Showing posts with label எம்மை வழிப்படுத்தும் சிதர்கள் அறிமுகம். Show all posts
Showing posts with label எம்மை வழிப்படுத்தும் சிதர்கள் அறிமுகம். Show all posts

Monday, March 26, 2018

பட்டினத்தார் பாடல்கள்
திருக்கோயில் அகவல்- 1
நினைமின் மனமே! நினைமின் மனமே! சிவபெரு மனைச் செம்பொனம் வலவனை நினைமின் மனமே! நினைமின் மனமே! அலகைத் தேரின் அலமரு காலின் உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க! இங்கு அலகைத் தேர் என்பது கால் நீர் அலமருகுகால் என்பது சுழலும் காற்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் தோன்றின மறையும் மறைந்தன தோன்றும் பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் உணர்ந்தன மறையும் மறைந்தன உணரும் புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம் உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம் என்றிவை அனைத்தும் உணர்ந்தனை அன்றியும் பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் கொன்றனை அனைத்தும் அனைத்தும் நினைக்கொன்றன. தின்றனை அனைத்தும் அனைத்து நினைத் தின்றன பெற்றனை அனைத்தும் அனைத்து நினைப் பெற்றன ஒப்பினை அனைத்தும் அனைத்து நினை ஒப்பின செல்வத்துக் களித்தனை தரித்திரத்து அழுங்கினை சுவர்க்கத்து இருந்தனை நரகில் கிடந்தனை இங்கு ஒப்பினை என்பது பாதுகாத்தன அழுங்கினை என்பது வருத்தம் அடைந்ததாய் என்று பொருள்படும். 9017_1207229626829_4640545_nஇன்பமும் துன்பமும் இருநிலத்து அருந்தினை அன்றொன்று ஒழியாது உற்றனை அன்றியும் புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம் என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக் கல்லினும் வலிதாகக் கருதினை இதனுள் இங்கு இருநிலம் என்பது பெரும் பூமி ,புற்புதம் என்பது நீர்க்குமிழி ,குரம்பை என்பது சிறு குடிசை ,இருவினைக்கூட்டை என்பது நல்வினை தீவினை ஆகிய பறவைகள் தங்கும் கூடு என்பது குறிப்பிடத்தக்கது. பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி மீளுங் குறும்பியும் வெளிப்படும் ஒருபொறி சளியும் நீரும் தவழும் ஒருபொறி உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி வளியும் மலமும் வழங்கும் ஒருவழி 5295_1207229346822_2288866_nசலமும் சீயும் சரியும் ஒருவழி ஒள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும் சட்டகம் முடிவில் சுட்டெலும் பாகும் உடலுறு வாழ்க்கையை ஒள்ளுறத் தேர்ந்து கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை பொறி என்பது ஐம்பொறி, சட்டகம் - உடல் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, February 26, 2018

வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள். உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்'

வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள்.
உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்'
                         இந்து சமயத்தின் வாழிபாட்டின் போது கர்ப்பூரம் பயன்படுத்துவது ஆகமமுறைப்படி வழக்கமாகும். சித்தர்கள் இதை முறைப்படி வகுத்து வைத்திருக்கின்றனர். சோடசார உபசாரங்களில் கர்ப்பூரங்களில்னாலான தீப சரிசனங்கள் காட்டப்படுகின்றது. ஒற்றை கர்ப்பூர தீபம், பஞ்சாராத்தி அவை எழுதீபம், ஒன்பது தீபம் என பலவகையில் தரிசனம் செய்கின்றனர். அவை பஞ்சேந்திரிய ஒடுக்கத்தையும் பஞ்சபூத ஒடுக்கத்தையும் அடையாளமாக காட்டப்படுகின்றது. ஏழு என்பது அதாவது ஆறாதாரத்திலும் ஏழாவது ஆதாரமாகிய சகஸ்ராதாரத்திலும் அகவொழி தோன்ற வேண்டும் என்று ஏழு தீபங்கள் உள்ள கர்ப்பூர ஆராத்தி காட்டுகின்றனர். எமது உடலில் ஓன்பது வாசல்கள் உண்டு அவை ஒன்பதும் ஒளிபெறுவதால் உண்மை நோக்கி ஒளிபெறுவதை அடயாளப்படுத்துகின்றது. அதாவது ஞாமான தீயினால் ஒடுக்கப்படுவதை குறித்துக்காட்டுவதாக அது அமையும். இறைவனின் பஞ்சகிருத்தி செல்பாட்டில் அழித்தல் என்பது ஞானமாகிய தீயினால் நாம் செய்த கருமத்;தை எரித்து பிறப்புக்கு காரணமான கருமத்தை நிறுத்துதல் அதாவது பலன்கருதா செயல் புரிதல் பற்றற்ற செயல் இதனையே கர்ப்பூர தீபம் காட்டுதல் எமக்குணத்துவது. பூஜையின் போது பச்சைக் கர்ப்பூரமே பன்படுத்தவேண்டும் என்பது ஆகமம் குறித்துக் காட்டுகின்றது. இந்துமதத்தின் எந்த கிரியையாக இருந்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும். அவை சித்தி பெற்ற சித்தர்கள் வகுத்தது. கர்ப்பூரம் மருத்துவத்தன்மை வாய்தவை இதனாலேயே மக்கள் கூடும் இடங்கள் நோய் அற்ற சுகாதாரமுள்ள இடமாக இருக்க இதனை பயன்படுத்தினர். மக்களுக்கு செய்தியை கொடுக்கும் அதே சமயம் அதன் மருத்துவதன்மையையும் உணத்தியவர்கள் சித்தர்கள்.

கர்ப்பூரத்தின் மருத்துவக்குணத்தை நோக்கும் போது

'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி
பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்
வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்
சாந்திகருப்பூரந் தால்' என்றனர் சித்தர்கள்

பொளிப்பு:
1. 'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி' : கிருமி என்பது உடலில் காணப்படும் நுண்கிருமி அதை அழிக்கவல்லது அத்துடன் சலதோசம், வலிப்பு நோய், சந்நி என்னும் நீரினால் வரும் நோய்களை காக்க வல்லது.
2. 'பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்' : பெருமுமந்தம் என்னும் நோய் இது வயிற்றில் ஏற்படுவது. தீ சுட்டபுண், பித்ததிதினால் ஏற்பட்ட சுரம் என்பவற்றை போக்க வல்லது.
3. 'வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்' : வாந்தி, பித்தம், சீதள வாதம், செவியில் ஏற்படும் நோய்கள், முகத்தில் ஏற்படும் நோய்கள் என்பன போக்க வல்லது.
4. 'சாந்திகருப்பூரந் தால்'  இவை இனைத்தையும் போக்கவல்லது கர்ப்பூரம் என்பதை சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவான கர்ப்பூரத்தின் குணத்தை குறிப்பிட்டுள்ளார்கள் சிறப்பாக நோக்கும் போது பச்சைகர்ப்பூரத்தின் குணத்தை நோக்கும் போது.
'அஷ்டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு
துஷ்டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்
கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்
சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. 'அஷ்டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு' : எட்டுவித குண்மம் தீரும் சூலை என்னும் வயிறில் ஏற்படும் வலி தீரும், வாதம் என்னும் நோயும் தீரும்.
2. 'துஷ்டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்' : மேக நோயை போக்க வல்லது.;
3. 'கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்' : கூந்தல் முடி உள்ள பெண்னே கபம் என்னும் நோயை போக்க வல்லது.
4. 'சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' : பச்சைகர்ப்பூரத்தால் என்றார்கள் சித்தர்கள்.
பச்சைகர்ப்பூரத்தில் பலவகை உண்டு அவற்றின் பேதம் பற்றிக் குறிப்பிடுகையில்.
'பச்சைக்கர்ப்பூரம் பருவதில் பேதம்உண்டிங்
கிச்சையொடப் பேதம் இசைக்குங்கால் - இச்சகத்துள்
ஈச னொடுவீமன் ஏற்றபூ தாச்சிறையன்
காசறுமுன் றாகுமென்பர் காண்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
பச்சைக்கர்ப்புரத்தில் பலவகை இருந்தாலும் அதில் சிறந்தது ஈசன், வீமன், பூதாச்சிறையன் என்பவையாகும்.
இனி ஒவ்வொன்றாக நோக்குவோம்
ஈசன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் மருத்துவக்குணம்
'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்
பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற
பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்
டான ததுவசியம் ஆம்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
1. 'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்' : ஈசன் என்னும் கர்ப்பூரம் வெண்மை நிறமுள்ளது அது காரமானது.
2. 'பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற' : சீதள உஷ;ணம் பித்தம், மயக்கம் என்பனவற்றைப் போக்க வல்லது.
3. 'பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்' : பீநசம் உள்தாகம் என்பன நீங்கி காந்தியுண்டாகும்.
4. 'டான ததுவசியம் ஆம்' : வசியமும் உண்டாகும். என சித்தர்கள் இயம்பியுள்ளனர்.

வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் குணம்

'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை
சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு
நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்
தூய மதிமுகத்தாய் சொல்' என்றார்கள் சித்தர்கள்

பொழிப்பு:
1. 'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை' : வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் நிறம் மேகநிறமாகும்
2. 'சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு' : உடல்குளிர்சி பெற்றும்
3. 'நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்' : தாகம் நீங்கி பேதியும் உண்டாகும்.
4. 'தூய மதிமுகத்தாய் சொல்' : தூமையான சந்திரனைப்போன்ற முகத்தை உடையவளே சொல் என்று சித்தர் கூறுகின்றார்.

பூதாச்சிறையன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் குணம்
'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்
கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி
என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்
குன்ன விரணமும்போக் கும்' என்றார் சித்தர்.

