Wednesday, December 29, 2010

7.முற்பகல் செயில் பிற்பகல் விளையும்

7.முற்பகல் செயில் பிற்பகல் விளையும்


  
                      எமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கெல்லாம் கடவுளை நோகுவது வழமை நான் கடவுளை நம்பி நாள்தவறாது ஆலயத்துக் செல்லுகின்றேன் க      ஷ்ஸ்டம் நீங்கிவாறில்லை நம்பிக்கை இழப்பண்டு. அதே வேளை ஒரு காரியம் நிகள காரணம் ஒறுண்டு என்பர்.ஒரு சிலர். ஒரு தாக்கத்துக்கு இன்னுமோர் தாக்கம் உண்டு என்பர் இன்னும் சிலர். எமக்குள் நாமே சில கேள்விகளை கேட்க்கும் போது தான் அது தெளிவாகும் .முதலில் நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எதற்காக வந்தேன்? தற்போது என்ன செய்கின்றேன்? வந்தன் நோக்கம் நிறைவேறுகின்றதா? இதை எப்போதாவது நாம் நினைத்துண்;டா? நினைத்தும் ;இல்லை நினைக்கவும் முடியாது. உலகமாயை எல்லாவற்றையும் மறைத்து விட்டது. குழந்தையாக பிறக்கும் போது பயந்து முதலில் அழுகின்றது. பின்னர் சிரிக்கின்றது. இறைவனை நெருங்க நெருங்க கஷ்டங்களும் அதிகரிக்கும். இதற்கு நல்ல உதாரணங்கள் நாயன் மார் வாழ்கை சரித்திரங்கள் அவை தரித்திரங்களாக இருந்ததை நாம் அறிவோம். அவர்களின் வைராக்கியம் அவர்களை இறவாம்மையும் அவர்கள் புகழ் அளியாமையையும் கான்கின்றோம் அதுவும் “அவன்அருளாலே அவன்தாள்” வணங்கியென மணிவாசகப்பெருமான் திருவாசகத்தில் அருளியுள்ளார்.எனவே பிறவித்தளையில்லிருந்து நீங்க மலபரிபாகம் தேவை அவை ஆணவம் ,கன்மம், மாயை அவற்றை நீக்க வைராக்கியம் தேவை.
                              ஆணவத்தை அழிக்கமுடியாது அதை அடக்கத்தான் முடியும். அது செம்பில் களிம்பு போல இருப்பது அதனை எப்போதும் பூசி சுத்தமாக வைத்திருந்தால்தான் களிம்பேற்படாது பாதுகாக்கமுடியும். எப்போதும் செம்பில் களிம்பு உண்டு. இதற்கு இருள் மலம் என்பதும் உண்டு. ஒருமனிதனின் வாழ்க்கையில் இதைப்போல கொடியது எதுவும்மில்லை ஏனெனில் இருளினுள் இருக்கும் ஆபத்தை அறிய முடியாது அது ஆழமான அற்றின் மேல் சல்பீனியா என்னும் தாவரம் படர்ந்து மூடியிருப்பது போல அது ஓர் ஆழகிய விளையாட்டுத்திடல் போலக்காட்சியளிக்கும்  அதன் பின்னால் உள்ள ஆபத்தை மதி மயக்கி மறைத்து விடும் எனவே நாம் எப்போதும் எம்மை தூய்மைபடுத்திக்கொண்டிருத்தல் வேண்டும். அதற்கு அவசிமானது ஜெபம் தியானம் மாகும்.
ஆறுமுகன்
