Monday, August 29, 2011

“பாலுக்கு பாலகன் வேண்டி யழுதிடப் பாற்கடல் லீந்தபிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்”

பாற்கடலை கடைந்து தேவர்கள் அமுதம் பெற்றனர் அசுரருக்கு கிடைக் வில்லை.தேவர்கள் அருந்தும் போது கையால் கீழ் விழுந்ததை அருந்திய இராகு கேது நவக்கிரகங்களானது. 
          பாற்கடல் எங்குள்ளது ? மாந்தாருமலை எங்கே? தேவர்கள் யார்? அசுரர்கள்யார்? என்ற பலகேள்விகளுக்கு பதில் கூற புராணங்கள் விளைகின்றன. இதை அறிவியல் ஏற்கவும்மில்லை  இது கட்டுக்கதை என்று தள்ளிவிட்டன இளைஞர்கள் அவர்கள் எதிகால சந்ததியினர் ஆழ இருப்பவர்கள் இத்தேவையை நிறைவேற்ற இருப்பது ஆலயங்கள் அங்கு இருப்பவர்கள் பூசகர்கள் இவர்கள் பரம்பரையாணவர்கள்  இந்நிலையில் பதில் கூறவேண்டியவர் கள் ஞானிகள் . இப்போது குருகுல வாழ்கையயும் இல்லை. குருவை தேடி அலைபவருமில்லிலை பொருளை தேடி அலையும் உலகில் அருள் ஏது? அருள்தேடி அலைபவன் குருவின் நிழலிவ்; அழியா பொருளுடன் அமைதியின் எல்லையில் திளைத்திருக்க உலப் பொருள் தேடி அலைபவன்  பதட்டத்தின் மத்தியில் அமைதியின்மையின் விளிப்பில் திளைக்கின்றான் புராணம் கேட்க  நேரம் ஏது?  உயிர் வாழ்வதாக்காக உழைத்த காலம் போய் ஆடம்பர தேவைக்காக வாங்கிய பொருட்களை பராமரிப்பதற்காக ஓடி ஓடி ஒய்வற்று உழகை;கும் காலமிது. காலத்தே பயிர் செய்யாது காலம் கடந்து பயிர் செய்யும் காலமிது. 
    பாற்கடல்  எம் முள் உள்ளது.  இங்கு ஆறு ஆதாரங்கள் உண்டு மத்தான மந்தாரு மலையான மேரு தண்;டம்  அதன் இடப்பக்கம் இடகலை நாடியும் வலப்பக்கம் பின்கலை நாடியும்  வாசுகியாக சுழுநா நாடியும் இருக்கின்றது. தேவர்கள் சாத்வீக குணமாகவும் அசுரர்கள் தாமதகுணமாகவும் இருக்கின்றது. இவற்றை செயல் படுத்துவது இராஜத குணமாகும். இங்கு மனம் எனும் புற்றில் இரு பாம்புகள் இருக்கின்றது அதிலொன்று பருவுடல் மற்றையது நுண்னுடல் பருவுடல் உடல சார்ந்தது நுண்னுடல் ஆத்துமா சார்ந்தது .உயிரின  பாம்புக்கு ஐந்து  படங்கள் அவை மெய், வாய், கண் , காது, மூக்கு, இவ் ஐம் பொறிகளினுடே நுகர்தலது மனம் ,சித்தம் புத்தி ,அகங்காரம் எனும் நான்கும்.  பருவுடலுக்காக  ஐந்தாய்  விரிந்தாடிய மனத்தை நுன்னுடலுக்காக ஒடுக்கி ஒன்றாகி  இருக்கும் போராட்டமே பாற்கடல் கடைவின் தத்துவமாகும். இதனை திருமூலர் 
“நாகமும் ஒண்று படம் ஐந்து நாலது
போகமும் உட்புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழித்து
ஏகப்படம் செய்து உடம்பிடமாகுமே” என்றார்.
