் வடநாட்டிலிருந்து வந்த யாத்திரிகளுக்கு சுவாமி கூறிய காலக்ஞானத்தின் ஒரு பகுதி. புண்ணிய நதிகள் அனைத்தையும் ஒரு சமயம் பொங்கி மக்கள் அதனால் அவதியுறுவர். கடலில் அமுதம் தோன்றும்( நவீன மக்களுக்கு பயன்படும் பொருள்). காளாஸ்திரியில் இருக்கும் சொர்ணமுகி ஆற்றில் பத்து மகா புருசர்கள் தோன்றுவார்கள். அச்சமயம் நாயுடு பேட்டையில்யுள்ள தனவந்தர்கள் மடிவார்கள்.
         மேல் நாடுகளில் நாகரீகம் என்ற பேரில் புதிய புதிய செயல்கள் தோன்றும். இந்தியா இரண்டாகவும். பிறகு மூன்றாகவும் பிரியும். பங்களாதே~; என்னும் நகரம் புயலுக்கு இரையாகி மக்கள் சேதமடைவர். இந்தியா சனத்தொகை பெருகி குறைக்க வழிதேடும். திருமணங்கள் குலம் கோத்திரம் பார்க்காது நடைபெறும். உயர்ஜாதிப் பெண்கள் நாட்டியம் கச்சேரி பாட்டு நிழல் படம் என்ற மேகத்தினால் கேட்டுபோவர்.
          புண்ணிய சேத்திரம் நதி தீர்த்தம் போன்ற இடங்களில் மக்கள் வியாபாரிகளாலும் புரோகிதர்களாலும் ஏமாற்றப்படுவர். அதை கேட்க நாத்தீகர்கள் ஆவலுடன் இருப்பர். மனிதரிடையே சத்வீக போக்கு மாறி அறாஜகம் அதிகரித்து. சிறுவயதிலே சக்தி இழந்து கண்பார்வை இழந்து பெறாமை குடிகொண்டு  க~;டங்களில் மூழ்கிக்கிடப்பான். நல்ல ஒழுக்கமான குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் உழைத்துச்சப்பிடும் எண்ணம்மின்றி சோம்பேறியாகி சுற்றுவர் அவர்களுக்கு தாய் தந்தையர் பயபடபடுவர்.
          விதவைகள் உலகில் அதிகரிக்கும். அவர்கள் மறுமணம் செய்து சுமங்கலியாகத்திகழ்வர். பதிவிரதைகள் உலகில் அபூர்வம். பெண்கள் நாகரீகம் என்ற பேரால் கெட்டவளிகளிலும் செயல்களிலும் ஈடுபடுவர். மக்களின் சராசரி வயது குறையும் சிற்றிபங்களில் ஆர்வம் அதிகரித்து ஈடுபடுவர். வெள்ளை காக்கள் காணப்படும். அவைகள் ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும். வயிற்றுப்பிழைப்புக்கு கலைகளைக் கற்றுக்கொள்வர். நான் அப்போது ராஜயோகிகளுக்கு மட்டுமே காட்சி தருவேன்.
இவ்வாறு கலியுகத்தில் நடக்கப் போவதை கூறிப்பிட்டார். ஆனால் தற்போது இவை அனைத்தும் நடைபெற்ற வண்ணம் இருப்பது அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே நம்மை காப்பாற்ற ஜபம்ரூபவ் தவம்; மூலமே முடியும். அத்துடன் மனம்ரூபவ் வாக்குரூபவ் காயம் இவை மூன்றும் ஒன்றாக செயல்படவேண்டும். உண்மை நேர்மைரூபவ் சத்தியம்ரூபவ் சாந்திரூபவ் பிரேமைரூபவ் அன்புரூபவ்; நேசம்ரூபவ் அவைகளின் மூலம் எண்ணம்ரூபவ் செயல் நடத்தை உலக நியதிகளுக்கு ஏற்ப இயற்கையை அனுசரித்து அதைப் பாதுகாத்து நேசித்து அதன் வழி சென்று நடந்தாலே கலியுகத்தின் கலியிலிருந்து எம்மை காக்கமுடியும்.  
