Monday, March 26, 2018

மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி

“மந்தாக்கின சோபை வாந்தி யழல் போக்கிடும் மிளகுத்தக்காளி அல்லது மனத்தக்காளி”
மனத்தக்காளிக் கீரையின் காய்கள் மிளகை ஒத்தவையாகக் கானப்படுவதால் அதனை மிளகுத்தக்காளி என்றும் அழைப்பர். இத்தக்காளிச் செடி மனமுள்தால் மனத்தக்காளி என்றும் திருமனத்துக்கு தக்க உடல்லை யாளியை யொத்ததாக்கும் தன்மை தரக்கூடிய வல்லமை யுள்ளதால் இக் கீரையை மனக்க தக்க யாளி மனத்தக்காளி யாக்கிவிட்டது.
இக்கீரையின் மருத்துவ பாகம் பற்றி தேரையர் பதாத்தகுண சிந்தாகணியில்

“மந்தாக்கின சோவை வாந்தி யாழல.; வாயு வெப்பம்
விந்து நோய் பாண்டொதிர் விக்கல் - முந்து
வளருமத்தோச நோய் மாறும் கைப்பான
மினகுத் தக்காளியிலை மெய்” என்று ஒருபாடலிலும் அடுத்து

காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் - தீக்குள்
உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும்
மனத்தக் காளிக்குள்ள வாறு”

வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு இது அருமந்தாகும் என்பதை தேரையர் எவ்வளவு அழகாக வெண்பாவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக வெப்பகாலத்திலே ஏற்படக்கூடிய வாய்ப்புண்ணுக்கு மனத்தக்காளி இலையை மென்று விழுங்கி விட்டால் குணமாகிவிடும்.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூன்னர் வாழ்த சித்தர்கள் இன்றைய உலகுக்கு பொருத்தமானதை எப்படி உணர்ந்திருந்தனர் என்பதை அறிவியல் ஆராய்கின்றது என்னும் போது நமக்கெல்லாம் ஒருபுறம் பெருமையும் இன்னுமோர் புறம் வியர்ப்பாகவும் இருக்கின்றது. தமிழ் மருத்துவ உலகம்தில் சித்தர்கள்  விஞ்ஞானத்தின் மெய்ஞானியாக இருந்திருக்கின்றனர். என்பது இங்கு கண்கூடு.

1.இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) மஸ்பரலஸ் என்ற ஆய்வியலாளர் மனதக்காளியின் இலைச்சாற்றை ஆய்வு செய்து குடல்புண்ணை ஆற்றும் ஆற்றல் உண்டு என்பதை வெள்ளை எலிகளுக்கு கொடுத்து அவைகளுக்கு ஏற்பட்டிருந்த குடல் புண் ஆறக்கண்டு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அத்துடன் வாயுடன் கூடிய அல்சறை குணமாக்கும் ஆற்றலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு உண்டு என்று நிருபித்துள்ளார்.

2. யதீஸ் என்ற இன்னுமோர் ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்)செய்த ஆய்விலும் மனதக்காளியின் இலைச்சாற்றுக்கு வயிற்றில் எற்படும் புண்களை முற்றாக மாற்றும் வல்லமை இருப்பதாக மீண்டும் உறுதி செய்துள்ளார்.

3. இரண்டாயிரத்து ஆறாம் வருடம்( 2006இல்) ராஐ; என்ற இன்னுமோர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்றில் உள்ள “கப்பட்டோ புரட்டக்டியுல்” என்ற வேதியல் மூலக்கூறு கல்லீரலைப் பாதுகாக்கின்றது. என்ற கருத்தை அவரின் ஆய்வின் மூலம் முன்வைத்து நீருப்பித்துள்ளார்.

4.இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) பகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான்னலி அஸ்ரப் அலி என்னும் ஓர் ஆய்வாளர் மனதக்காளியின் இலைச்சாற்று மஞ்சல் காச்சலில் ஒருவகையான “கப்பட்டைடிஸ் -சீ” என்ற காச்சலை உருவாக்கும் வைரஸ்சை அழிக்கும் வல்லமை உள்ளதுடன் கல்லிரலின் பலவீனத்தால் உண்டாக்கும் நோய்களை குணப்படுத்த வல்லதுடன் கல்லீரலை பலப்படுத்தும் வல்லமையும் இருக்கின்றது என மீண்டும் அக் கருத்துக்கு வலுவுட்டியுள்ளார்;.

5.செல்வப்பா முத்து என்ற இன்னுமொரு ஆய்வாளர் இரண்டாயிரத்து பதினொன்றில் (2011 இல்) செய்த ஆய்வில் மனதக்காளிக் கீரை மிகவும் சக்தி வாய்தது என்றும் அது ஆண்களின் ஆண்மையை வீரியமாக்குவதுடன் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் இதன் அளவையும் விந்து சுரப்பையும் அதிகரிக்கின்றது என்று தனது முடிவை வெளியிட்டுள்ளார். இதனை சித்தர் “விந்து நோய் பாண்டொதிர்”என முன்னரே அறிந்து அறிவியல் உலகுக்கு தெரிவித்துன்னர் என்பதை அறியும்போது தமிழ் மருத்துவத்தின் அறிவியல் தொன்மையை அறிய முடிகின்றது.
மனத்தக்காளி காயும் பழமும்

5. திருமதி. வடிவேல் அருள்மொழி என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தில் (2010 இல்)தாம் செய்த ஆய்வில் மனத்தக்காளிக் சற்றுக்கு இரண்டு பண்புகள் உண்டு என்றும் இவை
1;.நோய் எதிப்பு சக்தி வீழ்சிக்கு காரணமாக இருக்கின்ற பொருட்கள் எல்லாவற்றையும் அழிக்கின்ற ஆற்றல் உண்டு என்றும். உடலை முதுமையிலிருந்து இளமையாக்கி காக்கின்ற ஆற்றல் உண்டு என்றும்.
2.உடலில் கொளுப்பு சத்து அதிகரித்து கொலஸ்றோல் அதிகர்த்து அதன் விளைவால் வரக்கூடிய சைக்கிளிசைட், லோடெண்சிட்டி கொலஸ்றோல், லிப்பீட் கொலஸ்றோல் போன்றவை உடலில் கூடுவதை தடுக்கும் ஆற்றல் மனத்தக்காளிக்குண்டு. என்று தனது ஆய்வில் வெளியிட்டுள்ளார்.

6. சீனதேசத்தைக் சேர்ந்த கெஸ்சி முவான் என்ற ஆய்வாளர் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) வெளியிட்ட கட்டுரையில் மனத்தக்காளிக் கீரைக்கு இன்னும் இரண்டு பண்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றார்.
1.அட்டோ பசிஸ்
2.அப்போட்டசிஸ் என்ற வேதியல் மூலக்கூறுகள் இருப்பதாகவும் அது உடலில் அழிந்த கலங்களை மீண்டும் புதிப்பிக்கின்றதுடன் கலங்கள் தேவைக் கேற்ப உற்பத்தி செய்வதுடன் உற்பத்தியின் போது ஏற்படும் தவறான நகல்களை அழித்து சரியான நகல்களை நிலை நிறுத்தும் ஆற்றல் உள்ளது என்பதை நிருபித்துள்ளார். இதை சித்தர் பாடலில் “முந்து வளருமத்தோச நோய் மாறும் கைப்பான மினகுத் தக்காளியிலை மெய்” என அப்போதே அழகாகக் கூறியிக்கின்றார்.
7.லைவோசன் என்பவரும் ரீக் என்ற இருவரும் இரண்டாயிரத்து பத்தினென்றில்(2011) இல் ஆய்வு செய்து மனத்தக்காளிக் கீரைகயில் “கிக்கோரோட்டிக்” என்ற வேதியல் மூலக்கூறு இருக்கின்றது என்றும் இது புற்றுநோயை தடுக்க வல்லது என்று குறிப்பிட்டுள்ளனர். இதில் கிக்கோ என்பது மாச்சத்து புரோட்டீன் என்பது புரதம் இவை இரண்டும் சேர்ந்த ஓர் புரதப்பொருள் இது புற்றுநோயை தடுக்க வல்லது. இதன் முலம் மீண்டும் ஆதாரப்படுத்தியுள்ளது.
மனத்தக்காளி
சீன நாட்டில் இருதய நோய்க்கு பல முகிலிகைகளுடன் சேர்த்துப் மனத்தக்காளியைப் பயன்படுத்து கின்றனர்.அது போன்று கிரேக்க மருத்துவத்தில் வீக்கத்துக்கு பற்றுப்போட பயன்படுத்துகின்றனர். வீக்கம் வருவதையும் காச்சல் வருவதையும் இக்கீரை தர்க்கும் ஆற்றல் உண்டு. பேஸ்சிய நாட்டிலே நீக்கோவைக்கு அருமந்தாக பயன் படுத்து கின்றனர். நீக்கோவை என்பது கால், முகம், கண்ணீத்தாரைப்பை( கண்களின் கீழ்ப்பகுதி),வயிறு போன்ற இடங்களில் நீர் சுரந்திருத்தல் உடலில் தேவையற்ற வகையில் நீர் தோல்லின் அடிப்பகுதியில் நீர் தேங்கியிருத்தல்.
பெண்களின் கற்பப்பையில் ஏற்படும் புற்று நோக்கு அருமருந்தாக பல ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தக்கீரை உடலிலே நோய் எதிர்ப்புக் சக்தியை ஏற்படுத்தி புற்றுநோயை வராது தடுத்து புற்றுநோய் திசுக்களை அழித்து உடலைப் பாதுகாக்கின்றது. முத்தோச நோய் என்னும் புற்றுநோய் இது ஒன்றில் ஆரம்பித்து உடல் முழுவதும் பரவி உடலை அழித்து விடும் ஆனால் அஸ்துமா என்னும் சுவாசகாசம். இருதையநோய், நுரையிரல் நோய் போன்றவை அந்த உறுப்பை மட்டும் பாதிப்பாவை இதனாலே சித்தர்கள் இதனை முத்தோச நோய் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

“காய்க்குக் கபம் தீரும் காரிகையே யவ் வினைக்கு
வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண்” காய் குளிர்சியால் வரும் நோயை குணமாக்கும். உடலில் வெப்பத்தை ஏற்படுத்தி குணமாக்கும் காய்க்குக் கபம் தீரும் என்றும் கீரை வெப்பத்தினால் வரும் நோயை குணமாக்கும். உடலில் குளிர்சிசியை ஏற்படுத்தி குணமாக்கும் வினைக்கு வாய்க்கிரந்தி வேக்காடு மாறும்காண் என்று வெண்பாவில் கூறியுள்ளார். நோய்யுற்று உடல் தளர்தவர்களின் தளர்வு நீங்கி வலிமை பெற மனத்தக்காளி வற்றல் புளிக் குழம்பு சிறந்த பலனைத்தரும், “தீக்குள் உணக்கிடு வற்றலுறு பிணியாக்கு கூறும் மனத்தக் காளிக்குள்ள வாறு” என கூறிப்பிடுகின்றார். தளர்வு நீங்கி வலிமை பெறுகின்ற போது உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெறும் அப்போது மீள்திறனை ஏற்படுத்தும் ஆற்றல்லுடன் நோய் எதிர்ப்புச்சக்தியை ஏற்படுத்தி உடலை வலுவுட்டும் சக்தி மனத்தக்காளிக் குண்டு.

பயன்படுத்தும் முறைகள்:

1;.மனத்தக்காளி சூப்

தயாரிக்கும் முறை: தக்காளி இலைகளை தெரிந் தெடுத்து நன்கு நாலு அல்லது ஐந்து முறை சுத்தமான நீரினால் திரும்ப திரும்ப கழுவிச் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொண்டு சுத்தமான இரும்பு பாத்திரம் அல்லது மண்கட்டியில் தேங்காங்காய் எண்ணை அல்லது நெய்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் நறுக்கிய சின்னவெங்காயத்துடன் மிளகுத்தூள், சீரகத்தூள் போட்டு தாளித்துவிட்டு இதனுள் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையைப் போட்டு அதனுடன் சேர்த்து தக்காளிப் பழத்துண்டும் போட்டு தேவையான அளவு நீர்ரும் உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் இறக்கி சூப்பாக பருக முடியும். பருகினால் வாய்வேக்காடு வராது வாய்ப்புண் வராது. வந்தாலும் குணமாகி விடும்.

2.பச்சையாக மென்று சாப்பிடலாம்.

3. கீரையை பருப்பு போட்டு கடைந்து காப்பிடலாம். பாத்திரத்தில் கீரையைப் போட்டு சின்னவெங்காயத்தை நறுகிப்போட்டு அதனுடன் அரைத்பங்கு தக்களிப் பழத்தையும் நறுகிப் போட்டு சிறிதளவு மிளகு சீரகம் பச்சைமிளகாய் இவை போட்டு திடமாக தன்னீவிட்டு காச்ச வேண்டும். கீரையின் பசுமை நிறம் மாறாது இருக்க சக்கரையை சிறிதளவு தூவி விடவேண்டும் பசுமை நிறம் மாறாது இருக்கும் .இதை எடுத்து வைத்து விட்டு இன்னுமோர் பாத்திரத்தில் எண்ணை அல்லது நெய்யில்யை விட்டு அடுப்பிலேற்றி கடுகு போட்டு தாளித்து விட்டு அதனுடன் பருப்பு அல்லது துவரம் பருப்பு அவித்த நீரை விட்டு அதில் அவித்துவைத்த இலையை போட்டு அவித்து வதக்கி கடைந்து தேவையான உப்புச்சேர்த்து எடுத்து சாதத்துடன் உண்ணமுடியும். பொதுவாக கீரைகளுக்கு புளிசேர்ப்பதை தவிப்பதால் சத்தி இழப்பின்றி முழுமையான பலனைப் பொறமுடியும். நெய் சேர்ப்பது கீரைக்கறிக்கு நல்ல சுவையைத்தருவதுடன் ஊட்டமாகவும் இருக்கும்.

4. காயை அல்லது வற்றலை புளிக்குழம்பாக செய்து வெந்தையக் சேர்த்து தாயாரித்து உணவுடன் தேர்த்து உண்ண முடியும். கபம் உள்ளவர்கள் வெந்தயத்தை தவித்துக் கொள்ளலாம். வேந்தையம் குளிர்த் தன்மையானது.

அன்னத்தின் மருத்துவக் குணங்கள்.