         மனத்தினுள் அடங்கிய பருவுடலும் நுன்னுடலும் போட்டி போட்டு நுன்னுடம்பு வென்றால் முலாதாரத்துகதில் அடங்கியிந்த குண்டலிணி விளிப்படைந்து ஆறாதரத்தினுடே மேலேறி சகஸ்ராதாரத்தில் அமுதம் செரிவதையே பாற்கடல் தத்துவம் எமக்குனர்துகின்றது. இங்கு பருவுடல் நாடுவது அசுரத்தன்மையானவை உடலை மையமாகக் கொண்டு தாமத இராஜத குனத்தை ஒத்த செயல் படுவதையும் ஆன்மாத்தமானவை தேவர்களின் செயலை ஒத்த சாத்வீக கருமங்களை மையமாகக் கொண்டது. ஒன்றுக் கொன்று முறனானவை இவை களிரண்டும் மேதுகின்ற போது சாத்வீக தேவகுணம் வெல்வதென்றால் வைராக்கியம் தேவை அத்டதுடன் அவதானமும் தேவை அதாவது புத்திவிளிப்படைந்து சித்தம் தெளிய வேண்டும் அதாவது சிற்றினபத்தை பேரின்பம் வெல்ல வேண்டும். கீழ்நோக்கிய இந்திரிய சக்தி; மேல்நோக்கி ஆறாதாரங்களை கடந்து சகஸ்ராதராரத்தில் கீழ்நோக்கிய ஆயிரம் இதழ் கெண்;டதாமரைமலரில் அமுதமாக ஆத்தும இலிங்கத்துக்கு  சொரிய வேண்டும் . இதுவே சக்திக்கு சமரிப்பிக்கும் காள் அல்லது மது கொடுத்தல் என்கிற விடையம் சத்தி வழிபாட்டில் குண்டலிணி சக்தியின் விளிப்பே பிரதானம். சித்தர்கள் ஆதிசக்தியின் அனுக்கிகத்தைப் பொறவே காயத்திரி வழிபாடு ஸ்ரீசக்கர(மாமேரு) வழிபாட்டை பிரதானமாக்கிக் கொண்டனர். குண்டலிணி விழ்ப்பின் முலம் அமிதம் பொற்று  நிஸ்டையில் ஆழ்ந்து திளைக்கின்றனர்.அட்மாசித்துக்களை பெற்றனர். 
“  சத்தியை வேண்டிக் சமத்தோர் கள்ளுன்பர்
   சத்தி அழித்தது தம்மை மறத்தலால்
   சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பபட்டுச்
   சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே” சத்தியிடம் சத்தி வேண்டி பராசத்தியைத் துதிப்பர் சிலர். சத்திக்கு கள் நிவேதனம் செய்து அதை தாம் அருந்தி தன் சத்தியை இழக்கின்றனர்.  சத்தி என்பது சிவஞானமான குண்டலிணி சக்தி அதிலிடுபட்டு சத்திய ஞான ஆனந்தத்தை அடைவதை விட்டு கள் அருந்துகின்றனர். என திருமூலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
     இறவாம்மை வேண்டி கடும் தவம் செய்தவர்களுக்கு எம்பிரான் நம்முள் உள்ள பால்கடலை உணர்தி அதை கடையும் யுத்தியையும் உணர்த்தி அஞ்ஞானம் தனை உணர்தி மெய்ஞாம் மூலம் கீழ் நோக்கிய இந்திரியம் மேல் நோக்கி சகஸ்திராகாரச் சக்கரத்தில் சொரியச் செய்யும் இதுவே அமுதம்       
ஓளவைப் பிராட்டியார் அருளிய
 “‘விநாயகர் அகவலில்” 
“ஜம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
 இன்புறு கருணையின்இனிதெனக் கருளி
 கருவிகள் ஒடுங்குங் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
 தலமொரு நான்கும்   தந்தெனக் கருளி 
மலமொரு  மூன்றின ;மயக்கமறுத்தெ
 ஒன்பது  வாயில் ஒரு மந் திரத்தால் 
ஜம்புலக் கதவை அடைப்பதும் காட்டி 
ஆறாதாரத் தங்குச நிலையும்
 பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
 இடை பிங் கலையின் எழுத்தறிவித்துக்
 கடையிற் சுழுமுனைக் கபாலமும்  காட்டி
 முன்று  மண்டலத்தின் முட்டிய தூணின்
 நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக்
 குண்டலி  யதன்pற் கூடிய அசபை
 விண்டெழு  மந்திரம் வெளிப்பட உரைத்து
 மூலாதாரத்தின்  மூண்டெழு  கனலைக் 
காலாலெழுப்புங் கருத்தறி வித்தே…..”