பொழிப்பு:
1. 'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்' : பூதாச்சிறையன் என்னும் கர்ப்பூரம் மஞ்சளும் கறுப்பும் கலந்த நிறமுள்ளது.
2. 'கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி' : ஸ்திரிகளுக்காகும் காசம் மேகம் வாத என்னும்
3. 'என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்' : மூன்று தோசங்களையும் போக்க வல்லது.
4. 'குன்ன விரணமும்போக் கும்' : சொறி இரணமும் போகும் என்று சித்தர்கள் இயம்பியுள்ளனர்.
பச்சைகர்ப்பூரம் ஆலயங்களில் பயன்படுத்தப்படுவது எவ்வளவு சிறந்தது. ஆலயங்களில் அடியார்கள் கூட்டம் நிறைந்திருப்பது வழமையானது அதனால் வெப்பம் அதிகரித்து சலதோசம் ஏற்படுவது இயல்பு இதனை தடுக்க மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள். இறைவனுக்கு தரிசனம் செய்த கர்ப்பூர தீபம் தொட்டு வணங்க அடியார்கள் மத்தியில் வருகின்றது. இதை ஒத்தி அதை கண்களில் ஒத்துவது வழமை இது எப்படிப்பட்ட மருத்துவம் என்பதை சித்தர்கள் அறியாமல் அறியவைக்கின்றனர். அடியார் அதிகரிக்கும் போது பவனசூழல் மாசடையும் அதை சீர் செய்ய கர்ப்பூரதீபத்தில் ஏற்படும் சுவாலையின் புகை உதவுவதை நாம் அறிவோம். சித்தர்கள் மருத்துவம் வியர்க்கத்தக்கது. ஆனால் இன்று பயன்படுத்தும் கர்ப்பூரம் இயக்கையான தல்ல அவை சேர்க்கையானவை இவை உடலுக்கு கேடு விளைவிக்கும். அதை அறிந்து ஆலயங்களில் புரோகிதர்கள் சரியானதை சரியாக அறிந்து உரியதை பயன்படுத்துவது காலத்தின் தேவையுடன் அவசியமே. எதை செய்வதாக இருந்தாலும் அதை சரியாக செய்வதே சரியான பலனை பெற உதவும். போலியானது எதிர்மறையான தாக்கத்தையே தரும் இன்று உலகம் இப்பாடுபட காரணம் அதுவே. இன்று பணத்துக்காக வேதங்கள் விற்கப்படுவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. உழைப்பதே தவிர வேறோன்றும் இல்லை. மூன்நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ வீரபிரம்மம் அவர்கள் 'வேதம் காசுக்கு விற்கப்படும் பிராமணர்களால் என்றும் பிராமணர்கள் சூத்திரருக்கு அடிமையாகுவர்' என்றும் குறித்துரைத்தது இங்கு குறிப்பிட்த்தக்கது.

Sunday, March 26, 2017

வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள்

'வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள்.
உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்.'
இந்து சமயத்தின் வாழிபாட்டின் போது கர்ப்பூரம் பயன்படுத்துவது ஆகமமுறைப்படி வழக்கமாகும். சித்தர்கள் இதை முறைப்படி வகுத்து வைத்திருக்கின்றனர். சோடசார உபசாரங்களில் கர்ப்பூரங்களில்னாலான தீப சரிசனங்கள் காட்டப்படுகின்றது. ஒற்றை கர்ப்பூர தீபம், பஞ்சாராத்தி அவை எழுதீபம், ஒன்பது தீபம் என பலவகையில் தரிசனம் செய்கின்றனர். அவை பஞ்சேந்திரிய ஒடுக்கத்தையும் பஞ்சபூத ஒடுக்கத்தையும் அடையாளமாக காட்டப்படுகின்றது. ஏழு என்பது அதாவது ஆறாதாரத்திலும் ஏழாவது ஆதாரமாகிய சகஸ்ராதாரத்திலும் அகவொழி தோன்ற வேண்டும் என்று ஏழு தீபங்கள் உள்ள கர்ப்பூர ஆராத்தி காட்டுகின்றனர். எமது உடலில் ஓன்பது வாசல்கள் உண்டு அவை ஒன்பதும் ஒளிபெறுவதால் உண்மை நோக்கி ஒளிபெறுவதை அடயாளப்படுத்துகின்றது. அதாவது ஞாமான தீயினால் ஒடுக்கப்படுவதை குறித்துக்காட்டுவதாக அது அமையும். இறைவனின் பஞ்சகிருத்தி செல்பாட்டில் அழித்தல் என்பது ஞானமாகிய தீயினால் நாம் செய்த கருமத்;தை எரித்து பிறப்புக்கு காரணமான கருமத்தை நிறுத்துதல் அதாவது பலன்கருதா செயல் புரிதல் பற்றற்ற செயல் இதனையே கர்ப்பூர தீபம் காட்டுதல் எமக்குணத்துவது. பூஜையின் போது பச்சைக் கர்ப்பூரமே பன்படுத்தவேண்டும் என்பது ஆகமம் குறித்துக் காட்டுகின்றது. இந்துமதத்தின் எந்த கிரியையாக இருந்தாலும் அதற்கு ஓர் அர்த்தம் இருக்கும். அவை சித்தி பெற்ற சித்தர்கள் வகுத்தது. கர்ப்பூரம் மருத்துவத்தன்மை வாய்தவை இதனாலேயே மக்கள் கூடும் இடங்கள் நோய் அற்ற சுகாதாரமுள்ள இடமாக இருக்க இதனை பயன்படுத்தினர். மக்களுக்கு செய்தியை கொடுக்கும் அதே சமயம் அதன் மருத்துவதன்மையையும் உணத்தியவர்கள் சித்தர்கள்.
கர்ப்பூரத்தின் மருத்துவக்குணத்தை நோக்கும் போது
'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி
பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்
வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்
சாந்திகருப்பூரந் தால்' என்றனர் சித்தர்கள்
பொளிப்பு:
1. 'கிருமிசல தோஷங் கிளைவலிப்பு சந்தி' : கிருமி என்பது உடலில் காணப்படும் நுண்கிருமி அதை அழிக்கவல்லது அத்துடன் சலதோசம், வலிப்பு நோய், சந்நி என்னும் நீரினால் வரும் நோய்களை காக்க வல்லது.
2. 'பொருமுமந்தம் அங்கிபட்ட புண்ணோ – டெரிசுரங்கள்' : பெருமுமந்தம் என்னும் நோய் இது வயிற்றில் ஏற்படுவது. தீ சுட்டபுண், பித்ததிதினால் ஏற்பட்ட சுரம் என்பவற்றை போக்க வல்லது.
3. 'வாந்திபித்தஞ் சீதமுறு வாதஞ் செவிமுகநோய்' : வாந்தி, பித்தம், சீதள வாதம், செவியில் ஏற்படும் நோய்கள், முகத்தில் ஏற்படும் நோய்கள் என்பன போக்க வல்லது.
4. 'சாந்திகருப்பூரந் தால்' : இவை இனைத்தையும் போக்கவல்லது கர்ப்பூரம் என்பதை சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவான கர்ப்பூரத்தின் குணத்தை குறிப்பிட்டுள்ளார்கள் சிறப்பாக நோக்கும் போது பச்சைகர்ப்பூரத்தின் குணத்தை நோக்கும் போது.
'அஷ;டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு
துஷ;டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்
கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்
சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு:
1. 'அஷ;டகுன்மஞ் சூலை யணுகாது வாதமோடு' : எட்டுவித குண்மம் தீரும் சூலை என்னும் வயிறில் ஏற்படும் வலி தீரும், வாதம் என்னும் நோயும் தீரும்.
2. 'துஷ;டமே கப்பிணியுந் - தோற்றாதே –மட்டலருங்' : மேக நோயை போக்க வல்லது.;
3. 'கூந்தன்முடி மாதே கொடிசி கபம்போகுஞ்' : கூந்தல் முடி உள்ள பெண்னே கபம் என்னும் நோயை போக்க வல்லது.
4. 'சார்ந்தப்சைக் கர்ப்பூரத் தால்' : பச்சைகர்ப்பூரத்தால் என்றார்கள் சித்தர்கள்.
பச்சைகர்ப்பூரத்தில் பலவகை உண்டு அவற்றின் பேதம் பற்றிக் குறிப்பிடுகையில்.
'பச்சைக்கர்ப்பூரம் பருவதில் பேதம்உண்டிங்
கிச்சையொடப் பேதம் இசைக்குங்கால் - இச்சகத்துள்
ஈச னொடுவீமன் ஏற்றபூ தாச்சிறையன்
காசறுமுன் றாகுமென்பர் காண்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
பச்சைக்கர்ப்புரத்தில் பலவகை இருந்தாலும் அதில் சிறந்தது ஈசன், வீமன், பூதாச்சிறையன் என்பவையாகும்.
இனி ஒவ்வொன்றாக நோக்குவோம்
ஈசன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் மருத்துவக்குணம்
'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்
பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற
பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்
டான ததுவசியம் ஆம்' என்றனர் சித்தர்கள்.
பொழிப்பு :
1. 'ஈசன்என்னுகும் பூரம்வெண்மை என்பர்அது காரமுமாம்' : ஈசன் என்னும் கர்ப்பூரம் வெண்மை நிறமுள்ளது அது காரமானது.
2. 'பேரிய சீதம்உஷ;ணம் பித்தம்மயல் - வீசுகின்ற' : சீதள உஷ;ணம் பித்தம், மயக்கம் என்பனவற்றைப் போக்க வல்லது.
3. 'பீனிசம்உள் தாகம்இவை போர்த்துவிடும் காந்தியுண்' : பீநசம் உள்தாகம் என்பன நீங்கி காந்தியுண்டாகும்.
4. 'டான ததுவசியம் ஆம்' : வசியமும் உண்டாகும். என சித்தர்கள் இயம்பியுள்ளனர்.
வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் குணம்
'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை
சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு
நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்
தூய மதிமுகத்தாய் சொல்' என்றார்கள் சித்தர்கள்
பொழிப்பு:
1. 'வீமன்என்னும் கர்ப்பூரம் மேகஅழுக்குவெண்மை' : வீமன் என்னும் பச்சைகர்ப்பூரத்தின் நிறம் மேகநிறமாகும்
2. 'சேமம் உறுங்குளிர்சி தின்றக்கால் - நாமருவு' : உடல்குளிர்சி பெற்றும்
3. 'நோயகலுந் தாகம்அறும் நுண்பே திரியும்ஆகுந்' : தாகம் நீங்கி பேதியும் உண்டாகும்.
4. 'தூய மதிமுகத்தாய் சொல்' : தூமையான சந்திரனைப்போன்ற முகத்தை உடையவளே சொல் என்று சித்தர் கூறுகின்றார்.
பூதாச்சிறையன் என்னும் பச்சைக்கர்ப்பூரத்தின் குணம்
'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்
கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி
என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்
குன்ன விரணமும்போக் கும்' என்றார் சித்தர்.
பொழிப்பு:
1. 'பூதாச்சிறையன்என்னும் பூரமஞ்சள் கைப்பாகுங்' : பூதாச்சிறையன் என்னும் கர்ப்பூரம் மஞ்சளும் கறுப்பும் கலந்த நிறமுள்ளது.
2. 'கோதையர்க்காங் காசங் கொடுமேகம் - வாதாதி' : ஸ்திரிகளுக்காகும் காசம் மேகம் வாத என்னும்
3. 'என்னும்ந் தனித்தோஷம் ஏறுமுத்தோ ஷஞ்சொறியுங்' : மூன்று தோசங்களையும் போக்க வல்லது.
4. 'குன்ன விரணமும்போக் கும்' : சொறி இரணமும் போகும் என்று சித்தர்கள் இயம்பியுள்ளனர்.
பச்சைகர்ப்பூரம் ஆலயங்களில் பயன்படுத்தப்படுவது எவ்வளவு சிறந்தது. ஆலயங்களில் அடியார்கள் கூட்டம் நிறைந்திருப்பது வழமையானது அதனால் வெப்பம் அதிகரித்து சலதோசம் ஏற்படுவது இயல்பு இதனை தடுக்க மருத்துவம் கண்டவர்கள் சித்தர்கள். இறைவனுக்கு தரிசனம் செய்த கர்ப்பூர தீபம் தொட்டு வணங்க அடியார்கள் மத்தியில் வருகின்றது. இதை ஒத்தி அதை கண்களில் ஒத்துவது வழமை இது எப்படிப்பட்ட மருத்துவம் என்பதை சித்தர்கள் அறியாமல் அறியவைக்கின்றனர். அடியார் அதிகரிக்கும் போது பவனசூழல் மாசடையும் அதை சீர் செய்ய கர்ப்பூரதீபத்தில் ஏற்படும் சுவாலையின் புகை உதவுவதை நாம் அறிவோம். சித்தர்கள் மருத்துவம் வியர்க்கத்தக்கது. ஆனால் இன்று பயன்படுத்தும் கர்ப்பூரம் இயக்கையான தல்ல அவை சேர்க்கையானவை இவை உடலுக்கு கேடு விளைவிக்கும். அதை அறிந்து ஆலயங்களில் புரோகிதர்கள் சரியானதை சரியாக அறிந்து உரியதை பயன்படுத்துவது காலத்தின் தேவையுடன் அவசியமே. எதை செய்வதாக இருந்தாலும் அதை சரியாக செய்வதே சரியான பலனை பெற உதவும். போலியானது எதிர்மறையான தாக்கத்தையே தரும் இன்று உலகம் இப்பாடுபட காரணம் அதுவே. இன்று பணத்துக்காக வேதங்கள் விற்கப்படுவதையே காணக்கூடியதாக இருக்கின்றது. உழைப்பதே தவிர வேறோன்றும் இல்லை. மூன்நூறு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ வீரபிரம்மம் அவர்கள் 'வேதம் காசுக்கு விற்கப்படும் பிராமணர்களால் என்றும் பிராமணர்கள் சூத்திரருக்கு அடிமையாகுவர்' என்றும் குறித்துரைத்தது இங்கு குறிப்பிட்த்தக்கது.