                இவ்வாறு கலியுகத்தில் நடக்கப் போவதை கூறிப்பிட்டார். ஆனால் தற்போது இவை அனைத்தும் நடைபெற்ற வண்ணம் இருப்பது அறியக்கூடியதாக இருக்கின்றது. எனவே நம்மை காப்பாற்ற ஜபம், தவம் மூலமே முடியும். அத்துடன் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் ஒன்றாக செயல்படவேண்டும். உண்மை நேர்மை, சத்தியம், சாந்தி, பிரேமை, அன்பு, நேசம், அவைகளின் மூலம் எண்ணம், செயல் நடத்தை உலக நியதிகளுக்கு ஏற்ப இயற்கையை அனுசரித்து அதைப் பாதுகாத்து நேசித்து அதன் வழி சென்று நடந்தாலே கலியுகத்தின் கலியிலிருந்து எம்மை காக்கமுடியும்.  

    

Wednesday, March 2, 2011

இயற்கையை நேசித்து அதன் வழி சென்று உலகைக் காப்போம் இயற்கை கோரம் கொண்டால் மனிதன் தாங்கமாட்டான்- பகுதி-2(தெடர்-2)

இயற்கையை நேசித்து அதன் வழி சென்று உலகைக் காப்போம் இயற்கை கோரம் கொண்டால் மனிதன் தாங்கமாட்டான்- பகுதி-2(தெடர்-2)

காயத்திரி சித்தர் முருகேச சுவாமி
தம்பிலிவில் சிவகாயத்திரி தபோவனம்
மட்டக்களப்பு ஸ்ரீ சக்கர மகா மேரு கோயில்
இயற்கையை நேசித்து அதன் வழி சென்று உலகைக் காப்போம் இயற்கை கோரம் கொண்;டால் மனிதன் தாங்கமாட்டான் என்னும் கட்டுரையில் என் உள்ளுணர்வில் உதித்த கருத்தொன்றை குறிப்பிட்டிருந்தேன் . அதாவது அதில் குறிப்பிட்ட விடயம் “தெலைத்தொடர்பு போல மனித எண்ணத் தொடர்புகளும் உண்டு. சிலவேளைகளில் நமக்குள் அவ்வாறான செயல்பாடு நடந்திருக்கும் உதாரணமாக ஒருவரை நாம் நினைக்கும் போது நாம் நினைத்தவர் நம்முன் தோன்றுவார். அல்லது எமக்கு தெலைபேசியில் தொடர்பு கொள்வார். பாடல் ஒன்றை கேட்கவிரும்பும் போது அது ஒலிவாங்கியில் ஒலிக்கும் இவ்வாறான அனேக சந்தப்பங்கள் எனது வாழ்கையில் நடந்திருக்கின்றது. இதை வநடந pயவால என்பர். இதுவும் யடிhய வின் செயல் பாடுதான். இதற்கும் அபாயம் வந்து விட்டது கையடக்க தொலை பேசி நிறுவனங்களின் போட்டாபோட்டியால் பல நிறுவங்கள் உருவாகி மின் காந்த அலைப்பிரதேங்சங்கனை கைப்பற்ற போட்டி போடுகின்றனர். தொலைதொடர்பு வலைப்பின்னல் தேன் கூட்டை ஒத்த அறுகோண வடிவானது. இதனால் இடவெளி இன்றி பரம்பக்கூடியது. இதனல் மனித எண்ணம்  அறிவாக மாறி திறனாகச்செயல்படும் போது தான் அதன் விளைவை மனிதன் அனுபவிக்கின்றான். இந்த செயல்பாட்டுக்கு அது தடையாக அமைப்போகின்றது. இதனை இயற்கை அனுமதிக்காது.”