                    இதன் விழைவு கந்தப்புராணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதுடன் முருகனின் உருவமும் விளக்குகின்றது. மனிதனிடம் இரு அம்சங்கள் உண்டு. ஒன்று தேவகுணம் அடுத்தது அசுரகுணம் அதாவது வெளிச்சமான பகுதி அடுத்தது இருளானபகுதி இங்கு வெளிச்சமான பகுதி சாத்வீக குணத்தையும் இருளானபகுதி தாமதகுணத்தையும் குறிக்கும் ராயோ குணம் என்றொன்று உண்டு. அது இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் பலன் எடுக்கின்ற இலட்சியத்தின் தன்மையைப் பொறுத்தது. சாத்வீகம் உண்மை, நேர்மை, சத்தியம் ஜிவகாரூனியம் போன்ற குணங்கள். தாமதகுணம் என்கின்ற போது அவை வஞ்சகம், சூது, பெறாமை போன்றவை எனவே முருகனின் திருவுருவத்தில் ஆறுமுகம் இது ஆறறிவின் அடையாளம். அடுத்து பன்னிருகை இது பன்னிருமாதம் என்பதையும் இரத்தத்தின் குழு பன்னிரன்டையும் குறிக்கின்றது. கையில் உள்ள வேல் அறிவு ஆழமானதாகவும் அகலமானதாகவும் கூர்மையானதாகவும் இருக்கவேண்டும் என்பதை குறிக்கின்றது. நல்ல குணமான சாத்வீகத்தை சேவல் கொடியாக மேல்லெழுந்து பறக்க விட்டும். சேவலின் குணம் அதிகாலையில் சூரியன் உதிப்பதையும் பிரம்மமுகுத்தத்தையும் மானிடருக்கு தெரிவிக்கின்றது;. மயில் மழை முகிலான இருலை ரசித்து ஆடுவது. இது ஆணவம்.இதை அடக்கி தனக்கு கீழ்வைத்துள்ளார்.ஒரு மனிதனை இயக்குவது இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி. இச்சை என்பது ஆசை. கிரிகை என்பது கடமை. ஆசையையும் கடமையையும் ஞானம் இருந்தால் தான் வந்த நோக்கத்தை அடையக்கூடிய வகையில் பயன்படுத்தமுடியும்.  ஞானம் என்பது தன்னை அறிவது. அறிவு என்பது உலகை அறிவது.தன்னை அறிந்தால் தான். பிறப்பறுக்க முடியும். கோபத்தால் மன அமைதியின்மை தோன்றும். இதன் விழைவு இரத்தழுத்தம் இதுவே எல்லா நோய்க்கும் காரணம். இரத்தசம்பந்தமான விடயங்களுக்கு பொறுப்பான கிரகம் செவ்வாய் அதன் நிறம் சிவப்பு அதன் அதிதேவதை முருகப்பெருமான். அவனை வழிபடுவதன் மூலம் ஞானம் பெறுவதுடன் உடலும் உள்ளமும் சமநிலை அடைந்து நேய்யற்ற வாழ்வே நாம் பெற்ற செல்வம் என வாழமுடியும். முருகனின் வடிவத்தை எமக்கு தந்தவர் போகமாமகரிசி அவர் பிரபஞ்ச சக்தியை ஈத்து சக்தி கொடுத்து அற்புதமான வடிவத்தை உலகுக்கு கொடுத்த மகரிசி ஆவார் அவரை வழிபட்டு சக்தி பெறுவோம்.
போகமகாரிசி
                        அடுத்து கன்மம் இது நாம் செய்தவினை இதுவே பிறவிக்கு காரணம். அது மட்டும் மல்ல தற்போதுள்ள வாழ்விற்கும் நிகழ்வுக்கும் காரணம் விணையின் பயனே விணைகள் மூன்று வகைப்படும். அவை சஞ்சிதம் ஆகாமியம் பிராத்தம் எனப்படும்.நாம் எப்போதும் நமக்கு ஏற்படும் கஸ்டங்களுக்கெல்லாம் இறைவனை கதரணம் கூறுவது வழமை அது  வல்ல  உண்மை நமக்கு நாம் தான் கரணம். நாம் எண்ணம் ஒவ்வென்றும் சக்தி வாய்ந்தது எண்ணுகின்ற போது அவை வெளிவந்துவிடும். அவற்றை மீளவும் பெற முடியாது. இதனால் தான் கொடுத் வரத்தை மீளவு பொறமுடியாது. வாய்மை எனக்குறிப்பிகின்றனர். எனவே எம்மால் விடப்பட்ட எண்ணம் உண்மையில்லாவிட்டால் அந்த  எண்ணம் எம்மை தாக்கும்.