Sunday, December 25, 2011

நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்

"நத்தார் திருநாள் மக்களின் பெருநாள்
         அன்நாள் ஜேசு பிறந்த பொன்நாள்
மனுக்குலம் மீட்சிபெற வித்திட்டதிரு நாள் 
         அன்நாள் உலகுக்கு ஒளி பிறந்த பொன்நாள்.
ஆஜாரகத்துக்கு அச்சுறுத வித்திட்ட திரு நாள் 
        மாதாவின் விசுவாசத்தின் சாட்சிய திருநாள் 
சூசையப்பரின் மாட்சிமை  திருநாள்
        கடவுனின் மாட்சிமை நிலை நிறுத்திய திருநாள் 
         அதர்மம் ஓங்கும் போது தர்மத்தை காக்க 
அவதாரம் எடுப்பேன் என்ன கீதையில் கண்ணனின்வார்த்தை பலித்த நன்நாள் அன்நாள் எல்வோருக்கும் பெரும் திருநாள்".








"வார்தை மாமிசமாகி உன்னுடனே வாசமாக இருந்தார் இறைவன். 
         அன்பின் சொருவம் அவர் 
ஆடுகளை மேய்ற்கும் ஆயனவர் 
         உண்மையின் இலக்கணம் அவர்
 சித்தர் குழாமில் ஒருவர் அவர் 
         அவர் பாதை விடுதலை அளிக்கும்" .


"ஏழ்மையில் பிறந்து எழிமையில் வாழ்து 
        தனக்கென வாழாது உலக்கு வாழ்ந்த 
மனித உருவில் பிறந்த இறைவன்

        அவன் வாழ்ந்த வாழ்கையும்
அவன் போதித்த போததையும்
        மனுக்குல விடுதலை
அதை அறிந்து 
உணர்ந்தால்

        அதுவே அவனுக்கு செய்யும் காணிக்கை"

Thursday, December 1, 2011

"தன்காயம் தோனாமல் எண்சான் பாத்தி கட்டி"


"சித்தர் பாடல்கள் சிந்திக்கச் சிந்திக்க தித்திக்கும் தீங் கனி அழியாத தத்துவ முத்துக்கள்
வாழ்ந்து அனுபவித்து உலகுக்கு கொடுத்த வித்துக்கள் தாகம் உள்ளவன் தீத்திடும் நதி யது
முற்றும் துறந்தவன் சங்கமமாகும் சமுத்திரம் அது"




'தன்காயம் தோனாமல் எண்சான் பாத்தி கட்டி
வெங்காயம் நாற்று விட்டு வெகுநாளாக காத்திருந்தேன்
வெங்காயம் தின்னாமல் மேல்தோலைத் தின்றதனால்
தன் காயம் தோனாமல் என் ? கண்ணம்மா !
நான் சாகிரேன்டி சாகாமல்'  
                இப்பாடலில் உடல் பெறப்பட்ட நோக்கத்தை அடையாததையும் அதனால் வருந்தும் ஆன்மாவின் கதறலையும் இங்கு குறிப்பிட்டு வெண்பா பாடியுள்ளார். தன்னுடைய உடலைக் காட்டாமல்(அதாவது சூட்சும உடலை) பருவுடலை உருவாக்குவதை எண்சான் பாத்தி கட்டி அதில் வெங்காயத்தை உருவாக்கி காத்திருதார் விளைவு பெற ஆனால் வெங்காயத்தின் தோல்களை உரித்து உரித்து உண்டு விட்டார்கள் இறுதியிலே பாத்தியல் இட்ட வெங்காயமும் இல்லை பயனும் இல்லாது பொயிற்று என இப்பாடலின் கருத்தை நேரடியாகக் கொள்ள முடியும். ஆனால் இதன் உட்கருத்தை பார்க்கும் போது முதலில் குறிப்பிட்டுள்ள வெங்காயம் வெறுமையான கரும வினை அற்ற ஆத்மா புனிதமானது. அடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது பருவுடல் இது முன்வினைப்பயனை அறுக்க எடுக்கப்பட்டது. ஆத்மா தன்னில் பட்ட களிம்பைப் போக்க உடல் எடுக்கின்றது. இதை மாயை மறைக்கின்றது ஆணவம் தூண்டுகின்றது கன்மம் அனுபவிக்கின்றது. இதனால் ஆன்மா ஏமாறுகின்றது. இதனையே பிரம்கஸ்த்தி தோசம் என குறிப்பிடுகின்றனர். ஆன்மா தனது களிம்பைப் போக்க பிரம்மனிடம் பெற்ற உடலை மாயை  மறைத்ததனால் ஏற்பட்ட விளைவு அப்போது மனம் எம்மை இயக்கும். அங்கு புத்திக்கு வேலை இல்லை.  குருவருள் இருந்தால் திருவருள் உண்டு. அப்போது நாம் மனத்தை இயக்க முடியும். இங்கு புத்தி இயங்கி சித்தி கிடைக்கும். இங்கு சித்தி என்பது முத்தி யாகும். இதுவே பிறவிப்பயன். 

Tuesday, November 29, 2011

சிந்தித்தால் சிரிப்பு வரும் சிந்தனையில் விளிப்பிந்தால் - அத்தனையும் வந்து விடும்.