அன்னத்தின் மருத்துவக் குணங்கள்.
அன்னம் என்பது கிழத்தேய மக்ககளின் பிரதான உணவாகும். இவை பலவகையா நெல்லினம் இருந்தாலும். பொதுவாக பச்சையரிசி புழுங்கலரிசி என இருவகையில் அவை தயார்செய்யப்படுகின்றன. நெல்லை பச்சையாக குற்றி எடுப்பது பச்சையரிசி என்றும் நேல்லை வேகவைத்து காயவைத்து குற்றி எடுப்பது புழுங்கல் அரிசி என்றும் வேறுபடுத்துகின்றனர். அவற்றை உண்பதற்கு பயன்டுத்தும் முறைகளில் உள்ள தன்மையின் பிரகாரம் அதன் மருத்துவத்தன்மை தொடர்பாக சித்தர்கள் குறியுள்ள விடையங்களை நோக்குகையில்.
அதிசுடுகை அன்னத்தின் குணம்
'அதிசுடுகை யன்னம் அரத்தபித்தம் தாகம்
பிதிரேறு சித்தப் பிரேமை – மதரோகம்
என்றுரைக்கு நோய்கட் கிடங்கொடுக்குந் தப்பாது
குன்றுரைக்கும் பூண்முலையே கூறு'   என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. அதிசுடுகை யன்னம் அரத்தபித்தம் தாகம்:  அதிசூடான அன்னத்தை புசிப்பதால் இரத்தபித்தம், தாகம்
2. பிதிரேறு சித்தப் பிரேமை – மதரோகம்: சித்தப்பிரேமை, மதரோகமும்
3. என்றுரைக்கு நோய்கட் கிடங்கொடுக்குந் தப்பாது: போன்ற நோய்ககளுக்கு இடங்கொடுப்பது தப்பாது
4. குன்றுரைக்கும் பூண்முலையே கூறு: பூண்போன்ற முலையை உடைய பென்னே மற்றவர்களுக்கு கூறு என்றனர் சித்தர்கள்.
அற்பச்சுடுகையன்னத்தின் குணம்
'அற்பச்சூட் டன்னம்வா தாதிகளாற் பீநசத்தால்
உற்பவித்த தோயை யொழித்துடற்கு – நற்பலத்தைச்
செய்யும் அருசிதனைத் தீக்குஞ்சர் வொத்தமமாம்
பெய்யும்வளைக் கைமாதே பேசு' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. 'அற்பச்சூட் டன்னம்வா தாதிகளாற் பீநசத்தால்: அற்றமாக சுடும் அன்னத்தை புசிப்பதால் வாதாதிகளினாலும் பீநசத்தாலும்
2. உற்பவித்த தோயை யொழித்துடற்கு – நற்பலத்தைச்: உண்டான நோய்களை இல்லாதொழிக்கச் நற்பலனை
3. செய்யும் அருசிதனைத் தீக்குஞ்சர் வொத்தமமாம்: செய்யும் அத்துடன் அருசியும் போக்கி உடலுக்கு பலம் தரும்
4. பெய்யும்வளைக் கைமாதே பேசு':  பெய்யும் வளைந்த கையையுடைய மாதே இவற்றையெல்லாம் கூறு. என்னனர் சித்தர்கள்.
புழங்கலரிசியன்னத்தின் குணம்
'தென்புவியி னாளுஞ் செழித்துவள ருஞ்சாலி
வன்பு புழுங்கல் வடிசாதம் முன்புனவே

குண்டலி சக்தி ஆன்மாவில் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் ஒர் மனோ சக்தி"
குண்டலி சக்தி ஆன்மாவில் சுருண்டு முடங்கி உறங்கிக் கிடக்கும் ஒர் மனோ சக்தியாகும். சக்தி எல்லா தந்திரங்களிலும் நடு நாயகமாக விளங்குகின்றது.உட் பொருளின் சக்தியே பிரபஞ்ச படைப்பு காத்தல் அழித்தலலுக்குகாரணமாகின்றதுசக்தியினை உடையபொருட்கள் எல்லாம் அகபுற சக்திகள் ஒன்றே பிராணமும் பிரபஞ்சமனமும் உலகின் அடிப்படை தத்துவமாகும் தனிநபருக்கு அந்தபிரானம் அல்லது மனம் அடிப்படையானபோது அறியாமையில் சுருண்டு கிடப்பதனால் குண்டலி சத்தி எனப்படுகின்றது. இதனை விளிப்படைய செய்தல் வேண்டும். மனிதஉடலை மன சட உடல் என இரண்டாக பிரிக்கப்படுகின்றது. இதில்சடஉடலில் மேருதன்டத்தின் அடி முனையில் குண்டலி இருப்பதாக கூறுகின்றது. அறிவுமையங்கள் ஆறு இது பற்றி இனிபார் போம்.
ஒரு மனிதனின் உடலில் ஆறு இடங்களில் இட கலை இடம் வலமாமாகவும் பின் கலை வலம் இடமாகவும் ஒன்ரை ஒன்று பின்னியதாக செல்லுகினின்றது. இவ் விடங்கனை உடலுகு உரிய ஆதாரங்களாகக்கருதப்படுகின்றப்படுகின்றது. இவ் ஆறு இடங்களிலும் நரம்பு மண்டலங்கள் கானப்படுவதுடன் ஆறு சுரப்பிகளும் காணப்படு கி ன்றன இவைகளே உடலை இயக்கும் சத்தி வாய்ந்த மண்டலங்களாகும் இதனை ‘ஒளவையார்
'விணயகர் அகவலில்’ ஜம்புலன் றன்னை யடக்குமு பாயமும் இன்புறு கருணையு மெனக்கருளி தலமொருமூன்றினந் தந்தெனக்கருளி மலமொரு மூன்றின்மயக்கமு மறுத்தெ ஒன்பது வாயி லொருமந் திரத்தால் ஜன்புறுகதவை யடைப்துங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையை பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கயிலை னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலங் காட்டி முன்றுமண் டலத்தின் முட்டிய தூணில் நாற்ழெற வாயி னால் லுணர்த்திக் குண்டலி தன்னை கூறு மியல்பை விண்டெழு மந்திரம் விழைவுறச் செப்பி மூலா தார மூண்டெழு கனலைக் காலா லெழுப்பிக் என மிகதெளிவாக கூறியுள்ளார்.ஆறாதாரங்களையும் கீழ் யிருந்து மேலாக பார்கின்றபோது முதலில்மூலாதாரம் இது புத்தி சித்தி சத்திகளின் நாயகர் விநாயகரின் இருப்பிடமாக கருதப்படுகின்றது
உடலின் முதன்மையான ஆதாரமாக கருதப்படு கின்றது. ‘ ஓம்’ என்னும் மந்திரம் பிரயேகிக்க படுகின்றது
அடுத்து ஸ்வர்திஸ்ஷ்டானம் இது ஆறிதல்கள் கொண்ட தாமரை உடையதாகவும் சதுர வடிவமும் ‘ லம்’ எனும் அச்சரமும் பஞ்ச பூதங்களில் நிலமாகவும் ‘பிரமாவின்’ இருப்பிடம் ஆகவும் கருதப்படுகின்றது. இங்கு படைப்பு இடம் பெறுகின்றது. ‘ ந’ என்னும் மந்திரம் பிரயேகிக்க படுகின்றது .இங்கு விந்துபை அல்லது கருப்பை உள்ளது.
அடுத்து மணிப்பூரகம் இது பத்து இதழ்கள் கொண்ட தாமரை உடையதாகவும். ஆரை வட்ட பிறை வடிவமும் ‘ வம்’ எனும்அச்சரமும் பஞ்பூதங்களில் நீராகவும் காத்தல் கடவுள் ‘விஸ்ணுவின்’ இருப்பிடம் ஆ கவும் கருதப்படுகின்றது. ‘ம’ என்னும் மந்திரம் பிரயேகிக்கப் படுகின்றது. இங்கு ‘கிட்னி’ சுரபி இருக்கின்றது. அடுத்து அனாகதம் இது பண்ணிண்டு இதழ்கள் கொண்ட தாமரை உடைய தாகவும் முக்கோண வடிவமும் ‘ ரம்’ எனும் அச்சரமும் பஞ்ச பூதங்களில் தீயாகவும் அழித்தல் கடவுள் ‘உருத்திரனின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ சி’ என்னும் மந்திரம் பிரயேகிக்க ப் படுகின்றது இங்கு ‘ எதைன்’ சுரபி ஜகபச்சுரப்பிஸ இருக்கின்றது
அடுத்து விசுத்தி இது பதிணறு இதழ்கள் கொண்ட தாமரை உடையதாகவும். அறு கோண வடிவமும் ‘ யம்’ எனும் அச்சரமும் பஞ்ச பூதங்களில் காற்றாகவும் மறைத்தல் கடவுள் ‘பரமேஸ்வரனின்;’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘வ’ என்னும் மந்திரம் பிரயேகிக்கப் படுகின்றது இங்கு ‘தைறோய்ற்’ சுரப்பி இருக்கின்றது. அடுத்து ஆஞ்ஞை இது இரண்டு இதழ்கள் கொண்ட தாமரை உடையதாகவும். வட்ட வடிவமும் ‘ ஹம்’ எனும் அச்சரமும் பஞ்ச பூதங்களில் ஆகாயமாவும் அருளல்; கடவுள் ‘சதாசிவனின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. ‘ய’ என்னும் மந்திரம் பிரயேகிக்கப் படுகின்றது இங்கு ‘பிற்றுறி;’ சுரப்பியும் பின் பகுதியில் ‘பினியன்’ சுரப்பியும் இருக்கின்றது.
அடுத்து சகஸ்ராகரம் இது ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை உடையதாகவும் ‘.சுத்தசிவத்தின்’ இருப்பிடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு மூளைத்தண்டு உள்ளது. அதன். வட அச்சின் உட் புறம் சுழு முனை நாடி அமைந்துள்ளது. இதன்அச்சுக் குள் அமைந்த உள் நாடிகளில் அதிபுறம்பாய் அமைந்தது இதுவே இதில் தமஸ் குணம் மேலோங்கி நிற்கும் இதற்கு சிவப்பு நிறம் இதன் உள்ளே பிரகாசமானது ராஜஸ் குணம் மேலோங்கிய வஜ்ரிணி நாடி அமைந்துள்ளது
இதன்உள்ளே சாத்துவிகக்குணம் இயற்கையாக அமைந்துள்ளது வெளியினதும் அமுதம் சுரக்கின்றதுமான சித்திரிணி நாடி உள்ளது. இதன் உள்ளே இருப்பது பிரம்மநாடி இது சித்திரிணி நாடியின் பிதான துவாரம் இது கீழ்க்கோடி முனையில் இருந்து அதி உயர் சிவன்வரை சகஸ்ராகரம்வரை வியாபித்துள்ளது. இதனை ‘குல மாக்கம்’ அல்லது ‘லய யோகம் என குறிப்பிடுகின்றனர். குண்டலினி சத்தி தொடர்பாக உபநிஷத்தில் யோக குண்டலி உபநிஷ
த்தில் குண்டலி சத்தி ரூபம் புத்தி மான் அச் சக்தியை எழுப்பிச் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும. அது உறையும் இடமான மூலாதாரத்ல் இ லிருந்து ஆஞ்ஞை வரை செலுத்துவது சக்தி சாலனம் எனப்படுகின்றது.
குண்டலினி சத்தி தாமரை நூல் போன்று மங்கள வடிவினள். தாமரைக் ;கிழங்கு போன்ற மூலாதாரத்தைப் பார்த்துக்கெண்டு வாய்னால் வாலைப்பிடித்துக் கோண்டு பாம்புபோல் சுறுண்டு இருந்தவள் எழுந்தபின் பிரம்மரந்திரம் எனும்உச்சி வரை செல்வாள். ஸாதகன் சுகமாக பத்மாசனத்தில் இருந்து கொண்டு குண்டியைச் சுருக்கி வாயுவை மேல் நோக்கிச் செலுத்தி கும்பகத்தில் மனதை நிறுத்தி வாயுவால் ஸ்வாதிஸ்டானத்தில் உள்ள அக்னியை ஜ்வலிக்கச்செய்து வாயுவாலும் அக்னியாலும் எழுச்சியுற்ற குண்டலி சத்தி பிரம்மக் கிரந்தியைப் பிளந்து பிறகு விஸ்ணு கிரந்தியையும் ருத்ர க்ரந்தியையும் பிளந்து ஆறு கமலங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் சிவனுடன் உறைவாள் அந்தநிலைதான் உத்தமமானதும் விருத்தி அயடங்கியது மான நிலை. எனக் குறிப்பிடுகின்றது.
காமத்தால் ஒருவன் விஷயங்களையும் அதனால் மேலும் காமம் வளர்ந்து மயங்குகிறான் வ்விரண்டில்லிருந்து விலகி மாசற்ற பரம் பொருளை நாடுகின்ற போது ஆத்ம நன்மைக்காக மற்ற அனைத்தையும் நீக்கவேண்டும். வாக்கானது எவ்வாறு பரஸ்தானத்தில் முலைத்து பச்யந்தியில் இரண்டிலை விட்டு மத்திமைய்ல் தளிர்து வைகரில் மலர்கின்றது. இது விலோமத்தில் அஸ்மன மாகுகின்றது. அந்த வாக்கை எழுப்புபவன் உத்தமதேவன் அவனெ நான் இவன் எதிலும் பற்றற்றவன்.
ஜீவனுக்கு மூன்று நிலை உண்டு விச்வன், தைஜஸன் ,பிராக்ஞன் இதுபோன்று பரமாத்மாவுக்கும் விராட்,ஹிண்யகர்பன், இசுவரன் என்ற மூன்று நிலைகள் உண்டு பிரம்மாண்டமும் பிண்டாண்டமுமான பூமி முதலிய உலகம் படிப்படியாக அவற்றின் உபாதியின் லயத்தால் பரமாத்மாவில் லயமடைகின்றது. ஞானாக்னியால் எரிந்து போன அண்டம் மூல காரணத்துடன் பரமாத்மாவில் லயித்து பரமாத்மவாகி விடுகின்றது. இந்தநிலையில் ஒளியோ இருளோ இல்லை
ஓம் விராட் விஸ்வப்ரம்மனே நம:
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'ஸ்ரீ போகாமாமஹரிஷி'
கி.பி 8-ம் நூற்றாண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் விஸ்வப்ரம்மண குலத்தில் சுபணஸரிஷி கோத்திரத்தில் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் போகர் பிறந்தார். பன்மொழியும் கற்று குலத்தொழிலான பொற்பணியைச் செய்து மருத்துவம், சோதிடம், யோகம், வானசாஸ்திரம், தொழில் வரலாறு, மாயாயாலம், ஞானம் போன்றவற்றில் சிறந்து விளங்கிய பலநூட்கள் எழுதியுள்ளார் அவற்றில் போகர் ஏழாயிரம், போகர் பன்னிரண்டாயிரம் என்பன சிறப்புப் பெற்றது. மேலும் கவுரி பாஷாணம், வீரம், பூரம், லிங்கம், மனேசிலை, பாதரசம், அரிதார, துத்தம், காபி என்னும் நவ பாசாணத்தில் பழனி முருகன் சிலை செய்து செய்துள்ளனர். அம் முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிருதம் காயகற்பமாக இன்றும் கருதப்படுகின்றது. மேலும் அவர் சீனநாட்டுக்கு சென்று பல அற்புதங்கள் செய்தார். இவர் இன்றும் சீனமக்களின் மனதைக்கவர்;தவர். அவரின் வழிமுறைகளை நன்கு பயன்படுத்தியும் அவருக்காக போகர் தினம் என விடுமுறையும் அனுசரிக்கின்றனர். அவர் சாதிமதபேதம் இன்றி அனைவருக்கும் வழிகாட்டியவர். அவரின் சீடராக வேட குலத்தைச்சேர்ந்த ஸ்ரீ புலிப்பாணி முக்கிய சீரடாவார். போகர் சமாதி பழனியில் உண்டு அவர் சித்தர்களில் பிரதானமானவராவார்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'பொன்மணித் தட்டார்"
கி.பி 10-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் கம்மாளர் தெருவில் (தற்போதைய தெற்குவீதியில்) விஸ்வப்ரம்மண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்த பொன்மணித்தட்டார் என்ற வயோதிப சிவஜோகி வாழ்ந்து வந்தார். அவர் சிறிது மாற்றுக் குறைந்த பொன்னை வாங்கி புடமிட்டு அதில் இரண்டுமணிகளை மட்டும் ஒருதினத்துக்கு தேவையான வருமாணமாக விற்றுப் பெறுவார். இம்மணிகளைப்பெற தினமும் மாலையில் அதிக பெண்கள் கூடுவர் அவர்களில் இருவருக்கே மணி கிடைக்கும். இதனல் அவரின் இயற்பெயர் மறைந்து பென்மணிதட்டார் என்ற பெயர் நிலைத்தது. இச்சமயம் தஞ்சை பெரிய கோயிலை இராஜராஜ சோழ மகாராஜாவின் விருப்பப்படி இராஜராஜ பெரும் தச்சன் என்ற சிப்பிகட்டிவந்த ராஜகோபுரத்தின்மேல் வைக்கும் பிரம்மேந்திர பெரியகல் கிடைக்காது கலங்கி இருந்த வேளை தன்னை அறிமுகப்படுத்தா வகையில் தினமும் வேலைகளை கண்டு வருபவர்; பொன்மணி தட்டார். அன்று சிப்பின் மனக்கவலையை அறிந்து இடைச்சியின் வீட்டிற்கு அருகில் கல் இருப்பதை பொன்மணிதட்டார் காட்ட அதை வாங்கி கோபுhரத்தில் வைத்தார்கள்;. பின்னர் லிங்கத்துக்கு அஷ்டபந்தனம் கூடாத போகவும் கருவூரார் வாய் தாம்பூலம் பட்டு அஷ்டபந்தனம் இறுகி அமைக்கப்பட்டது. கும்பாவிஷேகம் நடந்து முடிந்த பின்னர் அன்றிரவு அரசன் பெரும்பணி முடிவடைந்த பெருமிதத்தில் உறக்கமின்றி இருந்த நேரத்தில் ' உன் மறைவிலும் இடைச்சியின் நிழலிலும் பொன்மணித் தட்டார் இதயத்திலும் யாம் இருக்கின்றோம்' என்ற இறைவனின் அசரீதியாக உணர்ந்திட்ட மன்னன். மந்திரியை அழைத்து அதற்கு விளக்கம் கேட்க உன் மறைவில் என்பது உன்னால் கட்டப்பட்ட கோயில் என்பதமாகும். இடைச்சியின் நிழல் என்பது இடைச்சியின் வீட்டிலிருந்து எடுத்த கல். கோபுரத்தின் மேல் இருப்பதாகும். பொன்மணித்தட்டாரின் இதயத்தில் என்பது புரியவில்லை என்று கூறினார்.இந்த ஊரில் பொன்மணித் தட்டார் என்பவர் இருந்தால் அழைத்து வருமாறு அரண்மனை ஆட்களை அனுப்பிவைக்க அவர்களும் கடைவீதியில் பொன் வியாபாரியிடம் விசாரித்து பொன்மணித்தட்டாரை கண்டு வணங்கி அவரை அரசன் அழைத்துவர சொன்ன செய்தியை கூற அவர் நானோ சாதாரண வயோதிபன் அரசரிடம் எனக்க ஆகவேண்டியது எதுவும் இல்லை மேலும் அரசனுக்கு தேவையான ஆபரணங்களைச் செய்யும் ஆற்றலும் இல்லை. என்னிடம் இருப்பதோ கோணி வஸ்திரம் மட்டுமே இதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆகையால் நான் அங்கு வரவில்லை என்று கூறிவிட அதை அறிந்த அரசன் பரிவாரங்களுடன் பொன்மணித்தட்டாரைப் பார்க்க வந்து அவரை வணங்கித் தங்களின் இதயத்தில் இறைவன் எழுத்தருளி இருப்பதான கேட் அசரீதி விடயத்தை எடுத்துக் கூறி சந்தேகம் போக்குமாறு கேட்டார். அதற்கு பொன்மணித்தட்டார் அரசனை நோக்கி ஆலயத்தின் ஸ்தூபிக்கு நேரே வடக்கு திசையில் ஒரு குளம் வெட்டி அதன் நடுவில் சிறு கோயில் ஒன்று நிர்மாணித்து அங்கிருந்து பார்த்தல் கோபுரம் தெரிய வேண்டுமாறு அமைக்கச் சொன்னார். மேலும் அதனை அமைத்து எட்டாவது நாளில் இறைக்காட்சி கிடைக்குமென்றர். அவர் கூறியதற்கமைய சிவகங்கை தீர்த்தம் என்னும் திருக்குளத்தை அமைத்து பொன்மணித்தட்டார் மொழி;தவாறு கட்டி முடித்து. எட்டாம் நாள் மன்னர் அவட்வீட்க்குச்சென்று அழைத்து வந்தனர். திருக்குளத்தினுள் செல்ல அரசன் தெப்பம் உள்ளதென அவர் தண்ணீரின் மேல் நடந்தே சென்று பத்மாசனத்தில் கோயிலின்னுள் அமர்ந்து அவரின் இயத்தில் இறைகாட்சியை எல்லோருக்கும் நல்கி அக்காட்சி ஒளியாக மாறி கோபுரத்தில் கலந்தார். அவரின் சமாதி சிவகங்கைக் குளக்கோயிலில் இருக்கின்றது. இதனைக்கண்ட அரசனும் மற்றோருர்களும் வணங்கி இறைவனை காணும் பாக்கியத்தை பெற்றதை எண்ணி வியந்தனர். இப்படிப்பட்ட பொன்மணி தட்டாரின் சமாதிக்கு அவிஷேகம் செய்த பின்னே தஞ்சை பிரகதீஸ்வரர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது. சமாதிக்குச் செல்ல அமைப்பட்ட தொங்கு பாலம் தற்போது பழுதடை;துள்ளது.
தஞ்சை விஸ்வப்ராமண மகாஜன சபையின் மூலமாகவும் பூமாலை சாமிநாத ஆச்சாரியார் குடும்பத்தினபலும் மகா சிவராத்திரியன்று குருபூஜை நடாத்தப்பட்டுவருகின்றது. இதன் சிறப்பினை 'விஸ்வகர்ம பக்தோபாக்கியானம்' என்ற பழைய நூலிலும். 'பொன்மணித்தட்டார் சரித்திரம்' என்னும் நூலிலும், 'படைப்புக் கடவுளின் பரம்பரையில் வந்தவர்கள்' என்ற நூலிலும் காணலாம்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'வீர கவிராயர் (வீரசாமி ஆச்சாரி)
பாண்டியநாடு நல்லூர்க் கிராமத்தில் விஸ்வப்ரமண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் கி.பி.1524-ம் ஆண்டு பிறந்து பொற்பணியைச் செய்யும் பன்மொழி புலவராகத் திகழ்ந்தவர். படிக்காசு புலவரை எதிர்த்துப்படி வெற்றி கொண்டு தேசத்தந்தை மகாத்மா காந்தி சத்திய வாழ்க்கை முறை அமைய வழிகோலிய 'அரிச்சந்திர புராணம்' என்ற நூலை இயற்றியும் சமகாலப் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றும் சிறப்புடன் வாழ்தவர்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'இராமலிங்க ஆச்சாரியார்'
கி.பி 1815- ம் ஆண்டு சேலம் ஜில்லா நமக்கல் தாலுக்கா எருமைப்பட்டி என்ற கிராமத்தில் விஸ்வப்ரமண குலத்தில் சுபர்ணஸரி கோத்திரத்தில் பிறந்து பொற்பணியைச் செய்து வந்தார். 1843 – ம் ஆண்டு சுப்பராய ரெட்டி, நாணய செட்டி, நாராயண ரெட்டி, மாறாடி ரெட்டி, பள்ளி தாண்டவப்படையாசட்சி, இராமலிங்கப் படையாச்சி ஆகியோர் ஒன்று சேர்;து தோட்டி மொட்டையன் என்ற தாழ்த்தப்பட்டோரை வைத்து இராமலிங்க ஆச்சாரியரை அடித்து பூணூலை அறுக்கச்செய்தனர். அதனால் பாதிக்கப்பட்ட அவர் மானநஷ்ட வழக்கு தொடுத்து தன்குலப்பெருமைகளை விளக்கி தான் மீண்டும் பூணூலை அணிவதற்கு உண்டான செலவுகளை அபராதமாக பெற்று குலப்பெருமையை நிலை நாட்டியவர்கள். இதனை விரிவாக நோக்க 'சேலம் ஜில்லா நீதிமன்றத் தீப்பு' என்ற நூலில விரிவாகக்; காணலாம்.
விஸ்வப்ரம்மண குலத்தில் உதித்த உத்தமர்கள் வரிசையில் 'கருவூரர்'
கி.பி. 10 –ம் நூற்றாண்டில் கருவூரில் விஜ்வ பிராமண குலத்தில் சுபர்ணஸரிஷி கோத்திரத்தில் பிறந்து பொற்பணியைக் கற்று சிதம்பரக்கோயிலில் பூபாலப் பாண்டியன் வருப்படி தில்லை நடராஜர் சிலையினை கருவூர் தேவர் என்னும் ஆச்சாரியிடம் பொன்னால் செய்துவரச் சொன்னார். கருவூரர் தேவர் அரசனின் விருப்பப்படி சாஜ்திர முறைப்படியும் மனுவிதியின் படியும் காலத்தில் மக்களின் மனநிலை அனுசரித்துப் பத்தி ஏற்படுமாறும் திருட்டு விடாதபடியும் கோடிமாற்று என்ற கணக்கில் நிறமாற்றுப் பொன்னினால் ஆனசிலையை செய்து மன்னனிடம் கொடுத்தார்.
மன்னன் சிலையைக்கண்டபோது செம்பு நிறத்தில் இருப்பதைக்கண்ட அரசன் கருவூராரிடம் விளக்கம் கேட்க அதற்கான காரணகாரியத்தை கூற மன்னனும் மந்திரியும் ஏற்காது சிறையில் இட்டனர் கருவூத் தேவரை.
அதன் பின்னர் சருவு_ர் தேவர் சிலையின் ஒருபகுதியை வெட்டி உருக்க முழுவதும் தங்கமாக இருக்கண்டு இரசன் மகிழ்து சிப்பியின் பெது நலநன பாராட்டி போற்றி விழா எடுத்தான். இதனை போகர் ஏழாயிரம என்ன நூலில் மூன்றாவது சந்தக்கண்ட பாடலில் நடராஜ விக்ரகம் என்பதில் காண்க. போகரின் சீடகளில் முதன்மையானவர் கருவூர் தேவர்.
மேலும் தஞ்சைப் பெரும் கோயிலில் லிங்கத்தின் அஷ்ட பந்தனம் என்னும் மருந்து கூடாது போனதால் தன்வாய் தம்பூலத்தையும் சேர்த்துக் கூட்டி விரதிஷ்டை செய்யப்பட்டது. இறைவனின் மேல் திருவிசைப்பா படியருளியவர்களில் இவரும் ஒருவர் இதனால் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் அவரும் ஒருவர்.
தஞ்சை பெரும் கோயிலில் மேல் பிரகாரத்தில் ஆலயம் அமைத்தது 1926 –ம் ஆண்டில் மீண்டும் பெரிது படுத்தியும் கருவூத் தேவருக்கு பஞ்சலோக சிலை செய்து குப்பாவிசேகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விபரம் 'தஞ்சைப்பெரிய கோயில் வரலாறு' என்னும் நூலில் காண்க.
பட்டினத்தார் பாடல்கள்
திருக்கோயில் அகவல்- 1
நினைமின் மனமே! நினைமின் மனமே! சிவபெரு மனைச் செம்பொனம் வலவனை நினைமின் மனமே! நினைமின் மனமே! அலகைத் தேரின் அலமரு காலின் உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க! இங்கு அலகைத் தேர் என்பது கால் நீர் அலமருகுகால் என்பது சுழலும் காற்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் தோன்றின மறையும் மறைந்தன தோன்றும் பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறையும் மறைந்தன உணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம் உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம் என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும் பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் கொன்றனை அனைத்தும் அனைத்தும் நினைக்கொன்றன. தின்றனை அனைத்தும் அனைத்து நினைத் தின்றன பெற்றனை அனைத்தும் அனைத்து நினைப் பெற்றன ஒப்பினை அனைத்தும் அனைத்து நினை ஒப்பின செல்வத்துக் களித்தனை தரித்திரத்து அழுங்கினை சுவர்க்கத்து இருந்தனை நரகில் கிடந்தனை இங்கு ஒப்பினை என்பது பாதுகாத்தன அழுங்கினை என்பது வருத்தம் அடைந்ததாய் என்று பொருள்படும். 9017_1207229626829_4640545_nஇன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை அன்றொன்று ஒழியாது உற்றனை அன்றியும் புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாகக் கருதினை இதனுள் இங்கு இருநிலம் என்பது பெரும் பூமி ,புற்புதம் என்பது நீர்க்குமிழி ,குரம்பை என்பது சிறு குடிசை ,இருவினைக்கூட்டை என்பது நல்வினை தீவினை ஆகிய பறவைகள் தங்கும் கூடு என்பது குறிப்பிடத்தக்கது. பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி மீளுங் குறும்பியும் வெளிப்படும் ஒருபொறி சளியும் நீரும் தவழும் ஒருபொறி உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி வளியும் மலமும் வழங்கும் ஒருவழி 5295_1207229346822_2288866_nசலமும் சீயும் சரியும் ஒருவழி ஒள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும் உடலுறு வாழ்க்கையை ஒள்ளுறத் தேர்ந்து கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை பொறி என்பது ஐம்பொறி, சட்டகம் - உடல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷஸ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

