
சிவமுர்தியின் இச்சா ஞான கிரியா சத்திகளாக பூமியில் ஆன்மாக்களின் பாவங்களை போக்க அவர் அருளால் கோமேயத்தில் உற்பத்தியானது. இதனை பூசிப்போர் இம் மர முலத்தை அடைந்து(விரதசீலராய்) சங்கல்பம் செய்து எட்டு திக்குகளிலும் பசு நெய் விளக்கிட்டு அபிடேகம் முறைப்படி செய்து வஸ்திரம் தரித்து மலரிட்டு துபம்காட்டி

பின்வரும் நாமங்களைக் கொண்டு அர்ச்சனை செய்து பூசிக்கச் சகல சித்தியும் பெறுவதுடன் சகல பாவங்களும் போகும்.
1. ஒம் வில்வ விருஷெச நம:
2. ஒம் நிர்பீஜ நம:
3. ஒம் கோமயோற்பவா நம:
4. ஒம் சங்சராநந்த நம:
5. ஒம் சுத்தபதுமப்பிரிய நம:
6. ஒம் வியாத நம:
7. ஒம் புட்பாதிக நம:
8. ஒம் ஷெத்திரஞ்ஞ நம:
9. ஒம் வரதா பீஷ்ட நம:
10. ஒம் புருஷோர்;த்த சித்திதர நம:
11. ஓம் சிவப்பிரிய நம:
வில்வம் மும்மத்தை போக்கவல்லது. இதன் இலைகளை பறிக்கும் போது பழுதற்றதாக இருப்பதுடன் சிவசிந்தையுடன் மூவிதழ்கள் பிரியாத வகையில் பறித்தல் வேன்டும். மாலையில் தளம் பறித்தல் உத்தமம்மல்ல.

1. மூன்று ஜன்மங்களில் செய்தபாவங்களும் அறும்
2. கொடி பெண்களுக்கு திருமணம் செய்த பலன் உண்டு.
3. ஸாளக்ராமதை வழிபட்ட பலன் பொறலாம்
4. அச்வமேத யாகம் செய்த பலன் பெறலாம்.
5. கோடியக்ஞ்ஞங்கள் செய்த பலன் பெறலாம்.
6. காசிN~த்திரத்தில் காலபைரவரை வணங்கிய பலனை பெறலாம்.
உமாமகேஸ்வரருடன் சகல தேவர்களையும் வழிபட்டு சகல பாபங்களையும் போக்கிய பலன்களையும் பெறலாம்.
வில்வ தளம் சிவசொருபம் அதன் முட்கள் சத்திசோருபம் அதன் கிளை வேத இரகசியம் அதன் வேர்கள் பதிருனெருகோடி ருத்திரர்கள். ஐந்து வில்வ தளங்களை எடுத்து நடுவில் ஒருதளமும் மேற்கில் ஒருதளமும் வடக்கில் ஒருதளமும் தெற்கில் ஓருதளமும் கிழக்கில் ஓரு தளமும் வைத்து முதலில் நடுவிலுள்ள வில்வதளத்துக்கு பானிமந்திரமும் மேற்கிலிருந்து சத்யோஜதமந்திரமும் வடக்குக்கு வாமதேவமந்திரமும் தெற்குக்கு அகோரமந்திரமும் கிழக்கு தற்புருசமந்திரமும் பின்னர் நடுவுக்குமேலே ஈசானமந்திரத்தையும் செல்லி பக்கத்தில் துளசி தளமொன்றையும் வைத்து வழிபடுவதால் சிவசத்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். அப்படியான சத்தி பெற்றது வில்வ தளம்.
ஒரு அரசன் வில்வருசத்தை நிழற் பொருட்டு அவ்வில்வத்தின் கீழ் நின்று வேட்டையடிய சிரமபரிகாரத்தின் பொருட்டு கொடுங்கோலான அரசன் வருகையில் அந்த வில்வ விரு~த்துக்கருகில் ஒரு முனிவர் அணிந்திருந்த விபூதி அவன் மீது பட்டதனால் ஞானமடைய அரசன் முனிவரிடம் வேண்டினான். அப்போது முனிவர் அரசனிடம் நீ வில்வ விருச~ மொன்றை பிரதி~;டை அதன் நிழலில் வசித்து உன்பாவங்களை நீக்கி புனிதனாவாயென அவனுக்குச் சிவஞான மநுக்கிக்க அவன் மீளாக்கதி பெற்றான். இவ்வாறே மார்க்கண்ட முனிவர் உபதேசித்தால் பாவியாகிய வேதியன் வில்வவிருச~த்தடியில் சிவாரதனை செய்து பாபநீக்கம் பெற்றான்.

வில்வம் மருத்துவகுணம் உடையது. வெப்பத்தினால் உண்டாகும் நோய்களுக்கு அருமருந்து. தளமத்தினை நிரில்லிட்டு உறவைத்து அருந்தினால் உடல் உஸ்னம் குறையும். புழத்தை தேன் சேர்த்து உண்;டால் வய்ற்றில்யுள்ள குடல்புண் குணமடையும். இது போன்று வேர் பட்டை பொன்றவற்றுக்கும் மருத்துவகுணம் உண்டு.
திரு பாக்கியமூர்த்தி குமரகுருபரன் (புன்னையம் பதியான்)
No comments:
Post a Comment