சிந்தித்தால் சிரிப்பு வரும் 
சிந்தனையில் விளிப்பிந்தால் -
அத்தனையும் வந்து விடும்.
மனத்தில் மறைந்தது புத்தி
புத்தியில் உறைந்தது சித்தி
சிந்தித்தால் புத்தி உறங்காது
ஏன்? என்றால் - படைப்பின் இரகசியமது 
 அஞ்ஞானம் உலகைப்படைக்கும்
மெய்ஞானம் படைப்பை வெறுக்கும் - அது
விடுதலைக்குத் தடை
ஏன் இந்த விடுதலை?  அது - பிறப்பில் இருந்து விடுதலை
படைபின் இரகசியம் தெரிந்தவர் விடுதலை இலகு
தெரியாதார் - மாயையின் பிடியில் பட்டு 
நான் எனும் அகந்தையில் வளர்ந்து கன்மத்தில் வீழ்ந்து
உண்மையை அறிந்தால் பிறப்பின் இரகசியம் புரியும்
வாழ்க்கையில் இடர் - உற்ற நன்பன் 
மகிழ்ச்சி ஆரவாரம் எமக்கு எதிரி அது – 
உண்மையை உணர்த்தாத சல்பீனீயாக் குழம்
ஆழம் அறியவிடா சதிக் கும்பல்; 
புரிந்ததா வாழ்கையின் இரகசியம் -
சிந்தித்தால் சிரிப்பு வரும் 
உண்ணுள்ளே இருக்கு தடா எல்லாம்
அண்டத்தில் உள்ளது பிண்டத்தினுள்
வானமும் நீயே பூமியும் நீயே
உன்னுள் உள்ளது பூதங்கள் ஐந்தும் -
மண்டலங்கள் மூன்றும் உலகங்கள் ஏழும்
உன்னுள்னே இமையமும் வாரநாசியும்
கங்கையும் ஜமுனையும் சரஸ்வதியும் - 
பாய்தோடுது உன்னுள்ளே
எதற்காக சிந்தித்துப் பார்த்தாயா ? 
அத்தனையும் விடுதலை
தேவரும் அசுரரும் உன்னுள்ளே
போர்க்களம் அமைத்துள்ளதை
உணந்தாயா? விளைவுகள் அறிய தடுத்தது மாயை
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டியர்
நீ யார் என்பதில் எல்லாம் விளித்திடும்
நம்முள்ளே தேடினால் கிடைப்பது 'தேமாங்கனி'
எம்முள்ளே மூலாதாரத்தில் உற்றெடுத்து – 
சகஸ்ராதரத்தில் பாயும் கங்காநதி அது - 
நித்திய இன்பத்தில் விளைந்த –
பிறவித்துயர் அழித்திடும் அரு மருந்து
உலகதில் தேடிட்டால் கிடைத்திடும் மாங்கனி 
உன்னுள்ளே தேடிட்டால் கிடைத்திடும் தேமாங்கனி
அத்தனையும் அவன் அவன் கன்மத்தின் விளைவு
சிந்தித்தால் சிரிப்பு வரும் 
சிந்தனையில் விளிப்பிருந்தால் -
அத்தனையும் வந்து விடும்



மட்டூர் புன்னையம்பதியான் 
























Sunday, November 20, 2011

“பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு மங்களம் கொடுக்கும் நன்னாள்

“பங்குனி உத்தரம் மங்ரைக்கையருக்கு 
                மங்களம் கொடுக்கும் நன்னாள்
மதுரையில் சொக்கநாதர் மீனாட்சிக்கு
              மாங்கலியதாரணம் செய்த பொன்னாள்

காஞ்சி மாவடியில் நிஸ்டையில் ஆழ்ந்த பார் வதிக்கு
              இழந்த பழமையை மீழப்பெற்றுத் தந்த நன்னாள்
ஈசனின் ஆக்ஞ்யில் எரிந்த மன்மதனை இரதிக்கு
              காட்டியருளிச் செய்த பொன்னாள்
கிருதயுகத்தில் கோன் இரகுவால் மனுக்குல் உய்வதற்கு
              அரக்கரனை அழித்த நன்னாள்.
நார் அயன் உள்ளம்  திருமகளுக்கு
               உருத்தான பொன்னாள்
படைபதிபதி நா வாக்தேவிக்கு
              உருத்தான நன்னாள்
இந்திராணி இந்திரதிபதிக்கு
             கிடைத்த பொன்னாள்
மயிலையில் ஞான சம்பந்தன் பூம்பாவைக்கு
            உயிர் கொடுத்த நன்னாள்.
அன்னாள் எனக்கு பொன்னாள்
           என் அம்பிகை புன்னையம் பதி மாரிக்கு தீர்த்த திருநாள்
அன்னாள் என் மகாயாக தீட்ரசைப் திருப்பெருநாள்.
            அன்னாள் மங்கையருக் மாங்கலிலிய விதமேற்கும் பொன்னாள்"
மட்டூர் புன்னையம்பதியான

Tuesday, September 13, 2011

சிவபூமி இலங்காபுரியில் கிழக்குமாகாணத்தில் காரைதீவில் சமாதியடைந்து வைரவிழாக்கானும் சித்தானைக்குட்டி

சிவபூமி இலங்காபுரியில் கிழக்குமாகாணத்தில் காரைதீவில் சமாதியடைந்து வைரவிழாக்கானும் சித்தானைக்குட்டி
     பாதக்கண்டத்தின் தென் பகுதியைச் சேர்ந்த இராமேஸ்வரத்தை அண்டிய இராமநாதபுரத்தின் “பெருநாளி” என்னும் இராசதானியின் சிற்றரசரின் மகன் தான்  சித்தானைக்குட்டி சுவாமி தந்தையின் ஆட்சிக்காலத்தில் அவ்வூரில் ஏற்பட்ட கொள்ளை நோயினால் பாதிப்பிட்டு வீட்டுக்கு வீடு மறனஓலம் கேட்டுக் கொண்டுடிருந்த வேளை இரு மகான்கள்  வந்து உணவு கேட்டுண்ட வீடுகளில் கௌ;ளை நோயி ஏற்படாததை அறிந்து அவரிடம் கவரப்பட்டு சென்றவரே சித்தானைக்குட்டி சாமியார். அந்த மகானே பிற்காலத்தில் பெரியானைக் குட்டிச் சாமியரும் நவநாத சித்தரும் அவர். இராமநாதபுரம் பலசிறப்புக்கள் கொண்ட பிரதேசம் மாணிக்கவாசகர் இறை அனுபூதி பெற்ற திருப்பெருந்துறை அமைந்துள்ளதுடன் சங்கப்புலவர்களான நல்லந்தையார், நன்முல்லையார், ஒக்கூர்மாசாத்தியார் பொன்றோர் அவதரித்ததுடன் தாயுமானவர் சமாதியடைந்த முகவை என்னுமிடமும் மணவாள மாமுனிவர் வளர்ந்த சிற்கற்கடாரமும் இராமநாதபுரத்தில்  உள்ளது. அங்கு கோவிந்சாமியாகப் பிறந்து பூவாச்சிரமத்தை பூர்த்தி செய்துள்ளார்;.
        சித்தானைக் குட்டியான சுவாமிகளும் அரச இராஜபோக வழ்க்கையைத் திறந்து இருவருடன் தானுமொருவராக மூவரும் இணைந்தனர். மூவரு இலங்காபுரியை அடைய எண்ணி செட்டியார் ஒருவரிடம் கப்பலுக்கு பயண அனுமதிச் சீட்டுக்கள் வாங்கி வரச் சொல்ல இரண்டு  பயண அனுமதிச் சீட்டுக்கள் தான் கிடைத்தது. அதில் முத்தவர்களான பெரியானைக்குட்டியும், நவநாதசித்தரும் ஆகிய இருவரும் பயணம் செய்து வர அவர்களை வரவேற்க அதிமானவர்கள் நின்றனர். அவர்களில் ஒருவராக சித்தானைக்குட்டியும் நிற்கக்கண்டு மூவரும் மீண்;டும் இணைந்து கொண்டனர்.
  பெரியானைக்குட்டி சுவாமியும், சித்தானைக்குட்டி சுவாமியும் விட்டு நவநாதசித்தர் புறப்பட்டு விட்டார். குருவும் சீடருமாக பெரியானைக்குட்டியும், சித்தானைக்குட்டியும் கெழும்பில் இருந்தனர். அவர்களின் வாழ்க்கை திருவோட்டுடன் களிந்து கொண்டு இருக்கையில் நாதரின் கட்டளை வந்தது பேராதனைக்கு வருமாறு இருவரும் புகையிரத மூலம் பேராதனையை அடைந்ததும் அங்கு காத்து நின்றார். நவநாதசித்தர். இருவரையும் கண்டதுடன் தன் கைத்தடியால் முதலில் தன்தலையிலும் பின் பெரியானைக்குட்டி சுவாமியின் தலையிலும் அதன் பின் சித்தானைக்குட்டி சுவாமியின் தலையிலும் தட்டி சமாதி அடையும் முறையை கூறி அவர் நாவலப்பிட்டிக்கு செல்ல. மீண்டும் இருவரும் கொழுப்பை அடைந்தனர். அதன் பின் கொழும்பில் முகத்துவார பிள்ளையார் கோயிலை அடைந்து சாதனை செய்யும் போது சித்தானைக்குட்டி சுவாமியை பெரியானைக்குட்டி சுவாமி சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் சென்று சாதனை செய்யப்பணிக்க குருவின் பணிப்பினை சிரம்மேல் ஏற்று அங்கு சென்று சாதனை செய்கையில் குருவின் சமாதி கைகூட N;ஜாதிபிழம்பாய் கண்டு மீண்டும் கொழும்பில் முகத்துவாரம் அடைந்து சமாதிக் கோயிலில் தன் கடமைகள் செய்து இருக்கையில் குருவின் கட்டளை கனவில் வந்தது நவநாதர் சமாதியை அடைந்து சாதனை செய்யுமாறு. குருவின் பணிப்பினை சிரம்மேல் ஏற்று குயீன்ஸ்பரி சென்று போது சுவாமியின் வருகைக்காக காத்து நின்றாள் கங்காணி அம்மா கண்டதும் ஆனந்ந கண்ணீர் சொரிந்து சமாதியின் பொறுப்பை ஒப்படைத்தாள். பின்னர் அங்கிருந்து சாதனை செய்யும் போது அது முருகன் கோயிலாக இருந்ததால் அங்கிருந்து கதிர்காம யாத்திரை செல்வதில் சுவாமிகள் ஆர்வமாக இருந்தார். திருவிழா ஆரம்பமானதும் யாத்திரை செல்வது வழக்கம். 
   சுவாமி கதிர்காம யாத்திரையின் போது திசமகரகம வழியாகச் செல்வது வழக்கம் அங்கு முத்துக்கந்தையா என்பவர் பொது வேலை அபிவிருத்தி திணைக்களத்தில் முகாந்தரராக வேலை செய்தவர். அவருடைய மனையாள் கற்பு நிறைந்த இறையடியாள் சேதம்மாள். சிவனடியாரைக் கண்டால் கால் அலம்பி விருந்தோம்பும் பண்புடையவள். கணவனுக்கு பிடிக்காது இவர் தினமும் மதுமாமிசம் புசிப்பவர்.  சிவனடியாரைக் கண்டால் முற்றத்திலேயே வைத்து  ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுவார். முத்துக்கந்தையர்  வீட்டில் இல்லாத போது  இறையடியார்கனைக் கண்டால் உபசரித்தே அனுப்புவாள். ஒரு சமயம் யாத்திரை செய்து வந்த சுவாமிகளை கண்ட சேதம்மாள் அவரின் மீது ஆன்மீகத்தாகம் எடுத்து அவரையும் உபசரிக்கலானால் அதை அறிந்த முத்துக்கந்தையா அவர்கள் ஒரு நாள் சேதம்மாள்ளை தாக்கி சித்திரவதை செய்தார். அடுத்த நாள் காலையில் சுவாமி வர வீட்டு வேலைக்காரன் ஓடி வந்து நடந்ததை கூற சுவாமி  இரவு முழுவதும் எனது உடம் பெல்லாம் வலி மிளகும் வேர்க்கொம்பும்  தா நான் போய்விடுகின்றேன். என்று கூறி விட்டு. கதிர்காமம் சென்று பின் அம்பாந்தோட்டையை அடைந்து கப்பலில் ஏறி மட்டக்களப்பையடைந்து கார்த்திகேசு அத்தியட்சகர் வீட்டில் தங்கினார்.
      அடுத்து முத்துக்கந்தையா வேலைக்குச் சென்ற போது அவரது எந்திரி காரணமில்லாமல்  கோபப்பட்டு வார்த்தையால் தாக்கப்பட்டு  வேலையை இழந்து பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து பின்னர் தான் உணர்ந்தார் சுவாமியின் அருமையை மனையாளை அழைத்து விடையம் விளம்பி சுவாமியை அழைத்து வர கட்டளை இட்டார். எப்போது சுவாமியை காண்போம் என இருந்த உள்ளம் அழைத்து வர கப்பலில் ஏறி மட்டில்லா மட்டக்களப்பை அடைந்து  சுவாமியை தரிசித்து அவரிடம் வேண்ட சுவாமி தான் ஒன்றும் செய்ய வில்லை. கதிர்காமம் சென்று கந்தனை வேண்டுமாறு கூறி கப்பல் ஏற்றி அனுப்பிவிட்டார். வீட்டுக்கு வந்த சேதம்மா நடந்தவற்றை கனவனுடன் பகிந்து கொண்டாள். அதன் பின் கஸ்டங்கள் மேலும் அதிகரிக்க தாங்கமுடியாத சேதம்மா தன் கனவரை விட்டு பிரிந்து சுவாமியே தஞ்ச மென சரண்புகுந்தாள். அதன் பின் காரைதீவில் உள்ள தனது காணியை சுவாமியின் பேரில் எழுதி வைத்தாள். அக்காணிக்குள் ஒரு சிறிய வீடும் புளிய மரமொன்றும் இருந்தது. அதில் சுவாமியை வசிக்க விட்டு சுவாமிக்கு தானிருந்து தொண்டு செய்தாள். இதை ஊர்ராரும் தன் கனவரும்  பலவாறு கூறினாலும் “பணிசெய்து கிடப்பதே தன் பணி” என்ற அடிப்படையில் கற்புநிறைந்தவளாக கருமமே கண்ணாக இருதாள். சுவாமிக்கு தனது குருவான பெரியானைகுட்டி சுவாமியின் குருவாக்கு 