“தினை விதைத்தவன் தினை அறுப்பான. வினை விதைத்தவன் வுpனை அறுப்பான்”. அதுமட்டுமல்ல முப்பிறவியில் நாம் செய்த செயல் இப் பிறவியில் அனுபவிக்வேண்டும்.  “முற்பகல் செயில் பிற்பகல் விளையும்” என்னும் முதுரைகள் எமக்கு உனர்த்துக்ன்றன.கன்மத்தை நாம் அனுபவிக்காமல்விட்டால் பிறவிப்பினி நீங்காது அது இப்பிறவில் செய்யும் பாவத்துடன்சேர்ந்து பல பிறவிக்கு வளிவகுக்கும். புpறவி என்பதே துன்பம் ஆனால் பிறவித்தளையை நீக்க மனிட பிறவியைத்தவிர வேறுவழி இல்லை.  “அரிது அரிது மானிடராய்ப்பிறத்தல்”  எனவே தேவர்களாக இருந்தாலும் பிறவிப்பினி நீங்க மானிடப்பிறவி எடுத்தே ஆகவேன்டும். இதனை நாம் புராணங்களில் கானமுடியும்.
              இதற்கு சிறந்த உதாரனம் சீதையின்கதை இவள் சநக மகாராஜவின் மகள் இவள் பூர்வஜன்மத்தில் வேதமோதிக்கொன்டுடிருந்த குசத்துவாசர் வாயில் தோன்றிய வேதவதி. தம்பன் என்னும் அரக்கன் இவளை மனைவியாக்க என்னி தாயான இருடியைக்கேட்க இருடி இவள் விஷ்ணு மூர்த்தியின் மனைவி என்று கூறினாள் இதைக்கேட்ட தம்பன் கோபம் கொண்டுஇருடியைக் கொன்றான். இதனால் தனித்திருந்த வேதவதி விஷ்ணு மூர்த்தியை என்னி தவமிருந்தபோது திக்குவிசயம் மேற்கொன்டு வந்த இராவணன் இவளில் காமவயப்பட்டு அவளைப்பிடிக்க வேதவதி கோபம்கொன்டு நீ தீண்டிய உடலை நான் வைத்திருப்பதில்லை என்றும் நானே உன்னை அழிப்பேன் என்று சபதம் எடுத்து எடலை தீமூட்டி எரித்து இறந்தாள். பின்னர் இலங்காபுரியில் ஒரு தாமரைப் பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தாள்.  சிவபூசைக்கு பூ பறிக்கச் சென்ற இலங்புரி வேந்தன் இராவணன் குழந்தையைக்கண்டதும் அதை எடுத்து வருகையில் அதைக்கண்ட நிமித்திகர் முனிவர் இக் குழந்தையினால் எதிர்காலத்தல் அழிவுஎற்படும் என்று கூறினார் இதைக்கேட்ட மன்னர் அஞ்சி பெட்டியிலிட்டு கங்கையில்லிட்டான். பேட்டி வெள்ளத்தின் காரனமாக மிதிலையில் ஆற்றுப்படுக்கையில் புதைந்தது. மிதுலைமன்னன் சநகன் யாகம் செய்வதற்காக ஆற்றுப்படுக்கையை உழுதபோது கலப்பையில் பெட்டியொன்று பட கன்ட சனகர் பெட்டியை திறந்து பார்த்த போது ஓர் குழந்தை இருக்கக்கண்டார் . அக் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார். அக்குழந்தை வளர்து பருவமடைந்ததும் வில்லை  வளைத்த இராமனை மனந்தாள். நுகரில் இருந்து ஆரணியம் நீங்கிய இராமமூர்த்தியுடன்  பின்தொடர்கையில் தித்திரகூடம் கடக்கையில்  அத்திரிமகரிசியின் ஆச்சிரமத்தில் அனுசூயை யால் உபசரிக்கப்படுகையில் தண்டகாரணியத் வந்த மாரீச்சனைகிய மாயமானைக்கண்டு ஆசைவயப்பட்டு கனவனை பிடித்துத்தரச்சொல்ல கனவன்பிடிக்கச்செல்ல அவள்கூவியகுரல் கேட்க லக்குமணன் சீத்தா எனும் ஓசையால் மைத்துனரைப் போகக்செய்து தருனம்பாத்திருந்த இராவனன் சன்னீயாசி வேடம் கொன்டு சீதையை பிடித்து இலங்கரபுரியில் சிறை வைத்தான்;. இதன் விளைவை  இராமாயணம் முலம் அறிகின்றோம்.