 என மிகதெளிவாக கூறியுள்ளார்.
        திஞானசம்பந்தருக்கு மூன்று வயதில் ஞானப்பால் உட்டியதாக புராணம் கூறுகின்றது. அது அன்று அவருக்கு குண்டலிணி விளிப்பே ஏற்பட்டுள்ளது என்று என்னத்தோன்றுகின்றது. சுந்தரரை தடுத்தாட் கொன்டமை, உயிர்மாய்க்க எண்ணி  கோபுரம் ஏறி குதிக்கையில் அருனகிரி நாதரையை அண்ணாமலையில் தாங்கி குண்டலிணி விளிப்பே ஏற்படுத்தி “முத்தைத்தரு பத்தித்திருநகை......” அடிஎடுத்துக் கொடுத்தமை போன்ற திருவிளையாடல் எல்லாம் பால்கடல் கடைவுதான். மாணிக்கவாசகர் “கன்னலொடு நெய்கலந்தால் போல...” என திருவாசகத்தில் இறைவன் எம்முள் கலந்துள்ளதை அழகாக குறிப்பிடுகின்றார். பால் உறைந்தால் தயிர் தயிர் கடைந்தால் மோர் மோரை கடைந்ததை வடித்து வடித்ததை காச்சி எடுத்தால் நெய். நெய் வெளிப்படையாக தெரிவதில்லை அது பாலில் மறைந்திருக்கின்றது. அவ்வாறே எம்முள் இறைவனை உணத்தும் குண்டலிணி மறைந்திருக்கின்றது. தயிரை கடைவது போல நேர், எதிர் எண்ணங்கள் மோதி நேர் எண்ணம் வெற்றி கண்டு மனம் ஒருநிலைப்பட்டு பிறப்பின் பெருமை அறிவதே பால்கடல் விடையமாகும்;. 
    “பாலுக்கு பாலகன் வேண்டி யழுதிடப்
             பாற்கடல் லீந்தபிரான்
      மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
             மன்னிய தில்லை தன்னுள்
       ஆலக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் 
             பலமே யிடமாகப்
    பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே 
           பல்லாண்டு கூறுதுமே” என ஒன்பதாந் திருமறையில் சேந்தனார் சுவாமிகன் மிகவும் அழகாக பாடியுள்ளார்.
பால்கடல் என்பது ஆராதாரத்தை அடிப்படையாகக் கெண்;ட மேருதன்டத்தை இடகலை பின்கலையினுடாகச் செல்லும் சுளுழுனாவான வாசுகிமூலம் கடையும் போது குண்டலினி ஆன அமுதம் கிடைகின்றது. பதியை பசுவாகிய ஆன்மா  அடைவதனால் முத்தியாகிய  சங்நிதி பதுமநிதி, சக்கரம், திருமகள், அமுதகலசம், போன்ற தெய்வீக பொருட்கள் தோன்றின இது போன்று எம்முள் இவை தோன்றும் என்பது தின்னம். 