ஷஷ்டி யில் இருந்தால் அகப்பையில் வரும்
தாய் கௌரியின் கேதாரகௌரி விரதம் முடிவுற்று அறிவின் சிகரமாம் சிங்கார வேலன் கந்தசஸ்டி விரதம் ஆரம்பமாகியுள்ளது.ஷஷ்டி யில் இருந்தால் அகப்பையில் வரும் என்பர் சான்ரோர் . அதை கருப்பையாக கருதுவர் சிலர். முருகன் அவன் அழகன் குமரன் குரு பரனுக்கு. சிவபெருமானாகிய பரம்பொருளின் ஐந்து முகம் சதாசிவன் அதாவது. சத்தியோஜாதம், வாமதேவம் அகோரம் தற்புருடம் ஈசானம், இவையே ஐந்து முகங்களும். ஆனால் சிவபெருமானுக்கு ஆறாவது முகம் ஒன்றும் உண்டு. அதுவே அதோமுகம். அதாவது. மேற்கு முகம் சத்தியோஜாதம் வடக்கு முகம் வாமதேவம். தெற்கு முகம் அகோரம். கிழக்கு முகம் தற்புருடம், மேல் முகம் ஈசானம். அதுபோல் கீழ்முகம் அதோமுகம். அதுவே சிவகுரு. ஆகவே ஆறுமுகமான சிவனே குருபரன் அவனே குமரகுருபரன். சிவனின் ஞானகுருவடிவம் ஆறுமுகம். அப்படி இருக்கு அகப்பை என்பது எது ஆன்மா இருக்கும் இடம். ஆன்மாக்கு எது தேவை. அது ஞானமே அன்றி வேறு ஒன்றும் இல்லை. எனவே ஷஷ்டியில் இருக்க அகப்பை வருவது ஞானம். கந்தன் கலியுக வரதன். கலியுகத்தை வெல்ல அஞ்ஞான இருள் அகல வேண்டும். அதனாலேயே அவன் அஞ்ஞான இருளை விரும்பும் மயில் குணமான ஆணவத்தை அடக்கி தனது வாகணமாக்கினார். அதை உணரவைத்த ஞானமான வேலை கையில் ஏந்தினார் வேல் ஆழமானதும் அகலமானதும் கூர்மையானதுமானது வேல் அதுவே அறிவின் அடையாளம் ஒவ்வொரு மனிதனிடம் சாத்வீகம் இராஜதம் தாமதம் ஆகிய மூன்று குணங்களும் இருக்கும். அவை எமக்கு இருக்கின்ற அளவின விகிதாசாரத்திலேயே அவர் அவர் நடத்தைகளும் எண்ணங்களும் இருக்கும் சாத்வீகமே நேரான எண்ணத்துக்கும் தாமதகுணமே எதிரான எண்ணங்களுக்கும் காரணமாகும் மனிதனின் வலபக்க செய்பாடுகள் மூளையின் இடப்பக்க செலப்பாட்டுக்கும் இடபக்க செல்பாடுகள் மூளையின் வலப்பக்க செயல்பாட்டுக்கும் வழிவகுக்கும். அதாவது பொதுவாக வலக்கையையே எல்லா செய்பாட்டுக்கும் முதலில் பயன்படுத்திகின்றோம் உலகம் வலம் இடமாகவே சுற்றுகின்றது. இது நேர் எண்ணங்களை உருவாக்க வல்லது. இதனால் சாதவீக குணங்கள் அதிகரித்து ஆண்மீக நாட்டம் அதிகரிக்கும். ராஜதம் இரண்டு வகையில் அமையும் வெற்றியை நேர்மையான முறையில் எதிர் கொள்ளல். அது ஒருவகை மற்றறையது ஆணவத்தால் ஆசைகொண்டு எதிர்த்து வஞ்சகம் சூது பொறாமையால் வெற்றி பெறல். இது தாமதகுணத்தின் விழைவே. முருகன் ஞானமான வேலைக் கொன்டு மாயையின் சிக்கி ஆணவம் கொண்ட சூரனை சம்ஹரம் செய்கின்றார். அடுத்து சமக்படுத்துஇச்சையையும் கிரியையையும் ஞானத்தால் சமப்படுத்துகின்றார். பூலோக குறவள்ளி தேவலோக தேய்வயானை இருவரையும் திருமணம் செய்தார் திருமுருகன் ஒரு பெண்ணையே சமாளிக்கமுடியாமல் இருக்கின்ற போது. இருமனைவியர் ஒருத்தி பூலோக ஆசைநிறைந்தவள் இச்சாசக்தி மற்றவள் தேவலோக கிரியையான கடமையில் சிறந்தவள் அவளே கிரியாசக்தி இரண்டும் இரு துருவம் இவற்றை ஞானம் பழமான முருகன் சீர்செய்கின்றான். ஞானத்தால் எல்லாவற்றையும் சீர்செய்யும் ஞாகாரணன் அவன் அவனே சிவகுரு. அருநகிரிநாதருக்கு, அருள்ஜோதி வல்லலார், ஸ்ரீ குமரகுருபரர், ஸ்ரீ குமரகுரு தாசசுவாமிகள் ஸ்ரீ யோகர் சுவாமி, ஸ்ரீ செல்லப்பா சுவாமி, ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி போன்றோருக்கு குருவாய் வந்தவன் குகன் தான். அதனால் தவசீலர் அருணகிரிநாதர் .
"உருவாய் யருவாய் யுளதாய் யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"என்றார். அவனே குரு அவனே சிவகுரு.
கந்தர் அனுபூதி
"முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே"
"சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே".
"கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே"
கந்தர் அலங்காரத்திரல்...................
நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌகளத் தௌந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார் மரிப் பார்வெறுங்களே.
திருமந்திரத்தில் திருமூலர்................
'ஆறு முகத்தில் அதிபதி நானென்றுங்
கூறு சமயக் குருபரன் நானென்றுந்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி யண்ணல் விளங்கிநின் றானன்றே'
'தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே' என்றார்.
பொதுவாக நோக்கும் போது முருகன் பரம்பொருளின் சிவகுரு. அவன் கந்த ஷஷ்டியில் இருக்க அகப்பையில் வரும் என்பது ஞானம்.