                   முன்விணைபயன் இங்கு தெளிவு படுகின்றது. இது போன்று புராணக்கதைகள் பல உண்டு. இன்னும் கதைகளைத்தான் படித்துக்கொன்டு இருக்கின்றோமே தவிர அதன் உட்கருத்தை விளங்கிக்கொள்ளவும் இல்லை. விளங்கியதை மற்றவர்களுக்கு விளக்கவும் இல்லை. பாமரமக்களுக்கு சிறிய உண்மையை விளக்க அக்காலத்தில் புராணங்கள் பயன்பட்டன.
                      இன்றைய நவீன காலத்தில் மானிட சமூகம் தீராத ஆசைகளை வளர்த்துக்கொண்டு அவ்வாசைகளை தேவைகளாக்கிக்கொன்டு தேவைகளை அதிகரித்துக்கொண்டு அதை நிரைவு செய்ய பொருளாதாரத்தை தேடி அலைகின்ற காலத்தில் புராணம் கேட்க அல்லது அதை நாடகங்களாக பார்க்க நேரம் எங்கே? கந்தப்புராணத்தில் சூரன் என்றபாத்திரம் நம்முள் அடங்கிக்கிடக்கும் ஆணவத்தின் தன்மையும் அது எப்படி எல்லாம் சந்தப்பத்துக்கு ஏற்ப எடுக்கும் உருவங்கள் அது படுத்தும்பாடு அதன் விளைவு எல்லாவற்றையும் அழகாக கட்டியுள்ளது.
                           மகன் தாய்யிடம் கேட்டான் அம்மா இறைவன் அன்பானவன் உயிர்களிடத்து அன்புள்ளவன் எல்லாவற்றையும் படைத்தவன். உயிர்களிடத்து வேற்றுமையற்றவன். இப்படி இருக்க சூரன்போரில் முருகன் சூரனை கொல்கின்றார். அவர் தானே சூரனையும் படைத்தவர். கொல்கின்ற கடவுளை நாம் வழிபடக்கூடாதல்லவா?  அப்போது தாய் பதில் கூறமுடியாது திகைத்து நின்றாளாம். ஏனெனில் தாய்க்கும் கதையின் உட்பொருள் தெரியாமையே இதற்கு காரணம். இது ஓர் உண்மைச் சம்பவம் இவ்வாறான கதைகள் மூலமே மதம் மாற்றுபவர் தங்களுக்கு சதகமாக்கிக் கொள்ளுகின்றனர். எனவே கதைகளை கூறுவதோடு அதன் உட்கருத்தையும் விளக்குவதே சிறந்தது
.
              மாயை இல்லாததை இருப்பதாக காட்டும். இது காணல் நீரைப் போன்றது. அம்பிகையை மகாமயை என்று அழைக்கின்றனர். ஆவளை சரண்புகுந்தால் மாயையைக்கெண்;டு மயையைஅழித்து மலபரிபாகம் செய்து அத்ம விடுதலை கொடுப்பாள். “வாள் எடுத்தவன் வாளால் அழிவான்” என்பது முதுமொழி. மாயை என்பது இல்லாததை இருப்தாக காட்டுவது. அனுபவிக்க அனுபவிக்க மீண்டும் மீண்டும் ஏற்படும் அதற்கு முடிவில்லை. ஆனால் அதுவே அதை அளித்துக் கொள்ளும். பொண்னாசை, பெண்ணாசை, மண்ணாசை இவ்வாசைகள் பேராசைகளாகினால் அழிவுதான். நியாயமானவையானால் அதனால் நன்மை கிடைக்கும். ஆனால் சுத்தமாயை உண்டு அது இறைவனை அடைய வழி செய்யும். அடைய முடியாத ஆசையை அடைய முயலும் போது பொறாமை ஏற்படுகின்றது. போறாமை வஞ்சகமாக மாறுகின்றது. வஞ்சகம் சூதாகமறுகின்றது. சூது செயல்படுகின்ற போது விணையாகின்றது. விணையானது நல்விணை தீவினணயாகின்றது. இவை பின்னர் கன்மாகமாறி பிறப்புக்கு வழிவகுக்கின்றது.