  “புளிய மரத்து வீட்டுக்காரி ,கள்ளன் பெண்பிள்ளையை எடுப்பாய்,
   வம்பு வரும், வழக்குவரும், கெட்டுகீரை விற்று, பறங்கித்துரை    கோணாமலை,
   “எ” னாவைப் பார்க்கிடலும் “பெ” னாவாய் இருப்பாய்” என்றருளினார். “எ” என்னைப்பாக்கிலும் “பெ” பெரியாளாய் இருப்பாய் என்பதாகும். சுவாமியின் வாழ்கையில் குருவின் வாக்கு தீர்க்க தரிசனமாக அமைந்தது என்பது. அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராயும் போது தின்ணமாகின்றது. 
   சுவாமியின் சில உபதேசங்கள்: 
“உன்னிடத்திலுள்ளதை இலையென்னாமல் மற்றவர்களுக்குக் கொடு”
“எங்கும் அலையாதே இருந்தபடி இரு”
“கோபத்தை விடு முருகன் அருள் தானே வரும்”
“அதிகாலை நித்திரை விட்டெழு
எப்போதும் ஆண்டவனை நினை
காலை மாலைக் கடன்களைக் குறைவாகச்செய்
தேனீர் காப்பியைத் தூரத்தள்ளு,
மரக்கறி உணவு மனதிற்கு மகிழ்ச்சி,
பசி வந்தோர் முகம் பார்,
உண்ணு முன்பு ஒருகணம் இறைவனை நினை, 
கடமையில் தவறினால் கடவுளைக் கானமாட்டாய்
“நெற்றிக் கழகு விபூதி  தரித்தல்”
“உறங்க முன் இறைவனை நினை”
“நக்கிக் கண்ட நாயும் கொத்திக் கொண்ட கோழியும் விட்டு நீங்கா”
“உன்னையும் அறியாய் என்னையும் நம்பாய்”
“தூஷீத்தவன் துன்பத்தைக் கொண்டு போவான் பூசித்தவன் புண்ணியத்தை கொண்டு போவான்”
சித்தானைக்குட்டி சுவாமியின் சமாதி
      சுவாமிகள் வந்தடைந்த பூமி முத்தழிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தா ஆகியோரை ஈன்ரெடுத்து இவ் உலக்கு தந்த ஊர். அங்கு சுவாமி ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தொராம் ஆண்டு, ஆவணி மாதம், பத்தாம் திகதி, வெள்ளிக் கிழகை மகா சமாதியானார். இதனை ஆண்டு தோறும் ஆடி மாத சுவாதி நட்சத்திர திதியில் குரு பூஜை செய்கின்றனர்.
சுவாமியின் சித்து விழையாட்டுக்கள்:
தாம்பர விக்கிரகம் பிரதிட்டை செய்தல்
 சுவாமிக்கு சித்தானக்குட்டி எனப் பெயர் வந்தது அவர் செய்த சித்துக்களாலும் அவரின் தோற்றம் கட்டையான சதைப்பிடிப்பான உருன்டை உருவமாக சிறிய யானையை ஒத்தாக இருந்தமையினால் தான் மக்களால் அன்பாக சித்தானைக் குட்டி என அழைக்கபட்டார். சுவாமியின் சித்து விளையாட்டுகள் எண்ணிலடங்காதவை சொல்லியும் விளங்காதவை. அவரையும் விளங்கியவர்கள் ஒரு சிலரே. செத்தவள் மீண்டாள், அசைவம் உணவு சைவமாகியது, மதிமயங்கும் மது சர்பத்தாகியது. காறீய துப்பல் கண்ணுக்கு மருந்தானது, மலம் சந்தனமானது, கதிர்காமத்திரை தீப்பற்றியதை கல்முனையில் அனைக்க கதிர்காமத்திலும் அனைக்கும் காட்சி இது போன்று பல சித்துக்கள் செய்தவர் சுவாமி. அவர் சமாதியடைந்த போது அதிசயம். தன் சமாதி பெற்றக் குறிபிட்ட போது தனது வயிற்றிலிருந்து உதிரம் வெளி வரும் போது தான் சமாதி கைகூடும் மென்று குறிப்பிட்டிருந்தார். சுவாமி பத்மாசனத்தில் அமந்து மூன்று நாட்கள் சென்று விட்டது இருந்தும் அங்க அசைவின்றி மூச்சிப்பேச்சி இன்றி இருக்க வைத்தியர்கள் பரிசோதித்து உயிரற்ற உடல் என்று தீமானித்தும். உடலில் எவ்வித மாற்றமும் இன்றி இருந்தது உடல். மூன்றாம் நாள் உந்தியில் உதிரம் பெருகியது. வைத்தியமே திகைத்தது. இப்படியானவர் சுவாமி. இந்த நிகழ்வை எனது தந்தையின் தந்தை அமரர். நொ.க.ஏரம்பமூர்த்தி அவர்கள் தானும் அன்றை தினம் அங்கு நின்ற போது நிகழ்ததாக கூற கேள்விப்பட்டுள்ளேன்.