சண்பகப்பூ

சண்பகப்பூ என்றால் எல்வோருக்கும் ஞாபகத்தில் வருவது தோச நிவத்திக்கு பரிகாரமாக இம் மலரை இறைவனுக்கு அர்பணம் செய்வார்கள். ஆனால் அதில் உள்ள மருத்துக்குணம் பற்றி யாவருக்கும் தெரியாது சித்தர்கள் மகரிஷிகள் எப்போதும் வழிபாட்டுக்கு பயன்படுத்திய அனைத்துமே மனுக்குல மீட்சியை அடிப்படையாகக் கொண்டே என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சண்பக மரங்கள் நீண்டு வளரக்கூடியவையே இவை பொதுவாக இமையமலைச் சாரலிலேயே அதிகளவில் காணப்படுகின்றது. பொதுவாக நவக்கிரகங்களில் வியாழ பகவானுக்கு அரிச்சினைக்குப் பயன் படுத்துகின்றனர். வியாழ பகவான் தேவகுரு அவரே சிவன் ஞானகாரகன். ஞானத்தை கல்லாலையின் கீழ் சனகர் சனாதனர் போன்ற மகஷிகளுக்கு வேதத்தை உபதேசித்தார். அவருக் சமர்பிக்கப்படும் மலர்களில் பிரதானமாது சண்பகமலர் இனி அதன் மருத்துவகுணங்களைப் பார்ப்போம்;. சம்பக மலரின் மருத்துவக்குணத்தை நோக்குகையில் சித்தர்கள்
'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ்
சுத்தசுரந் தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள்
திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்
சண்பகப் பூவதற்குத் தான்' என்றனர்.
பாடலின் பொழிப்பு:
1. 'வாதபித்தம் அஸ்திசுரம் மாமேகஞ் சுத்தசுரந்......': இம் மலர் வாதநோய் பித்தம் அத்திசுரம் என்னும் எழும்பு மச்சையின் பாதிப்பால் ஏற்படும் சுரம். மேகம் எனும் நிரிலிவு நோய் காச்சல் போன்ற நோய்களைப் போக்க வல்லது.
2. 'தாதுநஷ்டங் கண் அழற்சி தங்காவே – மாதேகேள.....': தாது என்னும் இந்திரிய குறைபாட்டை போக்குவதுடன் கண்ணில் ஏற்படும் அழற்சியையும் போக்க வல்லது பெண்ணே கேள் என்கின்றார் சித்தர்.
3.திண்புறு மனக்களிப்பாந் திவ்யமணம் உட்டிணஞ்சேர்.....': மனக்களிப்பை போக்குவதுடன் நல்ல மணத்தையும் தருவதுடன் உட்டிணமும் உண்டாகும். என்றார்கள் சித்தர்கள்.
அறிவைப் பெற மணச்சந்தோசம் தேவை அத்துடன் உடல் வலிமையும் நோயற்ற நிலையும் தேவை. அடுத்து சண்பகமரவேரின் மருத்துவ குணம் பற்றி குறிப்பிடுகையில்.
'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்
நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால்
பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும்
வாசமுள்ள சண்பக மரத்தின்வேர் தான்' என்றனர் சித்தர்கள்.
பாடலின் பொழிப்பு:
1. 'தீராத வுட்டிணத்தைத் தீர்க்குஞ் சுரம்போக்கும்.....': தீராத உஸ்னத்தை போக்க வல்லதுடன் சுரத்தையும் போக்கும் சண்பக மரவேர்.
2. 'நேரே பசியெழுப்பும் நிச்சயமெ – ஒருங்கால் ......': உடலில் ஏற்படும் உஸ்ணத்தை குறைத்து பசியை உண்டாக்க வல்லது.

3. 'பண்புறுகண் தோஷத்தைப் பற்றறுக்கும் வாசமுள்ள......': கண்ணில் ஏற்படும் நோய்யினை போக்குவதுடன் இம்மலர் வாசமுள்ளது இதனால் மணம் அமைகொள்ள வைப்பது.
4. 'சண்பக மரத்தின்வேர் தான்': இவை அனைத்தையும் தரவல்லது சண்பகமர வேரை பயன்படுத்துவதனால் என சித்தர்கள் கூறி இருக்கின்றனர்.


பயன்படுத்தும் முறை: சண்பகமலரையும் வேரயும் நினலில் உவத்திவைத்துக் கொண்டு கசாயம் வைத்து காலை மாலை உணவருந்த முன் அரைமணித்தியாலத்துக்கு முன் அருந்திவர மேல்கண்ட நோகளுக்கு பரிகாரம் காணமுடியும். இரண்டையும் தனித்தனியே பயன் படுத்தவும்.

பிரகாசத்தை ஏற்படுத்தும் பிரகாச காயத்திரி

பிரகாசத்தை ஏற்படுத்தும் பிரகாச காயத்திரி

காயத்திரி என்பது காயமாகிய உடலை திரியாக்கி உலகுக்கு ஒளி கொடுத்து ஒளி வழியாக உடலை வழிப்படுத்தி ஆத்ம ஒளியில் உடல் பிரகாசித்து பரமாத்த ஒளியில் அக்கியப்படுவது என்பது பொருள். அக இருளை போக்குபவர் குரு இறைவன் குருவாக வந்தவர் குமரன் அவன் குரு பரனுக்கு அவனே குமரகுருபரன் என்கின்றார் திருமூலர் திருமந்திரத்தில் அகஇருள் உண்மையை மறைத்து பொய்யானதை உண்மையாக்கி உண்மையை மறைக்கும் சக்தி அது.
இதனை திருமூலர் திருமந்திரத்தில்
'தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே' என்றார்.
தேவனாகிய சிவனும் இயல்பாக பாசங்களில் இருந்து நீங்கிய ஆருயிரும் ஒருவரே
அதை வெல்வதென்பது முயல்கொம்பை ஒத்தது. அதை வெல்ல குருவருள் தேவை. குருவை தேடுவது என்பதும். சரியான குரு கிடைப்பது என்பதும். விதிப்பனே. 'தாரமும் குருவும் தலை விதிப்படியே' என்பது முதுமொழி குருவருள் திருவருளே. திருவாகிய சிவன் தனது நெற்றிக்கண் ஆகிய ஆக்ஞா சக்கரத்திலிருந்து ஆறு தீப்பொறிகள் ஆக்கி சரவண பொய்கையாகிய ஆஞ்ஞான குழத்தில் மெய்ஞான பொறியாகிய தீப்பொறிகள் ஆறும் சேறாகிய மலத்தில் இருந்து நீக்கம் பெற்ற சேற்றின் மேல் உள்ள தாமரையின் பூவில் சூரியனைகிய பரம்பொருளை கண்டு மலரும் தாமரையன் மீது விழுந்து ஆறு குழந்தையாகி அக் குழந்தைளை காத்திகை பெண்களான ஆறு அறிவாகிய காத்திகை பெண்கள் வளர்த்து வந்தனர். அதை பிபஞ்ச சக்தி அதைக் கண்டு ஆனந்த மடைந்து சிவ சக்தியாக வந்து அதை எடுத்து ஒன்றாக்கி கந்தனேன பெயர் புனைந்து. குமரனானர். தந்தைக்கு உபதேசித்து குமரன் குரு பரனுக்காகி குமரகுருபரன் ஆனார். அவரே உலகுக்கு ஆன்ம ஈடேற்றத்துக்கு குருவானார்
திருமூலர் திருமந்திரத்தில் சிவகுருவே குமரகுருபரன் என்றும் அவனே பரம்பொருள் என்றும் இதனை இயம்பியுள்ளர்.
'ஆறு முகத்தில் அதிபதி நானென்றுங்
கூறு சமயக் குருபரன் நானென்றுந்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி யண்ணல் விளங்கிநின் றானன்றே' என்றார்.
பிரகாச காயத்திரியும் அதனையே பிரதிபலிப்பதாக அமைகின்றது. மந்திரங்கள் இறைவனால் உருவாக்கப்பட்டவையே அவை என்றோ உருவானவை அவை பிரபஞ்கத்தில் கலந்துள்ளவை காலத்துக்கேற்ப நியமிக்கப்பட்டவர்களால் உலகுக்கு அவர்அவா சக்திக்கேற்ப்ப பெற்றுக் கொடுக்கப்படுகின்றதே தவிர அவை மனிதரால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பதே உண்மை. இதற்கு கீதாசாரம் சான்று 'எதை நீ கொண்டு வந்தாய்? அதை இழப்பதற்கு எதை எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்து எடுக்ப்பட்டது. எதைக்கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. என்பதே உண்மை
'சிவசக்திப்பிரகாசாய சுதாய வித்மஹே' இதனையே இந்த மந்திரம் குறிப்பிடுகின்றது. ஆறுமுகங்களாக அவன் அவதரித்தான். அவன் ஆறாதார ஒளியில் ஆன்மாவாக பிரகாசிக்கின்றான். அதனாலாலேயே 'ஷண்முக: பிரகாசாய தீமஹி' என மந்திரம் இயம்புகின்றது. இப்பிரகாசம் பிரபஞ்கத்தை பிகாசிக்கச் செய்து தீயதை எரித்து உலகுக்கு பிரகாசம் கொடுக்கும் சக்தியாக மாறி பிரபஞ்சத்தை காக்கின்றது. அப்படிப்பட்ட சக்தி எம்முள் உள்ளதை எடுத்து உள்ளதை உணத்தி பிரகாசித்து காக்கும் இதனையே 'தந்நோ சர்வலோகப் பிரகாச ரட்சக ப்ரசோதயாத்' நம்முள் உள்ளது 'நான்' என்பதை எடுத்தால் ஆத்மா தெரியும் அதற்கு ஆறாதாரம் ஒளி பெறவேண்டும்.