எனவே ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களை ஞானத்தின் தீயில் எரித்து சாம்பல்க்குவதன் மூலம் பிறவாமையை அடைய முடியும். இதனையே தீட்சை பெற்றவர்கள் நெற்றியில் அணியும் விபூதியான திரிபுண்டரம் குறிக்கின்றது.

Monday, December 20, 2010

6. சித்தர்கள் பூமி கதிர்காமம்

 சித்தர்கள் பூமி கதிர்காமம்
கதிர்காமக்கந்தனின் நுலைவாயில
          ரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கை இந்தியாவுடன் தெடர்பகவிருந்தது.  ஆந்தக்கால தொட்டு இன்று வரை இந்தியாவுடனான தெடர்பு இருக்கின்றது. இலங்கை சிங்களம் என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தின் ஒரு சிறு பகுதியே  மிகுதி சமுத்திரமாகவுள்ளது என “அபிதானகோசம்”  என்னும் நிகண்டு குறிப்பிடுகின்றது. இதனை" பாரதி "    
கதிர்காம கந்தனின் பிரதான ஆலயம் 
“சிங்களத்தீவினிக்கோர் ஒரு பாலம் அமைப்போம்” என்னுகுறிப்பிட்டுள்ளார். அக்காலத்திலிருந்து
விநாயகர் ஆலயம
கதிர்காமமும் இருந்திருக்கின்றது.
சிவன் கோயில்(கல்லாணகிரி வாவா தவம்செய்த இடம்)
தெய்வாளை அம்மன் நுழைவாயில் 
தேய்வானையம்மன் ஆலயம்
ஈழவள நாட்டின் தென்பகுதியில் அம்பான்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிர்காமம். கதிர் என்றால் சூரியன் என்றும் காமம் என்றால் அன்பு  என்றும் இதனால் சூரியனின் அன்பு நிறைந்த இடம் என்று குறிப்பிடுகின்றனர். இன்னும்  சிலர் கதிர் என்றால் திணை  காமம் என்றால் கிராமம் என்றும் இதனால. திணை கிராமம் என்றும் குறிப்பிடுகின்றனர். ஏவை எப்படி இருப்பினும் முருகன் அங்கு இருக்கின்றன்.அவன் அழகன் குறவல்லி மணாளன் தமிழன் குறிஞ்சிக்குமரன். இவற்கெல்லாம் பின்னால் பொரிய இரகசியம் ஒன்றுண்டு. பெரும் சித்தன் திருமூலர் “உண்னுடம்பு ஆலயம்……..என்னு குறிப்பிட்ட நிலையை அடைந்த சித்தர்களின் பின்னணி அங்கு [உண்டு. போகமாமகரி பழனியில் இறைவணால் பழனி ஆண்டவனை நவபாசாணத்தில் உருவாக்க பணித்தபோது  மகரி ஜ்வரை கதிர்காமம் அனுப்பி அவர்களை இங்கு நிஸ்டையில் ஆளும்படி பணித்தார். அப்போது  அவர் இங்கிருந்து சக்தியை ஈத்தும் நவகோள்களில் உள்ள பாசாணத்தை ஈத்தும் தான் பழனி முருகனின் திருவுருவை முடித்தார் என்றும்கூறுகின்றனர் முன்னோர். அது மட்டும்மல்ல போகமாமக~pசியும் பல சித்தருடன் வந்தாகவும் அப்போது களைப்பால் பால்குடிக்;க வெளிக்கிட்டபோது அருனகிரிநாதரை கானவில்லை என தேடியபோது போது கிளி வடிவில் வந்த அருனகிரிநாதர் திருப்புகள் பாடியதாகவும் பின் அக்கிளிக் கூட்டை விட்டதாகவும் அதை பின்னர் திருகோணமலையில் உள்ள கன்னியா உற்றுக்கு மேலே உள்ள மலையில் சமாதி வைத்ததாகவும். செவிவழிக்கதையொன்று உண்டு. எது எவ்வாறு இருந்தாலும் சித்தர்கள் வாழ்ததற்கான சான்றாக இருப்பது        
                                                                                                   