சூரியனிலிருந்து அதிசக்தி வாய்ந்த கதிர்ப்பு என்ற தலைப்பில் நாசா விஞ்ஞானிகளின் அறிக்கை 15. 02. 2011 செவ்வாய்க்கிழமை சர்வதேச நேரப்படி 01.56 மணிக்கு சூரியனிலிருந்து அதீத புற ஊதா கதிர்ப்பு அலைகள் வெளிப்பட்டமை “எஸ் .டி .ஓ.” வின்கலத்தில் பதியப்பட்டுள்ளது. இதனை “எஸ் சுவாலை” என அழைக்கப்படும். மேற்படி கதிரானது தொடர்பாடல்களை பாதிக்கக் கூடியதாக என்று குறிப்பிடபட்டதுடன். இவ்வாறான சந்தர்ப்பத்தில் காந்த சக்தி தடீரென வெளிப்படும் போது சூரிய சுவாலைகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு “எஸ் சுவாலை” இருமுறை தோன்றியுள்ளது 1972 இல் ஏற்பட்டபோது அமேரிக்க இலினொயிங் என்னும் மாநிலத்தில் தூர இடங்களுக்கான தொலைபேசி தொடர்பாடல் பாதிக்கப்பட்டது. அதன் பின் 1989 இல் கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சேர்ந்த ஆறு மில்லியன் பேர் மின்சாரப்பாதிப்பால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவைகள் நேரடியான பாதிப்புக்கள். மறைமுகப்பாதிப்பு தெரிவதில்லை. விஞ்ஞானிகள் இப்போது நடந்தபின்தான் அறிகின்றனர் ஆனால் மெய்ஞானிகளான மகரிஷிகள் சித்தர்கள் இருந்த இடத்திலிருந்து கூறுகின்றனர். இலங்கையில் 1978 மார்கழி மாதம் 23ஆம் திகதி அன்று சூறாவளி வீசியது அப்போதுகூட எமது வாநிலை எதிர்வு கூறல் ஆபத்தான கட்டத்தை தான்டி விட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கும் தருவாயில் கிழக்குக் கரையில் உக்கிரமாக அடித்து கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல 2004 மார்கழி மாதம் 26ஆம் திகதி ஆசியாவின் கிழக்குக்கரையை ஆழிப்பேரலை தாக்கிய போது கூட அது தொடர்பான எந்த எச்சரிக்கையும் எந்த ஒரு எதிர்வுகூறல் நிறுவனத்தாலும் எதிர்வு கூறப்பட வில்லை.
சப்தரிஷி மண்டலம்
சூறாவளி ஆழிப்பேரலை முன் அறிவிப்பு மையங்கள் உருவாக்கப்பட்ட பின் இன்று வரை அவ் மையத்துக்கு எந்த அறிவத்தலும் இல்லை அது தான் இயற்கையின் இரகசியம் அதுவே பரம இரகசியம் அதை அறியக்கூடியவர்கள் மகரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் வழியை பின் பற்றுபவர்களுக்கு அவர்களை உள்நின்று உணர்த்துவர். ஏனக்கு அப்படியான அனுபவங்கள் அனேகம் அதில்லொன்று.பூரணை தினங்களில் வீட்டிலிருந்து காலையில்  இலங்கையில் கிழக்கு மாகானத்திலுள்ள மட்டக்களப்பில் உள்ள நாவலடியியுள்ள சப்தரிஷி மண்டலம் சென்று தியானத்தில் ஈடுபட்டுபின் வீடு திரும்புவது வழமை அத்துடன் பிற்பகலில் வழமை போல அபிசேகம் செய்து பூசையின் பின் தியானத்தில் இருப்பது வழமை 2004 மார்கழி மாதம் 26ஆம் திகதி அன்று காலை 8.00 மணியளவில் சந்தைக்குச் வென்று அபிசேஷகத்துக்கான