                                    ஆறுமுகம் ஆனவன் முழுமுதலிவன் ஐந்து முகமான ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம், என்பவற்றுடன் அதோமுகமான ஆறாவது முகத்துடன் ஆறுமுகானது. அதில் சத்தியோசாதம் மேற்கு நோக்கிய முகம் இது படைத்தலையும் தற்புருடம் கிழக்கு நோக்கிய முகம் காத்தலையும் அகோரம் தெற்கு நோக்கிய முகம் துடைத்தலையும் வாமம் வடக்கு நோக்கிய முகம் மறைத்தலையும் ஈசானம் மேல் நோக்கிய முகம் அருளலையும் கீழ் நோக்கிய முகமான அதோமுகம் சிவகுரு ஆறாவது முகமாக அமைந்தது. இதவை எம்முள் ஆறாதாரமாக அமையப்பெற்றவையே இவை இவ்வுருவை 'குமரகுருபரன்' என்று இருவகை வழக்கிலும் பெருக வழங்குவதனாலும் உணர்க. ஐந்து முகமாவன் சதாசிவன் எனவும் ஆறுமுகமானவன் குமரகுருபரன் எனவும் அழைக்கப்பட்டான். குமரன் குரு பரனுக்கு இதை உணர்தால் ஆறாதார மூத்தியான குமரனை ஆறாதாரம் ஒளிபெற தியானித்தால் இளமையாக குமரனாக பிறவாவரம் பெற்று இருக்கலாம் என்பதே உண்மை. இம் மந்திரமும் அதை தரவல்லது.
சிவபெருமானும் திருமுருகப்பெருமானும் பெயரில் வேறுபாடயினும் பொருளில் ஒன்று அதாவது ஆற்றுநீரும் குளத்துநீரும் போன்றது. இவை இரண்டும் வேறென்றாலும் இவை இரண்டும் நீர்தான். என்பதை உணர்க. சிவகுரு ஞாணத்தை தருபவன். முருகன் தெவயானையையும் குறவல்லியையும் மணந்தாக சரித்திரம். வளர்ந்த தெய்வானையும் அவள் தேவலோகப்பெண் மற்றவள் ஐம்புல வேட பெண் அவள் பூலோகப் பெண்யும் ஆட்கொண்டார். அதாவது தேவர்கள் ஒருமலத்தார் பூலோகத்தார் மும்மலத்தாரான சகலர். இவர்களை மலம் நீக்கி ஆட்கொண்டதை குறிக்கின்றது. ஆத்மாவை ஆட்கொள்ளலாக கருதப்படுகின்றது. இதுவே முருகனின் திருமணத்தின் அர்த்தமாகும். இதனை அப்பர் சுவாமிகள்
'முன்னை பார்மயில் ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில் தானேர் தலைமகன்
என்னை யாளும் இறைவன் எம்பிரான்
பின்னை யாரவர் பேரெயி லாளரே' என்றார்.
திருமுருகனின் ஆற்றலை சிலர் இரண்டு அவை தொழிலாற்றல் விழைவாற்றல் என்பதில்லை. திருவருளாற்றலின் நிலை பலவாக அமைந்தாலும் பொருள் ஒன்றே சிவப்பரம்பொருளின் திருவருள் ஆற்றலே மனைவி மக்களாக உருவகப்படுத்தப்பட்டது. இங்கு 'செப்பும் சிவனார் திருவருளே மக்கள் மனை ஒப்பார் அவர்க்கவையின் றோர்' என்பதன் மூலம் அறிக. திருமுருகனின் வேல் அறிவு ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவும் இருக்கவேண்டும் என்பதையும். மாயையில் மயங்கி ஆணவத்தில் ஆடாதே அறிவு மயங்கி அறியாமையில் மூழ்காது அதை அடக்கி அதன்மேல் இருந்து ஞானமான சேவலின் உயர் குணமான அதிகாலையில் சூரிய உதயத்தின் முன் எழுந்து ஞான காரியத்தில் ஈடுபடு என்பதை செவல் கொடி காட்டி நிற்கின்றது. இறைவனின் ஞான வடிவே குமரகுருபரன். குமரனும் குருபரனும் ஒன்றே அன்றி வேறிலை என்பதே உண்மை.
2005 புரட்டாதி மாதம் 14ம் திகதி புதன் கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அழகி தேவதை பொன்று அம்பிகை தோன்றி எனது காதுக்கருகில் வந்து பிரகாச காயத்திரியை எனக்கு உபதேசித்தாள். விளித்தெழுந்வுடன் இந்த அடியேன் கண்ட காட்சியை தெலைபேசி மூலம் இலங்கையில் நுவரெலியாவில் இருந்த காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளிடம் கூறினேன். அப்போது சுவாமி உதயமான காயத்திரியை கூறுமாறு கூறினார். அதைக் கூற அப்பா ஆதிசத்தியால் உபதேசிக்கப்பட்டுள்ளது. காலம் வரும் போது உன்னால் உபதேசிக்கப்படும் என்றார்.
அக் காயத்திரியை உபதேசிக்கும் காலம் இது போலத்தான் இருக்கும் போலும். தற்போது பிரபஞ்ச அழிவுக்கு காரணமான மனித மனம் அழிந்து கொண்டு இருப்பதை உணரக் கூடியதாக இருக்கின்றது. இந்த சமயத்தில் இம்மந்திரம் மனதை திடப்படுத்தி புத்தியை விளிப்படையச் செய்யும் என்பதை அடியேனின் உள்ளுணர்வு உணத்துகின்றது. இதனால் இம் மந்திரத்தை உலக நன்மை கருதி. எனது குருநாதரின் வேண்டுதலுடன் உபதேசிக்கின்றேன்.
இது பழவினை அதை அவனே அறுக்க வேண்டும். அவன் அருள் பெற வழி ஒன்று உண்டு. அதை அடியேனை நாடியதால் அவன் அருளால் உபதேசிக்கின்றேன். அது பிரகாசகாயத்ரி மந்திரம். இது அடியேனுக்கு தென் இந்திய தலயாத்திரையின் பின்னர் ஆதிசக்தியால் உபதேசிக்கப்பட்டது. இம் மந்திரத்தை மனதாலே பாராயணம் செய்ய வேண்டும். இரகசியமானது. ஓரு பூரணையை அடிப்படையாகக் கொண்டு அதிகாலையில் பிரம்ம முகூர்த்ததில் ஆரம்பிக்க வேண்டும். தொடர்சியாக 48 நாட்கள் உச்சாடணம் செய்ய வேண்டும். உச்சாடணம் செய்யும் போது செம்பாலா செப்பில் நீரேடுத்து அதில் வில்லதளம் 9இட்டு 108 முறை உச்சாடணம் செய்து பிற்பகல் மாலையில் அருந்தக் கொடு வர வியாதி குணமடையத் தொடங்கும். தற்போது பின் பற்றி வந்த சிகிச்சைகள் அனைத்தும் தொடர வேண்டும்.
மூலமந்திரம்
ஓம் கைலாசவாசாய கங்காதாராய மகேஸ்வராயஅம்பிகைநாதாய சர்வேஸ்வராய சர்வ லோக பிரகாசாய நம: சிவய
பிரகாச சக்தி காயத்திரி
'ஓம் சிவசக்திப்பிரகாசாய சுதாய வித்மஹே
ஷ ண்முக: பிரகாசாய தீமஹி
தந்நோ சர்வலோகப் பிரகாச ரட்சக ப்ரசோதயாத்'
பொருள்
பரப்பிம்மான சிவனும் பிரபஞ்ச சக்தியானஆதிசக்தியும் இணைந்து ஏற்படும் பிரகாசமான ஆறுமுகங்களில் ஏற்படும் பிரகாசத்தால் உலகத்தை ஆளும் சக்தி அச் சக்தி நம்முள் உள்ள ஆத்ம சக்தியை வெளிக் கொண்டுவந்து எம்மை வளிப்படுத்துவதாகட்டும். என்று பிராத்திக வேண்டும்.எம்முள் உள்ள சக்தி விளிப்படையும் இடங்கள் ஆறு அவை ஆறாதாரங்கள் அவை விளிப்படைந்து ஒளி பெற்று எம்மை வழிபடுத்தும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம்.