தெய்வானை அம்மன் ஆலயத்துக்கு முன்னால் உள்ள குருபீடமும் எட்டு சமாதிகளும் அதன் வரலாற்றை நான் அறிந்த வகையில் பார்போம்.கதிர்காம வரலாற்றில் எல்லோரலும் முத்துலிங்க சுவாமி என அழைக்கப்பட்ட கல்லாணகிரி சுவாமிகள் முக்கியமானவர். மகரி~p போகரல்
அனுப்பபட் முத்துலிங்க சுவாமி தனது சக்கியை முழுமையாகப்பயன்படுத்தி ஒரு முருகனின் யந்திரம் வரைந்து அதற்கு சக்தியுட்டி மீண்டும் பழனிக்கு எடுத்துச்செல் விழைந்த போது குறவல்லி தடுத்து அதை  கதிர்காமத்தில் வைத்தபோது முருகனால்  தடுக்கமுடியாமையினால் எம்பெருமான்  அவ்விடத்திலேயே தங்கிவிட்டதாகவும் அவரைக்கானத தெய்வயானை தேடிவந்தபோது  சம்பவம் அறிந்து கோவம் கொண்டு முருகனின் கோயிலுக்கு புறமுதுகுகாட்டி இருந்ததாகவும்  கதிர்காம சரித்திரம் கூறுகின்றது.தற்போது தெய்வாளை அம்மன் ஆலயம் அப்படித்தான் வமைந்துள்ளது. இவ்வாலயத்துக்கு முன்னால் குருபீடமும் எட்டு சமாதிகளும் இருக்கின்றது. 
போகமாமகரி
இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன் எல்லோரலும் முத்துலிங்க சுவாமி என அழைக்கப்பட்ட கல்லாணகிரி சுவாமிகள் வடஇந்தியாவில்  இருந்து கதிகாமம் நோக்கி வந்தார். இவர் முருகப்பெருமானே துணை என இங்கு வந்த தவசிரே~;டர். இவர் இங்கு வந்து முருகனின் யந்திரம் வரைந்து அதில் முருகப்பெருமானை அடக்கி தவத்தில் ஈடுபட்டார். ஆவர் உருவாக்கிய யந்திரமே இன்றும் அங்கு இருப்பதுடன் பெரகரவில் யானை மீது வைத்து வலம் வருகின்றனர். கல்லாணகிரி சுவாமிகளின் சமாதி சிவன்கோயிலின்னுள் உள்ளது.  
                                 