 இராஜ்குமார்சுவாமியுடன் அடியேன்



யாகத்தில் அடியேன்
     சுவாமியின் அறுபதாவது ஆண்டு குரு பூஜையில் அவருக்கு தாம்பரவிக்கிரக பிரதிட்டையும் மகாசித்தர்களின் யாகமும் நடைபெற்றது. இதற்கு பரததேச தமிழ் நாடு பிரம்ம ரிஷி மலை தவத்திரு அன்னச்சித்தர் இராஜ்குமார் குருஐp அவர்கள் வந்திருந்தார்;. அவர்களுடன் நானும் சென்று அக்கைங்கரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைத்தது. ஒன்று குருஐpக்கும் எனக்கும் இருக்கும் ஆத்மீகக் தொடர்பு. அடுத்தது நான் சித்தர்களின் வழியை பின்பற்றி வாழ்க்கைப் பயணத்தை தெடங்கியுள்ளவன். இத்தனைக்கும் மேல் எனது மூதாதையருக்கும் சுவாமிக்கும் இருந்த பரம்பரைக் கடத்தல். மட்டக்களப்பிலே சுவாமி நடமாடும் பகுதிகளில் ஒன்று கோட்டை முனைப் பகுதி . அங்கு தவத்திரு. பாலானந்த சுவாமி, விநாயகமூர்த்தி சுவாமி போன் றோர் வாழ்தனர். அவர்களில் தவத்திரு. பாலானந்த சுவாமியும் (எனது அம்மாவின் அம்மாவிற்க்கு தாய் மாமன்.) மைத்துனர் அமரர் .ஏரம்பர். கனகசபை அவர்களும் சேர்ந்து தமது தாயதி வளவில் வருடாவருடம்  வேள்வி செய்வது வழக்கம். இதில் தவத்திரு. பாலானந்த சுவாமி, தவத்திரு. ஆனைக்குட்டிக் சுவாமி,  பெருமதிப்புக்குரிய விநாயகமூர்த்தி சுவாமி, யாழ்பாணத்திலிருந்து தவத்திரு.  அருளம்பலச் சுவாமி, தவத்திரு. குழந்தைவேல் சுவாமி, போன்றோர் அக்; கையிங்கரியத்தில் ஈடுபட்தாக எனது மூதாதையர் கூறியதை நான் கேள்வி ப்பட்டுள்ளேன். அந்த வளவில் தற்போது புதிய பயனியர் தனியார் மருத்துவ மனை அமைந்துள்ளது. அம்மனை  அமரர் வேதாரணியம் அவர்களின் மருமகன் திரு டாக்டர். அமரசிங்கத்துக்கு சொந்தமானது. அதில் திரு. கனகசபை என்பவர் எனது தந்தையின் தந்தையின் தந்தையாவார். இவருக்கு பாலானந்த சுவாமி; மைத்துனர் ஆவார்.
 இராஜ்குமார்சுவாமியுடன் அடியேன்
     தவத்திரு. பாலானந்த சுவாமி தனது வாழ்க்கையை இறை பணிக்கே அர்ப்பணித்து பிம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்த சுவாமி. அவர் மந்திர தந்திரங்களில் கைதேர்ந்தவர். எப்போது கையில் வெள்னைப் பிரம்புடன் தான் இருப்பவர். அப் பிரம்பால் தட்டினால் போதும் விபரீதம் வந்து விடும் அப்படி சக்தி வாய்ந்தது அப்பிரம்பு தந்திரீய வழிபாட்டில் தலை சிறந்தவர். மாரியம்மான் தான் அவரின் வாலை மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மணியகாராக இருந்தவர். அவர் பிம்மச்சாரியாகவிருந்து சன்னியாசம் பூண்டவர். சித்த வைத்தியத்திலும் சிறந்தவர். ஏந்த நேரமும் இறை சிந்தனையும் இறைபணியும் தான் அவர் சிந்தை. ஒருமுறை அவரை வாதுக்கு இழுத்தனர் சிலராம் அப்போது  மாரியம்மன் கோயிலில் இருந்த வேம்பு மரத்தை நிலத்தில் தலை குனிந்து நிமிர வைத்துச் சாதனை படைக்க வந்தவர்கள் அவர் திறமையை வியர்ந்து மன்னிப்பு கோரி வணங்கிச் சென்றதாக எனது தாயார் சொல்லக் கேள்விப் பட்டிருக்கினறேன். இம்மரம் இப்போதும் இருக்கின்றது. அவர் வீட்டில் வைத்து வழிபட்ட வைரவர் எனது தாயதிவளவில் இப்போதும் இருக்கின்றது. அவர் வைத்து வழிபட்ட வாள் என்னிடம் தான் இருந்தது காலத்தின் விளைவால் தவறிவிட்டது. வாள் ஞானத்தின் அடையாளம். அதில் ஒரு துளியாகிலும் கிடைத்ததால் தானோ அது தவறியது என்று என்னி திருப்தி அடைகின்றேன். எல்லாம் அவன் செயல். அவரின் சமாதி ஸ்ரீ மாமங்கப் பிள்ளையார் ஆலயத்துக்கு பக்கத்தில் வைத்ததாக எனது மூதாதையார் கூறக் கேள்விப்பட்டிருக் கின்றேன். தற்போது அதற்கான தடையங்கள் எதுவும் தென்பட வில்லை. 
            ஆனைக்குட்டிக் சுவாமியார் மட்டக்களப்பு கேட்டைமுனைப் பகுதியில் நடமாடும் போது பல சித்துகள் செய்ததாக எனது மூதாதையினர் சொல்லக். கேள்விப்பட்டிருக்கிறேன். வேதாரணியம் ஆச்சாரியார் இடம் சென்று அடிக்கடி தங்கத்தை அள்ளி எடுத்துக் கொண்டு செல்வாரம். அப்போதெல்லாம் ஆச்சாரியார் எதுவும் பேசமாடாட்டாரம் சிறிது நேரத்தின் பின் “உன்னுடைய தங்கம் எனக்கெதற்கு” என்று கூறி மீண்டும் எறிந்து விட்டுக் செல்வாரம் பின்னர் செல்வம் கொழிக்குமாம். பிற்காலத்தில் மட்டக்களப்பில் பிரபல தனவானாக வாழ்ந்தவர் அவர். அவர் எனது தந்தையின் மாமா. இது போன்று சராயக்கடைக் சென்று சாராயம் கேட்பாரம் கொடுக்காவிட்டால் சாராயம் பீப்பாவில் ஒன்றும் இருக்காதாம். பின்னர் சுவாமியை தேடிப் போய் மன்னிப்பு கேட்டால் வந்து பீப்பாவில் ஏறி இருந்து விட்டுச் சென்றதும் பீப்பா நிறைந்து இருக்குமாம். பெண்களை கண்டால்  தனது உடையை கழற்றி வைத்து விட்டு துரத்திக் செல்லாராம். பின்னர் சிரித்து பைத்தியம் போல் இருப்பாராம். பெண்கள் இவரைக் கண்டால் ஓடி மறைந்து விடுவார்களாம். அடியேன் அறிய பொன்னம்பலம் என்னும் ஒருவர் நடக்க முடியாது நிலத்தில் அரைத்து சென்ற ஒருவரைக் கண்டுள்ளேன்.; அவர் தங்கத்தை எடுக்க சுவாமிக்கு காலால் அடித்தவராம் அதற்கு சுவாமி “உனக்கு நீலக்குண்டு போட்டிருக்கின்றேன்” என்று கூறிச் சென்றதன் பின் நிகழ்ந்ததாக கேள்வி ப்பாட்டுள்ளேன். எனது வீட்டில் அன்னமலையைச் சேர்ந்த தெய்வநாயகம் என்றோருவர் இருந்தார் அவருப் முகத்தில் நிறைய வடுக்கள் இருந்தது இதை இல்லாமல் செய்ய பலமுறை அலைந்து அவர்பின்னாலேயே திரிவது வழக்கம் ஒருநாள் அவரது சிறுநீரை கழித்து கையில் கொடுத்து முகத்தில் பூசச்சொன்னாராம். அவர் அருவருப்பு பாராது முகத்தில் பூச சந்தனமணத்துடன் கூடிய நறுமணமாக இருந்ததுடன் முதத்தில் இருந்த வடு மாறியதாக அடியேன் சிறுவயதாக இருந்த போது அவர் கூறக் கேள்விப் பட்டுள்ளேன்.  எனது தந்தையின் பெரியப்பா அமரர் நொ. க. இரத்தினசபாபதி அவர்களுக்கு குழந்தை நீண்டகாலம் இல்லாமல் இருக்க உனக்கு ஒன்று என கைசைகை மூலம் காட்டினாராம் அதன் பின் அவருக்கு ஆண் குழந்தையாக சித்தப்பா கிடைத்ததராம். இவ்வாறு சுவாமிக்கும் எனது மூதாதையருக்கும் இடையில்  ஆன்மீகத் தொடர்பு இருந்திருக்கின்றது.  
     அருளம்பலச் சுவாமி பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் கவனரின் செயளாலராக கடமையாற்றி காலத்தில் நொத்தாரிசியராக இருந்த கனகசபை உடன் நெருங்கிய நண்பராக இருந்திருக்கின்றார். பின்னர் “பாரததேசத்தில் நீதிபதியாக கடமையாற்றி சித்தம் தெளிந்து பற்றறுத்து ஈழம் அடைந்து வடக்கில் கடைத்தெருவில் சுவாமியான கடையில் சுவாமியின் சீடராக சித்தம் தெளிந்து பற்றறுத்து சுவாமியானவர்” இவருக்கும்  அமரர்.  ஏரம்பர். கனகசபைக்கும் தொடர்ந்து ஆன்மீகத் தொடர்பு இருந்திருக்கின்றது. அடியேன் அறிய எனது தந்தையின் தந்தை அமரர். நொ.கனகசபை ஏரம்பமூhத்;தி  ஒய்வு பெற்ற அதிபர் அவர்கள் காலம் வரை யாழ்பாண துறவிகளின் தொடர்புகள் இருந்ததை நான் அறிவேன். அவர்கள் மூலம் வீட்டில் அவர் கொண்டு வரும் இலிங்கத்துக்கு அபிக்ஷேக பூஜை செய்ததை அறிவேன். நல்லையா நெத்தாசியார் இவர் ஒரு ஆன்மீகக் கவிஞர் இவர் நொ.க. ஏரம்பமூர்தியின் தமக்கையின் கனவன் இவர் அருளம்பலசுவாமிகள் பாமாலை, ஏர்ரூர் வடபத்திரகாளி பாமாலை போன்று பல பாடியுள்ளார். 
         இவருக்கு தீராத வீயாதி ஒன்று ஏற்பட வடபத்திரகாளி பாமாலையை இயற்றிப் பாடிய போது அங்கு அசரீதி கேட்டது “இரவு பன்னிரண்டு மணிக்கு பாடுமாறு” பாடிய போது ஆலயக்கதவுகள் திறந்து அம்பிகை ஆடியதாகக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன். இன்னு மோர் முறை நோப்பு சோறு கட்டி அம்பிகையின் பரிபலங்களுக்கு வருடாந்த உற்ச்வத்தின் இறுதியில் அதை எறிந்து திருக்கதவு மூடுவது வழக்கமாகும். மூடினால் அங்கு யாரும செல்வது வழக்கமில்லை. . ஒரு முறை பத்மாவதி என்னும் எனது உறவினப் பெண் சிறு பிள்ளையாக இருந்த போது திருக்கதவு மூடிய பின் அங்கு சென்றதாகவும் அத்தருனம் தூர்தேவதைகள் அவளை அழைத்செல்கையில் கதறி அழுகையில் அம்பிபை தோன்றி பூவரசுமரத்தடிகை கையில் கொடுத்து கத்ததாக கொள்விப்பட்டிருக்கின்றேன். இத்தடி மருந்தாக உபையோக்க்கப்பட்டதை அடியேனும் அறிவேண். ஏரூர் கண்மணி தாசன் என்று அழைக்கப்படும் வி~;வப்பிரம்ம ஸ்ரீ சீ.வை. காந்தன் குருக்களுக்கு  நாவிலே திரிசூலத்தால் காளிகாம்பிகை கீறியதால் தான் அன்று சாஸ்திரஞானம் அவருக்கு உதித்ததாக அடியேனும் அறிவேண். இன்றும் இவ்வாலயம் பிரதித்தி பொற்ற விளங்குகின்றது . தாந்திரீக முறையைப் பின்பற்றி பட்டறையில் அடையல் வைத்தே அம்பிகைக்கு வருடம் ஒருமுறை சடங்கு நடை பெறுகின்றது. வேள்ளிக் கிழமைகளில் மட்டும் பூஜை நடை பெறுகின்றது. சித்தானக் குட்டி சுவாமியும் காளிகாம்பாவை உபாசித்தாக அற்கின்றோம். சித்தார்களின் வாழிபாடுகளில் ஆதிசத்தி வழிபாடு மிகமுக்கியமானது. ஆட்டமாசித்தை பெற்று உலகையாள மாமேரு ஸ்ரீயந்திர வழிபாடு செய்கின்றனர். சத்தி வழிபாட்டின் மூலம் மும்மலக் கட்டை அறுத்து மனத்தை வென்று புத்தி விழித்து சித்தம் தெளிவித்து சிவனை கான முடியும்.
      நானும் அறிவு தெரிந்த வயதிலிருந்து வீதி ஓரங்களில் கிடக்கும் கல்லை கடவுளாக வழிபட ஆரம்பித்தவன். இன்று கல்லை வடிமாக்கி வழிபட்டு எம்மைக் கடந்தும் எம்முள்ளுறைந் திருக்கும் கடவுளை காண விளைகின்றேன். இதனால் தானோ எனக்கும் மகா சித்தர்கள் யாகத்தில் தமிழ் நாடு பிரம்ம ரிஷி மலை தவத்திரு அன்னச்சித்தர் இராஜ்குமார் குருஜீ   அவர்களுடன் இருந்து யாகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ என எண்ணத் தோன்று கின்றது. 
“அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி” “தவமுடையாக்கே தவம்”
