ஆலயங்களில் நித்திய நைமித்தி கிரிகைகளில் கானப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவே வருடாந்த மகா உற்சவம் நடாத்தப் படுகின்றது. அவ் உற்;சவத்தின் முதல் நாள் கிராம சாந்தி, பிரவேசபலி, வாஸ்த்துசாந்தி, நவக்கிரககோமம், விநாயகர்கோமம் என்பன செய்து உற்சவ ஆரம்ப நிகழ்வாக ஆரோகணமான கொடிஏற்றம் நிகழ்கின்றது. தம்பம் முப்பத்திரண்டு பகுதிகளைக் கொண்டது. அது போலவே எமது முள்ளம் தன்டான மேருதன்டமும் முப்பத்திரண்டு பகுதிகளைக் கொண்டது. அங்கு கொடிஏற்ற கொடிசீலை, தற்பைகையிறு, நூல்கையிறு. என்பனவற்றைப் பயன்படுத்தி கொடிஏற்றுகின்றனர். தற்பைக் கயிறு சூரிய நாடியான பிங்கலைநாடியாகவும், நூல்கயிறு சந்திரநாடியான இடகலைநாடியாகவும், கொடிச்சீலை சுழுமுனை நாடியான குண்டலிணியாகவும் கொள்ளப்;பட்டே ஆரோகணமான கொடிஏற்றம் நிகழ்கின்றது. 
ஆலயங்களை எடுத்துக் கொண்டால் சைவசிதாந்தம் கூறும் கடவுளை அடையும் மார்க்ங்களான சரியை, கிரியை, யோகம், ஞானமாகிய நாற்பாதங்களில் முதன்மையாக சரியை,கிரியை ஆகிய மார்க்கங்கள்  என்பன இங்கு பின்பற்றப்படுகின்றன இதில் கொடியேற்றம் என்பது கிரியை முலம் மக்களுக்கு குண்டலிணி விளிப்பை செய்கை மூலம் காட்டுகின்றது. இதுவே பால்கடல் கடைவு நிகழ்வாகும். ஒரு மனிதன்  யோகம்,  ஞானத்துக்கு வரவேண்டுமானால் முதலில் உடலால் இறை சிந்தனையில் ஆலயத் தொண்டுகளில் ஈடுபட்டு உள்ளம் பண்பட்டு இறை சிந்தையில் நிலைக்க வேண்டும். மக்களுக் செய்யும் சேவையை மகேசன் சேவையாக செய்ய வேண்டும். இதனால்; உடலும் உள்ளமும் சுத்தமடையும்.இதை உணர்த்தவே கிராமசாந்தி முலம் அக்கிராமத்திலுள்ள கெட்டசக்திகளை கிரமத்து எல்லைக்கப்பால் அனுப்பியும் தசவைரவர்களை பிரலேசப் பலி கொடுத்து காவலுக்கு நிறுத்துகின்றனர்.அதன் பின்னர் புத்தியாகிய விநாயகப்பெருமானுக்கு விக்கினங்களை தீர்த்து செய்யும் காரியத்துக்கு இடையுறு எதுவும் வராத வகையில் புத்திவிளிப்புடன் இருந்து சித்தம் தெளிந்து எடுத்தகாரியத்தில் சித்தி பெற பிராத்திக்கப்படுகின்றது. இவை அனைத்தும் புற சுத்தமாகும்.பின் வாஸ்து புருசனை அனைத்து அதாவது வாஸ்து சாந்தி மூலம் இறைவன் இருக்கும் வீடாக கருதப்படும் ஆலயத்தை சுத்தம் செய்வதாகும். இது நமது உடலை காலை, உச்சிக்காலை, மாலை ஆகிய சந்திகளில் வந்தனம் செய்து உடலை  சுத்தம் செய்வதற்கு ஒப்பானது. அதைப் போன்று உடலின் அங்கங்ளை கரணியாசம் மூலமும் அகச்சுத்தமாக்ஆத்ம சுத்தியைச் செய்வதன் மூலமும் செய்கின்றனர். அதன் பின் நவக்கிரங்களினால் ஏற்படும் தடைகளை நிவர்த்திப்படுத்துவதுடன் சந்தோசப்படுத்தி அதன் அனுக்கிரகத்தை