 சுவாமி கிரியானகிரி வாபா   ;
  தியானம் செய்த இடம்
அவரை தொடர்ந்து அவரின் சீடா சுவாமி ஜெயசங்கர்  அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஜெயபால்ஜீ அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஜெயமால்கிரிஜீ அவர்களுடன் வடஇந்திய இராயகுமாரி பால சுந்தரி அம்மையாரும். அவரை தொடர்ந்து அவரின் சீடர்  சுவாமி ஜெயபால்கரிஜீ அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி மங்களபுரி  அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி ஸ்ரீலஸ்ரீ சித்த சுவாமி கேசவபுரிஜீ(பால்குடிபாவா)  அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி சந்தோசபுரி  அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி இரத்தினபுரி அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி சுகதேவ்புரி அவர்களும் அவரை தொடர்ந்து அவரின் சீடர் சுவாமி கிரியானகிரி அவர்களும் நியமிக்கப்பட்டார். இவற்றை நோக்கின்ற போது தவவலிமை பெற்ற மகான்களே தவசிலர்களாக இங்கிருந்து தவம் செய்ததின் விழைவே கதிர்காமத்தின் இனமதபேதமின்றி எல்லோரையும் ஈத்தாழ்கொண்டமைக்கு காரணம். இவர்கள் தவம் புரிந்த இடமும் அவர்கள் அக்கினியை வளர்த்த கோமகுண்டமும்  அவர்களின் சமாதிக் கோயிலும் தற்போதும் உண்டு. கோமம் சுவாமி சந்தோ~புரி அவர்களின் காலம
இந்திய அரசின் சின்னம் குறிக்கும் நீர் தடாகம்
 வரை நடை பெற்றதாக அறிகின்றோம். இவை அனைத்தும் தெய்வானை அம்மன் கோயிலுக்கு முன் உள்ள குருபீடத்திலேயே அமைந்துள்ளது. தற்போது அதன் பரிபாலனம் இந்தியஇந்துபரிசித் இடமே உள்ளது. ஆங்கு சித்தர்கள் சூட்சும வடிவில் இன்றும் உலாவுகின்றதுடன் தேவைப்படும் போது காட்சியும் கொடுக்கின்றனர். ஆதற்கு நான்அறிந் விடயங்கள் சிலவுண்டு. 


வில்லும்அம்பும் 
இலங்கையில் மட்டக்களப்பைச்சேந்த எனது உறவினரான திரு.K.S.S.நடராஜ அவர்கள இவர் முன்னாள் ராஜஸ் ஸ்ருடியோ உரிமையாளர் தற்போதைய ராஜபுத்தகசாலை உரிமையாளா திரு N.ஞானச்சந்திரனின் தந்தை கந்தனின் திருவிழா ஆரம்பித்தால் யாத்திரை செல்வது வழமை ஒருமுறை கந்தனை உருகி வழிபட்டுக்கொன்டு கதிர்காமக் கந்தனின் பிரதான ஆலயத்துக்கு முன் நின்று கொண்டிருந்த போது கூப்பிய கரத்தினுள் அம்பும் வில்லும் இருந்தது. இது இப்போதும் இருக்கின்றது.
எனது தாயார் கூறிய கதை யொன்றுண்டு. சிறு வயதில் தனது அம்மா தனது குடும்பத்தாரோடு கதிகாமம் சென்ற போது சனநெருக்கடியில் தமையனை கானவில்லை. இதனால் தயக்கமுற்ற குடும்பத்தார் தேடியபோது கந்தனை வேண்ட மட்டக்களப்பில் அக்காலத்தில் உலாவிய துருக்கிசாமி போல கோலம் கொண்டு எம்பெருமான் எனது மாமாவை கையில்பிடித்து இழுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து விட்டு அடுத்தகணமே மறைந்தார்.