பொருட்களையும் அர்ச்ஷ்சனைக்கான பில்வ தளங்களையும் பறித்துக் கொண்டு வருகையில் காயத்திரி பீடத்துக்கு செல்லும் பக்தர் திரு கதிர்வேலை சந்திக்கின்றேன். அவரிடம் என்னுள்ளுணர்வு சொல்லுகின்றது. இன்று நீ காயத்திரி பீடத்துக்கு செல்ல வேண்டாம். நாம் மெல்லாம் மேல் மாடியில்லிருந்து தான் தியானம் செய்ய வேண்டும் எனக்கூறுகின்றேன். தற்கு அவர் அப்படியா? அங்கு செல்லவில்லை நாங்கள் அண்ணனின் வீட்டுக்கு செல்கின்றேன். என்று கூறிச் சென்றார். பின்னர் நான் வீட்டுக்கு வந்து பூசைக்காக தொய்வதற்கு செல்லும் போது மக்கள் வீதிகளினால் கடல் வருவதாகக்கூறி விரைந்து ஓடிச் செல்லுகின்றனர். காயத்திரி பீடத்தும் கடல் கடைப்பிர தேசத்தில் அமைந்துள்ளது. ஆங்கு பூசைக்காகச் சென்ற பலரரையும் அந்த கிராமக்களில் பெரும்பாலோரையும் கடல் விழுங்கிக் கொண்டது.  இச்சம்பவத்தை பார்க்கும் போது எம் உள் நின்று மாகரிசிகள் பேசியுள்ளனர். குருவாக வந்து காப்பவன். ஆபத்பாந்தவன் அனாதரட்சகன். குருவருள் இன்றி திருவருள் இல்லை. அவன் அருளே திருவருள் அதுவே சிவன் அருள் அடுத்த நாள் திரு. கதிர்வேல் சந்தித்தார். அவர் அண்ணன் வீட்டுச் சென்று சிலநிமிடங்களில் கடல் கொந்தளித்வந்ததாகவும் அப்போது நல்ல காலம் அவ்வீட்டின் ஒரு பகுதியில் மேல்மாடி இருந்தால் தப்பினோம்.  நல்ல காலம் காயத்திரி பீடத்துக்கு செல்ல வில்லை. ஆரம்பத்தில் தடுத்து விட்டீர்கள் என்றார். அப்போது நான் சொன்னேன் அது மாகரிஷிகளின் வேலை.                                            
                          இலங்கைத்தீவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பில் கல்லடியில் நாவலடியில் காயத்திரி சித்தர் என எல்லோராலும் அழைக்கப்படும் தவத்திரு ஸ்ரீ முருகேசு சுவாமி அவர்களால் ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் கட்டளையின் பேரில் பவாணி ஆச்சிமத்தின் அமையார் இராம்பளின் தியானத்தின் மூலம் அதற்கான கட்டுமான அமைப்புக்கள் வரையப்பட்டு அமைக்கப்பட்டதே சப்தரிஷி மண்டலம். இதனுள் சப்தரிசிகளின் ஏழு உருவங்களும் தம்பர விக்கிகங்களாக பிரதிஷடை செய்யப்பட்டு அதன் நடுவில் காயத்திரியின் தம்பரவிக்கிரகமும் நறுமதை நதியில் எடுக்கப்பட்ட இலிங்கங்களும் வைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் இங்கு தான் சப்தரிஷி மண்டலம் இருக்கின்றது. அங்கு ஸ்ரீ சக்கர மஹாமேரு கோயிலும்( மேரு வடிவம் கொண்டது) ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயண மூரத்தி கோயிலும் பஞ்சமுக ஆஞ்சனேயர்ரும் காயத்திரி தியான மண்டபமும் உண்டு. இங்குள்ள ஸ்ரீ சக்கர மஹாமேரு யந்திரம் 1200 கிலோ கிராம்.