இந்த மந்திரம் சக்தி வாய்ந்தது. வசதியானவர்கள் முடியுமானால் திருவற்றியூர் தியாகராஜ சன்நிதிக்குச் சென்று ஆதிபுரிஸ்வரர் அனுமதி பெற்று சுவாமி குமரகுருபரன் சமாதியில் சமர்பணம் செய்து ஆரம்பிக்கவும்.
'நம்பினால் கெடுவதில்லை நான்மறை தீர்ப்பு'
சர்வ மங்களங்களும் உண்டாகுவதாக.
"குண்டலினி பிறவாமை தந்திடும் அருமருந்து நம்முள் உள்ள பெருமருந்து அதை அறிந்திட்டால் பெற்றிடுவோம் பெறு."
குண்டலினி என்றவுடன் சிலர் அது பெற்றுக் கொள்வது இலகு தன்னை மறந்து பரவசப்படுவது என்று குறிப்பிடுகின்றனர். அதை நான் தருவேண் என்றெல்லாம் கூறி மக்களை தன்வசப்படுத்து கின்றனர். குருதேவர் பெற்ற சித்தியை அவரின் பிரதம சீடனான சுவாமி விவேகானந்தருக்கு பரிசம் மூலம் கொடுத்தார். அவர் முற்றும் உணர்தவர் சுவாமி சப்தரிஷிகளின் ஒருவர் என்பதை உணர்திருந்தார். அவருக்கு இயல்பாகவே அது இருந்தது. இருந்ததை விளிப்படையச் செய்தார். எல்லோரிடமும் இருக்கின்றது அது வெளிப்படும் தன்மை அளுக்கு ஆள் வேறுபடும். அவர் அவர் விதிப்பயனைப் பொறுத்தது. அது விட்ட குறை தொட்ட குறையைப் பொறுத்தது. முதலில் குண்டலினி என்பது என்ன என்பதை நோக்கும் போது அது எம்முள் உள்ள சக்தியாகும். அது வெளில் இருந்து பெற்றது அல்ல அதை விளிப்படைய செய்ய யோகப்பயிற்சி அவசியம். அதுமட்டுமல்ல குருவருள் தேவை. அத்துடன் பிரசாரியம் கடைப்பிடிக்க வேண்டும். இந்திரியம் கீள்நோக்கக் கூடாது. மேல்நோக்க வேண்டும். இதனை யோகப்பயற்சி மூலம் பிராயாணமயம் மூலமே முறையாகப் பயின்று செய்தல் வேண்டும். முதலில் குண்டலினி இருக்கும் இடம் பற்றி குறிப்பிடுகையில் திருமந்திரத்தில் திருமூலர்
'நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலம்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே'
என்றார். நாபிக்கு கீழ் பன்னிரண்டு விரல்கடை கீழே இருப்பது மூலாதாரம் அதை தொழிப்படச் செய்யும் மந்திரம் 'ஓம்' என்னும் மந்திரம் அதனை நிலை நிறுத்துதல் வேண்டும். இதனை நிலை நிறுத்த சிவபெருமான் வெளிப்படுவார் .மூலாதார எழுத்து வ, ச, ஷ ஸ என்பன இது நாபி மந்திரம். முலாதாரத்தின் மூன்டெழு கனலால் எழுப்படுவது குண்டலினி கால் என்பது காற்று அதாவது வெப்பத்தால் உண்டாகும் காற்று. எனவே ஓம் என்னும் மந்திரம் ஓதப்படுவதால் முறையாக ஓதப்படுதல் வேண்டும். அடுத்து குண்டலினி இருக்கும் இடத்தை குறிப்பிடுகையில்
'மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளேழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே'
என்றார். குண்டலி சக்தியின் இருப்பிடத்தை குறிப்பிடுகையில் மூலாதாரதின் இரண்டு விரல்கடை கீழும் குறியின் கீழ் இரண்டுவிரல் கடைக்கீழும் உள்ள இடத்தில் சுருண்டு பம்பு போல் வட்டவடில் உள்ளது குண்டலினி சக்தி அது உணர்வினுள் எழும் செச்சுடராகும். அச் செஞ்சுடர் உச்சித்தொளை வழி செல்லும். அச்சுடர் பொப்பூழுக்குக்கீழ் நான்கு விரல்கடை அளவு பரவி இருக்கும். இன்நிலையை மெய்கண்டர் 'அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்தோமம்' என்றா அக்ஞா சக்கரம் இருக்கும் இடமும் அங்கு சிவபொருமான் வழிபடும் ஆற்றல் பற்றியும் குறிப்பிடுகையில்
'நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினைவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே' என்றார்.
நாசிக்குக் கீழ் பன்னிரண்டு விரல் கடையில் இருப்பது நெஞ்சு. அவ்விடத்தில் இறைவனை நாடி கொல்லாமை, ஐந்தடக்கல், கொள்பொறுமை, யோடிரக்கம், நல்லறிவு, மெய்தவம், அன்பெட்டும் ஆகிய ஞானமலர்களை இறைவனுக்கு சமப்பித்து ஐந்தெழுத்தால் வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு வாழிபாடு செய்தால் மாசித்தி கைகூடும். அதாவது கொல்லாமை என்பது பிற உயிர்களின் உடலை கொல்லாமை. ஐந்தடக்கல் என்பது ஐம்புலன்களை அடக்குதல். அதாவது புலன்களை உலகியல் பால் செலுத்தாது இறையியல் பால் செலுத்தி பலன் கருதாது செயல்களில் ஈடுபடல். தான் செய்யும் ஒவ்வொரு செயல்களும் மகேசன் செயலாக செய்தல். கொள்பொறுமை எந்த செயல்களையும் செய்யும் போது மனத்துக்கு இடம் கொடுக்காது புத்திக்கு இடம் கொடுத்து சிந்தித்து செயல்படுதல். இரக்கம் எல்லோர் மீதும் அன்பு கொண்டு இரக்கமாக இருத்தல். நல்லறிவு என்பது ஞானமான சிந்தித்த அறிவு அதாவது பகுததறியும் தன்மை ஆராய்ந்து முடிவெடுக்கும் திறமையான அறிவு. மெய்தவம் உமையான தவம் எமது செயல்பாடுகளை அனைத்துமே தவமாக அமைத்துக் கொள்ளல். அன்பு எல்லோர் மீதும் இரக்கமாக இருத்தல். இதனையே அட்டபுஸ்பமாக இறைவனுக்கு சமர்பித்தால் இறைவன் எம்மோடு இருப்பதுடன் இவ்வுடலுக்கு எத்தீங்கும் உண்டாகாது. இதுவே அகவழிபாடாக அமையும். இதனையே புறவழிபாட்டில் அட்டபுஸ்மாக கருதி எட்டு மலர்களால் தாமரை, அலரி, மந்தாரை போன்ற எட்டுவகை பூக்களைக் கொண்டு வழிபாடு செய்கின்றனர். அகவழிபாடு செய்யும் போது அகத்தில் பிறைகீற்று போன்று சுடர்ஒளிதோன்றும் இதுவே குற்றமற்ற நற்தவ பேரின்பமாகும். இதனை திருமூலர்
'சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஒதுவ துன்னுடல் உன்மத்த மாமே' என்றார்.
இதன் நிலவொளி கண்டமாகிய விசுத்தியில் தெரியும் என்றார். நிலவொளி தோன்றினால் உடல் பரப்பிமத்தின் பொன்மேனியாகுமாம். அது சிவன் மேனியாகும். குண்டலினி சக்தி மேல் நோக்க நிமிந்து ஆடாமல் அசையாமல் இருக்கவேண்டும் என்பதை திருமந்திரம் குறிப்பிடுகையில்
'மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விளித்திரு
காலத்தை வெலிலுங் கருத்திது தானே' என்றார்
திருமூலர். செவ்வனே நிமிந்து ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டும் என்பதை முக்கார மிட்டிரு என்பதனுடாக உணர்து கின்றார். அப்போது இந்திரியம் மேல்நோக்கி சுழுனா நாடி வழியாக சென்று உடல் எல்லாம் பரவும். மேலைதுவாரத்தின் மேல் மனதைபத்தித்து இருத்தல் வேண்டும் என்பதை ஆக்ஞா சக்கரமான புருவமத்தியில் மனத்தை பதிக்க வேண்டும். புறநாட்டமின்றி விளிப்பாக இருத்தல் வேண்டும். அப்போது குண்டலினி சக்தி மேல் நோக்கும். இதனால் ஒருபோதும் இந்திரியம் கீழ் நோக்காது.குண்டலினி நிலைக்களம் பற்றி குறிப்பிடுகையில்
'எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்து நின் றானே'
என்றார். எருவிடும் வாசல் என்பது மலவாசல் கருவிடும் வாசல் என்பது குறி மலவாசலுக்கு மேல் இருவிரல்கடை மேலும் குறிக்கு கீழ் இரு விரல்கடையிலும் அமைந்துள்ள பிரதேசம் குண்டலினி சக்தி இருக்கும் இடம் அதன் பிரகாசம் தொப்பூக்கு கீழ் நான்கு விரல்கடை அளவு வரையுள்ள பிரதேசம் வரையில் பரவிக் காணப்படும். இங்கு திருவருளே திருவுருவாய் சொதிபிழம்பாய் தோன்றும். அதனை கண்டாக்கு கருவாகிய பிறப்பினை அறுத்து அட்கொள்வார் இறைவன். உடலை சித்தர்கள் மூன்று பாகமாக்கி உடலின் கீழ் பகுதியை அக்னி மண்டலமாகவும் மத்திய பகுதியை அதீத்திய மண்தடமாகவும் மேல் பகுதியை சோம மண்டலமாகவும் கண்டனர். இதனாலேயே குண்டலினி அக்னி மண்டலத்தில் இருக்கின்றது. அத்துடன் அதன் பிகாசம் தொப்பூளுக்கு நான்கு விரல்கடை கீழ் வரை பிகாசிக்கின்றது. அது யோகப்பயிற்சியால் நெஞ்சுப்பகுதியில் அனாகத்தில் ஆதீத்திய மண்டலம் வரை சுழுனா நாடி வரை உயத்தி அங்கு பிகாசிக்ச் செய்து அதன் பின் சோமமண்டலத்தில் விசுதிதியல் இளம்பிரை சந்திரனாக பிரகாசிக்கின்றது. இதனாலேயே சிவனுக்கு சந்திரசேகரர் என்றம் சசிசேகரர் என்றும் திருநாமம் வந்தது இதன் மூலம் அவர் வெளியில் இல்லை நம்முள் உள்ளவர். இதனால் கடவுள் என்று அழைக்கப்பட்டார். கடந்தவர் எம்முள் உள்ளவர். யாருக்கு கடந்தவர் உள்நாடாதவர்களுக்கு. உள்உள்ளவர் தன்னுள் நாடியவருக்கு. இதைனையே அப் பெயர் கருதுகின்றது. சிவனுடை விக்கிரகங்களில் ஜடாமுடியில் இளம்பிரை சந்திரன் அமையப்பெற்றது. அதனையே இஸ்லாமிய மதத்தினர் தமது நோம்பு பெருநாளை குறிக்க பயன்படுத்துவதுடன் பிறையை அடிப்டையகவைத்து மதம்சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கின்றனர்.
                              குண்டலினி சக்தியை எப்போதும் நினைவில் நிறுத்தவே இந்துப் பெண்கள் தமது தலை முடியை மூன்று பிரிவாக எடுத்து பின்னி இறுக்கிக் கட்டிக் கொள்வர். இப் பின்னலில் வரும் மூன்று இளைகள் வலப்பக்கம் அமைந்தது ஆதீத்திய நாடியான சூரியநாடி இடது பக்கம் சோமநாடியான சந்திரநாடி நடுவில் இருப்பது சுழுனாநாடி ஆகும். சுழுநாவை மையமாகக் கொண்டு மற்றைய நாடிகள் பின்னி இருக்கும் . இதை பார்க்கும் போது பம்பின் வடிவில் தோற்றமளிக்கும். இதனையே திருமணவைபவங்களில் பெண்ணுக்கு நாகசடையாக கூந்தலில் அணிவர். பொதுவாக கூந்தலை பின்னி கட்டிக்கொள்பவர்களின் வாழ்க்கை இனிமையாக அமையும் என்பது சான்றோர் கருத்தாகும். பெண்கள் எப்போதுமே உணச்சிவசப்படுபவர்கள் சில சந்தப்பத்தில் நிதானத்தை இழந்துவிடுபவர்கள். இயல்பாகவே சாநித்தியம் உள்ளவர்கள். அதனால் அவர்கள் தமது காமத்தை அடக்கி சிந்து செல்பட வேண்டியவர்கள். அதனால் பிரமச்சாரியம் கடைப்பிடிக்க குண்டலினியை ஞாபகப்படுத்தவே கூந்தலை அப்படி அமைத்துள்ளனர் சித்தர்கள். கன்னகி கோவலன் கதையில் கன்னகி கற்புள்ளவள் கோலனின் இழப்பை தாங்காது தலையை மயிரை விரிதாள் மதுரையே அழிந்தது. இதற்கு உட்பொருள் ஒன்று உண்டு. பெண் தலை மயிரை வித்தால் தன்நிலையை இழப்பாள் இதனால் குடும்பம் சீர்கெடக் கூடியவாப்புகள் அதிகம். அதற்காக தலை மயிரை விரித்தவர் எல்லா இப்படிப்பட்டவர்களும் இல்லை பின்னி கட்டியவர்கள் எல்லாம் பெறுமையானவர்களும் அல்ல. இது பொதுவான கருத்து புறநடைகளும் உண்டு.
குண்டலினி சக்தியை உணர்ந்து அனுபவித்து உலகு கொடுத்தவர் பாம்பாட்டி சித்தர் இவருடைய சமாதி மருதமைலயில் இருக்கின்றது. அவர் வேடுவகுலத்தைச் சேர்ந்தவர் அவர் பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர். இவர் ஒரு நாள் பாம்பை பிடிக்க புத்துக்குள் கையை விட்ட போது புத்தினுள் இருந்து குரல்வரக் கேட்டார்' 'நிறுத்து உன்னுள்ளே ஒருபாம்பு இருக்கின்றது அதை பிக்க முயற்சி செய்' என்று இதைக்கேட்டதும் அதிர்ந்து போனார். இது என்னடா புத்திலிருந்து மனிதக்குரல் புத்தை உடைத்த போது அதிலிருந்து தென்பட்டார் தவயோகி அவரின் ஆசிபெற்று தவத்தில் தன்னை மறந்தார் சித்தர். குண்டலினி சக்தியை தன்னுள் உணந்தார் அதை உலகம் அனுபவிக்க செய்தார் சித்தர். 'தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்னும் முதுமொழிக்கமைய உலகம் அனுபவிக்கச் செய்தவர்கள் சித்தர்கள்.
"பஞ்சபூதங்கள் உடலையும் உலகையும் இயக்கும் மாபெரும் சக்தி மூலங்கள் "
பஞ்சபூதம் என்னும் போது அவை மண், நீர், நெருப்பு, வாயு ஆகாசம் என்பவை ஆகும். இவற்றினால் ஆனவை எமது உடலும் நாம் வாழும் உலகமும். இதனாலேயே சித்தர்கள் 'அண்டத்தில் உள்ளவை பின்டத்திலுமாம்' என்பர். எமது உடலில் ஆதாரங்களாக அமைந்தவை மண் ஆனா பூமி அவைகள் உடல் இயங்கத்தேவையான கோமோன்களை உற்பத்தி செய்யும் பூமியாகும். ஆவை ஆறு ஆதாரங்களாக உள்ளது. உணவிலிருந்து ஊட்டச்சத்தை பிரித்து எடுப்பதற்கும் உடலின் வெப்பத்தை பாதுகாத்து சமப்படுத்துவதற்கும் கழிவை வெளியேற்றுவதற்கும் நீர் தேவைப்படுகின்றது. அதன் செயல் பாட்டை செய்ய ஆகாசம் தேவை. உணவு சமிபாடடையும் போது வாயு உண்டாகின்றது. உன்டாக்கி ஆகாசப்பகுதிகளை நிறப்புகின்றது. இவ்வாறு உடல் செயல்பட பஞ்சபூதங்கள் உதவுகின்றது.
வாயு பிரதானாவாயுகளாக ஐந்தும் உப வாயுகளாக ஐந்தும் இயங்குகின்றது. ஆபானன் மலம், சலம், இந்திரிய வெளியேற்றத்துக்கு பயன் படுகின்றது இது மூலாதாம் சுவாதிட்டா தானங்களில் இயங்குகின்றன. சமானன் வயிற்றில் உணவு செரிமானத்துக்கு உதவு கின்றது. இது மணிப்பூரகத்தில் இருப்பது. பிராணன் நெஞ்சிப்பகுதியான அனாகதத்தில் இயங்குவது இது இரத்தத்தை பிராண வாயு சேர்த்து உடலெங்கும் உடல் இயக்கத்துக்கு இழுத்துச் செல்வது. அடுத்தது வியானன் இது விசுத்தியாகிய கழுத்துப் பகுதியில் மூச்சுக் காற்றாகவும் பேச்சுக்கான சத்தம் வெளிவர சேவியில் கேட்க உதவ இயங்குவது. அடுத்து உதானன. இது சகத்திராதானத்தில் இயங்குவது. உயிர் உருவாகும் போது பெண் முட்டையில் ஆண் அணுவை சேர்க வைத்து உயிரை பாதுகாத்து உயிர் பிரியும் போது வெளியேறுவது. இவை பிரதான வாயுக்களாகும். இதால் கிரியை வழிபாட்டில் இறைவனுக்கு உணவு சமர்ப்பிக்கும் போது. சிவாச்சாரியர் அபானாய சுவாகா, சமானாய சுவாகா, பிரானாய சுவாகா, வியானாய சுவாகா, உதானாய சுவாகா என்னும் மந்திரத்தை பிரையோகிப்பார். சுவாகா என்பது சூரிய சக்தியாகும். சுவாகா என்றால் தேவர்களுக்கு அக்னி மூலம் கொடுக்கப்படும் அவியை கொண்டு சேர்ப்பவள் என்று பொருள் படும். பொருள் இயங்க வேண்டுமானால் சக்தியாக மாற வேண்டும். சக்தியாக மாறினால் தான் பலனை பெற முடியும். சூரிய சக்தி கதிர்களாக மாறி அதை மரங்கள் இலைகளின் மூலம் உணவாக்கி இதை மரம் பெற்று மரத்தின் பயனாக எமக்கு அளிக்கின்றது. மரத்தின் பயன்களை நாம் உண்ணும் போது அது உடலை இயக்கும் சக்தியாக மாற வேண்டும். அதற்கான பீடங்களே ஆறாதாதம். இந்து மதத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் (கிரியைகளும்) அர்த்தமுள்ளவை. இவைகளை வகுத்துத் தந்தவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் பஞ்சபூதங்களின் மருத்துவ குணம் பற்றி கூறும் கருத்க்களைப் பார்ப்போம். பிருதிவியின் (பூமியின்) குணம் பற்றிக் குறிப்பிடுகையில்
'பூசவிரணம் பொருமல்போம் பொன்முதலாம்
ஆசையுள்ள பண்ட மதிலுண்டாம் - நேசமதாய்த்
தின்றிடிற் பாண்டு செழிக்குமிகத் தேமொழியே
சென்றுலகில் அண்குணத்தைத் தோ'.என்றனர் சித்தர்கள்.
இரணம் என்னும் நோயும் பொருமல் என்னும் நோயும் போகுமாம் பாண்டு நோய் உண்டாகும். ஆத்துடன் பொன் மற்றும் பண்டங்கள் தோன்றும் என்கின்றனர் சித்தர்கள். பூமி பிறப்புக்கு ஆதாரம். ஏனேனில் ஆசைக்கு காரணம்.
அப்புவின் (நீரின்) மருத்துவக்குணம் பற்றிக் குறிப்பிடுகையில்
காசமறுந் தந்தங்கழலாது மேகமுதல்
வீசு மனறணியும் வீரியமாம் - வாசமென
உந்திவளர் குன்மமுதிரஞ் சொறியிவைபோம்
இந்த நறுந் தண்ணீருக்கே' என்றனர் சித்தர்கள்.
காசநோய், குன்மம், சொறி, தேகவனம், மேகம் என்பன இல்லாதொழியும் பல்லிறுகள் பலமடையும். பொதுவாக உடலில் நீர் குறையாது பராமரிப்பது அவசியம். நீர் இழப்பு உடலுக்கே அபாயத்தை ஏற்படுத்த கூடியது. நீர் பராமரிப்பு தெடர்பாக சித்தர்கள் நிறையவே கூறியுள்ளனர். 'பேர்து நீர் அருத்தக் கூடாது. ஏந்த எந்த நேரத்தில் நீர் அருந்த வேண்டும். நீரை சுரக்கி உண்ண வேண்டும். நீர் ஒரு உணவு என்பது பற்றி எல்லாம் சித்தர்கள் வாழ்வியல் என்ற கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.