மாணிக்க கங்கை


                       மட்டகளப்பிலுள்ள திமிலதீவு மகாவினு கோவிலின் குருக்கள் பெருமதிப்புக்குரிய திரு.பொ.வடிவேல் ஜயா என்னிடம் கதிர்காமக்கந்தனின் திருவிளையாடலை எனக்கு கூறியிருந்தார். ஆவர் கதிர்காமகந்தனிடம் பேரன்பு கொன்டவர். அவர் தனக்கு நேர்த வாழ்க்கைக் கஸ்டங்களை போக்க கந்தனிடம் வேண்டி  கதிகாமம் சென்ற போது மாணிக்க கங்கைக் கரையில் இரவு வேளையில் இருந்போது கங்கைக்குள் ஒளிமிக்ககல் ஒன்றைக்கண்டார். அக்கல்லை எடுத்து தனது மடிக்குள் ஒழித்துவைக்கையில் அதன் பிரகாசத்தை மறைக்முடியவில்லை.இது இப்படி இருக்க மழையும் வந்துவிட்டது.மழைக்கு ஒதுங்கும் போது வயதான சன்னியாசியும் பக்கத்தில் ஒதுங்க இவருக்கு பயம்பிடித்து விட்டது .கல்லை பறிக்க தான் இவர் வந்துள்ளார்;. என அவருடன் வாதிட சன்டை உரக்க சிறிதுநேரத்தில் கல்லையும் கணவில்லை சன்டையிட்டவரையும் கானவில்லை. என்று கூறி மாயையில்மயங்கி மாயனை இழந்தேன்.என்றார். புpன்னர் கவலையடைந்த நிலையில் வீடு திரும்பினார்.   வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மயில் ஒன்று வந்து தனது வேட்டியை இழுத்து எழுப்ப  அங்கு சந்தைப்படுத்தல் தினைக்களத்தின் காரியாலய உதவியாளர் நிற்பதைக்கண்டார். ஆவர் தன்னை உடனடியாக தினைக்களத்தலைவர் வரும்படி கூறினாராம். ஆங்கு சென்ற போது வேலையை பொறுப்பேற்க்கும்படி கேட்டாராம். இதன்மூலம் கிடைத்த வேலையால் தான் தற்போது ஓய்வுதியம் பெறுகின்றேன் என்றார். எனவே கதிர்காமம் முருகனான சித்தர்கள் நடமாடும்பூமி.



கதிர் காமத்தில் வள்ளியம்மன் கோயின் முன்னுள்ள குருபீடத்தில் உள்ள சமாதிகள் பற்றிய விபரங்கள்




,yf;fk;
rkhjpapy; cs;s Rthkpapfspd; ngau;fs;
rkhjpaile;j Mz;L



1.
Swamy  Keshopuri Palkudi Baba
1898
2.
Swamy  Mangalpuri
1873
3.
Sadhwi  Balaswndari
1876
4.
Swamy  Sukhadevapur
1922
5.
Swamy  Sukirthapuri
1933
6.
Swamy Ganashpuri
1939
7.
Swamy Raffanpuri
-
8.
Swamy nara Yanapuri

-
























இக்கட்டுரை தொடரும்....

Sunday, December 5, 2010

உலகத்தை ஆளும் ஆத்மசக்தி

                                           உலகத்தை ஆளும் ஆத்மசக்தி-எம்முள் உறங்கிக்கிடக்கும்                      குண்டலினி சத்தி.
                                          புத்தி விளிப்பே சித்தத் தெளிவே 
மனஒருமைப்பாட்டின் விளிப்பே தியானத்தின் அடிப்படை.
                                         தியானமே அதன் விளிப்பு.
 அதுவே ஆறாதாரத்தின் உச்ச நிலை.   மூலாதாமே. அதன் முளை               சகஸ்ரதாரமே. அதன் விருட்ச்சம். சுளு முனையே அதன் வளி.ஆறாதாரம் அதன்
 சத்தி விளிப்பிடம். 
                                         சகஸ்ரதாரமே அமுரசுரபி. 
       அதுவே நாம்மருந்தும் பிறவாமையின்அரு மருந்து.
                 அதை அறியார் படைப்பின் தத்துவம் உணரார்.-அதை அறிய குருவருள்     தேவை. குருவருள் திருவருள் -அதுவே அவனருள்.