நான் சுவாமி வருகின்ற போது அவரைச்சந்திப்பது வழக்கம் அப்போதெல்லாம் சுவாமி என்னிடம் கூறுவார் நாங்கள் சூட்சுமமாக உன்னிடம் வரும் போது ஏனப்பா இங்கு என்பார். உனது வீட்டிலிருந்து சாதனை செய் என்பார். நான் இங்கு வரும் போது என்னை வந்து சந்தி என்பார். அவ்வாறே நான் நடந்து கொன்டேன். எனக்கு காயத்திரி யந்திரம் மந்திர உச்சாடனம் செய்து தந்தார். அது இப்போதும் என்னிடம் வழிபாட்டில் உள்ளது. என்னிடம் செல்வார் சாத்திரம் சொல்லாதே அது உன் வழியை திருப்பி விடும் என்றார். அப்போது எனக்கு குருதேவர் ஞாபகம் தான் வந்தது ஒருமுறை விவேகானந்தர் தியானநிஷ்டையில் மூழ்கிய போது அயல் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவத்தை கண்டார். நிஷ்டை நீங்கிய பின் அதை உறுதி செய்ய அயல் கிராமத்துக்கு சென்று உறுசெய்தார். அதை ஞானத்தில் அறிந்த குருதேவர் குறிப்பிட்காலம் தியானம் செய்வதை  சுவாமி விவேகானந்தரருக்கு தடைவிதித்தார். பின் நாளிலே அது பற்றி குறிப்பிட்டார் குருதேவர். அன் நிகழ்வு எதிகாலத்தை மற்றிவிடும்.
நான் இரு முறை இந்தியாவில் தீர்த்தயாத்திரை மேற் கொண்டேன் அதன பின் என் ஆன்மீகப்பாதையில் துரிதமான மற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. 2002 முதல் முறை மேற் கொன்டேன். அப்போது  மேல்மருவத்துரில் பங்காரு அடிகள்,  மதுரமலையில் பாம்பாட்டி சித்தர், பழனிமலையில் போகர் சமாதி, அருனாச்சலத்தில் அருனைமுனி ரமனமகரிஷி,பட்டினத்தடிகள் சமாதிக்கோயில், கருவூத் சித்தர் தவம் செய்த (தஞ்சைக் கொயிலில்) இடம்,அரவிந்தர் சமாதி   என்று சென்னையிலிருந்து இராமேஸ்வரம் வரையிலுள்ள பஞ்பூத தலங்கள் ஆறுபடைவீடு அத்தன்சபைகள்  என்று பார்த்துவிட்டு தலயத்திரை முடித்து இலங்காபுரியை அடைந்தபின் 2003 புரட்டாதி மாதம் 26ஆம் திகதி அன்று மாளய பட்ச் அமாவாசை முடிந்து பிதமை ஆரம்பிக்கும் ஆதிகாலை 5.45 மணியளவில் (இலங்கை நேரப்படி)  யமதிக்கில் (தென் மூலையில்) வானமும் பூமியும் தெட்டுமளவு சிவன் நின்று ஒளிப்பிளம்பாக மாறி ஆக்ஞா சக்கர வளியாக எனனுள் புகுந்தார் .சிறிது நேரம் எனது உயிரற்ற நிலையில் மயங்கி மீண்டும் புத்துணர்வு பெற்றதை நான் உணர்ந்தேன். இது போன்ற இன்னுமோர் சம்பவம் 2000 ஆண்டும் ஏற்பட்டது. நான் காயத்திரி ஜபம் ஆரம்பித்த காலம்  ஆரம்ப காலத்திலே ஜபம் செய்வது தீவிரம்.  அப்போது காலநேரம் பார்ப்பதில்லை. ஒரு நாள் அதிகாலை ஜபத்தில் தீவிரமாக இறங்கிய போது ஆக்ஞா சக்கரத்திலிருந்து கோடி சூரிய ஒளி வெளிப்பட்டது போல ஏற்பட்டு இது போன்ற நிலை ஏற்பட்டது. அப்போது இதுதொடர்பாக எனக்கு மகாயாகத்தில் தீட்சை தந்த குரு பிம்ம ஸ்ரீசோமஸ்கந்த குருக்களிடம் ( குஞ்சிக் குருக்கள்) கேட்க அவர் நீ கிரகஸ்தன் இப்போது ஜபம் அதிகம் செய்வதை குறைத்து கொள் என்றார். இதன் பின் 2005 புரட்டாதி மாதம் 14ம் திகதி புதன் கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அழகி தேவதை பொன்று அம்பிகை தோன்றி எனது காதுக்கருகில் வந்து பிரகாச காயத்திரியை எனக்கு  உபதேசித்தாள். விளித்தெழுந்வுடன் இந்தஅடியேன் கண்டகாட்சியை தெலைபேசி மூலம் இலங்கையில் நுவரெலியாவில் இருந்த காயத்திரி சித்தர்  முருகேசு சுவாமிகளிடம் கூறினேன். அப்போது சுவாமி உதயமான காயத்திரியை கூறுமாறு கூறினார்.  