தேயுவின் (நெருப்பின்) மருத்துவக் குணம் பற்றிக் குறிப்பிடுகையில்
கண்டைக்கா னோயுள்வலி காதம்போங் காய்ந்தக்கால்
விண்டே பலபிணியும் விட்டேகும் - விண்டோய்
பொருப்பனைய வட்டமுலைப் பூவையே நாளும்
நெருப்பி னதுகுணங்களா ணீ' என்றார்.
காய்ந்தால் கண்டைக்கால் நோய், உள்வலி, பல பிணிகளும் போம் என்றார். காலில் ஏற்படும் பிணிகளுக்கு நேருப்பில் காச்சிய மருந்துளைப்பயன் படுத்துவதை கண்கின்றோம். உதாரணமாக கீல் வாததத்துக்கு எரிக்கிலையை செங்கல்லை சூலையிட்டு அதில் எரிகிலையை வைத்து கைலை அதில் அழுத்திவைப்பதை நாம் கண்டிருக்கின்றோம்.
வாயுவின் மருத்துவக்குணம் பற்றி குறிப்பிடுகையில்
'மேகக் கடுப்பை விளைவிக்கும் வீறிநின்ற
தாக மனலிளைப்பைச் சாந்திசெய்யு – மேகத்தின்
புண்ணோய்க்கும் பொல்லாது பூவையரே ரூட்சைக்குங்
குண்ணோய்க்கு மாகாது காற்று' என்றார்கள்.
ஆனலை போக்க வல்லது. இதனால் இளைப்பு நோய் தாகம் இவையும் போக்க வல்லது. மேகக கடுப்பை உண்டாக்கும். மேகப்புண்னை உண்டாக்கும். குண்ணோய்குமாகாது.
தே- ஆகாயத்தின் மருத்துவக்குணம் பற்றிக் கூறிப்பிடுகையில்
'உலகுமன மும்பலவா மோடதியு மண்ணுஞ்
சலமுமன லுங்காலுஞ்சாற்ற – அலகில்
அநந்தம் பொருளு மடங்க வழிநல்கும்
அநந்தம் தனைக்கண் டறி' என்றனர் சித்தர்கள்
உலகுக்கு மனமும் வலவித பொருட்களும் உண்டாகும் எனக் குறிப்பிடுகின்றனர்.
பஞ்ச பூதங்கள்டை கட்டுப்படுத்தி செயல்படுத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். ஒரு தாய்க்கு மகன். இன்னொருத்திக்கு கணவன். பிள்ளைக்கு தந்தை. தங்கைக்கு அண்ணன். தம்பிக்கு அண்ணன். ஆனால் எல்லா உறவு முறைகளும் ஒருவனுக்கே. அவனது கடமைகள் உறவு முறைக்கு ஏற்ப வேறுபடுவது போல பிரபஞ்ச பரம் பொருள் தேவைக்கு ஏற்ப சக்தி பெற்று. தனது செயலில் வேறுபட்டு பேதமுறுகின்றது. தாயும், தாரமும், தங்கையும் பெண்ணே ஆனால் அதன் தன்மை வேறு. இதுவே மூத்தி பேதமாகும். பூமிக்கு அதிபதி பிம்மா அவர் பணி படைத்தல். படைப்புக்கு காரணம் விணை அதனை கர்மா என்பர் அதன் சக்தி சரஸ்வதி ஞானத்துக்கு அதிபதி படைப்பு நிகழ காரணம் கர்மா என்றல் ஞானம் இருந்தால் பலன் கருதாத கருமம் நடை பெறும். அதாவது எதிர்பார்பில்லாத கருமம். எதிர்பபார் பில்லாத கருமம் துக்கத்தை ஏற்படுத்தாது இதனால் பாவ புண்ணியம் இல்லை பாவ புண்ணியம் இல்லாவிட்டால் பிறப்பு இருக்காது. நீருக்கு அதிபதி விஸ்ணு அவர் பணி காத்தல். மரம் வாழ நீர் அவசியம். உடல் விடுதை பெற வேண்டுமானால் கருமத்தின் பலனை அறிகின்ற ஞானத்தை பெறும் வரை உடலை காப்பதுடன் பிறபிலிருந்து காக்க வேண்டியுள்ளது. செல்வத்துக்கு அதிபதி இலக்கும் பிறப்யிறப்பில்லா பெருவாழ்வு என்னும் செல்வதை தருபவள் அவள். எமக்கு கிடைக்கும் செல்வம். எம் மூலம் பிறருக்கு கொடுத்து திருமகளின் பணி செய்யவே சந்தர்ப்பத்தை அன்னை எமக்கு வழங்கி இருக்கின்றாள். ஆதை எமக்கு என வைத்துக் கொண்டால் எமது சந்ததிக்கு சேர்த்த கறும மூட்டை அதனால் சந்ததி விமேசனமின்றி அழியும் என்பதே நியதி. தானும் அனுபவித்து அதன் மூலம் பிறரும் அனுபவிப்பதே நன்மை பயக்கும். 'தேன் எடுத்தவன் கையை நக்காமலா விடுவான்' என்பது முது மொழி. செல்வம் என்பதிலே அதன் கருத்து இருக்கின்றது. நெருப்பு அதில் எதை இட்டாலும் வெண்மை ஆக்குவது. அதுகட்டுமல்ல ஒரு பிடி நீறு கிடைக்கும். அதற்கு உருத்திரன். அவன் கறுமத்தை அழிப்பவன். ஆவனின் சக்தி உருத்திராணி அவள் நம்மை புனிதப்படுத்துபவள் திரிபுரங்களை அழிப்கின்ற திரிபுரசுந்தரி ஆணவம், கன்மம், மாயை இவையே திரிபுரம். வாயு மறைத்தல். இதற்கு அதிபதி பரமேஸ்வரன். அவன் விசுத்தியில் மறைந்து நிற்பான் அதன் சக்தி பரமேஸ்வரி அடுத்து ஆகாசம் அது அருளள் அதிபதி சதாசிவன் அதன் சக்தி மனோன்மணி மனத்தை மறைத்து புத்தியை விளிப்படையச் செய்வாள் புத்தி விளித்தால் சித்தம் தெளியும் சித்தம் தெளிந்தால் சிவலிங்கம் தெரியும் சத்தத்தினுள் சதாசிவம் தெரியும்.
download (5)இதுவே உலக இயக்கத்திலும் உண்டு. ஆகாசத்திலிருந்து வாயு அதிலிருந்து நெருப்பு அதிலிருந்து நீர் நீரிலிருந்து நிலம் தோன்றியது. நிலத்திலிருந்து 'புல்ஆகி, பூடுஆய், புழுஆய் மரம்ஆகி , பல்மிருகம்ஆகி பறவைஆகி பம்புஆகி கல்ஆய் மனிதர்ஆய் பேய்ஆய் கணங்கள்ஆய் வல்அசுரர்ஆய் முனிவர்ஆகி தேவர்ஆய் செல்லாஅ நின்ற அத்தாவர – சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்' என்று மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தில் இயம்பி அருளியுள்ளார். இதுவே படைப்பின் இரகசியம். குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என கூப்புக் கொள்கையும் கூறுகின்றது. இங்கும் விலங்குகளின் பின் தான் மனிதன் தோன்றியதை கூறுகின்றது. பிரபஞ்சப்படைப்பும் இப்படித்தான் தோன்றியது.
இதை அடிப்படையாகக் கொன்டு பூஜை செய்யும் போது பூர்வாங்க பூஜையில் ப்ராணப்ரதிஷ்டா செய்த பின் அதாவது விம்பத்தில் பிராணனை பிரதிஷ்டை செய்த பின் பஞ்சபூதங்களுக்கு பூஜை செய்வர் அதில்
'லம்' – ப்ருதிவ்யாத்மிகாயை கந்தம் ஸமர்ப்பயாமி ('லம்' என்பது பூமியின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி பூமியை நினைத்து சந்தனத்தை விம்பத்தில் ஸமர்ப்பித்தல்)
'ஹம்' – ஆகாசாத்மிகாயை புஷ்பை: பூஜயாமி ('ஹம்' என்பது ஆகாயத்தின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி பூவால்; பூசை செய்தல்)
'யம்' – வாய்வாத்மிகாயை தூயமாக்ராபயாமி ('யம்' என்பது வாயுவின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி துபம் காட்டுதல் வேண்டும்)
'ரம்' – அக்னியாத்மிகாயை தீபம் தர்சயாமி ('ரம்' என்பது தீயின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி தீப தரிசனம் செய்ய வேண்டும்.)
'லம்' – அம்ருதாத்மிகாயை அம்ருதம் மஹாநைவேத்தியம் நிவேதயாமி ('லம்' என்பது நீரின் பீஜாச்சரம் அதாவது ஒலி அலை அந்த ஒலி அலையை எழுப்பி நைவேத்தியம் நிவேதம் செய்ய வேண்டும்)
'ஸம்' – ஸர்வாத்மிகாயை ஸர்வோபசாரம் - பூஜாம் ஸமர்ப்பயாமி ('ஸம்' என்பது எல்லா உபசாரங்னையும் சம்ப்பிப்பதாக கருதப்படும்.)
இவ்வாறு பஞ்கபூதங்களை பூஜை செய்து அகமும் புறமும் பிரிதிப்படுத்துவது இந்து சமய கிரியை வழிபாட்டில் முக்கியமானது. ஆதைவிட எந்த கிரியைகளை ஆரம்பிப்பதானாலும் அங்கு முதலில் செய்வது பூமி பூஜை பின்னர் ஆஸன பூஜா, கண்ட பூஜா, கலசபூஜா, தீப பூஜா என பலவகையிலும் பஞ்சபூதங்களுக்கு பூஜா நடை பெறுகின்றது.
எனவே பஞ்சபூதங்கள் உள்நின்று உணர்தும் அதே சமயம் உலகையும் இயக்குகின்றது. உலக இயக்கத்துக்கு தடை வரும் போது தடையாக அமைவதை சீர் செய்ய சீற்றம் கொண்டு சீராக்கும் வல்லமை படைத்தது பஞ்பூதங்கள். அது அண்டத்திலும் பிண்டத்திலும் நடக்கும். இயற்கையை சீற்றம் கொள்ள காரணமான மனிதனையும் அவனால் உருவாக்கப்பட்ட பொருட்களையும் அழிக்கும். ஆசை அளவற்று பேராசைஆகி தான் மட்டும் என்னும் வாழ்கை வாழ்து பொதுவாக எல்லோருக்கும் சொந்தமானதை ஒரு சிலருக்கு சொந்தமாக்கிக் கொண்டதன் விழைவு இயற்கை சீற்றமே. பணம் படைத்தவன் பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க நினைத்ததே! முடிந்ததா? இறப்பை வெல்ல. அல்லது நிம்மதியான வாழ்கை வாழ. நோயற்ற பெருவாழ்வு வாழ. எல்லாம் அவன் செயல் விட்டதா கறுமா பின் தொடர்தது கறுமா. அதன் விளையாட்டை நிறுத்த முடிந்ததா? இதை எல்லாம் முன்னமே சிந்து செயல்பட்டிருந்தால் பற்றற்ற செயல் காபாற்றி இருக்கும் உலகத்தை அவசியமானதை இயக்கையே எமக்கு தரைவார்த்திருக்கும். இப்போதாவது சிந்தியுங்கள். செய்ததை ஒன்றும் செயமுடியாது. அதை நாம் தான் அனுபவிக்க வேண்டும். செய்ய இருப்பதையாவது சரியாகச் செய்வோம். அன் நற்பலன் செய்த தீயதை ஓரளவுக்காவது சீரக்கி நன்மை தீமை யற்ற பற்றற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
images (2)ஐம்பூதங்களின் வடிவும் அவற்றாலாம் உடல் என்பதை உண்மை விளக்கம் பின்வருமாறு கூறுகின்றது
'நாற்கோணம் பூமிபுனல் நண்மதி யின்பாதி
ஏற்குகனல் முக்கோணம் எப்போதும் - ஆர்க்கும்
ஆறுகோணங் கால்வட்டம் ஆகாயம் ஆன்மா
உறுகாயம் ஆமிவற்றால் உற்று'
துல பஞ்சபூதங்களின் உடல் நீர் நிலம் தீ ஆகாயம் ஆகும் அதன் வடிவங்கள் முறையே நாற்கோணம், பாதிமதி
முக்கோம், அறுகோணம்,வட்டமாகும் எனறு கூறுவதுடன் அதன் நிறம் எழுத்து என்வற்றையும் கூறுகின்றது.
பொன்பார் புனல் வென்மை பொங்குசிவப்பு
வன்கால் கருமைவளர் வான்றூமம் - என்பார்
எழுத்து லவரயவப் பாராதிக் கென்றும்
அழுத்தமாய் நிற்கு மது'
அதாவது நிலம் பொன்நிறம் நீர் வென்மைநிறம் தீ சென்நிறம் காற்று கருமைநிறம் ஆகாயம் புகை விறம் அவை முறையே லவரயஅ என்னும் எழுத்துக்களால் குறிப்பிடப்படுகின்றது. பஞ்சபூதங்களின் அடையாளமாக கருதப்படுகின்றவற்றை உண்மை விளக்கம் குறிப்பிடுகையில்
"குறிகுலிசங் கோகநதங் கொள்சுவத்தி குன்றா
அறுபுள்ளி யாரமுத விந்துப் - பிறிவின்றி
மண்புனல்தீக் காவானம் மன்னும் அடைவேயென்
றொண்புதல்வா வாகமமோ தும்".
நிலத்தின் அடையாளம் வச்சிரம், நீரின் அடையாளன் தாமரைமலர், தீயின் அடையாளம் சுவத்திகம், காற்றின் அடையாளம் அறுபுள்ளி, ஆகாயத்தின் அடையாளம் அமுதத்துளி என்பனவாகும் இதுபோன்ற அதிதேவதைகளும் கூறப்படுகின்றது
'பாராதி ஐந்துக்கும் பன்னுமதி தெய்வங்கள்
ஆதார ரயனாதி யைவராம் -ஒரோர்
தொழிலவர்க்குச் சொல்லுங்கால் தோற்றமுத லைந்தும்
பழுதறவே பண்ணுவர்காண் பார்'
ஆதி தெய்வங்களாக முறையே பிரம்மா விஷ்ணு உருத்திரன் மகேஸ்சுவரன் சதாசிவன் ஆகும். ஐப்பூத இயல்பு பற்றி குறிப்பிடுகை
'மண்கடின மாய்த்திரிக்கும் வாரிகுளிர்ந் தேபதமாம்
ஒண்களல்சுட் டொன்றுவிக்கும் ஒவாமல் - வண்கால்
பரந்துசலித் துத்திரட்டும் பர்க்கிலா காயம்
நிரந்தரமாய் நிற்கும் நிறைந்து'
பஞ்சபூதங்கள் முறையே நிலம் கடினமானது எனவே அது கடினகுணத்தையும் நீர் குளிர்ச்சியானது அதனால் குளிந்த தன்மையும் தீ சுட்டு ஒன்றாக்கும் தன்மையுடையது காற்று பரந்த தன்மையினால் பரந்து ஒன்று திரட்டும் தன்மையும் ஆகாயத்தில் எல்லா விடயங்களும் நடைபெறுவதால் நிறைந்து நிற்கும் தன்மையும் பெறுகின்றது.
உடல் உலகை உணர ஐம்புலன் உண்டு. அவை ஐம் பொறிகளினுடே அனுபவிக்கின்றது. ஐம்பொறிகள் ஐம்புதங்களின் தொடர் பால உடலை இயக்குகின்றது. இனை உண்மை விளக்கம் எடுத்து இயம்புகின்றது.
'உள்ளபடி மாபூதம் ஓதினேம் உன்றனக்குக்
கன்னமிகும் ஐம்புலனுங் கட்டுரைக்கில் - மௌ;ளவே
ஓசை பரிகம் உருவம் சுவைநாற்றம்
ஆசைதரும் ஐம்புவனே யாம்'
imagesநேரிய நெறில் செல்ல விடாது இழிந்த கள்ள வழியில் ஆன்மாவை இட்டுச் செல்லும் ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம்; என்னும் ஐம்புலன்களாம். விநாயகர் அகவலில் 'ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்......' என்று ஒளவையாரும் திருவாசகத்தில் 'ஐம்புலன் தன்னை கட்டழிக்க வல்லானை.....'என்று மணிக்க வாசகரும் அருளியதிலிருந்து அவை ஆன்மீகத்துக்கு எதிரானது என்பது புலனாகும். ஐம்புவனை உணர ஐம்பொறிகள் உறுதுணைபாகின்றது.
'ஞானேந் திரியங்கள் நன்றா வுரைக்கக்கேள்
ஊன மிகுபூதம் உற்றிடமா - ஈனமாம்
சத்தா தியையறியுந் தகானஞ் செவிதோலகண்
அத்தாலு மூக்கென் றறி'
ஞானேந்திரியங்களை பற்றி நன்றாக உரைக்கின்றேன் கோள் இவை ஐந்து பொறிகளும் ஆன்மாவுக்கு துன்பத்தை மிகுதியாக விளைவிக்கும் பஞ்சபூதங்கின் இடமாக பொருந்தி நிற்கும் இழிவுடைய சத்தம் புலன்களை அறியகின்றதாமாகிய சேவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன. இவை பஞ்சபூதங்களுடனான தொடர்பை கூறுகையில்
'வானிடமா நின்றுசெவி மன்னும் ஒலியதலை
ஈனமிகுந் தோல்கால் இடமாக – ஊனப்
பரிசந் தனையறியும் பர்வையிற்கண் அங்கி
விரவியுரு வங்காணு மே'
செவி ஆகாயத்தின் தொடர்பால் சத்தத்தையும் தோல் காற்றின் தொர்பால் பரிசத்தையும் கண் ஒளியின் தொடர்பால் உருவத்தையும் அறியும் அடுத்து
'நன்றாக நீரிடமா நாவிரதந் தானறியும்
பொன்றா மணம்மூக்குப் பூவிடமா – நின்றறியும்
என்றேது மன்றே யிறையா கமமிதனை
வென்றார்சென் றாரின்ப வீடு'.
நாக்கு நீரின் தொடர்பால் இரத்தத்தையும் மூக்கு நிலத்தின் தொடர்பால் கந்தத்தையும் அறிவர் இவ் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வெற்றி கொண்டவன் பெரின்பத்தை பெறுவர். எனவே பஞ்சபூதங்கள் ஞாநேந்திரங்களுடன் தொடர்பு கொள்வதால் பஞ்சபூதங்களிலானது உடல். அதுமட்டுமல்ல ஞானேதிரங்களை போல கன்மேந்திரங்களுடனும் பஞ்சபூதங்கள் தொடர்பு கொள்கின்றது.
'கண்ணுதல்நூ லோதியிடுங் கன்மேந் திரியங்கள்
எண்ணும் வசனாதிக் கிடமாக – நண்ணியிடும்
வாக்குப்பா தம்பாணி மன்னுதம் உபத்த
மாக்கருது நாளு மது'
கன்மேந்திரிகள் வாக்கு, பாதம், பாணி, குதம், உபத்தமாகும் அதாவது வாக்கு, பாதமும் கையும், மலவாசலும், ஆண்பெண் குறியும் ஆகும். இவை விணைக்கீடாக செயல்படும். எண்ணுவதை வசனிப்படுத்தல் நடத்தல் தானம் செய்தல் கழித்தல் இன்புறுதல் ஆகியவற்றுக்கு இடமாக பொருந்தி நிற்கும். என ஆகம நூல்கள் கூறுகின்றன. இவை தூல பஞ்ச பூதங்களை பொருந்தி நிக்கின்றன இதனை உண்மை விளக்கம் எடுத்து இயம்புகின்றன.
'வாக்காகா யம்இடமா வந்துவச னிக்குங்கால்
போக்காருங் காற்றிடமாப் புல்கியனல் - ஏற்கும்
இடுங்கை குதநீ ரிடமா மலாதி
விடும்பா ரிடமுபத்தம் விந்து'
வாய் ஆகாயத்தினிடமா பொருந்தி நின்று வார்த்தை பேசும் பாதம் காற்றினிடமாகப் பொருத்தி நின்று நடத்தல் செய்யும் கை தீயின் இடமாகப்பொருந்தி நின்று ஏற்றலும் ஈதலும் செய்யும் மலவாயில் நீரைப் பொருந்திநின்று மலம்கழிக்கும் ஆண்பெண் குறி நிலத்தினிடமாகப் பொருந்தி நின்று தாதினை விட்டு இன்பமடையும் இப்படியாக பஞ்சபூதம் எமது உடலில் பொருந்தி நிற்கின்றது.
ஆறாதாரத்தின் உட்பொருளும் அதுதான் மூலாதாரசக்கரம் சுவஸ்தானச்சக்கரம் என்பன நிலம் மணிப்பூரகச்சக்கரம் நீர் அனாகசக்கரம் தீ விசுத்திச்சக்கரம் காற்று ஆக்ஞா சக்கரம் ஆகாசம் எனவே பஞ்சபூதத் தத்துவத்தால் ஆனது உடல்
இவ்வாறு பஞ்சபூதங்கள் பற்றி குறிக்கின்றது உண்மை விளக்கம் இவ் ஐம்பூதங்களால் ஆகனது உடல் உடலும் இத்தன்மையை உடையதே ஓங்காரத்திலே உள்ளொளி பெருக்கி ஆங்காரம் அடங்கி ஓங்காரம் ஒலித்தது
'சிந்தியுங்கள் சிந்தனையில் விழிப்பிருந்தால் அத்தனையும் வந்து விடும்'