பெற்றுக் கொள்ள நவக்கிரக கோமம் செய்யப்படுகின்றது. அடுத்து திசைகளினால் ஏற்படும் தடைகளை நீக்கி திசைகளுக்கு பொறுப்பாக இருக்கும் சக்திகளை சாந்தப்படுத்துவதற்காக திசாகோமங்களும் செய்யப்படுகின்றது. பின்னர் கொடிஏற்றம் என்கின்ற ஆரோகணம் இடம் பெறுகின்றது. பின்னர் அட்டத்திக்கு பாலகர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் இடங்களில் நிறுத்தப்படுகின்றனர். முதலில் பிரம்மாவும் அடுத்து கிழக்கில் இந்திரன் தென்கிழக்கில் அக்னி தெற்கில் ஜமன் தென்மேற்கில் நிருதி மேற்கில் வருனன் வடமேற்கில் வாயு வடக்கில் குபேரன் வடகிழக்கில் ஈசானன் என அனைவரும் அழைக்கப்பட்டு நிறுத்தப்பட்டு பலிபொருள் கொடுக்கப்படுகின்றது. பின்னர் இறைவன் எழுந்தருள்கின்றார்.இது கிரியை யாகும். திருவிழாவின் போது பஞ்சகிரித்தியங்களை இறைவன் நடத்துகின்றான். அத்துடன் விம்பம்,தம்பம்,கும்பம் ஆகிய இடங்களில் இறை சக்தி நிறைந்திருக்கின்றது. கொடிறேற்றம் படைத்தல் திருவிழாக்கள் காத்தல் தேர்திருவிழா அழித்தல் தீத்தொற்சவம் அருளல் அமரோகணமான கொடியிறக்கம் மறைத்தல் இவ்வாறு கிரியை மூலமாக விளக்கப்படுகின்றது.

திருவிழா தொடங்கியதும் அவ்வூரில் பருஉடல்சார்ந்த லவ்வீகவிடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது ஆத்மா சாந்த நுன்னுடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஆலயத்தைச் சேந்தவர்கள் வெளியூர் செல்ல மாட்டார்கள். அப்பகுதியில் திருமாங்கல்லிய தாரணங்கள் இடம் பெறாது. ஆசைவ உணவுகள் தவிக்கப்படும். தாம்பத்திய உறவு தவிக்கப்பட்டு பிரமச்சாரியம் கடைபிடிக்கப்படும். எப்போதும் இறை சிந்தையுடன் தினமும் மூன்று முறை ஆலயத்துக்கே சென்று ஜெபம், தியானம் என்பவற்றில் ஈடுபடுவர். பிரதம குருக்களும் காப்புக் கட்டி ஆலயத்திலே தரித்திருபார்.
இவை அனைத்தையும் அகமுகம் நோக்கி அந்தர் யாகமாக எம்முள்உள்ள இறைவனை(ஆத்மாவை) நோக்கி செய்வதன் மூலமே உண்மை நிலையை அடையமுடியும். எமக்குள் செய வேண்டியதை செய்கை முறையில் காட்டுவதே கிரியை அதையே முடிந்தமுடிவாக என்னினால் அது திரையில் படம்பார்பதை ஒத்தது. படம்பாக்கும் வரை பாத்திரம் ஏற்போம். படம் முடிந்ததும் பப்படமாகி விடும். எனவே படம் பார்பதையும் தற்காலியமாக பாத்திரமேற்பதையும் விட்டு எம்முள் உறைந்துள்ள சத்தியை தியானத்தின் மூலம் உணர்ந்து மேன்படுத்தி நிரந்திர பாத்திம் மேற்போம். “குண்டலிணி விளிபே ஆத்மாவின் தாகம் அதுவே ஆத்தும விடுதலைக்குரிய உபாயம்” இவ் விடயங்கள் அனைத்துமே பாற்கடல் கடைவினையே உணர்துகின்றது.  

No comments:

Post a Comment