Sunday, August 14, 2011

சித்தம் தெளிந்து சிவனாகி சிவலோ வழிகாட்டும் பதினெண் சித்தர்கள்

  சித்தர்கள் என்னும் போது அவர்கள் சித்தம் தெளிந்தவர்கள்;.சித்தர்கள்; எப்போது உடலை மையமாகக் கொண்டு இயங்குவதில்லை. உடல் இரண்டு அவை பருவுடல், நுன்னுடல். பருவுடல் உடல் சாந்த சுகத்தை அனுபவிக்கும் உலகியல்லான லவ்வீகம் சார்தது உலகபற்றுள்ளது. நுன்னுடல் ஆத்மா சார்ந்த இறைவனை அடையும் உலக, உடல் பற்ற ஆன்மீகம் சாந்து அனுபவிக்கும் நிலை.  மனத்தினுள் அடங்கி இருக்கும் பாம்புகள் இரண்டு அவற்றில் ஒன்று பருவுடல் சாந்தவையாகவும் மற்றையது நுன்னுடல் சாந்தவையாவும் இருக்கும்.  சித்தர்களின் மனம் எப்போதும்  நுன்னுடல் சாந்ததாகவே அவர்களின் செயல்பாடுகள் அமையும். எப்போதும் நேர் சிந்தையுள்ளவர்களாகவும். உள்ளதை உள்ளபடி சுக்குமமாக கூறுபவர்கள். அவர்கள் உலகியலை வெறுப்பவர்கள். உலகுக்கு அவர்கள் பைத்தியகாரர்கள். உலகில் ஆன்ம வீடுதலைக்கு தடையாவதே வெறுக்காரணமாகின்றது. 
அவர்களில் அனேமானவர்கள் கிரகஸ்த நிலையை அடைந்தே வானபிரதிஸ்டம், சன்னியாச நிலைகளை அடைந்தனர். உறவில் துறவைக் கொண்டு பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்து உடல் சார்ந்தெழும் விடையங்களைக் கட்டுப்படுத்தி அத்மா சந்த விடையங்களை கடைப்பிடித்து உலகியலை வெற்றி கண்டவர்கள் சித்தர்கள். இவர்கள் உலகப்போக்குக்கு மறுபட்டவர்கள். சிந்தனை செயல் அனைத்துமே உலகியல் விடுதலையே. ஆசை காமமாக மாறி பற்றுற்ரு அதை அடைய முடியாமையினால் ஆணவம் ஏற்பட்டு பொறாமை வஞ்சகம் சூதாகி மனம் அழிந்து போவதிலிருந்து தடுத்து நிறுத்தி பிறவாமையை ஏற்படுத்காக எப்போதும் சிந்தித்து தன்னை அடைந்தவர்களுக்கு வழிகாட்டுவதே அவர்களின் பணி. அலைபாயும் சித்தத்தை அடக்கி ஒருநிலைப்படுத்தி சித்தி பெற்று பூரணமானவர்கள். அடைதற்கரியவர்கள். அவகளை காண்பதே அரிது. “அவன் அருளால் அவன் தாள் வணங்கி” என மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் இயம்பியுள்ளார். பிராத்தம் தேவை. எம்நிலை அறிய அவன் அருள் தேவை. எவன்னெருவன் அவனது ஆத்மாவை உணருகின்றானோ அவனை ஆத்மா தான் அடைய வேண்டியதை நோக்கி வழிநடத்தும். எம்முள்தான் ஆத்மா இருக்கின்றது. இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை அடைய என்னும் போது உடல் அனுபவிக்கும் விடையங்களை விட்டு நீங்க தயாரில்லை. இங்கு அத்மாவுக்கும் உடலுக்கும் போர் நடக்கின்றது. வெற்றியும் தோல்வியும் மனத்தில் தங்கியுள்ளது. இங்கு தான் வைராக்கியம் தேவை. உடலை வெல்லுவது என்பது. “குதிரைக் கொம்புக்கு” ஒப்பானது. இதை வென்றவர்கள் சித்தர்கள்;. “திருவருள் பெற குருவருள் தேவை”. “குருவில்லா வித்தை பாழ்” என்று கூறுவர்.
                    சித்தர்களின் வரலாற்றை நோக்கும் போது மூலர்மரபு, பாலமரபு, கைலாய மரபு என சிலர் கூறுகின்றன். தமிழ்நாட்டு சித்தர்களை பதினெண் சித்தர்கள் என்று கூறுகின்றனர். சித்தர்களின் பெயர்களைக் கூறுகையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இருப்பனும் காலத்துக்கு காலம் உலகதேவையின் பொருட்டு மீண்;டும் மீண்டும் சித்தர்கள் அவதாரம் எடுக்கப்பதுண்டு. 
                     அந்தவகையில் கருவூரர் எழுதிய அட்டமா சித்து என்ற நூலில் பதினெண் சித்தர்களின் வரிகையில் 1.கும்பமுனி 2.நந்திமுனி 3.கோரக்கர் 4.புலிப்பாணி 5.புகண்டசிஷி 6.திருமூலர் 7.தேரையர் 8.யூகிமுகி 9.மச்சமுனி 10.புண்ணாக்கீசர் 11.இடைக்காட்டார் 12.பூனைக்கண்ணர் 13.சிவாக்யர் 14. சண்டிகேசர் 15.உரோமரிஷி 16.கட்டநாதர் 17.காலாங்கி 18.போகர். என்றும்
 அருணாசல குரு எழுதிய நிஜானந்த போதம் என்ற நூலில் 1.அகத்தியர் 2.போகர் 3.நந்தீசர் 4. புண்ணாக்கீசர் 5.கருவூரார் 6.சுந்தராநந்தர் 7.ஆனந்தர் 8.கொங்கணர் 9.பிரம்மமுனி 10. உரோமரிஷி 11.வாசமுனி 12.அமலமுனி 13.காலமுனி 14. கோரகர் 15.சட்டைமுனி 16. மச்சமுனி 17. இடைக்காட்டார் 18.தேரையர்.
                       அபிதான சிந்தாமணி என்னும் தமிழ்க்கலைக்களஞ்கியம் 1.அகத்தியர்.
2.போகர் 3. கோரக்கர் 4. கைலாசநாதர். 5. சட்டமுனி. 6. திருமூலர்.  7.நந்தி. 8. கூன்கண்ணர் 9. கொங்கணர். 10. மச்சமுனி 11. வாசமுனி.
12. கூர்மமுனி 13. கமலமுனி 14. இடைக்காட்டார் 15. புண்ணாக்கீசர்
16. சுந்தரானந்தர் 17. ரோமருஷி. 18. பிரமமுனி. இவர்களுடன் தன்வந்திரி புலஸ்தியர் புசுண்டர் கருவூரார் இராதமதேவர். தேரையர் கபிலர் முதலியசரும் கூறுவர். 
                        பிற்காலத்தில் இணைக்கப்பட்ட பட்டியல் 1.அகப்பேய்ச்சித்தர் 2.அழுகுணிக்கித்தர் 3.இடைக்காடர் 4.கடுவெளிச்சித்தர் 5.கஞ்சமலைக்கித்தர் 6.கல்லுளிச் சித்தர் 7.காலாட்டிக்சித்தா 8.முதம்பைச்சித்தர் 9. கவுபாலச்சித்தர் 10. சங்கிலிச்சித்தர் 11.ஞானசித்தர் 12.திருகோணமலைச்சித்தர் 13.தொழுகண்ணிச்சித்தர் 14. நாதாந்தக் சித்தர் 15.நொண்டிக்சித்தர் 16. பாம்பாட்டிச்சித்தர் 17. விளையாட்டுச் சித்தர் 18.மொனசித்தர்.
பத்தொன்பதாம் நுற்றாண்டின் கடைப்பகுதியில் வெளியான பதினெண் சித்தர்கள் ஞானக்கோவையில் சிவாக்கியர் முதல் புசுண்டர் வரை பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக அகராதி திருமூலர் முதல் கோரக்கர் வரை பட்டியல் படுத்தியுள்ளது. பொதுவாக நோக்கும் போது இப்பட்டியல் தெரிவுக்கு ஆதாரபூவமான அடிப்படை எதுவும்மில்லை. இருப்பினும் சித்தர்கள் இவர்கள்தான் என்றமுடிவுக்கு வரமுடியும். இவர்களுடன்         அத்திரி,பிருகு,மிருகண்டர்,வகிட்டர்,கவுதமர்,அசுவினித்தேவர்,கபிலர்,பராசரர், துருவாசர்,வான்மீகி,சமதக்னி,காசியப்பர் முதலியோரும் சித்தர்களாக கணிக்கப்படுகின்றனர். 
                     இன்னும் கூறுவதானால் சப்தரிஷிகள் இராஜரிஷிகள் மகரிஷிகள் என்ரெல்லாம் அழைக்கின்றனர். பொதுவாக நோக்கும் போது “ரிஷிமூலம் நதிமூலம்” பார்க்கக்கூடாது என்பது விதி அல்லது மரபு என்பர். இன்றும் காலத்தின் தேவைக்கு ஏற்ப பலர் தொன்றி கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் தோண்றுவதும் காலத்தின் தேவை தான். மனிதன் உயிவாழ உழைத்த காலம் போய் அடம்பர வாழ்கைக்காக வாங்கிய பொருள்களை பராமரிப்பதற்பாக போட்டிபோட்டு உழைக்கவேண்டிய நிற்பதத்துக்குள்ளாகி மனமழிந்து உலகம் அழிந்து கொண்டுடிருக்கின்றது. மனிதத்துவத்தை நிலை நாட்டவும் படைப்பின் இரகசியம் உணர்தவும். சித்தர்கள் பிறந்தும் ஆட்கொண்டும் வருகின்றனர்.
சித்தர்களின் அவதாரம் பற்றி பார்க்கும் போது
இல சித்தரின் பெயர் பிறந்த நாள் நட்சத்திரம் ஜீவ சமாதி
01.            மச்சமுனி             அடி                ரோகிணி  திருப்பெருங்குன்றம்        
02. பாம்பாட்டிச் சித்தர் காத்திகை  மிருகசீரிடம்         சங்கரன் கோயில்(மருதமலை)
03.           பதஞ்சலி    வைகாசி           சதயம்          எட்டுக்குடி