அதைக் கூற அப்பா ஆதிசத்தியால் உபதேசிக்கப்பட்டுள்ளது. காலம் வரும் போது உன்னால் உபதேசிக்கப்படும் என்றார். சுவாமியை அவருடைய சமாதியடையும் காலத்து முன் நானும் எனது நன்பர் திரு. த. ஈஸ்வரராஜாவும் அம்பாறை மாவட்டத்தில்லுள்ள தம்பிவிலில் சிவகாயத்திரி ஆலய குடமுழுக்கின் போது சந்தித்த போது அங்குள்ளவர்களை போகும்படி கூறிவிட்டு செவ்வாழைப்பழம்  இரு வருக்கும் தந்து உண்ணுமாறு கூறி. பல விடயங்களை கூறி விட்டு இவர்களைத் திருத்தமுடியாதுஎன்று கூறி .என்னைப்பார்து உன்வீட்டிலே உன் விடயத்தை தொடர் என்றார்.
                       பின்னர் சில மாதங்களின் பின் சுவாமி சமாதியாகிவிட்டார் சமாதி இப்போது நுவரெலியாவில் உள்ள இங்காதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது அங்குள்ள லிங்கம் சுவாமி ஸ்ரீ சிவபால யோகீஸ்வரரால் தவ வலிமையினால் நறுமதை நதிலில் எடுக்கப்பட்டு பிதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழிப்பேரலையின் பின் சப்தரிஷி மண்டலம் பிரதேசம் பாதிக்கப்பட்டது. ஆதன் விளைவாக மக்கள் பயத்தின் காரமாக அங்கு செல்வது குறைவு தற்போது குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. எனினும் பக்தர்களின் அளவு குறைவாகத்தான் இருக்கின்றது. அண்மையில் ஏற்பட்ட அசாதாரனமான காலநிலை காரணமாக இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும் மட்டக்களப்பு பெருமளவு பாதிக்கபட்டது. வ் வேளை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் வெள்ளத்தை கடலுடன் கலக்க வைப்பது முகத்துவாரம்.அது போதமையால் புது முகத்துவாரம் முகத்துவாரம் ஒன்று அமைத்து காலப்போக்கில் அழிந்திருந்தது.அது ப்போது உருவாகி சப்தரிசி மண்டலம் தீவூ போல கட்சியளித்தது.   எதிகாலத்தில் மகரிஷிகள் வழிபாட்டுக்குரிய தனிப்பிதேசமாக பருனமித்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. எல்லாம் அவன் செயல். அவனனின்றி அணுவும் அசையாது .
               இரண்டாம் முறை 2008 ஆம்ஆன்டு மீண்டும் எல்லா இடங்களுக்கும் சென்றேன். அதில் விசேடமாக பிரம்மரிஷி  மலையில் காகபுஜன்டரின் சீடர் இராஜ்குமார் சுவாமி சந்திப்பு முகியம் பெற்றிருந்தது.
                  எனது கட்டுரைகளில் எனது அனுபவத்தை பங்கிடுவதன் காரணம் ஆன்மீக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஊக்கப்படுத்துவதற்கும் ஆன்மீகவதிகளுடன்  எனது அனுபவத்தை பங்கிட்டு ஆலோசனை பெறம் நோக்கில் தான் அனுபவத்தை எனது கட்டுரைகளில் வெளியிடுகின்றேன். இவைகள் தேவ இரகசியமாக இருந்தாலும் இக் கட்டுரைகளைப் பின் பற்றி ஒருவரவது திருந்தி ஆன்மீக நாட்டம் கொண்டாலே அது எனது முயற்சின் வெற்றிதான் 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்'