Monday, December 30, 2024

உத்தராயணம் தட்சணாயனம் காலங்களில் செய்யக்கூடியவை கூடாதவை தொடர்பாக

 உத்தராயணம் தட்சணாயனம் தொடர்பான விடையங்களை முன் வைக்கலாம் என்னுகின்றேன் 

           இவை சூரியன் செல்லும் பாதையை பொறுத்துதே அமைகின்றது. வடக்கு நோக்கி நகரும் போது உத்தராயணம்  என்றும் தெற்கு நோக்கி நகரும் போது தட்சணாயனம் எனவும் நகர்கிறது.  தமிழ் மாதமான மகர சங்கராந்தி முதல் ஆடி மாதம் வரையான முதல் ஆறு மதம் வடக்கை நோக்கி உத்தராயணம் அடுத்த ஆறு மதம் தெற்கை நோக்கி தட்சணாயனம்.

     இதனுடன் தேவர்களின் நாள் தொடர்பு படுகின்றது தேவர்களுக்கு எமது ஒருவருடம் அவர்களுக்கு ஒரு நாள் முதல் ஆறுமாதமும் பகல் அது உத்தராயணம் அடுத்த ஆறுமாதமும் இரவு அது தட்சணாயனம். மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தம். 

பொதுவாக தேவகாரியங்கள் உத்தராயணத்தில் செய்வது உத்தமம். பொதுவாக தேவர்கள் போகத்தை கொடுப்பவர்கள் மங்கல காரியங்கள் செய்ய உத்தமம் காலம் திருமணம்,வீடு குடிபுகுதல், குடமுழுக்கு உபநயணம் ,காணிவாங்குதல் போன்ற காரியங்களை மேற்கொள்வது உத்தமம். இக்காரியங்களில் அக்னி காரியம் உண்டு தேவர்கள் உறக்கமின்றி விளித்திருக்கும் காலம். ஒருவருக்கு கெடுதி செய்வதாக இருந்தால் அவர் பட்சி உறக்கத்தில் இருந்தாலே வாய்ப்பு. அப்படி இருக்க தேவ  காரியம் உறக்கத்தில் எப்படி 

        தட்சணாயனம் பொதுவாக மாளையத்தில் ஆரம்பித்து அதாவது பிதிர் கருமத்தில் ஆரம்பித்து நவராத்திரி, கேதாரகௌரி, கந்தசஷ்டி, விநாயகர் சஷ்டி,திருவெண்பாவென வாரகாலமாக அமைகின்றது.

             குடமுழுக்கு செய்வது என்பது பாலாலயத்தில் இருந்த மூர்தியை புணராவத்தணம் செய்த கோயிலில் பிரதிஷடை செய்தல் இது பல காரணங்களுக்காக நடைபெறும் போது பல காரணத்தைப் பொறுத்து அதன் பெயர் அமையும். சில வேளையில் உடனடியாக குடமுழுக்கு செய்யவேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு ஆலயங்களில் ஆசௌசியங்கள் இடம் பெறுறிருக்கின்ற  போது அதற்கு எதையும் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை காரணாகம் கைக்கொன்டு செயல்படலாம்.

            எப்போதும் உத்தராயணம் காலத்தில் குடமுழுக்கு செய்வது உத்தமம்  ஏன் என்றால் பால மூர்த்தியாக இறைவனை அமர்தும் போது அங்கு தேவபிரசன்னம் தேவை அவியை அக்னி மூலம் குறித்த தேவதைக்கு குறித்த காலத்தில் கொண்டு செலுத்த வேண்டும். அவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

   தட்சணாயனம் காலம் விரதகாலம் பால மூர்த்தி யாக கருத்தில் மண்டலாபிஷேகம் நடைபெறும் போது அங்கு விரதங்கள் அனுஷ்டிக்கப்படுவது உத்தமம் இல்லாத படியால் பொதுவாக உத்தராயணம். உத்தராயணம் காலத்தில் குடமுழுக்கு செய்வது உத்தமம். குறித்த பாரம்பரிய  விரதங்கள் அனுஷடிக்கும் ஆலயங்களைப் பொறுத்தவரை.

      குடமுழுக்கு செய்து மண்டலாபிஷேகம் நடை பெறும். ஆலயங்களில் திருவிழாவாக செய்வதில்லை அங்கு நடனம் சங்கீதம் போன்ற நிகழ்வுகளை செய்து பால மூர்த்தியை மகிழ்ச்சிபடுத்தி அடியார்களையும் மகிழ்ச்சி படுத்தும் நிகழ்வுகள்வுகள் நடைபெறும் .  

         பொதுவாக பூர்வாங்க சாக்கில் பட்ச வளர்பிறையில் மங்கல காரியங்கள் செய்வதற்கு உகந்தது .நோய் காவல் பின்னுதல் தீயசக்திகளை விலக்கும் போன்ற விடையங்களை  கிஸ்ணபட்ச தேய்பிறையில் செய்வது உத்தமம்

         ஒருவரது பிறப்பு நட்சத்திரம்மாவும் இறப்பு திதியாவும் அமையும். இறப்பு வளர்பிறையாயின் அது பிறக்கும் தேய்பிறையின் வினை குமறைந்து செல்லதை அறிய முடியும் பிறைகளின் எண்ணிக்கைக்கு அமைய இருக்கும். கர்மாவே பிறப்பை கணிக்கும். 

இவை ஆகமங்களைப் பின்பற்றிய கோயிகளுக்கே பெரும் பாலும் பொருந்தும் சித்தர்கள் வழியில் இறைவன் அண்ட பிண்டத்தில் ஆதியாய் அனாதியாய்  எங்குமாய் எதிலும் இருப்பவன் அண்ட பிண்டமே கோயில் எல்லா நாளும் அவன் படைப்பு. இறைவன் நிர்மலன் நிர்குணன் ,எங்கும் உள்ளவன் எல்லாம் வல்லவன் தோற்றமும் இல்லை முடிவும் இல்லை பிரளைய காலத்தில் அவன் மட்டுமே இருப்பான் . மேல் உள்ளவை போகிக்கே அன்றி யோகிக்கு அல்ல ஆனால் யோகிக்கு ஆறாதாரங்களை வலுவாக்க தேவைப்படுகின்றது உத்தராயணம் அனாக தத்துக்கு மேல் குன்டலினியை உயத்தவும் தட்சணாயனம் அதன் கீழ் சுத்தம் செய்யவும் பயன்படுத்து கின்றனர். 

               யோகிக்கு  தன்னிலை அடைய உத்தராயணம் சிறந்தது புத்த பகவான் வைகாசி விசாகத்தில் பரிணாம் அடைந்தார் பல சித்தர்கள் சித்தி பெற்றனர்.

           மகா பாரதத்தில் விஷமர் அம்பு படுக்கையில் உத்தராயணம் வரை காத்திருந்தார். 

தட்சணாயனத்தில் தேவர்கள் உறக்கத்தில் இருப்பதால் பிதிர்கள் பூமிக்கு வருவதால் பிதிர் கடன் செய்ய உகந்தது காலம் மாளையபட்சம் அக்காலத்தில் அமைகின்றது.

பொதுவாக நோக்கின்ற போது தேவபிரதிஸ்டை செய்ய உத்தராயணம் சிறந்தது. 

No comments:

Post a Comment