04. நந்தீஸ்வரர் வைகாசி விசாகம்      காசி(திருகாளத்தில் வாழ்தவர்)
05. தன்வந்திரி ஐப்பசி   புனர்பூசம்             வைத்தீஸ்வரன் கோவில்
06. சுந்தரானந்தர் ஆவணி ரேவதி                              மதுரை
07. சட்டைமுனி ஆவணி மிருகசீரிடம்               திருவரங்கம்
08. கோரக்கர்   காத்திகை           அவிட்டம்        வடக்கு பொகை நல்லுர்
09. குதம்பைச்சித்தர் ஆடி              விசாகம்                      மயிலாடுதுறை
10. கருவுரார்                சித்திரை                   அத்தம்               கருவூர்
11. கமலமுனி         வைகாசி             பூரம்                                 திருவாரூர்
12. இராமதேவர்      மாசி                   புனர்பூசம்                 அழகர் கோவில்
13. இடைக்காடர்   புரட்டாசி        திருவாதிரை           திருவண்ணாமலை
14 திருமூலர்                 புரட்டாசி அவிட்டம்                         சிதம்பரம்








15 புலிப்பாணி         புரட்டாசி     சுவாதி                                  பழனி
16 போகர்                          வைகாசி             பரனி                   பழனி
17. அகத்தியர்   மார்கழி ஆயிலியம் ஆனந்த சயனம்


    சித்தர்கள் வரிசையில் மிக பழையானவராக ஆய்வுகள் கூறுவது திருமூலரையே  கி.பி.ஐந்தாம் நுற்றாண்டிண் முற்பகுதியில் வாழ்ந்தராக குறிப்பிடப்படினும் கி.பி.ஐந்தாம் நுற்றாண்டில் சமணநுல்களிலே முதலில் சித்தர் என்னும் பெயர் முதலில் கானப்படுகின்றது. பழம் பெரும் இலக்கியநூல் தொல்காப்பியத்தில் கூட சித்தன் என்ற பெயர் இல்லை. குறுந்தொகைப் பாடலொன்றில் “நிறை மொழி மாந்தா”; எனும் முறிப் பொன்று உண்டு.
                           சிவனை சித்தர் என சம்பந்தர் நாவுக்கரசர் போன்றோர் தேவாரங்களில் கானப்படுவதைக்கானலாம். திருவிளையாடல் பூராணம் சிவனை சித்தனாக கூறுகின்றது. மேல் நாட்டவர்கள் கி.பி. ஐந்தாம் நுற்றாண்டில் தான் அறிமுகமானதாக டி.ஓ.ரன்ஸ்(னு.ழு.சுரநௌ)என்பவர் குறிப்பிடுகின்றார். ஆய்வாளர் சித்தர்கள் காலம் பற்றி பல கருத்துக்கள் கானப்பாடினும் நாயன்மார்களின் பட்டினலையும் சித்தர்களுக்குள்ளே அடக்குகின்றனர். 
                     திருமூலர் வாழ்ந்த காலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் கானப்பட்டாலும் திருமந்திரம் ஆண்டுக்கொன்றாக மூவாயிரம் பாடல்கள் பாடப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒருவர் காலத்தேவைகளின் நிமித்தம் வேறுவேறு பெயர்களில் அவதாரம் எடுப்தாக நம்பப்படுகின்றது. சிரடிசாயிபாபா சத்தியசாயிபாபாவாக அவதாரம் எடுத்தாகவும் இனி பிரேமசாயிபாபாவாக அவதாரமெடுப்பதாகவும் கூறப்படுகின்றது. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இராமர், கிருஷ்ணர் ஆகியோரின் இணைந்த அவதாரமாகக் கருதப்படுகின்றது. மகாவிஸ்ணு தசாவதாரத்தில் ஒன்பது அவதாரம் எடுத்து விட்டார். இறுதியான கல்கி அவதாரம் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. 
                                            கலியுகம் தோன்றுவதை அறிய அறிகுறிகளை மகாபாரதம், பகவத்கீதை, புனித விவிலியம், புனித அல்குறான், போன்ற நூல்களும் கலக்ஞாணம் என்று ஸ்ரீ காகபுசுண்டர், ஸ்ரீ வீரப்பிரம்மம்,  ஸ்ரீ ஈசுவரப்பட்டர் போன்றோர் பல நூற்றாண்டுகளுக்கு முன் கூறப்பட்டவைகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. சித்தர்கள் திரிகால முனாந்;தவர்கள். நடந்தது, நடக்கின்றது, நடக்கவிருப்பது போன்றவற்றை சுக்குமமாகவும், செய்கைகள் முலமும் உலகுக்கு வெளிப்படுத்துபவர்கள். திரிகரண சுத்தியுள்ளவர்கள். மனம், வாக்கு, காயம் எனும் மூன்று ஒருங்கே செயல்படுபவர்கள்.  
                                     சித்தன் என்னும் போது சித்தம் தெளிந்தவன் என்பது பொருள். சித்தம் தெளிந்து தன்னுள் சிவத்தை கண்டு  அதை அனுபவித்தவன். என்பது பொருள். எம்மைக் கடந்தும் எம்முள்ளும் இருக்கும் பொருன் ஒன்று உண்டு. அதுவே எம்மையும் பிரபஞ்கத்தையும் இயக்குகின்றது. என்பதை எப்போது மனிதன் உணர்தானோ அப்போதே சித்தன் பூ வுலகில் உதித்து விட்டான். சத்தாகிய பாசத்தால் கட்டுண்ட ஆன்மாவாகிய சதசத் சித்தாகிய பதியை நாடி சத் சித்தாகி ஆனந்தத்தை அனுபவிக்கும். அதை சத் சித் ஆனந்தம் மாகிய “சச்சிதானந்தம்” அதை அடைந்தவர்களே சித்தர்கள். “தாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்”; என்பதே இவர்களின் தாரகமந்திரம். ஆன்மா நுன்னுடலை நாடி சிவப்பேற்றை அடைய வழிகாட்டுபவர்கள். அவர்களை நாடி இறை இன்பம் பெறுவோம்.