குங்குமப்பூவின் மருத்துவக்குணம்".

"குங்குமப்பூவின் மருத்துவக்குணம்".
பொதுவாக குங்குமப்பூ வென்றால் தாய்மை அடைய இருக்கும் அன்ணைக்கு குழந்தை சென்றிமுள்ள வெமையான குழந்தையாக பிறப்பதற்கே கருவுற்று இருக்கும் வேளையில் பாலில் இட்டு அல்லது தேனுடன் கொடுப்பார்கள். சிலர் வெற்றிலையுடன் சேர்த்தும் கொடுப்பார்கள். சிலர் குழந்தை பிறந்த பின் கிரந்தி ஏற்பட வாய்பு இருக்கும் அதை தடுப்பற்காக என்று கூறுவர். இதை விட வழிபாடுகளிலும் பயன் படுத்தப்படும் குங்குமத்துக்கு குங்குமப்பூ பயன்த்தப்படுகின்றது. இது தொடபாக காரணியாகமம் அம்மனுக்கு பொட்டு வைக்க குங்குமப்பூவை பச்சக்கற்பூரம் சேர்த்து பள்ளீரில் அரைத்து குழம்பாக்கி வைத்தல் வேண்டும். என்று குறிப்பிடுகின்றது. அத்துடன் அக்னி காரியத்தில் குங்குமப் பூ பயன் படுத்தப்படுகின்றது. இவ்வாறு சிறப்பு மிக்க குங்குமப் பூவின் மருத்துவக் குணம் பற்றி சித்தர்கள் கூறும் மருத்துவக் குணங்கனை நோக்கும் போது பதாத்த குணசிந்தாமணியில் சித்தர்கள்
'விந்துநஷ்டந் தாகம்அண்டம் மேகசஞ் சூலைகபம்
உந்திசுரம் பித்தம்கால் உச்சிவலி – முந்துகண்ணில்
குங்குமப்பூ வோடுறுநோய் சார்த்தியிவை நீங்கவென்றாற்
குங்குமப்பூ ஓர்இழைக் கொள்.'
 


ஏன்றனர். இப்பாடலின் பொருளை நோக்கும் போது.


1. 'விந்துநஷ்டந் தாகம்அண்டம் மேகசஞ் சூலைகபம்': விந்து நட்டம், தாகம், அண்டவாதம், மேகசலம், சூலை, கபம். என்னும் நோய்கள் தீரும்.


2. 'உந்திசுரம் பித்தம்கால் உச்சிவலி – முந்துகண்ணில்': சுரம், பித்தம், கால்வலி, உச்சிவலி, கண்ணில் உண்டாகும் பூ உடன் சேர்ந்த நோய், வாந்தி போன்றவற்றை போக்வல்லது குங்குமப்பூ.
அடுத்து இன்னுமோர் பாடலில்
'குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்ட பீநசநோய்
துங்கு செவித்தோஷஞ் சலதோஷம் - பொங்கு
கதுரதோ ஷந்தொலையும் மாதர்கருப்ப
உதிரதோ ஷங்கள் அறும் ஓது' 

என்றனர். இப்பாடலின் பொருளை நோக்கும் போது
1. 'குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்ட பீநசநோய்': பீநிச நோயைப் போக்க வல்லது. குங்குமப்பூ.
2. 'துங்கு செவித்தோஷஞ் சலதோஷம் - பொங்கு': காதுநோய், சலதோஷம், என்பவற்றைப் போக்க வல்லது குங்குமப்பூ
3. 'கதுரதோ ஷந்தொலையும் மாதர்கருப்ப உதிரதோ ஷங்கள் அறும் ஓது': மதுமேகம், மாதர் கரு உந்தி தோஷம் போக்க வல்லது குங்குமப்பூ.
சித்தர்கள் பாடலை நோக்கும் போது தாய்மை அடைந்த பெண்களுக்கு குங்குமப்பூ கரு உந்தி தோஷம் மட்டுமே போக்க வல்லது. அதைவிட அது பலநோய்களுக்கு அருமந்தாகும் என்பதை சித்தர்கள் எவ்வளவு அழகாகப்பாடியுள்ளனர். சித்தர்கள் மனினுக்குல நன்மையில் எவ்வளவு அக்கறையாக இருந்துள்ளது இதிலிருந்து புலனகின்றது.

Saturday, March 24, 2018

ஸ்ரீவித்தை பஞ்சதசாசஷரி மந்திரம்

ஸ்ரீவித்தை பஞ்சதசாசஷரி மந்திரம்
சிவ: சக்தி: காம: சஷிதி- ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: சக்ரஸ்- ததனு ச பரா-மார-
ஹரய:|
அமீ ஹ்ருல்லோகாபிஸ்- திஸ்ருபி-ரவஸானேஷூ கடிதா
பஜந்தே- வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்||
தாயே சிவ பீஜாசஷரமான 'க' சக்தி பீஜாசஷரமான 'ஏ' மன்மத பீஜாசஷரமான 'ல' அதன் பின்னர் சூரிய பீஜமான :ஹ' குளிர்ந்த கிரணங்களுடைய சந்திர கிரணங்களுடைய 'ஸ' மன்மதபீஜமான 'க' ஹம்ஸ மந்திரத்திலுள்ள ஆகாச பீஜமான 'ஹ' இந்திரனுடைய பீஜமான 'ல' அதற்குப்பிறகு பரா பீஜமாகிய 'ஸ' மன்மத பீஜமாகிய 'க' ஹரிபீஸமாகிய 'ல' உன்னுடைய இவ்வசஷரங்கள் மூன்று புவனே சுவரீ பீஸமான ஹ்ரீங்காரங்களுடன் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் வேர்க்கப்பட்டு உன்னுடைய மந்திரத்தின் அவயவங்களாக அமைகின்றன.
இங்கு 'க' என்னும் அசஷரத்தை முதலில் உடைய 'காதிவித்தை' என்னும் பஞ்சதசாசஷரீ மஹாமந்திரம் மறைமுகமாகக் கூறப்டுகின்றது. முதலாவதாகிய வாக்பவகூடம் (க-ஏ-ஈ-ல-ஹ்ரீம்) பிரளயகால அக்னி போல பிரகாசிப்பதைய் மூலாதாரத்திலிருந்து பிரகாசித்து அனாஹதத்தைத் தொட்டுகின்றது. இரண்டாவதாகிய காமாஜகூடம் (ஹ-ஸ-க-ஹ-ல- ஹ்ரீம்) கோடி ஸூர்யப் பிரகாசமுடையதாய் அனாஹதத்திலிருந்து கிளம்பி ஆஜ்ஞா சக்கரத்தைத் தொடுகின்றது. மூன்றாவதாகிய சக்திகூடம் (ஸ-க-ல-ஹ்ரீம்) கோடி சந்திரப்பிரகாச முடையதாய் பிரகாசித்து ஆக்ஞையிலிருந்து லலாட மத்திவரை வியாபிக்கின்றது. மாலையிலுள்ள ரத்தினப்பரல்களைப்போல் மூன்று கூடங்களிலும் உள்ள வர்ணங்கள் வரிகையாக ஒன்றன்மேல் ஒன்றாகச் சிந்திக்கப்பட வேண்டும். முலாதாரத்தி; உதித்த நாதம் இவ்வெழுத்துக்களிடையே மணிகளை ஊடுருவிச் செல்லும் சரடுபேல் விளங்கும். மூன்று கூடங்களிலும் ஹ்ரீங்காரத்தில் உள்ள பிந்துகலைகள் மூன்றும் வஹ்னிகுண்டலினீ, ஸூரியகுண்டலினீ, ஸேமகுண்டலினீ எனப்படும்.
பஞ்சதசாசஷீ மந்திரதில் உள்ள உயிர்மெய்யெழுத்துக்களினின்றே ஆகாசம்,வாயு,அக்னி,அப்பு,பிருதிவி என்ற மகாபூதங்கள் தோன்றன. ஆகாசத்தின் குணம் சப்தம் ஒன்றே வாயுவின் குணம் சப்தம், ஸ்பரிசம், ஆகிய இரண்டும். அக்னியின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம் ஆகிய மூன்றும், அப்புவின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் ஆகிய நான்கும். பிருதிவியின் குணம் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆக மொத்தம் பதினைந்து குணங்களும் பஞ்சதசாசஷீ மந்திரத்தின் விகாஸமே என பாவித்தல் வேண்டும்.
ஸ்ரீம்த்வாக்பவ-கூடைக-ஸ்வரூப- முக பஙகஜா
கண்டாத:-கடிபர்யந்த- மத்யகூட-ஸ்வரூபிணி
சக்தி கூடகதாபன்ன- கட்யதோ-பாக-தாரிணீ'
வாக்பவகூடத்தை அம்பிகையினுடைய முமமாகவும் மத்தியிலுள்ள காமராஜகூடத்தை அம்பிகையினுடைய கழுத்து முதல் இடுப்புவரையுள்ள பாகமாகவும். சக்திகூடத்தை இடுப்பின் கீழ் உள்ள பாகமாகவும் தியானித்தல் வேண்டும். என்பது லலித ஸஹஸ்ர நாமம் கூறுகின்றது.
காயத்ரி மந்திரத்தில் 'பரோ ரஜஸே ஸாவதோம்' என்னும் நான்காவது பாதத்தைச்சேர்ந்து உத்தம ஸாதகர்கள் ஜபிக்க வேண்டும். அப்போது தான் காயத்ரி வித்தை பூரணத்துவம் அடையும் அதுபோலவே பஞசதசஷரீ மந்திரத்தின் நான்காவது சந்திரகலாகூடம் ரமா பீஜமான 'ஸ்ரீம்' என்றும்,அதுவும் சேத்துத்தான் பதினாறு கலையுடன் இம்மந்திரம் பரிபூரணம் அடைகின்றது என்றும் அதனால் தான் 'ஸ்ரீவித்தியா' என்றும் அது ரஹஸ்யமானதால் இங்கு மறைத்து வைக்கப்பட்டதாய் உணரவேண்டுமட் என்றும் கூறுகின்றனர்.முதல்கூடம் ஜாக்கிரத்திற்கும் இரண்டாவது ஸ்வப்னத்திற்கும் மூன்றாவது ஸூஷூப்திக்கும் நான்காவது துரீத்திற்கும் ஒப்பிடப்பிடப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
"காதிவித்தியா பஞ்சதகர்சஷரீ மந்திர ஜபம் செய்யும் முறை"
அஸ்ய ஸ்ரீ பஞச தசாசஷரீ மஹாமந்திரஸ்ய ஆனந்த பைவ ருஷி: காயத்ரீச்சந்த: பஞ்சதாசஷர்யதிஷ்டாத்ரீ லலிதா மஹா திரிபுரஸூந்தரீ தேவதா|| 'கஏஈலஹ்ரீம்- பீஜம்| 'ஸகலஹ்ரீம்' சக்தி:| 'ஹஸகஹலஹ்ரீம்' திலகம்| ஸ்ரீலலிதாமஹாத்திரிபுர ஸூந்தரி-ப்ரஸாதஸித்த்யர்த்தே ஜபே விநியோக:||
கஏஈலஹ்ரீம், ஹஸகஹலஹ்ரீம், ஸகலஹ்ரீம் என்ற மூன்று கூடங்களையும் இரண்டுதடவை திரும்ப உச்கரித்துக் கர நியாஸமும் அங்க நியாஸமும் செய்க.
பூர்ப்புவஸ்ஸூவரோமிதி திக்பந்த:| த்யானம்||
அருணாம் கருணாதரங்கிதாசஷீம் த்ருதபாசாங்குச- புஷ்பபாண சாபாம் மணிமாதிபி- ராவ்ருதாம் மயூகை- ரஹமித்யேவ விபாவயே பவானீம்||
லம்- இத்யாதி பஞ்ச பூஜா||
மந்திரஜபம் - 'கஏஈலஹ்ரீம் - ஹஸகஹலஹ்ரீம் - ஸகலஹ்ரீம்'
பூர்ப்புவஸ்ஸூவரோமிதி திக்விமோக:|| த்யானம் லம்- இதர்யாதி பஞ்ச பூஜா||
ஸமர்ப்பணம்- குஹ்யாதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ரு ஹாணா- ஸ்மத்க்ருதம் ஜபம்| ஸித்திர்ப்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திரா||
'குருவில்லா வித்தை பாழ்' என்பர் சான்றோர். ஆனாலும் குருவை பெறாதவர்கள் தமது அத்மாவை குருவாக ஏற்று மந்திர உச்சாடணம் செய்யலாம். அது சீவாத்மா அதற்கு தெரியதது எதுவும் இல்லை. இங்கு சில விடயங்களை தருகின்றேன். 'கர நியாஸமும் அங்க நியாஸமும்' கர நியாஸம் என்பது சின்ன விரலில் இருந்து பின்வரும் மந்திரங்களை மனனம் செய்து கொண்டு பெருவிரலால் அடிவிரலிலிருந்து மேல்நோக்கி ஒவ்வொரு விரலாக தொட்டு மெதுவாக அழுத்தி சொல்லவும். உடல் சுத்தம் செய்வதைக் போல மந்திரபூவமாக உடல் அங்கங்கiயும் சுத்தம் செய்ய வேண்டும். அதில் பூஜை செய்வாற்கான கைவிரல்கனை மந்திரபூர்வமாக சுத்தம் செய்வதே கர நியாஸம் எனப்படும். அங்கங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்வதே அங்க நியாஸம் எனப்படும்.
ஓம் 'கஏஈலஹ்ரீம்' அங்குஷ்டாப்ப்யாம் நம்:|
ஓம் 'ஸகலஹ்ரீம்' தர்ஜனீப்ப்யாம் நம:|
ஓம் 'ஹஸகஹலஹ்ரீம்' மத்த்யமாப்ப்யாம் நம:|
ஓம் 'கஏஈலஹ்ரீம்'; அநாமிகாப்ப்யாம் நம:|
ஓம் 'ஸகலஹ்ரீம்' கனிஷ்டிகாப்ப்யாம் நம:|
ஓம் 'ஹஸகஹலஹ்ரீம்' கரதல-கரப்ருஷ்ட்டாப்ப்யாம் நம:| ( ஐந்து விரல்களையும் முன்னும் பின்னுமாக தொடவேண்டும்.)
அங்க நியாஸம் விரல்களால் ஒவ்வொரு இடமாகவும் தொடுதல்.
ஓம் 'கஏஈலஹ்ரீம்' இருதயாய நம:|
ஓம் 'ஸகலஹ்ரீம்'; சிரஸே ஸ்வாஹா|
ஓம் 'ஹஸகஹலஹ்ரீம்'; சிகாயை வஷட்|
ஓம் 'கஏஈலஹ்ரீம்' கவசாய ஹூம் (கைளை ஆட்காட்டி விரலை விட்டு மற்றைங மூன்று விரல்களையும் பெருவிரலுடன் சேர்த்து கைகளை மாறி தோள் பட்டையை தொடுதல்)
ஓம் 'ஸகலஹ்ரீம்' நேத்ரத்ரயாய வெளஷட்|
ஓம் 'ஹஸகஹல
ஹ்ரீம்' அத்திராய பட்| (மெதுவாக ஒருகையின் மேல் மறுகையால் தட்டுதல்)
பஞ்ச பூஜா: (பஞ்சபூதங்களுக்கான பூஜை)
ஓம் லம் - ப்ருதிவ்யாத்மிகாயை கந்தம் ஸமர்ப்பயாமி| ( சந்தனத்தை ஸமாப்;பனம் செய்தல்)
ஓம் ஹம் - ஆகாசாத்மிகாயை புஷ்பை: பூஜயாமி| ( பூவால் பூஜை செய்தல்)
ஓம் யம் - வாய்வாத்மிகாயை தூபமாக்ராபயாமி| (தூபம் காட்டுதல்)
ஓம் ரம் - அக்ன்யாத்மிகாயை தீபம் தர்சயாமி| (தீபத்தை தரிகனம் செய்தல்)
ஓம் வம் - அமிருதாத்மிகாயை அமிதம் மஹா நைவேத்தியம் நிவேதயாமி| (உணமை நிவேதித்தல்)
ஓம் ஸம் - ஸர்வாத்மிகாயை ஸர்வோபசார – பூஜாம் ஸமர்ப்பயாமி.|