
Friday, June 23, 2017
இந்துக்கள் எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி இடுவது தொன்மையான வழக்காகும் இதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிவதில்லை
இந்துக்கள் எழுத ஆரம்பிக்கும் போது பிள்ளையார் சுழி இடுவது தொன்மையான வழக்காகும் இதன் அர்த்தம் எல்லோருக்கும் புரிவதில்லை
பிரணவத்திலுள்ள நாதத்துக்கு வாிவடிவு கீறு விந்தவுக்கு வாிவடிவு சுழி இரண்டும் சேரும்போது யானையினது துதிக்கையை ஓத்த வடிவம் உ வருகின்றது இதனையே பிள்ளையாா் சுழி இதனை குண்டலிசக்தி என்று திருவருட்பயன் செப்புகின்றது பிள்ளையார் பிரணவ வடிவம் அவர் குண்டலிசக்தி வடிவம் என்பதால் அவரை கொடிதம்பத்தில் தம்பவினாயகராக வைக்கப்பட்டுள்ளது இது பாம்பின் வடிவை ஒத்தது அ ,உ ,ம என்பது ஓம் அதில் அ என்பது அக்னி மண்டலம் உ என்பது ஆதித்திய மண்டலம் ம என்பது சோம மண்டலம் நம் பூமியில் எல்லா செயல்பாடுகளும் சூாியனை அடிப்படையாக இயங்குவதனால் இறை அடையாளமாக சூாிய மண்டலத்துக்கு பீசாச்சரமான உ என்னும் எழுத்தை முதலில் இட்டு ஆரம்பிக்கின்றோம்

Friday, June 9, 2017
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம: தியானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடரில்.......
ஓம் சற்குரு ஸ்ரீ அகத்தீசாய நம:
தியானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விடையங்கள் தொடரில்.......
முத்தி என்பது என்ன என்ற கேள்வி உண்டு அதாவது மூன்று தீ எது என்பதை முதலில் அறிய வேண்டும். அவை சூரியன் சந்திரன் அக்னி இவை முக்கோண வடிவில் நம்மிடம் இருக்கின்றது. எங்கே என்பது தான் கேள்வி சூரியன் வலக்கண் சந்திரன் இடக்கண் அக்கினி புரவ மத்தி இவை மூன்றையும் இணைக்கும் முக்கோணப் பகுதியான இமைகளின் மையமே முத்திக்கு வழியான இடம் அங்கு ஆண்மா லயமடைந்து இருக்கும் இடம். இது பிண்டத்தில் அண்டத்தில் கைலாய மலையான இமையம். அங்கு எம்பெருமான் உமா தேவியாருடன் சூட்சும வடிவில் அமந்து முத்தி அளிக்கின்றார். சிவ பிரணவம் ஓம் சிவாயநம சக்தி பிரணவம் ஓம் உமா ஆகவே உமா மகேசுவரனாக இருந்து முத்தி கொடுக்கின்றார். அண்டத்தில் பரப்பிரம்மம் பரமாத்மாவாகி பிண்டத்தில் சீவாத்மாவாகி கர்ம விணைகளை அனுபவித்து பற்றறுத்து முத்தி என்னும் திரவுகோலால் துறந்து முத்தியடைய வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)